Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

29 மார்ச் 2011

பா.ஜ.க. வேட்பாளருக்கு வாக்கு கேட்டு மாநில செயலாளர் அதிரையில் உரை:

நடைபெரவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. நமது பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் பா.ஜா.க சார்பாக வழக்கரிஞர் V.முரளிகணேஷ் BA.BL அவர்கள் போட்டியிடுகிறார்கள்.
  இவருக்கு வெற்றியின் சின்னமாம் "தாமரை" சின்னத்தில் வாக்களியுங்கள் எனக்கேட்டு பா.ஜ.க மாநில செயலர் H.ராஜா அவர்கள் வாக்கு சேகரித்தார். அவர் தனது உரையில் "குஜராத் மாநிலத்தில் முதல்வர் நரேந்திர மோடி" அவர்களின் பொற்கால ஆட்சி பற்றி எடுத்துறைத்தார். பின் தமிழக அரசின் 1,76,400 கோடி ஊலல், காமன்வெல்த், ஆதர்ஸ் ஊலல் ஆகியவற்றை பற்றி சொற்பொழிவாற்றினார்.      மத்திய, மாநில அரசுகள் ஊழல் மிக்கதாக உள்ளது. 44 ஆண்டு அ.தி.மு.க.,- தி.மு.க., என தேர்ந்தெடுத்து இந்நாட்டில் என்ன வளர்ச்சியை கண்டீர்கள். விலைவாசி உயர்வு, ஊழலைத்தான் கண்டுள்ளோம். காமன்வெல்த் போட்டியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. ஸ்பெக்ட்ரத்தால் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. டில்லியில் டி.எம்.கே., என்றால், "டில்லி மணி ஃபார் கருணாநிதி' என்கின்றனர்.

கடந்த 1967ல் ஒன்றில் இருந்து ஐந்து வயது வரை பள்ளியில் கட்டாயம் தமிழ் பாடமாக இருந்தது. இன்று தமிழின காவலர்களாக கூறிக் கொள்ளளும் இவர்கள் ஆட்சியில் அ, ஆ தெரியாத எத்தனை ஆயிரம் டாக்டர்கள், இன்ஜினியர்கள், நீதிபதிகளை உருவாக்கி தமிழே தெரியாத ஒரு தலைமுறை தமிழினத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள். ஒரு லட்சம் தமிழர்கள் கொலை செய்யப்பட, 3 லட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட, 85 ஆயிரம் தமிழ் பெண்கள் விதவைகளாக இருக்க சோனியா தான் காரணம். அதை மானமுள்ள தமிழர்கள் மறக்கக்கூடாது.

"சுனாமி' வந்தபோது இவர்கள் எல்லாம் எங்கே போனார்கள். புரட்சி வசனம் பேசிய கருப்பு எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் தன் படைகளை கொண்டு உதவி செய்யவில்லை. வீணாய் போன வீரமணி எங்கே போனார்? என, சிந்தித்து பாரதிய ஜனதா வேட்பாளர் முரளிக்கு ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

1 கருத்து: