Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

31 ஜனவரி 2011

தீவிரமாகும் மத மாற்ற பிரசாரம்

கேள்வி : 15.1.2011 சனிக்கிழமை அன்று காலை சரியாக 11 மணிக்கு கிறிஸ்தவ மதபோதகர்களான அர்னால்ட் என்பவரும், அவரது மனைவி சோன்ஜா என்பவரும்,அவர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்-கொண்டு பலரும் எங்கள் வீட்டிற்கு வந்தனர்.அன்று புனித பொங்கல் தினம் என்பதால், குடும்பத்தினர் அனைவரும் சூரியனுக்குப் பூஜை செய்து கொண்டிருந்தோம். இவர்கள் அனைவரும் வீட்டிற்குள் நுழைந்து, ‘‘நாங்கள் இங்கு உங்கள் நன்மைக்காக ஜெபம் செய்யப்போகிறோம்.நாங்கள் அயனாவரத்தில், 47 பில்கிங்டன் ரோடிலுள்ள ஜெபகூடத்திலிருந்து இங்கு வந்துள்ளோம்’’ என்று கூறி, வரவேற்பறையில் அமர்ந்துகொண்டு விட்டார்கள்.

எங்களுக்கு அதிர்ச்சி. ‘‘நாங்கள் இந்துக்கள். இன்று எங்கள் பண்டிகை தினம். எங்களுக்கென்று பூஜை நெறிமுறைகள் உள்ளன. உங்கள் ஜெபம் எங்களுக்கு வேண்டியதில்லை. தயவுசெய்து வெளியே போய்விடுங்கள்’’ என்று கூறினோம். ஆனால் அவர்கள் பிடிவாதமாக உட்கார்ந்துகொண்டு அவர்கள் வழியில் ஜெபம் செய்வதைப் போல் நடந்துகொண்டனர். நாங்கள் எவ்வளவோ கூறியும் அவர்கள் கேட்கவில்லை.

‘உங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று இந்துக்களோ அல்லது முஸ்லிம்களோ உங்கள் வீட்டிற்குள் எவ்வித அனுமதியுமின்றி நுழைந்து, அவர்களது மதக்கொள்கைகளின்படி பூஜை செய்கிறார்களா அல்லது வழிபாடு செய்கிறார்களா? நீங்கள் மட்டும் ஏன் இவ்விதம் நடந்துகொள்ள வேண்டும்?குடும்பத்தினர் வசிக்கும் வீடுகளில் அனுமதியின்றி நுழைவதும், வெளியில் செல்ல மறுப்பதும், பலாத்காரம்தான்’ என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர்கள் ஜெபம் செய்வதைத் தொடர்ந்ததால் வேறு வழியின்றி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தோம்.

காவல்துறையினர் எங்கள் வீட்டிற்கு வந்து,அந்த மத பிரசாரகர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.நாங்கள் புகார் பதிவு செய்துள்ளோம். 

இதே பொங்கல் தினத்தில் நுங்கம்பாக்கத்தின் மற்றொரு பகுதியான திருமூர்த்தி நகர் மற்றும் பெசண்ட் நகர்,அடையாறு பகுதிகளிலும் இத்தகைய நிகழ்ச்சிகள் அன்றைய தினம் நடந்துள்ளன.நுங்கம்பாக்கம் பகுதியில் மட்டும் அன்றைய தினம் 30கிறிஸ்தவ மத பிரசார குழுக்களாக அமைத்துக்

கொண்டு,துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தும்,இந்து மத நம்பிக்கை-களைப் பழித்துக் கூறியும் பல வீடுகளில் பலாத்காரமாக நுழைந்து, ஜெபம் செய்வதாக கூறி, நிகழ்த்திய நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன.

மதச்சார்பில்லா நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு இத்தகைய சட்டத்திற்குப் புறம்பான தீவிர மதமாற்ற முயற்சிகளுக்குத் துணிவு ஏற்பட்டுள்ளதற்கு ஒரு காரணம் இருக்கவேண்டுமல்லவா? எவ்விதமாவது இந்திய நாட்டை கிறிஸ்தவ நாடாக மாற்றிவிடும் முயற்சிக்கு வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் பணம் குவிந்து வருகிறது. இதுபற்றி அரசாங்கமோ அல்லது அரசியல் கட்சிகளோ கவலைப்படவில்லை.

தேசப்பற்று மற்றும் தெய்வப் பற்று ஆகியவற்றின் அவசியத்தைத் துணிவுடன் எடுத்துக் கூறிவரும் தங்கள் பத்திரிகையில் இந்நிகழ்ச்சியை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

சென்ற சில மாதங்களாக கிறிஸ்தவ மதமாற்ற போதகர்கள் ஒரு புதுவித பிரசார முறையைக் கடைப்பிடித்து வருகின்றனர். குடும்பத்தினர் வசிக்கும் பகுதிகளில் (Residential areas) பல மடங்கு அதிக விலை கொடுத்து ஒரு கட்டடத்தை வாங்கி அதனை வெளிப்பார்வைக்கு Multi Purpose Hall என்று கூறிக்கொண்டு, கிறிஸ்தவ ஜெப வீடுகளாக மாற்றி மதமாற்றம் செய்து வருகின்றனர்.இவ்விதம் செயல்படும் ஜெப வீடுகளில் ஒன்றுதான் அடையாறு தபால் நிலையத்துக்கு அருகில் உள்ள  ‘கார்னர் ஸ்டோன்’ என்ற பெயரில் செயல்பட்டுவரும் Multi Purpose Hall ஆகும். 

16.1.2011 மாலை 5.30 மணிக்கு Joy Eternal Indian Church என்று சொல்லிக்கொண்டு ஒரு ஜெபக்கூட்டம் நடந்தது.அதில் இந்துக்களின் பழக்க வழக்கங்கள்,நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பற்றி இழிவாகப் பேசப்பட்டது (Verified with authentic sources who were present at the meeting).

பதில் : பணபலம், அரசியல் கட்சிகளின் ஆதரவு ஆகியவற்றைக் கொண்டு இந்து சமூகத்தை மற்ற மதத்தினர் அழித்துக்கொண்டு வருவதைப் பார்த்துக்கொண்டு வரும் இம்மாபெரும் சமூகம், இந்துக்களாகப் பிறந்து வளர்ந்த அரசியல் தலைவர்கள், இந்துக்களின் நலனுக்காகப் பாடுபடுவதாகத் தங்களை விளம்பரப்-படுத்திக்கொள்ளும் கட்சிகள், மடங்கள் ஆகியவை, தங்களுக்கும், கிறிஸ்தவ மதமாற்ற பிரசாரகர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதுபோல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது நமது சமூகத்தின் கையாலாகாதனத்தை எடுத்துக்காட்டுகிறது.

நாங்கள் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல.மற்ற மதங்களைப் போலவே கிறிஸ்தவ மதத்தையும் மதிக்கிறோம். ஆனால் இந்து மதத்தை அழிக்கும் இத்தகைய தீவிரவாத முயற்சிகளை இனியும் அனுமதிக்க முடியாது. எந்தவொரு இந்துவும், முஸ்லிமும், கிறிஸ்தவர்களின் வீடுகளில் நுழைந்து ‘எங்கள் மதம்தான் உயர்ந்தது.உங்கள் வீட்டில் நாங்கள் வழிபாடு செய்வோம்’ என்று கூறுவதில்லை.

இத்தகைய அக்கிரமங்களைக் கண்ட பிறகாவது இந்துக்களுக்குத் தன்மான உணர்ச்சி வருமா? ரத்தத்தில் சிறிதளவாவது
வீர உணர்ச்சி ஏற்படுமா என்று ஏங்குகிறோம்!

நன்றி: முத்துபேட்டை ஹிந்து






கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 1


தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி
பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கருத்துத் திணிப்புகளாக இருப்பதால், உண்மையான முடிவுகளை அவை பிரதிபலிப்பதில்லை. ஆனால்,  மின்னணு ஊடகங்களுக்கு கணிப்புகள் வெளியிடுவதென்பது, ஒரு அற்புதமான வசூல் வாய்ப்பு. விளம்பரம் வாயிலாக மட்டுமின்றி,  கட்சிகளின் கவனிப்பாலும் தேர்தல் சமயங்களில் கணிப்பு ஊடகங்கள் லாபமடைகின்றன. அரசியலில் நேர்மை ,  தேர்தலில் நாணயம் பற்றிப்  பேசிக் கொண்டிருக்கும்  கட்சி  வழக்கம்போல, இந்த ஊடகங்களால் மூன்றாமிடத்திற்குத் தள்ளப்படும்.  இப்போதும்கூட, கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்கக் கூடாது என்று ஊடக அரங்கிலிருந்தே தீனமான  குரல்கள் கேட்டுக் கொண்டுதான் உள்ளன.
தேர்தல் கருத்துக் கணிப்பு என்பது ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்தை அறியச் செய்யும் வழிமுறையே. உலக நாடுகள் பலவற்றில் இம்முறை வெகுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவில் அதிபரின் செல்வாக்கு உயர்வு- சரிவு குறித்து அவ்வப்போது கணிப்புகள் வெளியாவதுண்டு. அரசின் கொள்கைகள் - அதன் விளைவுகள் குறித்தும்கூட கருத்துக் கணிப்புகள் அங்கு வெளியிடப்படுகின்றன. ஒருவகையில் அரசினை இத்தகைய கணிப்புகள் திருத்தி, வழிநடத்துகின்றன.
ஆனால், நமது நாட்டில் ஊடகங்கள் பத்திரிகை தர்மப்படி செயல்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது. தனிப்பட்ட விருப்பு- வெறுப்பு, சுயநல நோக்கம், வர்த்தக தந்திரம், அச்சம் போன்ற காரணங்களால் தடுமாறும் இந்திய ஊடகங்களிடம் நடுநிலையான கருத்துக் கணிப்பை எதிர்பார்ப்பது, முட்டாள்தனமானது.
தேர்தல் கருத்துக் கணிப்புகளை அரசியல் கட்சிகளும், தங்களுக்கு சாதகம் என்றால் ஏற்பதும், பாதகம் என்றால் எதிர்ப்பதும் வாடிக்கை. ஆனால், சில ஊடகங்கள் வெளியிடும் கணிப்புக்கள் தேர்தல் முடிந்தபிறகு முற்றிலும் தவறாக இருக்கும். அதைப் பற்றி மக்கள் கவலைப்படுவதில்லை. பொய்த்துப்போன கருத்துக் கணிப்பை வெளியிட்ட ஊடகங்களைக் கண்டிக்க வேண்டிய நுகர்வோரான வாசகர்கள் கண்டுகொள்ளாததால், ஒவ்வொரு தேர்தலிலும், இத்தகைய முட்டாள்தனமான கணிப்புகளும் தொடர்ந்து  வெளிவருகின்றன.
விழிப்புணர்வற்ற சமுதாயத்திற்கு, திட்டமிடலுக்கு உதவும் அரிய சாதனமான கருத்துக் கணிப்புகளை பயன்படுத்தத் தெரிவதில்லை. எனவே தலைமை தேர்தல் ஆணையர் கூறியுள்ளது போல,  கணிப்புகளுக்கு முழுமையாக தடை விதிப்பதே சரியாக இருக்கும் என்பது நாட்டுநலனில் அக்கறை கொண்டோரின் கருத்தாக உள்ளது. எனினும் ஆணையர் கூறியுள்ளதாலேயே, அவரது யோசனையை எதிர்த்தாக வேண்டியுள்ளது.
கணிப்பு என்பது என்ன?
நாட்டு மக்களின் எண்ணம் என்னவாக இருக்கிறது என்பதை குறிப்பிட்ட மாதிரி (SAMPLE) அளவில், கேட்டறிந்து, அந்தப் புள்ளிவிபரங்களின் (STATISTICS) அடிப்படையில் அரசியல் காற்று  வீசும் திசையை ஆவதானிப்பதே  தேர்தல் கணிப்பு. ஒவ்வொரு முக்கிய அரசியல் கட்சியும், பிரத்யேக கணிப்பாளர்களைக் கொண்டு இத்தகைய கணிப்புகளைப் பெற்று, அதன் அடிப்படியில் தங்கள் செயல்பாடுகளை வடிவமைக்கின்றன. அவை பெரும்பாலும் ரகசியமானவை என்பதால், அவற்றால் எந்த சர்ச்சையும் ஏற்படுவதில்லை. பொதுஜன ஊடகங்களில்  வெளியாகும் கருத்துக் கணிப்புகளே சர்ச்சைகளைக் கிளப்புகின்றன.
பொதுவாக, கணிப்பு என்பது முன்னறிவிப்பு, நிர்ணயம், கணக்கீடு, மதிப்பீடு, கருத்து என பல பொருள்களில் அணுகப்படுகிறது (நன்றி: க்ரியாவின் தமிழ் அகராதி) உரிய புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நடுநிலையுடன் மதிப்பிட்டு, தெளிவான முடிவுகளை நிர்ணயிப்பதும், மதிப்பீடுகளை உருவாக்குவதும், மக்களுக்கு முன்னறிவிப்பதும், கருத்து தெரிவிப்பதும் கணிப்பின் கடமை. ஆனால்,  நமது ஊடகங்களின் கணிப்புகள் நடுநிலை இன்றி செயல்படுவதால் அவற்றின் முடிவுகள் ஏமாற்றம் அளிப்பது தவிர்க்க இயலாததாகி விடுகிறது.
நமது ஊடகங்களின் கணிப்புகளை, அடிப்படையில் இரு பிரிவாகப் பிரிக்கலாம். ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி வெற்றி பெறும் / தோல்வி பெறும் (WIN  / DEFEAT) என்பதே கணிப்பின் ஆதாரம். இது மட்டுமே பெரும்பாலான மக்கள் அறிந்திருப்பது. ஆனால், இதற்குள் நான்கு வகையான உட்பிரிவுகளும் அதன் அடிப்படையில் எட்டு விதமான முடிவுகளும் இருப்பது யாருக்கும் தெரிவதில்லை. அவற்றைத் தெரிந்துகொண்டால், என்.டி.டி.வி.யோ, அவுட்லுக்கோ  வெளியிடும் கருத்துத் திணிப்புகள் கண்டு நீங்கள் ஆயாசம் அடைய மாட்டீர்கள்.
எந்த ஒரு கணிப்பிற்கும் பின்புலத்தில் நோக்கம், விருப்பம்,  எதிர்பார்ப்பு,  மதிப்பீடு ஆகிய நான்கு நிலைகள் இருக்கின்றன. இந்த நான்கு நிலைகளின் அடிப்படையில் ஒரு கட்சியின் வெற்றி அல்லது தோல்வி கணிக்கப்படும்போது அவை எட்டு வகையான முடிவுகளைத் தரலாம். அவற்றை நாம் இங்கு ஒவ்வொன்றாகப் பார்ப்போம்..
நோக்கத்துடன் இயங்கும் கணிப்புகள்:
ஒரு தி.மு.க. தொண்டரிடம் சென்று, அடுத்த சட்டசபை தேர்தலில் யார் ஜெயிப்பார்கள்  என்று கேட்டுப் பாருங்கள். உங்களை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு, அடுத்த நிமிடமே ”கலைஞர் தான் அடுத்த முதல்வர்” என்பார். வேறு பதிலை அவர் சொன்னால்தான்  அதிசயம். அதாவது தி.மு.க. தொண்டரைப் பொருத்த வரை, திமு.க. வெல்லும் என்பது அவரது நம்பிக்கை மட்டுமல்ல, நோக்கமும் கூட.
அவரிடமே அ.தி.மு.க.வின் நிலை பற்றிக் கேட்டுப் பாருங்கள். ”அக்கட்சிக்கு முன்வைப்புத் தொகைகூடக் கிடைக்காது” என்பார். அதாவது நோக்கத்துடன் கூடியவரின் கணிப்பு, ஒரு கட்சி வெல்ல வேண்டும் அல்லது தோற்க வேண்டும் (MUST WIN / MUST DEFEAT) என்பதாகவே இருக்கும்.
நமது ஊடகங்களின் கணிப்புகளிலும் இத்தகைய அணுகுமுறையை நீங்கள் கண்டிருக்கலாம். நக்கீரன் வாரஇதழ் வெளியிடும் கணிப்புகள் பெரும்பாலும் இப்படி அமைபவையே. சென்ற சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க வெல்லும் தொகுதிகள் என்று நக்கீரன் அறிவித்த தொகுதிகளில் அக்கட்சி ஜெயித்திருந்தால், தி.மு.க  அரசுக்கு ‘மைனாரிட்டி அரசு’ என்ற அவப்பெயர் ஜெயலலிதாவால் சூட்டப்பட்டிருக்காது.
namo-no-1
சென்ற குஜராத் சட்டசபை தேர்தலிலும் இதே போன்ற அணுகுமுறையை ஆங்கில ஊடகங்கள் வெளிப்படுத்தின. நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மீண்டும் அமைந்துவிடக் கூடாது என்பதை ஒரு பிரசார இயக்கமாகவே  அவை முன்னெடுத்தன. அவற்றின் கணிப்புகளிலும், ‘மோடி மண்ணைக் கவ்வுவார்’ என்றே குறிப்பிட்டன. ஆனால், ஊடகங்களின் முகத்தில் கரியைப் பூசி, மீண்டும் வென்று, கணிப்பாளர்களை மண் கவ்வச் செய்தார் மோடி.
தமிழகத்தில் நக்கீரன் வெளியிட்ட கருத்துக் கணிப்பு திமு.க. வெல்ல வேண்டும் (MUST WIN) என்ற அடிப்படையிலானது. குஜராத்தில் ஆங்கில ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்பு பா.ஜ.க. தோற்க வேண்டும் (MUST DEFEAT) என்ற அடிப்படையிலானது. இந்த இரண்டு வகையான கணிப்புகளும் மக்கள் மன்றத்தால் நிராகரிக்கப்பட்டன. ஆயினும், தேர்தல் சமயத்தில் இந்த கணிப்புகள் ஏற்படுத்திய உளவியல் தாக்கங்களையும் நெருக்கடிகளையும் சிந்தித்துப் பாருங்கள். ஊடகங்களின் அதர்மம் புரியும்.
விருப்பத்துடன் இயங்கும் கணிப்புகள்:
ஏதாவது ஒரு தமிழக அரசு ஊழியரிடம் சென்று, வரும் தேர்தலில் தி.மு.க. தோற்றுவிடும் என்று சொல்லிப் பாருங்கள். அடுத்த நிமிடமே, தி.மு.க வெற்றி பெறுவதற்கான  வாய்ப்புகளை பட்டியலிடத் துவங்கி விடுவார். வானவில் ஊழலால் தனிப்பட்ட வகையில் குடிமகன் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை என்றுகூட அவர் சொல்லக்கூடும் (எனது அனுபவம் இது).  தங்களுக்கு அள்ளி வழங்கிய  கலைஞர் மீண்டும் முதல்வராவார் (SHOULD WIN) என்பது அரசு ஊழியர்களின் விருப்பம். அதுவே அவர்களது கருத்திலும் கணிப்பிலும் எதிரொலிக்கும்.
அடுத்ததாக, ஒரு முஸ்லிம் குடியிருப்பிற்குச் சென்று அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானி பிரதமர் ஆவாரா அன்று கேட்டுப்பாருங்கள். உங்களுக்கு இது ஒரு சோதனை. என்ன பதில் கிடைக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? உண்மையிலேயே அத்வானி பிரதமர் ஆக வேண்டும் என்று விரும்பும் இஸ்லாமியரும் கூட, அதை தனது குடியிருப்பில் கருத்துக் கணிப்பின்போது வெளிப்படையாகச் சொல்வார்  என்று எதிர்பார்க்கிறீர்களா?
பெரும்பாலான சிறுபான்மையினர், பா.ஜ.க.வின் எதிரிகள் நடத்திவரும் துஷ்பிரசாரத்தால், அக்கட்சியை எதிரியாகவே அனுமானிக்கிறார்கள் என்பது ரகசியமல்ல. சென்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு  தெரிவித்தவர்களில் சிறுபான்மையினரின் உட்பிரிவு சதவிகிதம் இரட்டை இலக்கத்தை தாண்டவில்லை   என்பது இந்தியா டுடே கணிப்பில் தெரியவந்தது. அதாவது, அதிகப்படியான  சிறுபான்மையினரின் தேர்வு ‘அத்வானி பிரதமராகக் கூடாது’ (SHOULD NOT WIN) என்பதாக இருந்துள்ளது.
எதிர்காலத்தைக்  குறிக்கும் துணைச் சொல்லான ‘SHALL’ என்பதன் உறுதிப்படுத்தப்பட்ட வடிவமே ‘SHOULD’. அதாவது நமது யூகம்  விருப்பத்தின் அடிப்படையில் அமையும்போது, அது உறுதிப்படுத்தப்பட்ட கணிப்பாகவே வெளிப்படுகிறது. அரசு ஊழியர் தி.முக. வெல்லும் (SHOULD WIN ) என்கிறார்;  இஸ்லாமியர் பா.ஜ.க. வெல்லாது (SHOULD NOT WIN) என்கிறார். இவை இரண்டுமே விருப்பத்தை அடித்தளமாகக் கொண்டவை.
விருப்பங்கள் தேர்தல் முடிவுகளில் வெளிப்படலாம். அதற்காகத்தான் கருத்துக் கணிப்புகள் நடத்தப்படுகின்றன. ஆனால், கணிப்பாளரே விருப்பத்தின் அடிப்படையில் செயல்படக் கூடாது.
சென்ற சட்டசபைத் தேர்தலில் குமுதம் ரிப்போர்ட்டர்  வெளியிட்ட கணிப்புகள், தி.மு.க. சார்ந்த திணிப்புகளாகவே இருந்ததற்குக் காரணம்,  அதன் அடித்தளத்தில் இயங்கிய  விருப்பங்கள் தான்.  சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது துக்ளக் கூறிய ஹேஷ்யங்கள் பலிக்காமல் போனதும், பா.ஜ.க. சார்ந்த துக்ளக்கின் அணுகுமுறைதான்.
நோக்கத்துடன் கூடிய கணிப்புகள் போலவே விருப்பத்துடன் கூடிய கணிப்புகளும் தோல்வியில் முடிகின்றன. ஆனால், தேர்தல் காலத்தில் கட்சிகளுக்கு பின்பலமாக இவை உதவுகின்றன. கட்சிகளின் கொள்கைகள் மீதான அபிமானம், அரசுகளின் செயல்முறை மீதான நாட்டம்,  நன்றியுணர்வுடன் கூடிய ஆசை  போன்றவை விருப்பக் கணிப்புகளுக்கு காரணமாக இருக்கலாம். எப்படியாயினும், இத்தகைய அணுகுமுறை வாசகர்களை குறிப்பிட்ட அளவில் முட்டாளாக்கி அவர்களை தவறாக வழிநடத்துகிறது என்பது உண்மை.
நன்றி : தமிழ் ஹிந்து..

28 ஜனவரி 2011

3-வது ஹிந்து ஆன்மீகம் மற்றும் சேவை கண்காட்சி

அபத்தமான பேச்சு, ஆபத்தான முடிவு


14.1.2011-ஆம் தேதி வெள்ளிக் கிழமை டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் நடந்த கருந்தரங்கில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு.ஜி.கே.பிள்ளை ஆற்றிய உரை அபதமானதும், ஆபத்தானதுமாகும். குறிப்பாக இஸ்லாமிய மாணவர்கள் மத்தியில் ஆற்றிய உரை- இந்த நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக உள்துறை செயலாளரின் பேச்சு அமைந்துள்ளது. இரண்டு முக்கியமான முரண்பாடான செய்திகளைத் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் அமைதியான சூழ்நிலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் பார்வையிட்டார்கள்; பின்பு இதுசம்பந்தமாக பேச்சுவார்ததை நடத்த 3 பேர்கள் கொண்டு குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்கின்ற இந்நிலையில், உள்துறை செயலாளரின் பேச்சு அபத்தமானதாகும்; இதுவே பயங்கரவாதிகளுக்கு வழிவகை செய்து கொடுக்கும் பேச்சாகவும் உள்ளது.g-k-pillai
“ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளவர்கள் இரு நாடுகளுக்கும் சென்று வர இந்தியாவும், பாகிஸ்தானும் அனுமதி அளித்துள்ளது. இவர்களுக்கு 15 நாட்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இத்தகைய அனுமதி பெறுபவர்கள் தங்களைப் பற்றிய முழுத் தகவல்களை அளித்து, அது சரிபார்க்கப்பட்டு, பிறகே அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக 6 மாதங்களுக்குச் செல்லத்தக்க வகையில் பல தடவை சென்று திரும்பும் அனுமதியை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது,” எனப் பேசியுள்ளார். இந்த முடிவு ஆபத்தான முடிவாகும். ஏன் எனில் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பயங்கரவாதிகள் அனைவரும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக வந்தவர்கள் என்பது உலகளாவிய உண்மையாகும்.
85,793 கி.மீ பரப்பளவு உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 75 சதவீதமானவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாளர்கள் என்பதும், இவர்களின் நோக்கம்- காஷ்மீர் மாநிலத்திற்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே பாரதத்தின் மீது ஜிகாத் யுத்தம் நடத்துவதாக பல நேரங்களில் தங்களின் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்கள். பல்வேறு அமைப்புகள் இந்தப் பகுதிகளில் ஆய்வு செய்தபோது பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமே பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில்தான் என்ற முழு உண்மை வெளிவந்துள்ளது. குறிப்பாக லஷ்கர்-இ-தொய்பா, J-e-M . Huji போன்ற பயங்கரவாத அமைப்புகள் பயிற்சி கொடுக்கும் பகுதி ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியாகும். Kotli, Garhi Dupatta, Nikial, Sensa, Gulpur, Barnala, Jhandi Chauntra, முஸப்பரபாத் போன்ற பகுதிகளில் பயங்கரவாதப் பயிற்சி முகாம் அமைந்துள்ளது.
 
காஷ்மீர் பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் கைது செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் பொறுப்பாளர்கள் குலாம் முகமது, Nasir Mohammad Soudozi, Rahil Ahmad Hoshmi, Saifullah Khalid, Syed Khalid Hussain, யேளசை இவர்கள் அனைவரும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள கோடலி, முஸப்பரபாத், ரவால்காட், பாக், பூஞ்ச் போன்ற பகுதிகளைச் சார்ந்தவர்கள்.
உள்துறை அமைச்சாராக இருந்த போது பாராளுமன்றத்தில் பேசிய திரு.பிரணாப் முகர்ஜி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதப் பயிற்சி முகாம்களை முற்றிலும் பாகிஸ்தான் அழித்தால் மட்டுமே அவர்களுடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் பயன் உள்ளதாக அமையும் என்றார். ஆகிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன என பாகிஸ்தான் தகவல் கொடுத்தாலும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மாற்று இடங்களுக்கு பயிற்சி முகாம்கள் மாற்றப்பட்டன, அவைகள் முற்றிலுமாக அழிக்கப்படவில்லை என்பது உளவுத் துறையின் தகவலாகும்.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மட்டும் 17 பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் இருப்பதாகவும், அவை இந்தியா பாகிஸ்தான் எல்லைகளை ஒட்டிய பகுதியில் உள்ளவையாகும்; இந்த முகாம்களில் பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை இரண்டாயித்துக்கு மேல் இருக்கும்… என பல தகவல்கள் தெரிவிக்கின்றன. சில தினங்களுக்கு முன் பி.பி.சி உருது சேனலில் ஒலிபரப்பப் பட்ட செய்தியில் லஷ்கர்-இ-தொய்பாவில் பயிற்சி பெறுவதற்கு வெளிநாடுகளில் வாழ்கின்ற இஸ்லாமிய இளைஞர்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு வருவதாக செய்தி வெளியிடப்பட்டது. இந்தப் பயிற்சியில் 20 சதவீதமான இளைஞர்கள் காஷ்மீர் மாநிலத்திலிருந்தும் 10சதவீதமானவர்கள் வெளிநாடுகளிலிருந்து– குறிப்பாக அரபு நாடுகளிலிருந்து– பயங்கரவாதப் பயிற்சி பெறுவதற்கு வருவதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
12.1.2011-ஆம் தேதி வெளியாகிய பாகிஸ்தான் பத்திரிக்கையான டானில் வரும் ஏப்ரல் மாதம் எகிப்தில் நடக்க இருக்கும் 57 இஸ்லாமிய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து ஒருவர் கலந்து கொள்வதற்காக ஓ.ஐ.சி (Organisation of Islamic Conference) அமைப்பின் பொறுப்பாளர் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு வருகை தருவதாகச் செய்தி வெளியிட்டது. ஆகவே ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்த இந்தியாவில், பயங்கரவாதச் செயல்பாடுகளை செய்வதற்காகவே லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்புகள் பயிற்சி முகாம்கள் நடத்துகிறார்கள். ஏற்கனவே 1988-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஐ.எஸ்.ஐ-யினால் தீட்டப்பட்ட ’ஆபரேஷன் டோபக்’ மூலமாக காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவியவர்களால் அரசின் நிர்வாகமே இஸ்லாமிய மயமாகின்ற காரியத்தில் ஈடுபட்டுள்ளவர்களை களையெடுக்க இயலாமல், மத்திய அரசும் மாநில அரசும் மெத்தனமாக இருக்கும் இச் சமயத்தில, உள்துறை செயலாளரின் பேச்சு– அதைச் செயல்படுத்த முனையும்போது, காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் கல்லெறி சம்பவத்திற்குப் பதிலாக துப்பாக்கி தோட்டாக்கள் துளைக்கும் சப்தம் பெருகும் என்பது நிச்சயமாகும்.
kashmir_army_troopsஇரண்டாவதாக உள்துறை செயலாளர் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் பேசும்போது,“எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ள படைவீரர்களின் எண்ணிக்கையை 25 சதவீதமாக குறைக்க முடிவு செய்துள்ளது,” என்றும் தெரிவித்தார். இந்தத் தகவல் வெளியாகி 24 மணி நேரம் முடிவதற்குள் அண்டை நாடான சீனா, மீண்டும் அருணாசல பிரதேசம் பிரச்சினைக்குரிய பகுதியாகும் என செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியத் திருநாட்டைச் சுற்றி உள்ள நாடுகளில் அமெரிக்காவும் சீனாவும் தங்களது ஆதரவுத் தளங்களை உருவாக்க இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. ஒருபுறம் பயங்கரவாதச் செயல்களைச் செய்துகொண்டு இருக்கும் பாகிஸ்தானைக் கண்டிப்பது போல் கண்டித்தாலும், தொடர்ந்து அவர்களுக்கு ஆயுதங்கள் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளவில்லை. 1947-இல் நம்மிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளில் சுமார் ஆயிரக்கணக்கான கி.மீ நிலத்தை சீனாவிற்கு தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் பாகிஸ்தான் சீனாவிற்கு பல்வேறு வழிகளில் தளங்களை அமைத்துக் கொடுத்து வருகிறது. 1962-இல் நடத்திய யுத்தத்தைப் போல் காலம் கனிந்து வந்தால் மீன்டும் இந்தியாவின் மீது போர் தொடுக்க சீன தயாராக இருக்கிறது.
ஆகவே உள்துறை செயலாளர் பேச்சு அபத்தமானது; அதைச் செயல்படுத்தும்போது அது இந்திய தேசத்திற்கு ஆபத்தாகவும் முடியும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் கிடையாது.

26 ஜனவரி 2011

இந்து எதிரிகளான எமகிங்கரர்கள்


திரு. தெய்வமுத்து (மும்பையில் இருந்து வெளியாகும் Hindu Voice இதழ் ஆசிரியர்) ஆங்கிலத்தில் 2009-ஆம் ஆண்டு வெளியிட்ட கையேடிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சில செய்திகள்.
நீங்கள் ஓட்டுப் போடும்முன் சில உண்மைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும்..
தங்களது பெண், பிள்ளை, பேரன், பேத்திகள் கோயிலுக்குச் செல்லும் பொழுதோ அல்லது கடைகளுக்குச் செல்லும் பொழுதோ தீவிரவாதிகளால் குண்டடிபட்டு இறந்தால் எப்படியிருக்கும் என்பதைப் பற்றி எப்பொழுதாவது சற்று சிந்தித்துப் பார்த்துள்ளீர்களா? தங்களது பிள்ளைகளோ அல்லது பேரப்பிள்ளைகளோ நிர்பந்தத்தின் பேரில் தங்கள் இருப்பிடத்தை மாற்றவேண்டிய அவலத்தைப் பற்றிச் சிந்தித்து பார்த்துள்ளீர்களா? மேலும் அவர்கள் சனாதன தர்மத்திலிருந்து விலகி அந்நிய மதங்களுக்கு, கட்டாயப்படுத்தி மாற்றப்பட்டால் என்னவாகும் என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்த்துள்ளீர்களா? இவற்றைப் பற்றி எண்ணும் பொழுது நீங்கள் கதிகலங்வில்லையா? இவை எல்லாம் புகைபோட்ட தீ போல் நடந்துகொண்டுதான் வருகின்றன இது காட்டுத் தீ போல் பரவும்முன் நாம் விழித்துக்கொள்ளவேண்டாமா? உண்மை நிலவரம் என்ன என்பதை சற்று பாருங்கள்!!!
bhajan
  1. 200 ஆண்டுகளுக்கு முன் ஆப்கானிஸ்தானில் கந்தகாரில் இந்துக்கள் சனாதன தர்மத்தி்ன்படி பூஜைகள் செய்துகொண்டும் பஜனைகள் கீர்த்தனைகளை பாடிக்கொண்டும் நேர்த்தியான தெய்வீகத் தன்மையுடன் வாழ்ந்தார்கள். இது திருதராட்டிரரின் மனைவி காந்தாரி பிறந்த ஊர் ஆகும். இப்பொழுது இங்கே ஒரு இந்துவும் இல்லை. இன்று இங்கு இருப்பவர்களெல்லாம் அல் கொய்தா, தலிபான் ஆள்கள். ஷரியா சட்டத்தின்படி கண்ணுக்குக் கண், காலுக்கு கால் என்ற பழிபாவச் செயல்களைச் செய்யத் தயங்காதவர்கள்.
  2. 100 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் உள்ள லாகூரிலும் கராய்ச்சியிலும் (இராமனின் பிள்ளைகளான லவ, குசா வாழ்ந்த இடம்.) இந்துக்கள் பஜனைகளையும் கீர்த்தனைகளையும் பாடிக்கொண்டு சனாதன தர்மத்தின்படி வாழ்ந்துவந்தார்கள். பாகிஸ்தான் பிரிவினையின்போது அங்கே 24 சதவிகிதம் இந்துக்கள் வாழ்ந்துவந்தார்கள். ஆனால் இன்றோ அங்கு 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இந்துக்கள் இருக்கிறார்கள். பிரிவினைக்குப் பின் பாகிஸ்தான், ”இஸ்லாமிக் ரிபபிளிக் ஆப் பாகிஸ்தான்” என்று பிரகடனப்படுத்தியது. ஆனால் இந்தியா, ”இந்து ரிபபிளிக் ஆப் பாரத்” என்று ஏன் பிரகடனபடுத்தவில்லை?
  3. 50 ஆண்டுகளுக்குமுன் காஷ்மீரில் இந்துக்கள் பூஜை செய்துகொண்டும் பஜனைகளையும் கீர்த்தனைகளையும் பாடிக்கொண்டும் நேர்த்தியான வாழ்க்கை வாழ்ந்துவந்தார்கள். இங்கேதான் சைவம் முதன்முதலில் தோன்றியது. அப்படிப்பட்ட புண்ணிய பூமியில் இன்று பேருக்குகூட ஓர் இந்து இல்லை. நேருவின் தவறான சுயநல அணுகுமுறையால் மிலேசர்கள் ஆக்கிரமிப்பிற்கு நாமே வழிவகுத்துக்கொடுத்தோம். அதனால் இந்துக்கள் எல்லாம் அங்கிருந்து விரட்டப்பட்டு இன்று நம் நாட்டிலேயே அகதிகளாக ஜம்முவிலும் டெல்லியிலும் அவதிப்படுகிறார்கள்.
  4. வடகிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசம், நாகாலாந்து, திரிபுரா, மிஸோராம், மணிப்பூர் எல்லாம் கிருஸ்துவநாடாக மாற்றப்பட்டுவிட்டன அஸ்ஸாமிலும் மேற்கு வங்காளத்திலும் பங்களாதேசத்திலிருந்து கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் அத்துமீறிக் குடியேறியுள்ளார்கள். அவர்களுக்கு ஓட்டுரிமை அளித்து ரேஷன் அட்டையையும் கொடுத்து வருகிறது நமது அரசு
  5. தெற்கே கன்னியாகுமரியிலும் ராமேஸ்வரத்திலும் கிருஸ்துவர்களின் ஆக்கிரமிப்பு தீவிரம் அடைந்துவருகிறது. இதைப்போல் ஆந்திராவிலும் ஒரிஸாவிலும் கிருஸ்துவ ஆக்கிரமிப்பு அதிகரித்துவருகிறது. கேரளாவில் இஸ்லாமியர்களின் ஆதீக்கம் வலுவடைந்து வருகிறது.
இந்தச் சரித்திரத் தொடர் நிகழ்வுகளைப் பார்க்கையில் இன்னும் 50 ஆண்டுகளில் நம்முடைய பிள்ளைகளும் பேரபிள்ளைகளும் கோவில்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்யவும் பஜனை கீர்த்தனைகள் பாடவும் அனுமதிக்கப்படுவார்களா என்பது சந்தேகமே. இந்த நாடு ஒரு ஜனநாயக நாடாக மதச்சார்பற்ற நாடாக இருக்குமா என்பதும் சந்தேகமே. நமது குழந்தைகளுக்கு சுதந்திரமாக எண்ணங்களை வெளிப்படுத்த முடியுமா என்பதும் சந்தேகமே. யாதார்த்தத்தில் இதுவே நாம் இன்று கண்எதிரே காண்கின்ற அவலங்களாகும். மேலும் தீவிரவாத ஒருமத சமூகச்சேர்க்கை கொண்ட மக்கள் மாநிலங்களை ஆக்கிரமித்து வந்துகொண்டிருப்பது இதை மேலும் உறுதிசெய்கிறது.
இந்துக்களின் வாழ்வாதாரமான பாரதத்தின் எல்லைப்பகுதிகள் தொடர்ந்து கேட்பாற் இல்லாமல் குறுகிக்கொண்டே வருகிறது. உலகில் 130 கோடி இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள் இவர்கள் 57 இஸ்லாமிய நாடுகளில் பரவியுள்ளார்கள். அதைப்போல் 200 கோடி கிருஸ்துவர்கள் 150 கிருஸ்துவநாடுகளில் பரவியுள்ளார்கள். ஆனால் 90 கோடி இந்துக்களுக்கோ இருப்பது ஒரேநாடு- பாரதம்தான். ஆனால் அப்படிச் சொந்தம் கொண்டாடமுடியாத அவலநிலைமையை செக்யூலரிஸம் என்ற போலி வேஷத்தைப் போட்டுக்கொண்டு அரசியல் தலைவர்கள் இந்துக்களை நாடு இல்லாத அநாதைகளாக்க, பேயாய் அலைந்துகொண்டீருக்கிறார்கள்.
இப்படிபட்ட பாரம்பரியத்தையா நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு விட்டுச்செல்லவேண்டும் என நினைக்கிறீர்கள்?  நாம் எல்லோரும் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழித்து நம்மை எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடிக்கவேண்டும். நமது சவால்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளும்முன் நமது நாட்டின் வரலாற்றைச் சற்று பின்நோக்கிப்[ பார்க்கவேண்டும்.
பாரதம் முனிவர்களும் ரிஷிகளும் வாழ்ந்த பூமி. இந்தப் புண்ணிய பூமியில்தான் பல கடவுள் அவதாரங்களும் ஞானிகளும் தோன்றினர்; ராமர், கிருஷ்ணர், மாஹாவீரர், புத்தர், ஆதிசங்கரர், குருநானக் போன்றோர். ஆதனால்தான் பாரதம் தெய்வபூமி, புண்ணியபூமி என்று அழைக்கப்படுகிறது. இது நமது தாய்நாடு; அவளை ’பாரதமாதா’ என்று போற்றி வணங்குகிறோம்.
bharatha-matha-durgaநமது நாடு 1000 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமியர் கிருஸ்துவர்களால் ஆளுமைபட்டு இருந்தபோதிலும் பாரதம் இந்து நாடாகத்தான் இருந்தது. உலகச் சரித்திரத்திலேயே இவ்வாறு 1000 ஆண்டுகளுக்குமேல் அடிமைப்பட்டு பின் புத்துயிர் பெற்ற நாடு நமது பாரதம்தான். இங்கே எண்ணற்ற ஜாதி, மொழி, இன வேறுபாடுகள் இருந்தபோதிலும் நாம் பிழைத்து நிமிர்ந்து நின்றதற்குக் காரணம் நமது தெய்வீகக் கலாசாரமும் பண்பாடுகளுமேயாகும். இங்கு ஆன்மீகமும் அரசியலும் தொன்றுதொட்டு இணையாகவே கடைபிடிக்கப்பட்டதுதான். இந்த உண்மையேதான் (பல வேற்றுமையில் ஒற்றுமை என்ற) இந்துத்துவம் ஆகும்.. நாம் எந்த பூஜைகள் செய்தாலும் முதலில் சங்கல்பம் செய்கிறோம் அப்பொழுது நாம் சொல்லும் முதல் மந்திரம் ”பாரத வருஷே பரதகண்டே ஜம்புதீவீபே” என்று இந்தப் புண்ணியபூமியை முதலில் வணங்குகிறோம். எனவே பாரதம் இந்துத்துவம் என்ற பிணைப்பு இருந்தால்தான் ஸ்திரத் தன்மையுடன் இருக்கமுடியும். இந்துத்துவம் என்பது மனிதநேயத்தின் மொத்த உருவகமே. வேறு எந்த மதக் கோட்பாடுகளிலும் இல்லாதது இந்துத்துவம்; அதுவே தர்மம்; அதுவே சத்தியம்; அதுவே மனித நேயம். இன்றும் இந்த இந்துத்துவ பிணைப்புதான் நம்நாடு ஜனநாயக, மதச்சார்பற்ற நாடாகப் பிழைத்து இருப்பதற்கு வழிவகுத்துள்ளது.
ஆனால் தற்சமயம் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. அந்நியமத ஆதிக்க சக்திகளாலும் தேச ஒற்றுமையைக் குலைக்கும் போலிமதச்சார்பின்மை அரசியல் தலைவர்களாலும் பொறுப்பற்ற பத்திரிகைகள் தொலைகாட்சிகளாலும் சீரழிந்து அதர்மம் தலைவிரித்து நாட்டை பாடாய்ப்படுத்திவருகிறது. எனவே இந்துக்கள் ஒற்றுமையுடன் தங்களை குருஷேத்திர யுத்தத்திற்குக் காலம்தாழ்த்தாது தயார்படுத்திக் கொள்வது அவசியமாகும். மீண்டும் ’வந்தே மாதரம்’ கோஷம் எழுப்பும் நேரம் நெருங்கிவிட்டது.
இன்று பாரதம் ஆறு எம கிங்கரர்களிடம் சிக்கித் தவிக்கிறது-- முல்லா, மிஷினரி, மார்க்ஸிஸ்ட், மெக்காலே, மீடியா, மெய்னோ (Mulla, Missionary, Marxists, Mecaulayists, Media & Maino). இவர்களுக்கு எள்ளளவும் பாரதத்தின்மீது பற்று கிடையாது. இவர்கள் நமது காலாசாரத்தைப் பற்றியோ, நாகரிகப் பண்பாடுகள் பற்றியோ சிறிதளவும் அக்கறை இல்லாதவர்கள். இவர்களை ஒழித்துக் கட்டாதவரையில் அமைதி என்பது பாரதத்திற்கு இல்லை.  நான் முல்லா, மிஷினரி என்று சொன்னது தேசப்பற்று உள்ள முஸ்லீமையோ கிருஸ்துவனையோ அல்ல. இவர்கள் தேசப்பற்றுடன் முல்லாவுக்கும் மிஷினரிகளுக்கும் செவிசாய்க்காமல் இருப்பது ஒன்றே ஒற்றுமையை வளர்க்கும்.

முல்லா [எமகிங்கரன் நம்பர் -1]
chief-mullahமுல்லாவோ அல்லது முல்வியோ தங்களதுபிடியிலிருந்து இஸ்லாமியர்கள் விலகாமல் இருப்பதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்து தினம் தினம் ஃபத்வாக்கள் அறிவிப்பதை ஒரு மாற்றம் இல்லாத கொள்கையாகக் கொண்டுள்ளார்கள். இதன் தீவிரம் இஸ்லாமிய நாடுகளில் மிகவும் அதிகம். மத சார்பற்ற பாரதத்திலும் நீதிமன்றத்தைப் புறக்கணித்து தங்களது ஷரியாச் சட்டத்தை நிலைநிறுத்த முயலுகிறார்கள். (UPA) அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் ஓர் உறுதிமொழிப் பத்திரம் (Affidavit) பதிவுசெய்து முல்லாக்களின் ஃபத்வா, சாதாரண சட்டங்களில் தலையிடுதல் கூடாது என்று தீர்ப்புப் பெற்றுள்ளார்கள். ஆனால் தீர்ப்பு அளித்த நீதீமன்றமோ பல சமயங்களில் அதை மீறிச் செயல்படுகிறது.
உதாரணமாக கேரளாவில் 12 எம்.எல்.ஏ கள் மாநில அவையில் அல்லாவின் பேரால் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்கள். இதற்கு ஒரு தனிநபர் கேராளாவின் உயர்நீதி மன்றத்தில் இது இந்தியச் சட்டப்படி தவறு என்று முறையிட்டார். ஆனால் உயர்நீதி மன்றம் இதைத் தள்ளுபடி செய்துவிட்டது. எனவே அவர் உச்சநீதி மன்றத்தில் முறையிட்டார். உச்சநீதி மன்றமும் கடவுளும் அல்லாவும் ஒன்றுதான் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது. ஆனால் முல்லாக்களோ பல முறை கடவுளும் அல்லாவும் ஒன்றல்ல என்று தெரிவித்துள்ளார்கள். (அதாவது கடவுள் என்று கூறினால் அல்லாவைத் தவிர மற்ற கடவுள்கள் உள்ளார் என்று ஏற்கவேண்டும்). இது எப்படி இருக்கின்றது என்றால் ஒருவன் தன்னைத் தானே அயோக்கியன் என்று வெளிப்படுத்தியும் அவனுக்கு நன்நடத்தை சான்றிதழ் அளிப்பதுபோல் ஆகும்.
மேலும் ஒருமுறை அலகாபாத் உயர்தீதி மன்றத்தில் ஸ்ரீவஸ்தா என்ற நீதிபதி ஒரு தீர்ப்பைக் கூறுகையில் ”ஜாதி மத இன வேறுபாடு இல்லாது எல்லோரும் இந்தியச் சட்டம் 51எ படி கீதையில் கூறியுள்ள தர்ம நெறிக்கும கட்டுப்பட்டவர்கள்,” என்று கூறினார். உடனே இவ்வாறு கூறுவது தவறு என்று சட்ட அமைச்சர் பரத்வாஜ் உச்சநீதிபதி காரே போன்றோர் வாதிட்டார்கள். தங்கள் அல்லா, தங்கள் கர்த்தர் மட்டும்தான் கடவுள்; மற்றவை போலி என்று கூறும் குரானும் பைபிளும் தர்ம சாஸ்திரம் ஆகுமா?
மேலும் இந்த முல்லாக்களின் ஃபத்வாக்கள் பல சமயங்களில் இஸ்லாமியக் குடும்ப வாழ்வையே அழித்துவிடுகிறது. கணவன் மனைவியை அல்ப காரணங்களுக்கா விசாரணையே இல்லாமல் பிரிப்பது மிகவும் கொடிய பாவம் ஆகும். இதனால் அவர்களின் குழந்தைகளின் வாழ்கை பாதிக்கப்படுகிறது. மேலும் சிலர் தாசி தொழிலுக்குத் தள்ளப்படுகிறார்கள். இவை எல்லாவற்றையும் கண்கூடாகப் பார்த்தும் அவர்கள் ஷரியா சட்டப்படி ஃபத்வா அளிப்பதை நிறுத்தவில்லை.
முல்லாக்கள் எப்பொழுதுமே தங்கள் இனத்து மக்கள் படிப்பறிவு இல்லாதவர்களாகவும் பின்தங்கி இருப்பவர்களாகவும் இருப்பதையே விரும்புவார்கள். அப்பொழுதுதான் அவர்கள் அறியாமையாலும் இயலாமையாலும் தாங்கள் வெளிப்படுத்தும் ஃபத்வாக்களுக்கு செவிசாய்ப்பார்கள் என்பதில் இன்றுவரை உறுதியாக இருக்கிறார்கள். அவர்கள் முன்னேறினால் எதிர் கேள்விகள் கேட்பார்கள் என்ற பயம். இது தவிர அடிக்க, ”இஸ்லாம் பெரிய அபாயத்தில் உள்ளது” என்று முழங்குவார்கள்.
இதனால் ஒருவித மரண பயத்தில், ‘மந்திரித்துவிட்ட கோழிபோல்’ கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் கூடி தங்களுக்குக் கீழ்ப்படிந்து இருப்பார்கள். உண்மையிலும் அதுவேதான் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் சில படித்த இஸ்லாமிய அறிஞர்கள் முல்லாக்களின் ஆதிக்கத்தால் அதை எதிர்த்து மறுத்துவருகிறார்கள்.
மிஷின(ந)ரி [எமகிங்கரன் நம்பர் - 2]
conversionagenda2மிஷினரி என்பவர்களும் சாதாரண கிருஸ்துவர்களும் வேறுபட்டவர்கள். மிஷினரி எப்பொழுதும் மதக் கோட்பாடுகளை வியாபாரம் செய்யும் இயக்கமாகும். அவர்கள் உலகில் எங்கு சென்றாலும் அங்கே வாழும் மக்களது பாரம்பரியக் கலாசாரத்தை உருத் தெரியாமல் கொன்று கர்த்தரின் ராஜ்ஜியத்தை நிறுவுவதே தொழில் ஆகும். டாக்டர்.டேவிட் பிராவ்லே கூற்றுப்படி மிஷினரி என்பது உலகமயமாக்கப்பட்ட மிகப்பெரிய நிறுவனம். அதற்கு பல வழிகளில் டாலர் சொத்துக்கள் முடிவு இன்றி குவிந்து கொண்டே இருக்கும். இதில் உள்ளவர்கள் கத்தோலிக்கர்கள், பிராடெஸ்டன், எவாஞ்சலிக் போன்றவர்கள். இந்தக் குழுக்களுக்கு முழுநேர ஊழியர்கள், பல கிளைக் கழகங்கள் உண்டு. இவர்களது வேலையே மதமாற்ற செய்ய, வேண்டியபணம் கொடுத்தல், சுவிஷேஷப் பிரசங்கங்களை அடிக்கடி கிராமம் கிராமமாகக் கூட்டுதல், மற்ற மதப் புத்தங்களைப் பற்றி கீழ்த்தரமாக விளக்கி பிட் நோட்டிஸ் அடித்து விநியோகம் செய்தல், மீடியா உதவியுடன் தீவிர மதமாற்றத்திற்குத் தேவையான போலி இன, மத, ஜாதி வேற்றுமைகளை பெரிதுபடுத்துதல், எல்லாவிதமான சதிவேலைகளிலும் மறைமுகமாக ஊக்குவித்து அராஜகத்தைத் தூண்டுதல் ஆகியவை ஆகும். இவர்களுடன் போட்டிபோட்டுத் தடுப்பது என்பது ஒரு பெட்டிக்கடைக்காரன் உலக அளவில் தொழில் செய்யும் ஒரு நிறுவனத்துடன் போட்டி போடுவதற்கு இணையாகும். இதில் நமது அரசாங்கமே நேரிடையாகத் தலையிட்டால் அன்றி தீர்வுகாண்பது அரிது. நமது போறாதகாலம்- எரிகிற கொள்ளியில எண்ணையை ஊற்றும் அரசாங்கமாக இருக்கிறது. மொத்தத்தில் இது உலகை ஆக்கிரமிக்க நடத்தப்படும் ‘புனித’ப் போர் ஆகும்.
மார்க்ஸிஸ்ட் [எமகிங்கரன் - நம்பர் 3]
communism
