Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

18 பிப்ரவரி 2012

தேசத்தின் எழுச்சிக்காக நாம் பாடுபட வேண்டும்


பரமபூஜனீய சர்சங்கசாலக் ஸ்ரீமோகன்ஜீ பாகவத் அவர்கள் தமது சிறப்புரையில், 
சர்சங்கசாலக்குடன் ஸ்தாணுமாலயன்
பெருமதிப்பிற்குரிய பெரியோர்களே, இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றி்ருக்கிற நீதியரசர் ராமலிங்கம்ஜி அவர்களே. இந்த நிகழ்ச்சியின் வரவேற்புக் குழுவின் தலைவர் விவிடி ரவீந்திரன்ஜி அவர்களே, மேடையில் வீற்றிருக்கும் துறவியர் பெருமக்களே, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் ப்ராந்த, க்ஷேத்ர, அகில பாரத அதிகாரிகளே, இந்த நிகழ்ச்சிக்கு பெருமளவில் கூடியிருக்கும்  தாய்மார்களே, பெரியோர்களே, ஸ்வயம்சேவக சகோதரர்களே அனைவருக்கும் வணக்கம்.
பாரதத்தாயின் பாதப் பகுதியாக இருக்கக் கூடிய இந்தப் பகுதியில் அமர்ந்து கொண்டு, சுவாமி விவேகானந்தரது 150 வது பிறந்த நாள் நிகழ்ச்சியைப் பற்றி சிந்தனை செய்வதற்காக, நாம் இங்கு கூடி இருக்கிறோம்.  அந்த நிகழ்ச்சியை வரவேற்பதற்கான ஒரு வரவேற்பு நிகழ்ச்சியாகக் கூட இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.  ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்  சுவாமி விவேகானந்தருடைய இந்த 150 ஆவது பிறந்த விழாவை நாடு முழுவதும் ஏன் நடத்துகிறோம்? எதற்காக இந்த நிகழ்ச்சியினை சிந்தனை செய்கிறோம்? எதற்காக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறோம் என்றெல்லாம் சிந்தனை செய்யும் பொழுது, சுவாமி விவேகானந்தரது இந்த 150 ஆவது பிறந்த விழா நாம் நடத்துவது, ஏதோ ஒரு விழா எடுப்பதற்காக அல்ல.  சிலர் விழா எடுப்பது என்றால் அலங்காரத்திற்காக விழா எடுப்பார்கள், சிலர் சுயநலத்திற்காக விழா எடுப்பார்கள்.  ஆனால் உண்மையாகவே அந்த விழா எதற்காக என்றால்  யாருடைய பெயருக்காக அந்த விழாவை நடத்துகிறோமோ அவரது வாழ்க்கையை நாம் மீண்டும் சிந்தனை செய்து,  அதை நமது வாழ்க்கையில் கடைபிடிப்பதற்காக இருக்கக்கூடிய ஒரு நினைவு நிகழ்ச்சியாகத்தான் அந்த நிகழ்ச்சியை நாம் நடத்துகிறோம்.
இன்று உலக வாழ்க்கையானது உலகியல் இன்பங்களை  நுகரும்  ஒரு பௌதீக வாழ்க்கையை பின்பற்றி சென்றுக் கொண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.  நமது நாடானது ஆன்மீக வாழ்க்கையை பின்பற்றும் நாடு.  ஆன்மீகத்தில் சுவாமி விவேகானந்தர் ராமகிருஷ்ண பரமஹம்சருடைய முக்கிய சீடர்.  ஆனால் அவரது ஆன்மீக வாழ்க்கை முழுவதும்  தேசியத்திற்காகவும், இந்த நாட்டில் வாழும் அத்தனை மக்களின் நலனுக்காகவும் சிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மீக வாழ்க்கையாக இருந்தது.
அதற்கு எடுத்துக்காட்டு, அவர் அமெரிக்காவிற்குச் சென்று, அங்கு அவர் பேசிய முதல் சொற்பொழிவின் முதல் வார்த்தையே அப்படிப்பட்ட விஷயத்தைச் சார்ந்ததாக இருந்ததால் அந்த முதல் வார்த்தையிலேயே அவர் அமெரிக்காவை வெற்றி கொண்டார்.  அமெரிக்காவில் இருக்கும் உலகியல் இன்பங்களை  நுகரும் பௌதீக சுகங்களை எல்லாம் பார்த்து, அவர் பாரத நாட்டைக் குறித்து எண்ணிக் கொண்டே இருந்தார்.  ஓர் இரவு அவருக்கு ஒரு செல்வந்தருடைய  வீட்டில் விருந்து அளித்தனர். அந்த செல்வந்தரின் வீட்டில் அவர் தங்கியிருந்தார்.  அமெரிக்காவின் மிகப்பெரும் செல்வந்தரான அவரது வீட்டில் சுவாமிஜிக்கு அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இரவு நடுநிசியில் சத்தம் கேட்டு விழித்து எழுந்த அந்த செல்வந்தர், சுவாமிஜியின் அறைக்குள் கீழே படுத்துக் கொண்டு அழுது கொண்டிருப்பதைப் பார்த்தார். ஏன் சுவாமிஜி? ஏன் அழுகிறீர்கள்? எனது உபசரிப்பில் ஏதேனும் குறைகள் இருக்கின்றதா?  என்று கேட்டார்.  அதற்கு சுவாமிஜி, நான் என் நாட்டில் வாழும் மக்களை நினைத்துக் கொண்டிருக்கிறேன்.  என் தேசத்தில் வாழும் கோடானு கோடி மக்களின் நிலைமையை நினைத்து, இங்கு இருக்கும் சுகபோகங்கள் இருக்கக்கூடிய நிலைமை எனது நாட்டிற்கு எப்போது வரும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன் என்றார்.
சுவாமி விவேகானந்தருடைய ஆன்மீக வாழ்க்கை முழுவதுமே இந்த தேசத்தைப் பற்றி, இந்த தேசத்தில் வாழும் மக்களைப் பற்றி நினைத்தாரே தவிர, தனது சொந்த முக்தியைப் பற்றி அவர் சிந்திக்கவே இல்லை.  தமது வாழ்க்கை இந்த உலகத்தை நல்வழிப்படுத்த வேண்டும், நிரந்தர வெற்றியடையச் செய்ய வேண்டும் என்ற ஆன்மீக வாழ்க்கையைப் பற்றி சிந்தனை செய்து, தனது முக்திக்கான ஆன்மீக வாழ்க்கையைக் குறித்து சிந்திக்காத வாழ்க்கைதான் சுவாமி விவேகானந்தரது வாழ்க்கை.
பாரதம் எந்த நாட்டையும் பார்த்து, அவற்றின் நகலாக நடக்க வேண்டாம், பாரதம் பாரதமாகவே இருக்க வேண்டும்.  உலகம்தான் பாரதத்தினைப் பார்த்து நடக்க வேண்டும் என்றார் சுவாமிஜி.  இதற்காக சுவாமிஜி எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதையினை சொல்லி இருக்கிறார்.
காட்டில் ஒரு சிங்கம் இருந்தது.  அந்த காடு வழியாக ஓர் இடையன் தனது ஆட்டு மந்தையை ஓட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.  அந்த மந்தையில் வேட்டையாடுவதற்காக சிங்கம் மந்தைக்குள் பாய்ந்தது.  அவ்வாறு அது வேட்டையாடும் போது அந்த ஆட்டு மந்தையில் ஒரு குட்டியினை பெற்று விட்டு இறந்து விட்டது.  அந்த சிங்கக் குட்டியானது இந்த ஆட்டு மந்தையுடன் சேர்ந்தே நடக்க ஆரம்பித்தது.  ஆடுகளைப் போன்று உண்டு, உறங்கி, சத்தமிட்டுக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தது. ஆட்டு இடையரிடம் இருந்த ஆடுகளை ஒழுங்குப்படுத்தும் நாயினைக் கண்டு பயந்து, ஆட்டு மந்தையில் சேர்ந்து, ஆட்டினைப் போன்று சத்தமிட்டுக் கொண்டு, ஆட்டிடையனின் கையில் இருந்த தடியினைப் பார்த்து பயந்து மந்தைக்குள் சென்று கொண்டிருக்கிறது.  இப்படியே தன்னுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தது.
இப்படி வாழ்ந்து கொண்டிருக்கையில் அந்த காட்டில் மற்றொரு சிங்கம் இருந்தது.  அந்த காட்டு சிங்கம் ஒரு நாள் வேட்டையாடுவதற்காக இந்த ஆட்டு மந்தையை நோக்கிப் பாய்ந்தது.  அப்போது அந்த ஆட்டு மந்தையில் ஓர் ஆச்சரியமான காட்சியினை அந்த காட்டு சிங்கம் கண்டது.  அந்த ஆட்டு மந்தையின் மத்தியில் ஒரு சிங்கக் குட்டி உலவிக் கொண்டிருக்கிறது.  நாயைப் பார்த்து பயந்து மந்தையின் நடுவில் ஓடி ஒளிந்து கொண்டு, ஆட்டிடையனைப் பார்த்து பயந்து கொண்டு செல்லும் காட்சியைக் கண்டு ஆச்சரியம் அடைந்தது. அந்த சிங்கக் குட்டியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து கர்ஜனை இட்டுக் கொண்டு ஆட்டு மந்தைக்குள் குதித்தது.  குதித்து அந்த சிங்கக் குட்டியைப் பிடிக்கிறது.  உடனே சிங்கக் குட்டி சொல்கிறது.  என்னை விட்டுவிடு, நான் தப்பு செய்து விட்டேன். நான் இனி இந்த காட்டிற்குள் வரவே மாட்டேன். என்னைக் கொல்லாதே என்று கெஞ்சியது.
நீ ஆட்டுக் குட்டி அல்ல, என்னையும் உன்னையும் பார் என்றது. என்று காட்டுச் சிங்கம் சொன்னது.  ஆனால் சிங்கக் குட்டியால் அதனை புரிந்து கொள்ள முடியவில்லை. உடனடியாக அருகிலிருந்த  நீர் நிறைந்திருந்த குளத்தின் கரைக்கு அந்த சிங்கக் குட்டியை அழைத்துச் சென்று தண்ணீரில் அதன் வடிவத்தினைப் பார்த்தது.  நீர் நிலைக்குள்ளே இருந்த காட்டு சிங்கத்தின் வடிவத்தையும், தனது வடிவத்தையும் ஆட்டு மந்தைக்குள்ளே இருந்த சிங்கக் குட்டி பார்த்தபோது, ஓஹோ, நான் ஒரு சாதாரண ஆடு அல்ல, நான் ஒரு சிங்கம் என்று புரிந்தது.  உடனே காட்டு சிங்கம் கர்ஜனை போட சொன்னது.  கர்ஜனை அதற்கு வரவில்லை.  ஆனால் வெறும் சத்தம்தான் வந்தது.  கர்ஜனை வரவில்லை. பல முறை அது சத்தமிட்ட போது அதற்கு கர்ஜனை வந்தது. காட்டுச் சிங்கமாக மாறிவிட்டது.
இதில் இருந்து நமக்கு என்ன புரிகிறது.  நாம் யாரையும் பார்த்து வாழ வேண்டாம். நாம் நாமாகவே வாழவேண்டும்.  பாரதம் பாரதத்தின் தனித்தன்மையோடு வாழ வேண்டும்.  ஆனால் துரதிருஷ்டவசமாக சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்னரும் கூட நமது நாட்டில் நமது சொந்த வாழ்க்கை முறையையோ, நமது தத்துவத்தையோ பின்பற்றாமல், நம்முடைய உண்மையான விஷயத்தையோ, நம்முடைய ஆட்சியில் இருப்பவர்களே, ஆட்சியாளர்களோ பின்பற்றாமல், நாம் மற்ற நாடுகளைப் பின்பற்றும் நிலைமை உருவாகி இருப்பதால் உண்மையான பாரதத்தை மக்களுக்கு புரிய வைக்க முடியவில்லை.  ஆதலால் நாம் நம்முடைய சுயத் தன்மையோடு வாழவேண்டும்.  யாரையும் நாம் பின்பற்ற வேண்டிய தேவை இல்லை என்று சுவாமிஜி சொல்கிறார்.
இன்றைக்கு இந்த நாட்டிற்குள் இருக்கின்ற மிகப் பெரிய பிரச்சனையானது வெளிநாடுகளில் இருந்து வருகின்ற பிரச்சனைகளோ, வேறு பிரச்சனைகளோ அல்ல. எல்லா பிரச்சனைக்கும் ஒரே தீர்வு நாம்தான்.
இந்த பாரத தேசமானது இமய மலை முதல் கடல் வரை இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரமாண்டமான இந்த தேசமானது, இன்று வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய, இந்த தேசத்தின் உண்மையான தனித்தன்மை என்பதை நாம் ஹிந்துத்வம் என்று சொல்கிறோம்.  இந்த தேசம் மிகப் பிரமாண்டமான தேசம்.  நாமெல்லாம் பாரதத்தாயின் புதல்வர்கள். இந்த சனாதன தர்மத்தைக் காப்பாற்றக்கூடிய, இந்த பண்பாட்டை வழி நடத்தக்கூடிய, இந்த ஹிந்து பண்பாட்டைப் பின்பற்றி இந்த தேசத்தை மகோன்னத நிலைக்குக் கொண்டு செல்வதற்காக எவரெல்லாம் இந்த தேசத்திற்காக வாழ்ந்து ரத்தம் சிந்தி, வேர்வை சிந்தி, இந்த தேசத்தை அவர்களுடைய பராக்கிரமத்தால், வேர்வையால், உழைப்பால் உலகத்தின் முன்னால் ஒரு பிரமாண்டமான வாழ்க்கை வாழ்ந்தது,  வாழ்ந்து கொண்டிருக்கிறது.  ஆகையால்  இந்த தேசத்தினை காப்பாற்ற வாழ்ந்த வீரர்களின் வாழ்க்கைப் பரம்பரை.  அத்தகைய மக்கள்தான் இந்த தேசத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள், இருக்கிறார்கள்.
சுவாமி விவேகானந்தர் பாரத நாடு முழுவதும் கால் நடையாகவே நடந்து, பாரத பரிக்ரமா செய்தார்.  அன்று அவருக்கு பாரத தேசத்தினுடைய எல்லா பிரச்சனைகளும் அருகில் இருந்து பார்த்த காரணத்தினால். அவரது மனதில் இருந்த எல்லா விஷயங்களுக்கும் தெளிவு கிடைத்தது இந்த தேசம் உயர வேண்டுமானால் நற்குணங்களுடைய, நற்பண்புகளுடைய நல்ல ஒரு இயக்கம் தேவை.  இந்த தேசத்தில் விருப்பு வெறுப்பு இல்லாமல், கலவரம் இல்லாமல் இந்த நாடு வாழவேண்டுமானால் உலகத்தில் இருக்கக் கூடிய மக்களுக்கு ஒரு இயக்கம் தேவை.  அது மட்டுமல்லாமல், உலகத்தில் எந்த மூலையில் வாழக் கூடிய ஹிந்துவாக இருந்தாலும் அவன் என்னுடைய ரத்தம், என்னுடைய சதை அவனுடைய துக்கம் எனது துக்கம், அவனுடைய வாழ்க்கையும், அவனது துக்கமும் எனது வாழ்க்கை என்று சொல்லக் கூடிய  நம்பிக்கை உருவாக்கக்கூடிய மக்கள் தேவை என்கின்ற எண்ணம் உருவானது.
அதற்காக அவர் பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டார்.  இன்றைக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரு அடிப்படையாக இருக்கக்கூடிய தேவை அதற்காக ஒரு இயக்கமும், மக்கள் சக்தியும். இந்த தேசத்திற்காக வாழக்கூடிய மக்கள்சக்தி தேவை என்று உணர்ந்தார். டாக்டர்ஜி இந்த விஷயத்தைப் புரிந்து கொண்டுதான் சங்கத்தை ஆரம்பித்தார்.  டாக்டர்ஜி மருத்துவ பட்டம் படிப்பதற்காக வங்காளம் சென்றார்.
வங்காளத்தில் மருத்துவப் பட்டத்தைப் படித்துக் கொண்டிருக்கும் காலக் கட்டத்திலேயே ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து சேவா காரியங்களைச் செய்தார்.  ஆகவே சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை நன்கு உணர்ந்தவர் டாக்டர்.ஹெட்கேவார்.
தன்னுடைய வாழ்க்கையில் இந்த தேசத்தில் இருக்கின்ற மக்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டுமானால், சுவாமிஜி சொன்னது போன்று எப்படிப்பட்ட இளைஞர்கள் தேவை, கார்யகர்த்தர்கள் தேவை என்பதை அவர் உணர்ந்தார்.  நம்பிக்கை உள்ளவர்கள், நல்ல உடல் பலம் உள்ளவர்கள், எதையும் தாங்கும் சக்தி படைத்தவர்கள், ஒரே திசையில் சிந்தனை செய்து, நேர் கோட்டில் செல்லக்கூடிய, நன்கு ஒருங்கிணைங்கப்பட்ட மக்கள் சக்தி தேவை என்று உணர்ந்தார்.  அப்படி உணர்ந்த டாக்டர். ஹெட்கேவார் அவரது காலகட்டத்தில் வாழ்ந்த சுதந்திரத்திற்காக பாடுபட்டு வந்த பல்வேறு தேசியத் தலைவர்களுடன் அவர் கலந்து பேசினார். மகாத்மா காந்திஜி, சுபாஷ் சந்திர போஸ், வீரசாவர்க்கர், மதன்மோகன் மாளவியா என்கின்ற அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த தேசபக்தர்களுடன் இந்த விஷயத்தைப் பற்றியெல்லாம் அவர் பேசியிருக்கிறார்.
காங்கிரஸில் இருந்து வேலை செய்து வந்த போது இரு முறை அவர் சிறைக்குச் சென்று வந்தார். சங்கம் ஆரம்பிப்பதற்கு முன் ஒரு முறை,  சங்கம் ஆரம்பித்ததற்குப் பின்னர் ஒரு முறை சிறைவாசம். அது மட்டுமல்லாமல் அவர் சுதேசி பொருட்களை விற்பதற்காக கடைகள் நடத்தினார். பத்திரிக்கை நடத்தினார்.  தேசத்தின் சக்திக்காக இருக்கக் கூடிய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு சுவாமி விவேகானந்தரால் சொல்லப்பட்ட அந்த மனிதசக்தி என்கின்ற விஷயத்தை நன்கு உணர்ந்து, அதற்காக இருக்கக்கூடிய சிந்தனையுடன் சுவாமி விவேகானந்தர் கனவு கண்ட அதே விஷயத்தை அடிப்படையாக வைத்து ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தை டாக்டர்ஜி நிறுவினார்.
ஆகையினால் இன்றிருக்கக்கூடிய இந்த தேசத்தின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட நல்ல ஹிந்து சக்தி, ஹிந்து தர்மத்தின் மீதும், கலாச்சாரத்தின் மீதும் பக்தி உள்ள கார்யகர்த்தர்களை உருவாக்கக் கூடிய அந்த வேலையை அவர் 1925 ஆம் ஆண்டு ஆரம்பித்தார். அவரது வாழ்க்கையில் பதினைந்து ஆண்டுகளில் 1940 களிலேயே தன்னுடைய கனவு எந்த திசையில், சென்று கொண்டிருக்கின்ற ஒரு நிலைமையை அவர் கண்ணால் பார்த்தார்.  ஆகையால் இந்த தேசத்தினுடைய அடையாளம், இந்த தேசத்தின் தன்மை ஹிந்துத்வம்.
அந்த ஹிந்துத்வம் என்று சொல்லக் கூடியது யாரையும் கஷ்டப்படுத்துவது அல்ல. மெக்ஸிகோ முதல் சைபீரியா வரை எல்லா பகுதிகளுக்கும் சென்ற நமது முன்னோர்கள் அங்கு வாழ்ந்தவர்களை ரத்தம் சிந்த வைக்கவில்லை.  அங்கு வாழ்ந்தவர்களை மதம் மாற்ற வில்லை. அங்கிருக்கக்கூடிய அரசினை மாற்றவில்லை.  அவர்களுக்கு ஞானம், வீரம், கணிதம் நல்ல தன்மைகள், ஆன்மீகம் இப்படிப்பட்ட பாரதீய பண்புகளாக இருக்கக்கூடிய, எல்லா உயிரினங்களிலும் கடவுளைப் பார்க்கக் கூடிய இந்த ஹிந்து தன்மையையும், ஹிந்துத்வத்தை அவர்களுக்கு உணர வைத்தனர். அப்படி பாரதம் இன்று உலகத்திற்கு வழிகாட்ட வேண்டுமானால் இந்த ஹிந்துத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்.  அது இன்றைக்கு உலகத்திற்கு மிக தேவையானதொரு கால கட்டம்.
பாரதம் எழுந்து நிற்க வேண்டும்.  அதற்காக ஹிந்து தன்மையோடு இருக்கக்கூடிய புத்துணர்வு பெற்ற, ஹிந்து வாழ்க்கை முறையை பின்பற்றக்கூடிய நமது தர்மத்தைப் பின்பற்றக்கூடிய, சுயநலமற்று,    மற்றவர்களுக்காக வாழக்கூடிய பரோபகாரம் கொண்ட ஒரு மக்கள் சக்தியை உருவாக்க வேண்டும்.  இது எப்பொழுது உருவாகுமோ, அப்பொழுது பாரதம் எழுந்து நிற்கும். உலகை வழி நடத்தும்.  தலைவர்களை மாற்றுவதாலோ, கோஷத்தை மாற்றுவதாலோ, சட்டத்தை மாற்றுவதாலோ இந்த நாடு எழுந்து நிற்காது.  முழு சமுதாயத்தையும் எழுந்து நிற்கச் செய்ய வேண்டும்.  சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்டு சமுதாயத்தை உருவாக்கக்கூடிய நன்னம்பிக்கை கொண்ட மக்களை கிராமந்தோறும், தெருக்கள்தோறும் உருவாக்க வேண்டும். நாம் சமுதாயத்தினைப் பற்றி சிந்தனை செய்து அவர்களுடன் தினசரி தொடர்பு வைக்கக்கூடிய ஒரு மக்கள் சக்தியை உருவாக்க வேண்டும்.  இப்படி ஒழுக்கமான வாழ்க்கை வாழக்கூடிய மக்கள் சக்தியை கிராமந்தோறும், பேட்டைதோறும் உருவாக்குவதற்காகத்தான் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் முயற்சி செய்து வருகிறது.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் கிராமந்தோறும், பேட்டை தோறும் தினசரி நடக்கும் ஷாகாக்கள் அங்கு வரக்கூடிய மக்களுக்கு புத்தி, மனம், உடல் ரீதியாக பயிற்சிகள் கொடுக்கக்கூடிய களமாகவே இருந்து வருகிறது.  அங்கு நடக்கும் ஒரு மணி நேரம் ஷாகா என்று சொல்லக்கூடிய அந்நிகழ்ச்சியின் வாயிலாக எல்லா விதமான பயிற்சிகளும் அங்கு கிடைக்கிறது.  நமது தேசபக்தி பாடல்கள் தேசம் ஒன்று, நாம் ஒருதாய் மக்கள் என்ற எண்ணத்தைக் கொடுக்கிறது.  சங்கஸ்தானத்தில் மௌன குருவாக காட்சியளிக்கக்கூடிய பகவா த்வஜமானது, ஹிந்து தர்மத்தின் தத்துவத்தைக் காண்பிக்கக் கூடிய ஹிந்து வாழ்க்கை முறையை காண்பிக்கும் விஷயங்கள், ஆதலால் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் ஒரு மணி நேர ஷாகாவில் வரக் கூடிய மக்களுக்கு உடல், மனம், புத்தி – என அனைத்து வகையிலும் இருக்கும் பயிற்சிகளும் அதன் மூலமாக சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும், தூய்மையான சமுதாய வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக தினசரி பயிற்சி கொடுக்கும் ஒரு பயிற்சிக் களம். கடந்த 87 ஆண்டுகளாக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கமானது இப்படி தேசம் முழுவதும் ஏராளமான தொண்டர்களை தயார் செய்து கொண்டிருக்கும் பணியினை ஷாகாக்கள் மூலம் செய்து கொண்டிருக்கிறது.
ஆகையால் இயற்கை சீற்றங்களாலோ, மனிதர்களால் உருவாகும் பேரிடர்கள் வந்தாலும் கூட முதல் ஆளாக அங்கு சென்று சேரக் கூடியவர்கள் ஸ்வயம்சேவகர்கள்தான்.  ராணுவமோ, காவல் துறையினரோ வந்து சேருவதற்கு முன்பே, ஸ்வயம்சேவகர்கள் இப்படிப்பட்ட பிரச்சனைகள் இருக்கக் கூடிய இடங்களுக்குச் செல்கிறார்கள்.  நிலநடுக்கம் வரும் நேரத்தில், புயல் வெள்ளம் வரும் நேரத்தில்.  உங்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் வருகிறதா என்று பலரும் கேட்கின்றனர்.  இல்லை.  காரணம் என்ன?  இந்த சமுதாயத்தின் மீது இருக்கக்கூடிய அன்பு, பற்று, பாசம், உண்மை. அவர்களுக்காக உழைக்க வேண்டும் என்ற பவித்ரமான அந்த சமுதாய பக்தியின் காரணமாக.  எங்கெல்லாம் பிரச்சனை வருகிறதோ, அங்கெல்லாம் மக்களுக்கு சேவைசெய்ய வேண்டும் என்ற மனப்பான்மையை உருவாக்குகிறது சங்கத்தின் ஷாகா.
இன்று தேசம் முழுவதும் ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரத்திற்கும் அதிகமாக  பகுதிகளில் அரசாங்கத்தின் எந்த விதமான நிதியுதவியையும் பெறாமல், தன்னுடைய சொந்தப் பையில் இருந்து காசைப் செலவு செய்து மக்களுக்கு சேவைப் பணிகள் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த சேவை இயக்கங்கள் மூலமாக மட்டுமல்லாது, இன்று தேசிய மாற்றத்திற்காக பல்வேறு இயக்கங்கள் மூலமாக,  தேசபக்தியை உருவாக்குவதற்காக தேசத்தின் எல்லா விதமான வேலை முறைகளிலும், எல்லாத் துறைகளிலும் முன்வரிசையில் நின்று, தேசத்தின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக ஸ்வயம்சேவகர்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  இப்படிப்பட்ட ஒரு மாற்றம் உருவாக வேண்டும், இப்படிப்பட்ட மக்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் சுவாமி விவேகானந்தர் கண்ட கனவு. பாரத தேசம் எழுந்து நின்றால்தான்  பாரதத்தின் ஆன்மீக சக்தி எழுந்து நின்றால்தான் உலகை வழி நடத்த முடியும்.  ஆகவே சுவாமிஜி கண்ட அந்த கனவினை நனவாக்கிடத்தான் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் பணி செய்து வருகிறது.
ஹிந்து சமுதாயம், ஹிந்து கலாச்சாரம், ஹிந்து பண்பாடு ஆகியவற்றை காப்பாற்றி, இந்த தேசத்தின் எல்லா பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு உரிய சூழ்நிலையை, ஹிந்து ஒற்றுமை சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும். பாரதம் இருக்க வேண்டுமானால் ஹிந்து தர்மம் காப்பாற்றப்பட வேண்டும். ஹிந்து சமுதாயம் எழுந்து நின்றால் பாரதம் எழுந்து நிற்கும். பாரதம் எழுந்து நின்றால்தான் இன்றைய உலகமே வாழ முடியும் என்ற ஒரு நிலைமைக்கு உலகத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஹிந்துத்வமே தீர்வு சொல்லக் கூடிய நிலையில் ஒரு பண்பாக இருப்பதால், பாரதத்தைக் காப்பாற்றக் கூடிய பொறுப்பானது நமக்கு இருக்கிறது.  அப்படிப்பட்ட ஒரு ஹிந்து ஒற்றுமையை உருவாக்க வேண்டியது  இன்று எல்லா மக்களின் மனதில் இருக்கக்கூடிய பலவீனத்தினைப் போக்கக்கூடிய  மாற்றத்தினை உருவாக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் பலவீனத்தினை ஹிந்து சமுதாயம் போக்க வேண்டும்.  இது நமது கைகளில்தான் இருக்கின்றது.  நான் பலவீனமானவன் என்றுச் நினைத்துக் கொண்டால் இந்த தேசத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது.  பலம் வாய்ந்தவர்களாக நாம் ஆகவேண்டும். இந்த தேசத்தில் இருக்கக்கூடிய எல்லா விதமான பிரச்சனைகளையும் தீர்க்க ஹிந்து சமுதாயத்தை எழுந்து நிற்க செய்ய, ஹிந்துக்களுடைய பயிற்சியானது தினசரி நடக்கக் கூடிய ஷாகாவானது கிராமம் கிராமமாக நடக்க வேண்டும்.  அப்படிப்பட்ட ஹிந்துத் தன்மையை காப்பாற்றிட முன்வரும் நல்லவர்களுடைய வாழ்க்கை சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டாக உள்ள வாழ்க்கை உருவாக வேண்டும்.
இதன் மூலமாக ஒரு கட்டுப்பாடான ஒரு ஒன்றுபட்ட ஒரு சமுதாய சித்தாந்தத்தின் அடிப்படையில் உள்ள ஷாகா எல்லா கிராமங்களிலும் வர வேண்டும்.  அதன் மூலமாக அந்த கிராமங்களில் ஒன்றுபட்ட சமுதாய மாற்றம் உருவாக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கைதான் இந்த சமுதாயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டான வாழ்க்கையாக அமைய முடியும். நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய சுயநலமற்ற தன்மையோடு, மக்களுக்கு வழிகாட்டும் விதத்தில் வாழக்கூடிய மக்கள் சக்தி ஒவ்வொரு இடத்திலும் நாம் உருவாக்க வேண்டும். இங்கு கூட நாம் காண முடியும்.
இப்படிப்பட்ட பிரமாண்டமான கூட்டம், எப்படி கட்டுப்பாட்டுடன் இருக்கிறது என்றால் கட்டுபாடாக இருக்கக்கூடிய ஸ்வயம்சேவகர்களின் சக்தி இங்கு இருப்பதால்தான்.
சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஆண்டின் செய்தியை எல்லா கிராமங்களுக்கும் நாம் கொண்டு செல்ல வேண்டும்.  எல்லா கிராமங்களிலும் சங்கத்தின் ஷாகாக்கள், நகரத்தின் வார்டுகளிலும் ஒன்றாகக்கூடக்கூடிய ஷாகாக்கள் நடக்க வேண்டும்.  சுவாமி விவேகானந்தரின் செய்தி செல்லாத ஒரு கிராமம்கூட இருக்கக்கூடாது.  அப்படி சுவாமிஜியால் சொல்லப்பட்ட ஹிந்து சமுதாயம், ஹிந்து பண்பாடு, ஹிந்துத்வத்தோடு வாழக்கூடிய நாமெல்லாம் ஒரே ஜாதி, ஒரே பண்பாடு, ஒரே கலாச்சாரம், ஒரே வாழ்க்கை முறையை சேர்ந்தவர்கள் என்ற ஒரு நம்பிக்கையை இன்றைய ஹிந்து சமுதாயம் உலகத்திற்குச் சொல்ல வேண்டும்.  சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஆண்டு விழாவானது நம்முடைய வாழ்க்கையில் ஒரு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும்.  அப்படிப்பட்ட சமுதாய நிலையை சமுதாயத்திற்குள் கொண்டு வரக்கூடிய ஒரு செயலை எல்லா கிராமங்களுக்கும் கொண்டு சென்று, ஒருங்கிணைந்த ஒரு ஹிந்து சக்தியை உருவாக்க வேண்டிய அந்த  கடமை, அந்த  பொறுப்பு வரக் கூடிய இந்த சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஆண்டு விழாவிற்கு நமக்கு முன்னால் இருக்கக் கூடிய ஒரு வேலையானது, எல்லா கிராமங்களுக்கும் சங்கம் சொல்லக் கூடிய ஒன்றுபட்ட ஹிந்து சக்தியை உருவாக்க வேண்டும்.  அனைத்து கிராமங்களிலும், அனைத்து பஸ்தி பகுதிகளிலும் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையையும், அவரது சிந்தனையையும் நாம் கொண்டு செல்ல வேண்டும்.
இங்கு இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் வந்திருக்கிறோம். சுவாமி விவேகானந்தரது 150 ஆவது பிறந்த ஆண்டு விழாவானது நாம் அனைத்து மக்கள் மத்தியிலும் எல்லா கிராமங்களுக்கும் அவரது செய்தியை கொண்டு செல்ல வேண்டும் என்பது இங்கு கூடியிருக்கக் கூடிய அனைவரது வேலை.
சுவாமி விவேகானந்தரின் இந்த 150 பிறந்த ஆண்டு விழா துவக்கமானது தேச வாழ்க்கைக்காக உடல், மனம், பொருள் ஆகிய அனைத்தையும் சமர்ப்பணம் செய்யப்பட்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும். தன்னுடைய பெயருக்காகவோ, புகழுக்காகவோ வேலை செய்பவர்களாக அல்லாமல்  தேசத்திற்கும் சமுதாயத்திற்குமாக வேலை செய்பவர்களாக ஆக வேண்டும்.  ஆகையால் இங்கு கூடியிருக்கும் பொதுமக்களுக்கும், அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.
நாமெல்லாம் வெறும் பார்வையாளர்களாக மட்டும் இல்லாமல் இந்த தேசத்தின் நலனுக்காக வேலை செய்பவர்களாக ஆக வேண்டும். தேசத்தினுடைய நலனைக் காப்பது ஏதோ ஒரு இயக்கத்தினுடையதோ, அரசியல் கட்சியினுடையதோ, ஏதோ ஒரு தலைவருடைய பொறுப்போ அல்ல.  முன்காலங்களில் கடவுள் வந்து காப்பாற்றுவார் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். கடவுள் வரவில்லை என்று நினைத்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நாட்டின் ஆட்சியை  நாம் பலர் கைகளில் கொடுக்கிறோம்.  ஆனால் என்ன மாற்றம் கண்டு விட்டோம்?
இந்த தேசம் மாறவேண்டுமானால், இந்த தேசம் ஒரு ஒருங்கிணைந்த முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமானால் மக்கள் சக்தியை உருவாக்க வேண்டும்.  மக்களது மனங்களில் தேசத்தினுடைய பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தினை ஏற்படுத்த வேண்டும்.  அது ஏதோ ஒரு கருத்தோ, கற்பனையோ அல்ல.  ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தினசரி வழிமுறை என்று சொல்லக்கூடிய, மக்களைத் தயார் படுத்தக்கூடிய, தேச நலனுக்காக வாழக்கூடிய, இந்த தேசத்திற்காக வாழ்ந்த எண்ணற்ற தியாகிகளையும், மகான்களையும் நினைவிற் கொண்டு பயிற்சி கொடுத்து இந்த தேசத்தினை ஒருங்கிணைக்கிறோம்.
இங்கிருக்கும் ஸ்வயம்சேவகர்களும், ஏனையோரும் நம்முடைய குடும்பத்தில் இருக்கும் தாய்மார்களுக்கும் ராஷ்ட்ர சேவிகா சமிதியில் அனுப்பி பயிற்சி கொடுக்க வேண்டும்.  நாம் நமது வாழ்க்கையில் சம்பாதிக்கும் பொருள், நமது நேரம் இவற்றினை சமுதாயத்திற்குக் கொடுக்கக்கூடிய அந்த மனப்பான்மையை உருவாக்கக்கூடிய ஒரு வாழ்க்கை முறையை உருவாக்க வேண்டும்  இப்படி உறுதி கொண்ட மக்களால் மட்டுமே, இந்த தேசத்தை வழிநடத்த முடியுமே தவிர, தேசத்தை எழுந்து நிற்கச் செய்ய முடியுமே தவிர, இது தலைவர்களாலேயோ, பேச்சினாலோ முடியாது.  சமுதாயம் எழுந்தால், தேசம் எழுந்து நிற்கும்.  ஆகையால் தேசத்தினை எழுந்து நிற்கச் செய்வதற்காக, சமுதாயத்தினை தயார் படுத்தக்கூடிய கார்யகர்த்தர்களாக நாம் மாறவேண்டும்.  வேலை செய்யக்கூடிய ஊழியர்களாக நாம் மாற வேண்டும்.
சுவாமி விவேகானந்தரது 150 ஆண்டு பிறந்த ஆண்டு துவக்க விழாவானது தேசத்தில் ஒரு மாற்றம் உருவாக வேண்டும்,  அந்த மாற்றமானது உலகத்தினை வழி நடத்தும் ஒரு மாற்றமாக உருவாகும் நிலையை நாம் பார்க்கலாம்.  சுவாமி விவேகானந்தர் அவரது மனக்கண்ணில் தோன்றிய எழுந்து நிற்கக்கூடிய இரு கரங்களாலும் உலகத்திற்கு  அருளாசி வழங்கக் கூடிய ராஜசிம்மாசனத்தில் வீற்றிருக்கக் கூடிய பாரதத்தாய் எழுந்து நிற்கக்கூடிய அந்த காட்சியை நம் கண்ணாலேயே பார்க்க முடியும்.
சுவாமி விவேகானந்தரது கனவு இந்த தேசத்தினை ஒருங்கிணைக்கக் கூடிய மக்கள் சக்தியை உருவாக்க வேண்டும்.  எந்த விதமானதொரு விருப்பு வெறுப்பும் இல்லாமல், தேசத்தின் எழுச்சிக்காக நாம் பாடுபட வேண்டும்.  அதுதான் இந்த சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த ஆண்டின் விழாவில் நமது செய்தியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று சொல்லி என்னுடைய இந்த சொற்பொழிவினை  நிறைவு செய்கிறேன்.
குமாரபுரத்தில் நடைபெற்ற தென் தமிழக சாங்கிக்கில் பரமபூஜனீய சர்சங்கசாலக் மோகன் பாகவத் அவர்கள் ஆற்றிய சிறப்புரையின் முழு விவரங்கள்.
நன்றி: ஹிந்து சங்கசெய்தி

17 பிப்ரவரி 2012

குமரிமுனைக்கு அருகில் ஒன்றுதிரண்ட சங்க சக்தி


தென்தமிழக ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி


நிகழ்ச்சிக்கான மேடை
சுவாமி விவேகானந்தர் அவர்கள் 110௦ ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரிக் கடலில் நீந்திச் சென்று அங்கிருந்த பாறையின் மீது அமர்ந்து 3 நாட்கள் தியானத்தில் இருந்தார். பின்னர் அங்கிருந்து மீண்டும் கடலில் நீந்திக் கரை சேர்ந்த சுவாமி விவேகானந்தர் அவர்கள் சிகாகோ மாநாடு செல்வதற்குத் தீர்மானித்தார்.
சுவாமி விவேகானந்தர் பிறந்து 149 ஆண்டுகள் நிறைவுற்று 150௦ ஆவது பிறந்த வருடம் துவங்கியுள்ளது. சுவாமிஜியின் 150௦ ஆவது பிறந்த ஆண்டினை நாட்டிலுள்ள அனைத்து தேசபக்தர்கள், ஆன்மீகவாதிகள், துறவியர்கள், பல வகையில் கொண்டாடிடத் தீர்மானித்துள்ளனர். மத்திய மாநில அரசுகள் கூட சுவாமிஜியின் 150௦ வருடத்தினைக் கொண்டாடத் துவங்கியுள்ளன.
சுவாமி விவேகானந்தர் காட்டிய வழியில் சென்று அவர்கண்ட கனவினை நினைவாக்கிடவே ஆர்.எஸ்.எஸ். இயக்கம் துவங்கிய நாள் முதல் பாடுபட்டு வருகிறது.  சுவாமிஜியின் 150௦ வருடத்தினை வருகின்ற 2013-14 ஆம் வருடங்களில்  மிகச் சிறப்பாகக் கொண்டாடிடத் தீர்மானித்துள்ளது. அதன் துவக்கமாக சுவாமிஜி அவர்கள் தவமிருந்த குமரிமுனைக்கு அருகில் மாபெரும் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது.

கூட்டுப் பயிற்சி செய்யும் ஸ்வயம் சேவகர்கள்
நெல்லை மாவட்டத்தின் எல்லையும் குமரி மாவட்டத்தின் எல்லையும் சந்திக்கும் இடமான காவல்கிணறு சந்திப்பிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கி.மீ. தூரத்தில் குமாரபுரம் என்னும் கிராமத்தில் இந்த பிரம்மாண்டமான ஆர்.எஸ்.எஸ்.சாங்கிக் வெற்றிகரமாக நடந்தது. குமாரபுரத்தில் இருக்கின்ற ராம்கோ நிறுவனத்தின் காற்றாலைப் பண்ணையில் (சுமார் 50௦ ஏக்கர் பரப்பில்) இந்நிகழ்ச்சி நடந்தது.
பிரமாண்டமான காற்றாலைகளுக்கு நடுவே குமரிக் கடலுக்கும் மகேந்த்ரகிரி என்னும் பெயருடன் புகழ் பெற்றுத் திகழும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இடையில் அழகிய பிரம்மாண்டமான மைதானத்தில் தென்தமிழக சங்க சாங்கிக் (கூடுதல்) நடந்தது. பொட்டல் காடாக இருந்த அவ்விடத்தை பெரும் தன்மையுடன் ராம்கோ நிறுவனத்தினர் இந்நிகழ்ச்சி நடத்திடத் தந்து உதவியதுடன் அந்த பிரம்மாண்டமான மைதானத்தில் வளர்ந்திருந்த செடி கொடிகளை அகற்றி மைதானத்தை சமன் செய்தும் கொடுத்து உதவினர்.
இந்நிகழ்ச்சியில் தென் தமிழகத்திலிருந்து மட்டும் சங்க சீருடை அணிந்த ஸ்வயம்சேவகர்கள் 16,906 பேர் கலந்துகொண்டனர். மேலும் இதில்  துறவியர்கள், சான்றோர்கள், சங்க ஆதரவாளர்கள் மற்றும் தாய்மார்கள், சகோதரிகள், சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் 51, 699 பேர் கலந்து கொண்டனர். ஆகமொத்தம் சுமார் 70,000 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் ஸ்வயம் சேவகர்கள்
இந்த மாபெரும் நிகழ்ச்சிக்காக எவ்விதமான விளம்பரமும் கிடையாது. சுவர் எழுத்து கிடையாது. பிரமாண்டமான  சுவரொட்டிகள் இல்லை.  துண்டுப் பிரசுரங்கள் கூடக் கிடையாது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் படம் கூட எங்கும் காணப்படவில்லை. கட் அவுட், ப்ளெக்ஸ் போர்டு எதுவும் எந்தத் தொண்டராலும் வைக்கப்படவில்லை. வழக்கம் போல் தமிழக தினசரிகள் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிப் பற்றி மாநில அளவில் எந்த செய்தியையும் பிரசுரம் செய்திடவில்லை. குமரி நெல்லை தூத்துக்குடிப் பகுதிகளில் மட்டும் இந்நிகழ்ச்சி நடைபெற இருப்பது பற்றி சில செய்திகள் நாளிதழ்களில் இடம் பெற்றன. இருந்த போதிலும் ஹிந்து சக்தி ஓங்கி வருவதை,  ஹிந்துக்கள் திராவிட மாயையிலிருந்து விடுபட்டு வருவதையும் நடந்து முடிந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரம்மாண்டமான சாங்கிக் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

பொதுமக்கள்
இந்நிகழ்ச்சியில் கலந்து பங்கேற்றிட அவரவர்கள் தங்கள் சொந்த செலவில் பேருந்துகள் வேன்கள் கார்கள் வாயிலாக வந்தனர். மொத்தம் 2,948 வாகனங்களில் வந்திருந்தனர். அதில் 267 பருந்துகள் 1,930 வேன்கள் 320 கார்கள் 396 இரு சக்கர வாகனங்கள்.

சங்கசீருடை அணிந்து வந்துள்ள மாற்றுத் திறனாளிகள்
மாற்றுத் திறனாளிகள் 21 பேர் சங்க சீருடை அணிந்து கொண்டு 18 வாகனங்களில் 3 சக்கர வாகனங்களில் 20 கி.மீ. தூரம் பயணம் செய்து இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் கோவை மதுரை பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். அவர்களும் சங்க சீருடை அணிந்து கொண்டு கலந்து கொண்டனர்.

ப. பூ.சர்சங்க சாலக் திறந்த ஜீப்பில் வரும் காட்சி
அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த படி சரியாக மாலை 5 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் திரு.மோகன் பாகவத் அவர்கள் விழா நடைபெறும் மைதானத்திற்குள் வந்தார். அவர் மைதானத்தின் கடைசிப் பகுதியில் இருந்து திறந்த ஜீப் ஒன்றில் வருகை புரிந்தார். அவருடன் ஜீப்பில் தலைமை வகித்த நீதிபதி அரு.ராமலிங்கம் ஆர்.எஸ்.எஸ்.தென் தமிழகத் தலைவர் ஆர்.வீ.எஸ்.மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

சங்கத்தின் மூத்த பொறுப்பாளர்கள்
மாநாட்டு மேடை 15 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. மிகப் பிரம்மாண்ட மேடையில் ஒரு பக்கம் துறைவியர்கள் மற்றொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் அமர்ந்திருந்தனர். அருகில் வரவேற்புக் குழுவினருக்காக  தனி மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் தென் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த முக்கிய நபர்கள் பலர் அமர்ந்திருந்தனர்.

தலைவர் நீதிபதி அரு.ராமலிங்கம், ப.பூ.சர்சங்க சாலக் மோகன் பாகவத் , தென் பாரத இணை அமைப்பாளர் கோ.ஸ்தாணுமாலயன்,
மேடை 15 அடி உயரம் 105 அடி நீளம் 25 அடி அகலம் கொண்டிருந்தது. மேடைக்கு முன்பு அழகிய வண்ணக்கோலம் போடப்பட்டிருந்தது. அதை சங்க ஸ்வயம்சேவகர்கள் வீட்டுத் தாய்மார்கள் போட்டிருந்தனர்.
சங்கத்தின் மூத்த பிரசாரக் திரு.கே.சூரியநாராயண ராவ், தென் பாரத பிரசாரக் திரு.சேது மாதவன், கர்நாடக ஆந்திர மாநில பிரசாரக் திரு.ஜெயதேவ், அகில பாரத சேவா பிரமுக் திரு.சீதாராம் கேடிலய, சம்ஸ்கார் பாரதியின் அகில பாரத இணை அமைப்பாளர் திரு.பா.ரா.கிருஷ்ணமுர்த்தி, பா.ஜ.க.தேசிய இணை அமைப்பாளர் திரு.வீ.சதீஷ், தமிழக பா.ஜ.க.பிரமுகர் திரு.இல.கணேசன் ,பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன், ஹிந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் திரு.இராம.கோபாலன், உட்பட சங்கத்தின் மற்ற அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பரமபூஜனீய சர் சங்க சாலக் மோகன் பாகவத் அவர்கள் ஹிந்தியில்  ஆற்றிய சொற்பொழிவினை தென் பாரத ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இணை அமைப்பாளர் திரு.கோ.ஸ்தாணுமாலயன் அவர்கள் தமிழாக்கம் செய்தார்.
துவக்கத்தில் சங்க ஸ்வயம் சேவகர்கள் அனைவரும் இணைந்து இந்த யுகம் இந்து யுகம் இணையில்லா சங்க யுகம் எனும் பாடலைப் பாடினர். அப்பாடலை அனைவரும் இணைந்து பாடியத்தை கேட்பதற்கு மிக அற்புதமாக இருந்தது.

வரவேற்பு உரையாற்றும் டாக்டர் ஸ்ரீனிவாச கண்ணன்
நிகழ்ச்சிக்கு வந்திருந்த முக்கிய சங்கப் ப்ரௌப்பளர்கள் வரவேற்புக் குழு உறுப்பினர்கள் சமுதாயத் தலைவர்கள் துறவியர்கள் உட்பட விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் தென் தமிழக ஆர்.எஸ்.எஸ்.செயலாளர் திரு.எஸ்.ராஜேந்திரன் அவர்கள் அறிமுகம் செய்துவைத்தார். வரவேற்புக் குழுவின் செயலாளர் டாக்டர் ஸ்ரீநிவாசக் கண்ணன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு நிறைவுற்றது.
கன்யாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வருகின்ற ஒரு ஷாகாவில் இருந்து மட்டும் (சங்கக் கிளை) 60 பேர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். 
திருச்சி மாநகரில் இருக்கின்ற 81 பஸ்திகளில் இருந்தும் மக்கள் வந்திருந்தனர். 
618 கிராமங்களில் இருந்து சங்க ஸ்வயம் சேவகர்கள் வந்திருந்தனர்.   
மொத்தம் 2,542 கிராமங்களில் இருந்து நிகழ்ச்சிக்கு மக்கள் வந்திருந்தனர்.  
3,469 புதிய ஸ்வயம் சேவகர்கள் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர். 
நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தருகில் மொத்தம் 2,948 வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. எவ்விதமான இடையூறுகளும் இன்றி வாகனங்கள் சுமுகமாக வந்து சென்றன. அதைப் பார்த்துக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகளுக்கோ பெரும் ஆச்சரியம். சங்க ஏற்பாட்டினை அவர்கள் பாராட்டினர். 
காவல் துறையினர் நூற்றுக் கணக்கில் பாதுகாவலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு அங்கு எவ்வித வேலையும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இல்லை. உயர் அதிகாரிகள் உட்பட அனைவரும் சங்க நிகழ்ச்சிகள் எப்படி திட்டமிட்டபடி எவ்வித குழப்பமும் இன்றி குறிப்பிட்ட நேரத்தி துவங்கி நடைபெறுகிறது என்பதை கவனித்தனர். 
1,50,000 சதுர அடி நிலப்பரப்பில் சங்கஸ்தான் அமைந்திருந்தது. 
நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு வழங்கிட 2 லட்சம் சப்பாத்திகள் 1 லட்சத்து 46 ஆயிரம் இட்லி தயாரிக்கப்பட்டது. 19 மணிநேரத்தில் வெறும் 8 பேர் மட்டும் இப்பணியில் ஈடுபட்டனர். இந்த இட்லி தயாரித்திட 606 கிலோ மாவு உபயோகப் படுத்தப்பட்டது. இது கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது. 
அதிக இட்லி தயாரித்து சாதனை படைத்தவர் கோவையைச் சேர்ந்த சமையல் ஒப்பந்தக்காரர் திரு.சரவண மாணிக்கம் ஆவார். இவரது சாதனையை அங்கீகரித்து Elite World Record அமைப்பின் பிரதிநிதி பாலநாக சாய்கிருஷ்ணன் அவர்கள் சான்றிதழ் வழங்கினார். 
அருகில் டாஸ்மாக் கடை இருந்தும் கூட நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஒருவர் கூட  அந்தப் பக்கம்  எட்டிப் பார்க்கவில்லை என்று நிகழ்ச்சிக்கு வந்திருந்த தொலைகாட்சி நிருபர் ஒருவர் கூறினார்.
பல குடும்பத்தில் தாத்தா-பேரன்-மகன் என மூன்று தலைமுறையினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பா.ஜ.க.முன்னாள் எம்.எல்.ஏ. ஹெச் ராஜா, அவருடைய தந்தை யோகா மாஸ்டர் திரு.ஹரிஹரன், ஹெச் ராஜாவின் மகள்   மற்றும் அவரது பேத்தி என 4 தலைமுறையினர் பங்கேற்றிருந்தனர்.
தமிழக ஆர்.எஸ்.எஸ். வரலாற்றில் இந்நிகழ்ச்சி ஒரு மைல் கல்லாகும். இதன் காரணமாக தமிழகத்தில்  மேலும் சங்க சக்தி வலுப்பெறும்.

05 பிப்ரவரி 2012

இந்தியாவின் கபட மதச்சார்பின்மைவாதிகள்.


February 3, 2012
ஆங்கிலத்தில் எஸ்.குருமூர்த்தி  
தமிழில் ல.ரோஹிணி 
மதசார்பற்ற இந்தியாவின் உண்மையான சொரூபத்தை இனம் கண்டு கொள்ள மக்பூல் பிடா ஹுசைனும், சல்மான் ருஷ்டியும் மிகச் சிறந்த ஒப்பீட்டாளர்களாக, மாறுபட்டவர்களாக  உள்ளனர். இருவருமே பிறப்பால் முஸ்லிம்கள். இருவருமே காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த இந்தியாவின் பம்பாய் பகுதியில் பிறந்தவர்கள். சல்மான் ருஷ்டி குழந்தையாக இருந்த போது ஹுசைனுக்கு வயது 32. ஹுசைன் சென்ற வருடம்தான் இறந்தார். ஹுசைன் ஒரு ஓவியர். ருஷ்டி ஒரு எழுத்தாளர். இருவருமே உலக அளவில் புகழ் பெற்றவர்கள். ஹுசைன் தான் வரைந்த ஓவியங்களால் புகழ் அடைந்தார். ருஷ்டி தன்னுடைய எழுத்துகள் மூலம் புகழ் பெற்றார். 2006 ஆம் ஆண்டு குவெட்டார் நாட்டுக்கு குடி பெயர்ந்து அந்நாட்டு குடிமகன் ஆனார்  ஹுசைன். அதுவரை தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் ஹுசைன் இந்தியாவில்தான் கழித்தார். ஆனால் சல்மான் ருஷ்டி பிரிட்டனில், பிரிட்டிஷ் குடிமகனாக வாழ்கிறார். உணர்ச்சிக் கொந்தளிப்பு நிறைந்த முஸ்லிம்களைத் தொட்டதால் ருஷ்டிக்கு எதிராக முஸ்லிம்கள் திரும்பினர். உணர்ச்சி அவ்வளவாக இல்லாத ஹிந்துக்களை ஹுசைன் எரிச்சல் மூட்டினார்.
முதலில் ஹுசைனை எடுத்துக் கொள்வோம். இவ்வாறுதான் ஹுசைன் ஹிந்துக்களுக்கு எரிச்சல்  உண்டாக்கினார். மிக நேர்த்தியாக உடை உடுத்திக் கொண்டிருக்கும் எல்லா ஹிந்து கடவுள்கள், ஹிந்து தேவியர்களை தன்னுடைய கற்பனை திறனைக் கொண்டு, தன்னுடைய ஓவியத்திறனைக் கொண்டு, ஹுசைன் நிர்வாண மாக்கினார். கோடிக்கணக்கான  ஹிந்துக்கள் வழிபடும் ஹிந்துக் கடவுளர்களை ஹுசைன் நிர்வாணமாக வரைந்து, தன்னுடைய புகழைப் பயன்படுத்தி, அந்த ஓவியங்களை விற்றுக் காசாக்கினார்.
லக்ஷ்மிதேவி விநாயகரின் தலையில் நிர்வாணமாக உட்கார்ந்து கொண்டு இருக்கும் ஓவியத்தை ஹுசைன் தீட்டினார். துர்காதேவி புலியுடன் புணர்ச்சி செய்யும் ஓவியமும் ஹுசைன் தீட்டியதே. சரஸ்வதிதேவி நிர்வாணமாக வீணையைக் கையில் வைத்துக் கொண்டு இருக்கும் ஓவியத்தை ஹுசைன் வரைந்தார். பார்வதிதேவி நிர்வாணமாக தன்னுடைய மகன் கணேசருடன் இருக்கும் ஓவியமும் ஹுசைனின் கை வண்ணத்தில் உருவானதுதான். ஹனுமானை ஹுசைன் நிர்வாணமாக வரைந்து நிர்வாணமாக இருக்கும் ராவணின் தொடையில் சீதாதேவி நிர்வாணமாக உட்கார்ந்து இருப்பதை பார்ப்பது போல் சித்தரித்து இருந்தார். பாரதமாதாவை ஹுசைன் இரண்டு முறை நிர்வாணமாக ஓவியம்  வரைந்து இருந்தார். ஒரு ஓவியத்தில் பாரத மாதாவின் நிர்வாண உடலில் இந்தியாவின் மாநிலங்களின் பெயரை வரைந்து இருந்தார். இன்னொரு ஓவியத்தில் வங்காள விரிகுடா கடலில் ஒரு நிர்வாண சாது உட்கார்ந்து இருப்பதுபோல் வரைந்து இருந்தார்.
ஆனால் முஸ்லிம்களை ஓவியம் தீட்டும் போது ஹுசைனின் அணுகு முறை இதற்கு முற்றிலும் மாறாக இருந்தது. முற்றிலும் நன்றாக உடை உடுத்திக் கொண்டு இருந்த ஒரு முஸ்லிம் அரசனை ஹுசைன் ஓவியம் வரைந்து பக்கத்தில் ஒரு நிர்வாணமாக நிற்கும் பிராம்மணனை சித்தரித்து இருந்தார். தான் வரைந்த முஸ்லிம் பெண்கள் உருவங்களை ஹுசைன் முற்றிலுமாக ஆடையால் மறைத்து இருந்தார். அந்த முஸ்லிம் பெண்கள் ஓவியங்களுக்கு “பர்தா” கூட போட்டு இருந்தார். ஹுசைனின் மனைவி மற்றும் மகளின் ஓவியங்கள் கூட இவ்விதம்தான் மறைக்கப்பட்டு இருந்தன. தான் வரைந்த முஸ்லிம் கவிஞர்களின் உருவங்கள் அனைத்தையும்  முழுவதுமாக உடை உடுத்திக் கொண்டு இருப்பதுபோல்தான் ஹுசைன் ஓவியம் தீட்டி இருந்தார்.
ஹுசைனின் மூளை குழம்பிய கிறுக்குத்தனமான ஹிந்து கடவுளர்களை இழிவுபடுத்தும்  இத்தகைய ஓவியங்களைப் பார்த்த சில ஹிந்துக்கள், அவருடைய ஓவியக் கண்காட்சிகள் நடக்கும் போது தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். அவருக்கு எதிராக குற்ற வழக்குகளைத் தொடுத்தனர். தனக்கு எதிர்ப்பு அதிகமாவதையும், தனக்கு எதிராக வழக்குகள் அதிகமாக பதிவு செய்யப்படுவதையும் கண்டு ஹுசைன் இந்தியாவில் இருந்து வெளியேறினார். இந்திய அரசாங்கம், நீதித்துறை, அரசியல் கட்சிகள், ஊடகங்கள் என எல்லோருமே ஹுசைனின் “கருத்து சுதந்திரத்தை” பாதுகாக்க வேண்டும் என ஓரணியில் திரண்டு எழுந்தனர். ஹிந்துக்களை புண்படுத்த, அவர்களுடைய தெய்வங்களை இழிவுபடுத்த ஹுசைனுக்கு உள்ள உரிமை மதிக்கப் பட வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். ஹுசைனுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன. ஆனால் எவருமே அவர் கொல்லப்பட வேண்டும் என்று ஆணை எதையும் பிறப்பிக்கவில்லை. ஹுசைனுக்கு எதிரான போராட்டங்களில் ஒருவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை ஒருவரும் கொல்லப் படவில்லை. ஒருவரும் புண்படுத்தப்படவில்லை. இருந்தும் கூட ஹுசைனுக்கு எதிராக போராடியவர்களை “இந்தியாவின் மதசார்பற்றவாதிகள்”  “காவி பயங்கரவாதிகள் ” என்று அடைமொழி சூட்டினர்.
இப்போது ஹுசைனின் நிலைக்கு மாறுபாடாக இருக்கும் சல்மான் ருஷ்டிக்கு வருவோம். ”சாத்தானின் வரிகள்” என்னும் சர்ச்சைக்குரிய புத்தகத்தை எழுதியதிலிருந்து ருஷ்டியின் வாழ்க்கை ஒரு “வாழும் நரகமாக” மாறிவிட்டது. இப்போது சல்மான் ருஷ்டி உயிரோடுதான் இருக்கிறார். ஆனால் பெப்ரவரி 4,1989 ஆம் ஆண்டில் ஆயதுல்லா கொமைனி ருஷ்டியைக் கொல்லுமாறு பாத்வா இட்டதில் இருந்து சல்மான் ருஷ்டி லட்சம் முறையாவது செத்து செத்துப் பிழைத்து இருப்பார். ஆனால் ஆயதுல்லா கொமைனி இன்னொரு சக முஸ்லிமை ஏன் கொலை செய்யச்  சொல்லி பத்வா பிறப்பிக்க வேண்டும்?
ஆயதுல்லா கொமைனி
1988 ஆம் ஆண்டில் சல்மான் ருஷ்டி இந்த புத்தகத்தை எழுதினார். இப்போது ஒரு தலைமுறையே அதன் பிறகு வந்துவிட்டது. எனவே கொஞ்சம் சரித்திரத்தை பார்ப்போம். ருஷ்டியின் புத்தகம்  இஸ்லாமில் சர்ச்சைக்குரிய ஒரு பாரம்பரியத்தைப் பற்றி பேசுகிறது. அதன்படி, முஹம்மது குரானில் மூன்று வாக்கியங்களை (சுறா) சேர்த்தார். மெக்காவில் வழிபாடு செய்யப்பட்ட மூன்று தேவிகளை தெய்வீகமாக ஏற்றுக் கொண்டு அவர் இந்த மூன்று வாக்கியங்களை குரானில் சேர்த்தார். (முகம்மதுவை சல்மான் ருஷ்டியின் புத்தகத்தில் மகௌந்த் என்று குறிப்பிட்டுள்ளனர்). ஆனால் பிறகு முஹம்மது இந்த மூன்று வாக்கியங்களை நீக்கிவிட்டார். மெக்காவில் இருந்தவர்களை தாஜா செய்ய சாத்தான் இந்த மூன்று வாக்கியங்களையும் சேர்க்க தன்னை மயக்கிவிட்டதாக முஹம்மது கூறி அவற்றைப்  பிறகு நீக்கி விட்டார். இந்தப் பின்னணியில்தான் சல்மான் ருஷ்டி தான் எழுதிய புத்தகத்திற்கு “சாத்தானின் வரிகள்” என்று பெயர் சூட்டினார். சர்ச்சைக்கு உள்ளான அந்த மூன்று வரிகளை குறிப்பிட்டுத்தான்  ருஷ்டி தன்னுடைய புத்தகத்திற்கு  சாத்தானின்  வரிகள் என்று பெயர் சூட்டினார்.ருஷ்டீயின் புத்தகத்திற்கு எதிராக முஸ்லிம்கள் கிளர்ந்து எழுந்தனர்.
சல்மான் ருஷ்டியைக் கொலை செய்வதற்காக  முஸ்தபா மஹ்மூத் மழெஹ் (Mustafa Mahmoud Mazeh) என்பவர் சதி செய்தார். இதற்காக குண்டு தயாரித்துக் கொண்டு இருக்கும் போது லண்டனில் உள்ள ஒரு ஓட்டலில் விபத்தில் குண்டு வெடித்து சிதறி அவர் இறந்தார். ஹிடோஷி இகரஷி (Hitoshi Igarashi) என்னும் ஜப்பானியர் சல்மான் ருஷ்டியின் புத்தகத்தை ஜப்பானிய மொழியில் மொழி பெயர்த்தார். இதன் காரணமாக 1991  ஜூலை மாதத்தில் அவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதே மாதத்தில் ருஷ்டியின் புத்தகத்தை இத்தாலிய மொழியில் மொழி பெயர்த்த எட்டோரே காப்ரிலோ (Ettore Capriolo) என்பவர் கத்திக்குத்துக்கு ஆளானார். அவருக்கு படுகாயங்கள் ஏற்பட்டது. துருக்கிய மொழியில் ருஷ்டியின் புத்தகத்தை அஜிஸ் நேசின் (Aziz Nesin) என்பவர் மொழி பெயர்த்தார். இதனால் அவரைக் குறி வைத்துத் தாக்கினார்கள். இதன் பின்னணியில் நிகழ்ந்த கலவரங்களில் ஜூலை 1993 இல் 37 பேர் படுகொலை செய்யப்பட்டனர். நார்வே நாட்டில் ருஷ்டியின் புத்தகத்தை வில்லியம் ந்யகார்ட் (William Nygaard)  என்பவர் வெளியிட்டார். அக்டோபர் 1993 இல் ஒஸ்லோவில் அவரை அனேகமாக கொன்று விட்டனர். அந்த அளவுக்கு அவரை மிருகத்தனமாக தாக்கினர். பெல்ஜியம் நாட்டில் இரண்டு முஸ்லிம் தலைவர்கள் ருஷ்டியைக் கொல்ல வேண்டும் என்று ஆயதுல்லா கொமைனி பிறப்பித்த  பாத்வாவை எதிர்த்தனர். இதற்காக அவர்களைக் கொலை செய்தனர். கலிபோர்னியாவில்  இரண்டு புத்தகக் கடைகளையும் இங்கிலாந்தில் ஐந்து புத்தகக் கடைகளையும் தீ வைத்துக் கொளுத்தினர். மும்பையில் நடந்த கலவரங்களில் 12 பேர் கொல்லப் பட்டனர். இந்த கொடூர சம்பவங்களின் பட்டியல் இதோடு முடிவது இல்லை .ஆனால் அவைகள் அனைத்தையும் விளக்க இங்கு இடம் இல்லை!
அன்று ஆரம்பித்த அந்த சமயத்தில் இருந்து  இன்றுவரை ருஷ்டியின் பெயர் தப்பான காரணங்களுக்காக  தலைப்பு செய்தியாக இடம் பெற்று வருகிறது. இப்போது ருஷ்டியின் பெயர் மீண்டும் செய்திகளில் இடம் பெற்று வருகிறது. ஜெய்பூர் இலக்கிய விழா 2012 க்கு சல்மான் ருஷ்டியை அழைத்து இருந்தார்கள். இந்த விழா ஆசியாவில்  மிகப் பெரியதாகும். இந்த விழா ஒரு வாரத்திற்கு முன்புதான் நடைபெற்றது. முஸ்லிம்கள் போராட்டங்களை நடத்தப் போவதாக அச்சுறுத்தினர். ருஷ்டி வந்திருந்தால்  வன்முறை வெடித்து இருக்கும். எனவே இந்தியா புலனாய்வுத் துறை ஒரு செய்தியை இட்டுக் கட்டியது. 4  ஆயுதம் தாங்கிய கொலையாளிகள் ருஷ்டியைக் கொல்ல திரிந்து கொண்டு இருப்பதாக அது ஒரு புளுகு மூட்டையை  அவிழ்த்துவிட்டது. இது ஒரு போலி கட்டுக்கதை என்பது இப்போது நிருபிக்கப்பட்டுள்ளது. ருஷ்டியை இந்தியாவுக்கு வரவிடாமல் தடுக்கும் நோக்கத்தில்தான் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. ருஷ்டியின் சாத்தானின் வரிகள் புத்தகத்தில் இருந்து சிலவற்றைப்  படித்த  4 பேர் கைதாகாமல்  தப்பிக்க இந்தியாவில் இருந்து ஓடி விட்டனர். வில்லியம் டல்ர்யம் ப்லே  என்னும்  நபர்தான் இந்த விழாவின் டைரக்டர். அவருக்கு கொலை மிரட்டல் வந்தது. இறுதியாக ருஷ்டியின் வீடியோ உரையைக் கூட ரத்து செய்தனர். ஏன் என்றால் விழாப் பந்தலுக்கு வெளியே இருந்த முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்களால் உள்ளே பங்கெடுத்துக் கொண்டு இருந்த இலக்கிய ஆர்வலர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று காரணம் சொன்னார்கள்.
ஹுசைனுக்கும் ருஷ்டிக்கும் இடையே உள்ள முரண்பாடு உள்ளங்கை நெல்லிக் கனியாகும். இஸ்லாமில் உள்ள சர்ச்சைக்குரிய ஒரு விஷயத்தை பற்றி எழுதியதற்காக  ருஷ்டியை பல வருடங்களாக வேட்டை ஆடி வருகின்றனர். இப்போது கூட ருஷ்டிக்கு கொலை மிரட்டல் தொடர்கிறது. ருஷ்டியுடனோ அல்லது அவர் எழுதிய புத்தகத்துடனோ  எந்த சம்பந்தமும் இல்லாத பலரும் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இப்போது கூட ருஷ்டியின் பெயரால் பலர் கொலை செய்யப்படும் அபாயம் நீடிக்கிறது. ஜெய்பூர்  இலக்கிய விழா இந்த விஷயத்தை வெளிப் படையாக்கி உள்ளது .
ஆனால் ஹுசைன் சுதந்திரம் என்ற பேரால் ஹிந்துக்களை புண்படுத்தினார். மகாத்மா காந்தி உலகத்தில் ஹிந்துக்கள்தான்  மிகவும் மென்மையானவர்கள், மிக அதிக பட்ச நாகரீகம் உடையவர்கள் என்று சொன்னார். ஹுசைனுக்கு ஹிந்துக்களிடம் இருந்து சாதரணமான  எதிர்ப்புகள்தான் வந்தன. ருஷ்டியின் புத்தகத்திற்கு எதிராக முஸ்லிம்கள் கட்டு அவிழ்த்து விட்ட வன்முறையுடன் ஒப்பிடும் போது ஹுசைனுக்கு எதிராக ஹிந்துக்கள் நடத்திய எதிர்ப்புகள் “ஒரு எறும்பு கடிப்பது போல்தான்  இருந்தன”. இத்தனைக்கும் ஹுசைனின் கிறுக்குத் தனமான ஓவியங்கள் கோடிக்கணக்கான ஹிந்துக்களின்  மத உணர்வுகளை, நம்பிக்கைகளை குதறிக் கிழித்து இருந்தன. ஹுசைனின் செயல்கள் ஹிமாலய தவறாக அதுவும் வேண்டும் என்றே திட்டமிட்டு செய்ததாக அமைந்து இருந்தன. ஆனால் இவை அனைத்திலும்  கொடுமையான  அவமானம் என்னவென்றால் “முரண்பாடு நிறைந்த அரசியல் ஆகும்.” ஹிந்துக்களை காயப்படுத்த, ஹிந்துக் கடவுள்களை அவமானப்படுத்த, ஹிந்து தேவியர்களை இழிவுபடுத்த  ஹுசைனுக்கு உரிமை உள்ளது என்று மதசார்பின்மை ஊடகங்களும், கட்சிகளும், தலைவர்களும்,  அரசுகளும் “பேச்சு, எழுத்து சுதந்திரத்தின் பெயரால்” மல்லு கட்டி நின்றனர். ஆனால் இதே மதசார்பின்மை  கபட வேஷதாரிகள் முஸ்லிம்களைக் காயப்படுத்த சல்மான் ருஷ்டிக்கு உரிமை உள்ளதை மட்டும் ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக சல்மான் ருஷ்டி மீது அவர்கள் வசை மாறி பொழிந்தனர்.இப்போது இதைவிட இன்னும் ஒரு பெரிய அவமானம் ஏற்ப்பட்டுள்ளது .ஹுசைனின் ஓவியக் கண்காட்சிகளில் ஹிந்து கடவுளர்களை இழிவு படுத்தும் ஓவியங்கள் இடம் பெறக் கூடாது என்று இயல்பான முறைகளில் ஹிந்துக்கள் போராடினர் . ஆனால் மதசார்பின்மை வாதிகள் “சகிப்புத்தன்மையை” சுட்டிக்காட்டி ஹிந்துக்கள் அவ்வாறு போராடக் கூடாது என்று உபதேசம் செய்கின்றனர். இந்த மதசார்பற்ற வாதிகளின் பட்டியலில் ஊடகங்களும் இடம் பெற்றுள்ளன. ஆனால் இந்த “மதசார்பின்மைவாதிகள்” முஸ்லிம்களின் வன்முறைகளுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட இன்றுவரை பேசவில்லை. சகிப்புத்தன்மையோடு இருக்குமாறு முஸ்லிம்களை அவர்கள் கேட்கவும் இல்லை. இதற்கான காரணம் மிகவும் தெளிவு .இந்த மதசார்பின்மை வாதிகள் “அயோக்யர்கள்” “நேர்மை இல்லாதவர்கள்”.
சல்மான் ருஷ்டியின் புத்தகம் தங்களைப் புண்படுத்தி விட்டடாக முஸ்லிம்கள் கருதியது நியாயமே. இதே மாதிரிதான் ஹுசைனின் அயோக்யத்தனமான, ஹிந்துக்  கடவுளர்களை இழிவு படுத்திய ஓவியங்கள் ஹிந்துக்களை காயப்படுத்தின. மிக அதிகமாக  உணர்ச்சி வசப்படும் முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபட்டு. தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். ருஷ்டி, ஹுசைன் இருவருமே தவறு இழைத்து விட்டனர் என்று சொல்வதற்கு மாறாக, மதசார்பின்மைவாதிகள் ருஷ்டீயின் மீது குற்றம் கண்டு பிடித்தனர். ஹுசைனை புகழ்ந்தனர். ஏன்? என்ன காரணம்?
ஒருவர் ஹிந்துக்களின் உணர்வுகளை எட்டி உதைத்து, மிதித்து, ஹிந்துக்களின் உணர்வுகளைக்  கண்டு கொள்ளாமல், அதே சமயம் முஸ்லிம் உணர்வுகளை மதிப்பது போல் நடிப்பது அவரை “மதசார்பின்மைவாதி “ஆக்க போதுமானதாகும். இத்தகைய மதசார்பின்மை ஆபத்து நிறைந்தது. பித்தலாட்டமானது.
இக்கட்டுரை தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸில் கடந்த 31/01/2012 தேதியன்று பிரசுரமானது. அதைப் படிக்க விரும்புபவர்கள் இங்கே கிளிக் செய்யவும்.