Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

22 மார்ச் 2011

தேர்தல் புறக்கணிப்பை மறுபரிசீலனை செய்யவைகோவுக்கு பா.ஜ., வேண்டுகோள்


நாகர்கோவில்:தேர்தல் புறக்கணிப்பை மறுபரிசீலனை செய்யும்படி, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவுக்கு தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நிருபர்களிடம் அவர் கூறியதாவது:ம.தி.மு.க., இந்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளது, துரதிருஷ்டவசமானது. கூட்டணி கட்சி வேட்பாளர்களை தன் வேட்பாளர்கள் போல் கருதி பிரசாரம் செய்யும் மனநிலை கொண்டவர், வைகோ. அவர் தேர்தல் புறக்கணிப்பு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பா.ஜ.,வுடன் கூட்டு வைக்க விரும்பினால், அவரை வரவேற்க தயார்.பா.ஜ., தேர்தல் அறிக்கை, வரும் 25ம் தேதி சென்னையில் வெளியிடப்படும். தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை இலவசங்கள், மக்கள் எப்போதும் கை ஏந்தி நிற்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக