Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

30 மார்ச் 2011

தி.மு.க., விரோதி; அ.தி.மு.க., துரோகி:திருப்பூரில் ராமகோபாலன் பேச்சு

election 2011 தி.மு.க., விரோதி; அ.தி.மு.க., துரோகி:திருப்பூரில் ராமகோபாலன் பேச்சு திருப்பூர்:""தி.மு.க., விரோதி; அ.தி.மு.க., துரோகி; நமது ஓட்டு பா.ஜ.,வுக்கே,'' என, இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் பேசினார்.சாய ஆலைகளின் கழிவுநீர் சுத்தகரிப்பு செய்யும் பணியை, அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில், தேர்தல் விளக்க பொதுக்கூட்டம், திருப்பூர் அரிசிக்கடை வீதியில் நடந்தது.நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் பேசியதாவது: பின்னாலாடை தொழில் வளர்ச்சியால் திருப்பூரை உலகமே திரும்பி பார்க்கிறது. ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி வெளிநாட்டு உற்பத்தி, 5,000 கோடி ரூபாய்க்கு உள்நாட்டு உற்பத்தி நடக்கிறது. பல லட்சம் தொழிலாளர்களை வாழ வைத்த, இத்தொழிலை காப்பாற்ற அரசியல் கட்சிகள் தவறிவிட்டன. 
வரும் தேர்தலில் அனைவரும் பா.ஜ.,வுக்கு ஒட்டு போட வேண்டுமென வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய வேண்டியது இந்து முன்னணியின் கடமை . தமிழகத்தில் ஆறு லட்சம் கோவில்கள் உள்ளன. கோவில் பூசாரிகளுக்கு சைக்கிள் வழங்குகிறார்களே; எங்கிருந்து எடுக்கப்படுகிறது நிதி; கோவில் பணத்தில் இருந்து தான் என்பதை புரிந்து கொண்டு வாக்களியுங்கள். மத மாற்றத் தடை சட்டம் பேசியவர்கள் எல்லாம், இன்று இலவசத்துக்கு மாறிவிட்டனர்.நம் வெற்றியை பதிவு செய்ய வலுவாக, இந்து ஓட்டு வங்கியை உருவாக்க வேண்டும். தி.மு.க., விரோதி; அ.தி.மு.க., துரோகி; நமது ஓட்டு பா.ஜ.,வுக்கே. நமக்கு சம நீதி, சம உரிமை, சம வாய்ப்பு வழங்குபவர்கள் பா.ஜ.,வினர் தான். எனவே, பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டு போடுங்க, என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக