Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

25 மார்ச் 2012

ஆர்.எஸ்.எஸ். புதிய நிர்வாகிகள்


ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளராக சுரேஷ் (பையாஜி) ஜோஷி  மீண்டும் தேர்வு.


நாகபுரியில் மார்ச் 17ஆம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ்.பிரதிநிதி சபா உறுப்பினர்களால் சுரேஷ்(பையாஜி) ஜோஷி அவர்கள் ஏகமனதாக பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
2009ஆம் வருடம் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுரேஷ் ஜோஷி அவர்கள் அப்பொறுப்பில் 3 ஆண்டுகாலமாக இருந்துவந்தார்.   நாகபுரியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதி சபாவில் கடந்த ஆண்டின் அறிக்கையை சமர்ப்பித்த அவர் தனது பதிவிக்காலம் முடிந்து விட்டதாகக் கூறி அப்பொறுப்பில் இருந்து விலகினார்.
ஆர்.எஸ்.எஸ்.சட்ட விதிமுறைகளின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் அப்பதவில் 3 வருடங்கள் மட்டுமே இருக்கமுடியும்.  எனவே அவரது பதிவிக்காலம் முடிவடைந்த நிலையில் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். அகில பாரத செயற்குழு உறுப்பினர் டாக்டர் அசோக் ராவ் குக்கடே அவர்கள் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்று புதிய பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தினார்.
ஆர்.எஸ்.எஸ். வடக்குப் பிராந்தியங்களின் தலைவர் ஸ்ரீ.பஜ்ரங்லால் குப்தா அவர்கள் ஸ்ரீ.சுரேஷ் ஜோஷி அவர்களின் பெயரை முன்மொழிய, தெற்குப் பிராந்தியங்களின் செயலாளர் திரு.ஏ.ஆர்.மோகனன் மற்றும் கிழக்குப் பிராந்தியங்களின் சங்கசாலக் திரு.ரானேந்திரா நாத் ஆகியோர் வழிமொழிந்தனர். வேறு எவரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் திரு.சுரேஷ் பையாஜி ஜோஷி அவர்கள் ஏகமனதாக ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி டாக்டர் அசோக் ராவ் குக்கடே அறிவித்தார். அப்பொறுப்பினை ஏற்றுக்கொன்ற சுரேஷ் ஜோஷி அவர்கள் அடுத்து வருகின்ற 3 வருடங்களுக்கு அப்பொறுப்பில் இருப்பார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் 3  வருடத்திற்கு ஒருமுறை அகில பாரத அளவில் தேர்தல் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பிரதிநிதி சபா உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் அகில பாரதப் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படுகிறார்.
ஆர்.எஸ்.எஸ்.பிரதிநிதி சபாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் 
தலைவர் டாக்டர் மோகன் பாகவத்
பொதுச் செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி
4 இணை பொதுச் செயலாளர்கள்
1) சுரேஷ் சோனி
2) தத்தாத்ரேயா ஹோசபளே
3) கிருஷ்ணா கோபால்
4) கே.சி.கண்ணன்
பெளதிக் பிரமுக் பாகையா
ஸஹ பெளதிக் பிரமுக் மகாவீர்
ஷாரீரிக் பிரமுக் அணில் ஓக்
சஹ ஷாரிரிக் பிரமுக் ஜகதீஷ் பிரசாத்
சம்பர்க்க பிரமுக் ஹஸ்திமல்
சஹ சம்பர்க்க பிரமுக் 3 பேர்
1) அருண் குமார்
2) ராம் மாதவ்
3) அனிருத் தேஷ்பாண்டே
சேவா பிரமுக் சுகாஸ் ஹிரேமத்
சஹ சேவா பிரமுக் அஜித் மகாபத்ரா
வ்யவஸ்தா பிரமுக் சாஹல் சந்த் பக்ரேச்சா
சஹ  வ்யவஸ்தா  பிரமுக்
1) மங்கேஷ் பிண்டே
2) பாலா கிருஷ்ணா திரிபாதி
பிரசார் பிரமுக் மன் மோகன் வைத்யா
சஹ பிரசார் பிரமுக் நந்த குமார்
பிரசாரக் பிரமுக் சுரேஷ் சந்திரா
சஹ பிரசாரக் பிரமுக் வினோத் குமார்
அகில பாரத செயற்குழு உறுப்பினர்கள்
1) சீதாரம் கேடிலைய
2) இந்திரேஷ் குமார்
3) மதுபாய் குல்கர்னி
4) ந.கிருஷ்ணப்பா
5) ஸ்ரீகாந்த் குல்கர்னி
6) மதன்தாஸ் தேவி
7) கே.எஸ்.சுதர்சன்
8) அசோக் பேரி
கேரளா, தமிழ்நாடு மாநிலங்கள் அடங்கிய தக்ஷிண க்ஷேத்தர ப்ரசாரக்காககோ.ஸ்தாணுமாலயன், தக்ஷிண க்ஷேத்திர கார்யவாஹ் (செயலாளர்) ஆகஎஸ்.ராஜேந்திரன் (திருச்சி) தக்ஷிண க்ஷேத்திர சங்கசாலக்காக (தலைவர்) டாக்டர்ஆர்.வன்னியராஜன் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

09 மார்ச் 2012

வழக்கறிஞர்கள் சமுதாயக் கடமைகளை மறக்கக் கூடாது(Advocates for Hindhuthva )-ஆர்.எஸ்.எஸ்.தலைவர்


சமுதாயக் கடமைகளை நினைவில் கொள்ளுங்கள்- மோகன் பாகவத் 
RSS சர்சங்க சாலக் ஸ்ரீ மோகன் பாகவத் ஜீ
கர்நாடக மாநிலம் தாவனகரேயில் மார்ச் 4 அன்று நடைபெற்ற வழக்கறிஞர்கள் மாநாட்டினைத் ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் துவக்கி வைத்தார். அவர் தனது துவக்க உரையில் “வழக்கறிஞர்கள் தங்களது தொழில் தர்மத்தையும், சமுதாயக் கடமைகளையும் மறந்திடக் கூடாது” என்று வலியுறுத்தினார்.  “Advocates for Hindhuthva” என்கிற தலைப்பில் நடைபெற்ற ஒரு நாள் மாநாட்டில் கர்நாடக மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் 1,400 ௦௦ வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். அம்மாநிலத்தில் ஹிந்துக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கி வருகின்ற “ஹிந்து ஐக்கிய வேதிக” அமைப்பு துவங்கப்பட்டு 25 ஆண்டுகள் (வெள்ளி விழா) ஆவதையொட்டி இந்நிகழ்ச்சியினை அந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
துவக்க விழாவில்  ஹரிஹராவைச் சார்ந்த ஸ்ரீ சித்தலிங்க சுவாமிஜி, ஜம்மு காஷ்மீர் மற்றும் ஆஸாம் மாநிலங்களில் தலைமை நீதிபதியாக பதவி வகித்து பணி நிறைவு பெற்றுள்ள  நீதிபதி எம். ராமகிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.
துவக்க விழாவிற்குப் பிறகு நடைபெற்ற முதல் அமர்வில் “ராஜேந்திரா சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கைகளினால் தேசிய ஒருமைப்பாட்டிற்கு  ஏற்பட்டுள்ள அபாயங்கள்” பற்றி
இந்திரேஷ் குமார்
ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ.இந்திரேஷ் குமார் அவர்கள் பேசினார். இந்த அமர்விற்கு லெப்டினென்ட் ஜெனரல் (ஓய்வு) வி.எம்.பாட்டில் அவர்கள் தலைமை வகித்தார்.
நீதிபதி பர்வத ராவ்
மதிய உணவுவிற்குப் பிறகு நடைபெற்ற அமர்வு “கர்நாடகாவில் நிலவி வருகிற  சமுதாய சவால்கள்”  என்கிற தலைப்பில் நடைபெற்றது. மைசூரைச் சார்ந்த மூத்த வழக்கறிஞர் சி.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சிறப்புரை உரையாற்றினார். வழக்கறிஞர் அசோக் சாஹு தலைமை வகித்தார். அகில பாரத அதிவக்த பரிஷத்தின் தேசியத் தலைவர் நீதிபதி (ஓய்வு) பர்வத ராவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
நீதிபதி ராமா ஜோய்ஸ்
மாலையில் நடைபெற்ற இறுதி அமர்வில் நீதிபதி (ஓய்வு) நீதிபதி ராமா ஜோய்ஸ், எல்லைப் பாதுகாப்பு படை (Ex. BSF Director) தலைமை இயக்குனர் (ஓய்வு) பி.சி.டோக்ரா  மற்றும் ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்ரமணியசுவாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினர்.
நீதித்துறையின் நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக நின்று வாதாடி நீதியை பெற்றுத் தருவதற்காக  வழக்கில் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாதிட்டு நீதியை பெற்றுத் தருவது என்பது வழக்கறிஞர்களின் கடமையாகும். உலகில் நிலவி வருகின்ற அனைத்து வித அநீதிகளையும் அகற்றி நீதியை வழங்கிட வேண்டும் என்பதே “ஹிந்துத்வா”வின் ஒரே நோக்கமாகும். “ஹிந்துத்வா” பற்றி சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியது தற்போதைய காலத்தின் கட்டாயமாகும். அதற்காகவே இந்த மாநாட்டின் தலைப்பே “ஹிந்துத்வா” பெயரில் அமைந்துள்ளது என்று மோகன் பாகவத் தனது துவக்க உரையில் குறிப்பிட்டார்.
நமது நாட்டின் தேசிய அடையாளம் ”ஹிந்துத்வா”. ஹிந்துத்வா நமது நாட்டின் தேசியம். “ஹிந்து ராஷ்ட்ரம்” இது என்பதை நாம் நன்கு அறிவோம். ஹிந்துத்வா என்பது நமது நாட்டின் வாழ்க்கைமுறை என்று உச்ச நீதி மன்றமே தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது, என்று அவர் பேசினார். வன்முறையும் அநீதியும் நிறைந்து காணப்படுகிற இவ்வுலகில் அமைதியையும், ஒற்றுமை உணர்வையும் ஏற்படுத்திட ஹிந்துத்வா மிகத் தேவையானது என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் துவக்கவுரையில் குறிப்பிட்டார். பாரதத்தின் நிலையான உயர்ந்த பண்பாட்டு விழுமியங்கள் உலகிற்கு என்று தேவைப் படுகிறது. நமது வாழ்க்கை முறையுடன் ஒன்றிணைந்துள்ள உயர்ந்த பண்பாடுகளே ஹிந்துத்வா என்று அழைக்கப்படுகிறது என்றார்.
மாநாட்டில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள்
“எல்லோரும் இன்புற்றிருப்பதுவே யன்றி வேரொன்றறியேன் பராபரமே” என்கிற உயர்ந்த சிந்தனை உலகில் வேறு எங்கும் காண முடியாதது. நீதியை நிலை நாட்டுவது,  தவறுகளைக் கண்டிப்பது உண்மைக்குக் குரல் கொடுப்பது என்பது ஹிந்துத்துவமாகும். தர்மத்தின் படி வாழ்க்கை நடத்துவது, பொருள் ஈட்டுவதையும் இன்பம் சுவைப்பதையும் ஒரு கட்டுப் பாட்டிற்குள் வைத்துக் கொள்வது, ஆன்ம விடுதலையை வேண்டுவது என்பது ஹிந்து வாழ்க்கை முறையாகும்.
ஹிந்துத்துவா நமது நாட்டின் அடையாளம். ஹிந்துத்துவா என்பது நமது தேசியமாகும். ஹிந்துத்துவா என்பது நமது நாட்டின் வாழ்க்கை முறைக்குப் பெயராகும் என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது. இதன்படி நமது நாட்டில் இருக்கின்ற அனைவரும் ஹிந்துக்கள்தான். நமது நாட்டில் இருக்கின்ற முஸ்லிம்களின் முன்னோர்கள் அனைவரும் ஹிந்துக்கள்தான்.
கலாசார அடிப்படையில் இந்நாட்டில் இருக்கின்ற அனைத்து முஸ்லிம்களும் ஹிந்துக்களே ஆவர். துரதிர்ஷ்டவசமாக வாக்கு வங்கி அரசியல் காரணமாக அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு சிறுபான்மையினர் என்று அழைக்கப்படுகின்றனர். சில அடிப்படை வாதிகள் சச்சார் கமிட்டி அறிக்கையினை அமுல் படுத்திட வேண்டும் என்று கோருகின்றனர். அது தேசிய ஒருமைப்பாடிற்கு கேடு விளைத்திடும் என்று  கருதுவதால் நாம் அதை எதிர்க்கின்றோம் என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் அப்போது குறிப்பிட்டார்.எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்பதுவே வழக்கறிஞர்களின் கடமையாகும். ஹிந்து வாழ்க்கை முறையை குலைத்திட நடைபெற்று வருகின்ற பல கலாசாரத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தி ஹிந்து வாழ்க்கை முறையினைக் காக்க வேண்டிய இக்கால கட்டத்தில் வழக்கறிஞர்களின் பங்கு மிக அத்தியாவசியமானதாகும். (உதாரணதிற்கு ஓரினச் சேர்க்கை பற்றி நாட்டில் நடைபெற்று வருகின்ற சட்ட விவாதங்கள்).
எனவே நீதிக்காக வழக்கறிஞர்கள் என்று கூறுவதை ஹிந்துத்வாவிற்காக வழக்கறிஞர்கள் என்று இம்மாநாட்டினை அழைக்கலாம் என்று அவர் தனது துவக்க உரையின் நிறைவில் குறிப்பிட்டார்.

03 மார்ச் 2012

இலங்கை(கொழும்பில்) சுவாமி விவேகானந்தர் 150வது ஜெயந்தி விழா


இலங்கையில் சுவாமி விவேகானந்தர் 150வது ஜெயந்தி விழா 
சிகாகோவில் நடைபெற்ற சர்வமத மாநாட்டில் சுவாமிஜி அவர்கள் ஹிந்து வேதாந்தக் கருத்துக்களை சிங்கத்தைப் போன்று கர்ஜனை செய்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்ததுடன் ஒரே நாளில் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார். அதை தொடர்ந்து 4 வருடங்கள் அவர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து ஹிந்து தர்மத்தின் பெருமைகளை எடுத்துரைத்துவிட்டு நாடு திரும்பிய போது அவர் முதலில் காலடி வைத்தது இலங்கை கொழும்பு நகரத்தில்தான். 
ஹிந்து மறுமலர்ச்சிக்கு வித்திட்ட சுவாமி விவேகானந்தரின் 150௦ வது பிறந்த ஆண்டினை முன்னிட்டு உலகெங்கிலும் இருக்கின்ற ஹிந்துக்கள், ஹிந்து இயக்கங்கள், ஹிந்து ஆன்மீக இயக்கங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திடத் துவங்கியுள்ளன. இந்நிகழ்ச்சிகள் இவ்வருடம் முழுவதும் நடைபெற இருக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வருகின்ற 2013-14 ஆம் ஆண்டில் சுவாமிஜியின் 150 வது  ஜெயந்தியை மிகப் பிரம்மாண்டமான அளவில் நடத்திடத்திட்டமிட்டு வருகிறது.
ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் (HSS) உலகின் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்ற ஹிந்துக்களை ஒருங்கிணைக்கிற இயக்கமாகும். இலங்கையில் கடந்த 10௦ ஆண்டுகளாக ஹிந்துஸ்வயம் சேவக இயக்கம் அந்நாட்டு ஹிந்துக்களிடையே சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150௦வது பிறந்த ஆண்டினைக் கொண்டாடிட  அகில இலங்கை விழாக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு கொழும்பு பொன்னம்பலவானேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் டி.எம்.சுவாமிநாதன் அவர்கள் தலைவராக இருக்கின்றார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். அக்குழுவில் இலங்கையில் இருக்கின்ற முக்கியமான ஹிந்து சமுதாயப் பெரியோர்கள் பலரும் இடம் பெற்றுள்ளனர். இலங்கை முழுவதிலுமிருந்து இக்குழுவில் உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இலங்கை முழுவதும் அக்குழுவின் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த வருடத்தினை மிக சிறப்பாகக் கொண்டாடித் தீர்மானிக்கப் பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கொழும்பில் கடந்த பிப்ரவரி 26 அன்று துவக்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கொழும்பு நகரில் இருக்கின்ற புகழ்பெற்ற சரஸ்வதி திருமண மண்டபத்தில் இவ்விழா பிப்ரவரி 26 அன்று மாலையில் நடைபெற்றது.
இவ்விழாவில் 500௦௦க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இலங்கையில் இருக்கின்ற 25 மாவட்டங்களில் ஒரு மாவட்டம் தவிர மீதமுள்ள 24 மாவட்டங்களில் இருந்து பிரதிநிதிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இலங்கை முழுவதிலிமிருந்து இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டது பலருக்கு பெரும் மகிழ்ச்சியை மட்டுமல்ல பெரும் ஆச்சரியத்தையும் அளித்தது. பலர் இதை வெளிப்படையாகவே தெரிவித்தனர். நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டிருந்தபடி மாலை 5.30 ௦க்கு சரியாகத் துவங்கி இரவு 7.30 க்கு நிறைவு பெற்றது. இதுவும் கூட பலருக்கு வியப்பை அளித்தது.
விழாவினை கொழும்பு ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைமைத் துறவி சுவாமி ஸ்வருபானந்த மகராஜ் மங்கள விளக்கு ஏற்றி வைத்தார். பிறகு அதை தொடர்ந்து சுமார் 125 சிறுவர்கள் சிறுமியர்கள் பங்கேற்ற யோகசாப்  நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் துவங்கிய நிகழ்ச்சியில் இலங்கை ஹிந்து சேவா சங்கத்தின் சேவைப் பணிகளின் பொறுப்பாளர் கொழும்பு நகரைச் சார்ந்த திரு.திருச்செல்வன் அனைவரையும் வரவேற்று, விருந்தினர்களை அறிமுகப்படுத்திப் பேசினார்.
அடுத்து சுவாமி சர்வரூபானந்த அவர்கள் ஆசியுரை நிகழ்த்தினார்கள். அவர்தனது உரையில் ஏழ்மையில் இருக்கின்ற மனிதனுக்கு கடவுளைப் பற்றி எப்படி சிந்திக்க முடியும். எனவே முதலில் பசிப்பிணியை அகற்றிட நாம் முனைந்திட வேண்டும். சுவாமி விவேகானந்தரும் இதைத் தான் வலியுறுத்தி இருக்கின்றார் என்று கூறினார் சுவாமி சர்வரூபானந்தா.
விழாக்குழுவின் தலைவர் திரு.டி.எம். சுவாமிநாதன் அவர்கள் தனது தலைமை உரையில் சுவாமிஜி அவர்கள் சிகாகோவிலிருந்து வெற்றிகரமாகத் திரும்பி வந்தபோது முதலில் அவர் காலடி எடுத்து வைத்தது கொழும்பு நகரில்தான் என்பதை நினைவுபடுத்தினார். அப்போது மாபெரும் வரவேற்பு ஒன்று கொழும்பு நகர் ஹிந்துக்களால் சுவாமிஜி அவர்களுக்கு கொடுக்கப்பட்டது என்பதை தனது பேச்சில் சுட்டிக் காட்டினார்.
இலங்கை அரசின் ஹிந்து சமய தினைக்களத்தின் செயலாளர் திரு சாந்தி திருநாவுக்கரசு அவர்கள் வாழ்த்துரை நிகழ்த்தினார்.  விஜயபாரதம் வார இதழின் முன்னாள் ஆசிரியர்திரு.நா.சடகோபன் அவர்கள் சிறப்புரையில் “சுவாமி விவேகானதருக்கும் தமிழகத்திற்கும், தமிழக இளைஞர்களுக்கும் இருத்த நெருக்கத்தினையும் தொடர்பினையும் எடுத்துக்கூறினார்.
சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடைபெற்ற சர்வமத மாநாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என அவரைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது மட்டுமின்றி அவர் சிகாகோ செல்வதற்கான நிதியை சேகரித்துக் கொடுத்ததில் சென்னை நகரின் இளைஞர்கள் மாபெரும் தொண்டாற்றியுள்ளனர்.
சுவாமி மீது அபாரமான  பக்தி செலுத்தி வந்த அளசிங்கப் பெருமாள் என்கிற
இளைஞருடன் சுவாமி விவேகானந்தர் மிக நெருக்கமாக இருந்தார். அத்துடன் அந்த இளைஞர் குழுவில் இருந்த டாக்டர் நஞ்சுண்ட ராவ், பாலாஜி ராவ், சிங்காரவேலு முதலியார், ரங்காச்சாரி, பிலிகிரி ஐயங்கார், என அனைவருடனும் சுவாமிஜி அவர்கள் நெருங்கிய தொடர்பும்,  நம்பிக்கையும் கொண்டிருந்தார்.
சுவாமி விவேகானந்தரையும் தமிழகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. சுவாமிஜி பிறந்த வங்கத்தைக் காட்டிலும் அதிகமான பெயரும் புகழும் தமிழகத்தில் காணப்படுகிறது. சுவாமி விவேகானந்தரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற சீடர்கள் மற்றும் பக்தர்களால் நூற்றுக்கணக்கான தொண்டுக் காரியங்கள் இன்றும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
நாட்டினைப் பற்றியும் ஹிந்து மதத்தைப் பற்றியும், சமுதாயத்தைப் பற்றியும்  முழு அக்கறை கொண்டிருந்தவர் சுவாமி விவேகானந்தர், எனவே சுவாமிஜின் 150 வது பிறந்த வருடத்தினை முன்னிட்டு அவரது கருத்துக்களை இலங்கை முழுவதும் இருக்கின்ற ஹிந்துக்களிடம் கொண்டு சேர்ப்பது நமது நோக்கமாக இருக்கவேண்டும்” என்று பேசினார்.
ஹிந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் சர்வதேச ஒருங்கிணப்பாளர் திரு.சௌமித்ர கோகலே அவர்கள் தனது சிறப்புரையில் உலக அளவில் ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் செய்து வருகின்ற பல பணிகளைப் பற்றி பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் மற்றும் காணொளி வாயிலாக பார்வையாளர்களுக்கு விளக்கினார். மேற்கத்திய மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் ஹிந்து பண்பாட்டின் தாக்கம் எப்படி இருந்து வருகிறது என்பது பற்றி அவர் எடுத்துரைத்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழாவில் வேத மந்திரங்களை துல்லியமான உச்சரிப்புடன் மிக அழகாக சொல்லும் இங்கிலாந்து நாட்டு சிறுவர், சிறுமியர்கள், மற்றும் ஆப்ரிக்க நாட்டு சர்ச் ஒன்றில் பாதிரியார் ஒருவர் இருகரம் கூப்பி நமஸ்தே என்று சொல்வதின் உள் அர்த்தத்தையும் அதன் மகத்துவத்தையும் எடுத்துரைத்துரைப்பதும் அதைத் தொடர்ந்து சர்ச்சுக்கு வந்திருந்த அனைவரும் கைகூப்பி ஒரே குரலில் நமஸ்தே என்று சொல்லும் காட்சி உட்பட,  காணொளிக் காட்சிகள் அனைத்தும் விழாவிற்கு வந்திருந்த அனைவரது மனதிலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
சர்வதேச அளவில் சுவாமிஜி அவர்களின் 150 வது பிறந்த வருடத்தினை நடைபெற இருக்கின்ற பல்வேறு நிகழ்ச்சிகள் பற்றியும் சௌமித்ர கோகலே தனது உரையில் எடுத்துரைத்தார்.
அகில இலங்கை ஹிந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் இணைச் செயலாளர் திரு.எஸ்.கே.தேவன் அவர்கள் நன்றி கூற, இறைவணக்கத்துடன் விழா இனிதே நிறைவுற்றது. இலங்கையில் சுவாமி விவேகானந்தரது 150வது பிறந்த வருடத்தில் நாடெங்கிலும் குறைந்தது 150 நிகழ்ச்சிகளாவது நடத்திட வேண்டுமென ஹிந்து ஸ்வயம்சேவக சங்கத்தினர் தீர்மானம் செய்துள்ளனர்.                      நன்றி: ஹிந்து சங்கசெய்தி இணையம்