மார்க்ஸிஸ்ட் அல்லது கம்யூனிஸ்ட்– இவர்கள் காரல் மார்க்ஸ் பெற்ற தத்துப் பிள்ளைகள். அவர், ”மதம் என்பது மயக்கத்தை ஏற்படுத்தும் ஒரு போதைப்பொருள்” என்றார். இவர்கள் எல்லோரும் பொதுவாகவே நாத்திகர்கள் என்று கூறிக்கொள்வார்கள் அதுவும் இந்து மதத்தை மட்டும் தாக்குவார்கள். மற்ற மதக்  கடவுள்கள் உண்மையில் இல்லை என்று இதுவரையில் சொன்னதில்லை. இவர்களுடைய குருமார்கள் சீனாவிலும் ரஷ்யாவிலும் இருக்கிறார்கள். இவர்கள் பாரதம் முழுவதும் ஓர் ஒருங்கிணைந்த தேசம் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. இவர்களது எண்ணம்- பாரதம் பல மாநிலங்களின் கூட்டுச் சேர்க்கை; அது ரஷ்யாவைப் போல் பிரிந்து பிரிந்து ஆண்டாலும் தவறு இல்லை. இவர்கள் காஷ்மீரம் பற்றிய முடிவை அந்த மக்களிடமே விட்டுவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் ஆனால் அதே மாதிரி தீபெத் விஷயத்தில் கூற மறுக்கிறார்கள். (ஏன் என்றால் தீபெத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது). இவர்கள் பிரிட்டிஷ்காரனுக்கு சாமரம் வீசிக்கொண்டு, சுதந்திரமே வேண்டாம் என்றுகூறியவர்கள். காந்தியையும் சுபாஷ் சந்திர போஸையும் ஜெயபிரகாஷ் நாராயணனையும் ‘வெள்ளையனே வெளியேறு!’ என்ற போராட்டத்தையும் எதிர்த்தவர்கள். இந்திய சீன யுத்தத்தின் போது சீனாவை ஆதரித்த தேசத் துரோகிகள். சி.பி.எம். என்பது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பாரதக் கிளையாகும்.
ஆனால் இன்று உலகம் பூராகவும் கம்யூனிஸம் குடைசாய்ந்துவிட்டது. பாரதத்தில் இந்தக் கூட்டம் சிறிதளவில் இருந்தாலும் பல தகாத கூட்டணிச் சேர்க்கையால் குழப்பங்கள் விளைவிப்பதையும் ஸ்திர தன்மையைக் குலைப்பதிலுமே என்றும் குறியாய் இருப்பார்கள். அவர்களுக்கு ஜனநாயகத்தின் மீதோ மதச்சார்பின்மை மீதோ நம்பிக்கை கிடையாது.
இவர்கள் தங்களது ஆட்சியை வலுப்படுத்திக்கொள்ள பங்ளாதேசத்திலிருந்து அத்துமீறி நுழைந்த 3 கோடி இஸ்லாமியர்களை வரவேற்று அவர்களுக்கு ஓட்டுரிமையும் ரேஷன் அட்டையையும் அளித்துள்ளார்கள். மாவோவிஸ்ட் நக்ஸல்பாரிகள் இவர்களின் ஆயுதப் படை ஆகும். ஆனால் இவர்களின் ஆட்டம் இன்று வெகுவாக அடங்கிவிட்டது. இவர்களையும் மிஷிநரிகளையும் நாட்டைவிட்டுத் துரத்துவது இன்றியமையாத கடமையாகும்.
மீடியா [எமகிங்கரன் நம்பர் - 4]
மீடியா என்றால் பத்திரிகைகளும் தொலைக்காட்சியும். இதில் எல்லா ஆங்கிலப் பத்திரிகைளும் அந்நியநாட்டிற்கு மட்டுமே சாதகமாகத் தொண்டூழியம் செய்கின்றன. முஸ்லீம், கிருஸ்துவ பெரும் பணக்கார மாஃபியா கும்பல்கள்தான் இதில் பெரும் பங்குதாரர்கள். சில பத்திரிகைகளில் சோனியாவுக்கும் பங்கு உண்டு. பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் நாட்டின் முதுகெலும்பு; நாட்டின் ஸ்திரத் தன்மைக்கும், ரகசியங்களைக் காப்பதற்கும் அதற்குப் பெரும்பங்கு உண்டு. இவ்வாறு அந்நியப் பங்கீட்டை பாரதம் தவிர வேறு எந்த நாடும் அனுமதித்ததில்லை. இதனால் நம்நாட்டுப் பொருளாதாரம் உயருமா அல்லது தொழில் கட்டுமான வழித்தடங்கள் அதிகரிக்குமா?  பாரதத்தில் என்ன நல்லது நடந்தாலும் அவர்கள் கண்களுக்கு தெரியாது. ஆனால் ஒரு சிறு தவறு நிகழ்ந்தால் அதை ஊதிப் பெரியதாக்கி உலகம் பூராவும் செய்திகளைப் பரப்பும். பாரதம் பெரும் கலவரங்கள் நடக்கும் நாடு; இங்கே எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம்; இங்கே தொழில் தொடங்க உகந்த சூழ்நிலை இல்லை… என்றெல்லாம் மறைமுகமாகக் கூறி நம் நாட்டின் முன்னேற்றத்தைத் தடைசெய்வதே இதன் நோக்கம் ஆகும்.
karan-thapar-a-devils-advocate‘தி இந்து’ பத்திரிகையின் ‘ராம்’ கம்யூனிஸ்ட் கட்சியின் நிரந்தர உறுப்பினர். சீனாவிற்கு அடிக்கடி விஜயம் செய்வார். சீனாவிற்குச் சாதகமான செய்திகளை, தன் பத்திரிகை மூலம் பரப்புவார். கே.பி.எஸ்.கில் கூற்றி்ன்படி சில பத்திரிகைகள் தீவிரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு உடையவை. (தெகல்கா, கம்யூனலிஸம், காம்பாட் போன்ற பத்திரிகைகள்). கரன் தாபர் என்ற பத்திரிகை ஆசிரியர் மோடியை எலிமிநேட் (கொலை) செய்தாலும் தவறு இல்லை என்கிறார். இந்துக்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டால் மௌனம் சாதிப்பது; அதுவே இஸ்லாமியருக்கோ கிருஸ்துவர்களுக்கோ நேர்ந்தால் செய்திகளைத் திரித்து பெரிதுபடுத்துவது என்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள். காங்கிரஸ் ஆளாத மாநிலங்களில் கலவரம் நடந்து சிலர் இறந்தால் அதை இனப்படுகொலைகள் நிகழ்ந்துவிட்டன என்றும் அதைப்போல் காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் இனப்படுகொலைகள் நிகழ்ந்தாலும் அதை சிறிய கலவரம் என்றும் சித்தரிக்கும். எனவே நாம் மீடியாவில் அந்நிய முதலீடு செய்வதை முதலில் தடை செய்யவேண்டும்.
மெக்காலே [எமகிங்கரன் நம்பர் - 5]
macaulayமெகாலேயின் கல்வித் திட்டம்தான் இன்றுவரையில் நடைமுறையில் உள்ளது. அவரின் குறிக்கோள்- ஆங்கிலேயர்களுக்கு ஓர் உன்னதமான ஆங்கிலம் கற்ற மத்தியஸ்தர்கள் (Mediators) தேவை. அவர்கள் நிறத்தில் இந்தியன் போல் இருந்தாலும் அவன் சொல்லிலும் செயலிலும் எண்ணங்களிலும் நடத்தைகளிலும் ஆங்கிலேயனைப்போல் இருக்கவேண்டும் என்பதே ஆகும். அதில் அவர் பெரும் வெற்றியையும் கண்டார். பல அறிவுஜீவிகள் உற்பத்தி ஆனார்கள். எப்படி? வெறும் உடலால் இந்தியன்; மற்ற எல்லா நடவடிக்கைகளிலும் ஆங்கிலேயர்களுக்குச் சாதகமாக இருத்தல். இப்படிப்பட்டவர்களின் வழித்தோன்றல்களே இன்று கம்யூனிஸ்ட்களில் பலரும் காங்கிரஸில் பலரும் மனிதஉரிமைக் கழகங்களில் பலரும் சரித்திர ஆகிரியர்களில் பலரும் பத்திரிகை ஆசிரியர்களில் பலரும் நாட்டை அந்நியனுக்கு விலைபேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள்தான் போலி மதச்சார்பின்மை பேசிக்கொண்டும் சிறுபான்மையினரைத் தூண்டிவிட்டுக்கொண்டும் நாட்டின் அமைதியினைக் குலைத்துக்கொண்டுமிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்து மதம், இந்துக்கள் என்றாலே எட்டிக்காயாகக் கசக்கும். எல்லா தேசவிரோத சக்திகளுக்கும் துணைபோகத் தயங்கமாட்டார்கள். மொத்தத்தில் இவர்கள் சுயநலப் பச்சோந்திக் கூட்டம். இவர்களின் வாரிசுகளும் இதையே தொடராமல் தடுத்து நிறுத்துவது பாரத இறையாண்மைக்கு மிகவும் அவசியம்.
மெய்னோ [எமகிங்கரன் நம்பர் - 6]
யார் இந்த மெய்னோ?  அன்டோனியா மெய்னோ. இவர் ஒரு ரோம் கத்தோலிக்க கிருஸ்துவர். இத்தாலிய நாட்டில் பிறந்த இவர் தற்போது சோனியா காந்தி என்று பெயர் பெற்றுள்ளார். இவருக்கு இந்தியாவைப் பற்றிய எந்தச் சரித்திரமும் தெரியாது. அவர்தான் இன்று கொல்லைப்புறக் கதவு வழியாக நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறார். இவருக்குக் கடுகளவும் இந்து தர்மத்தின் மீதோ இந்துக் காலாசாரத்தி்ன் மீதோ மரியாதை கிடையாது. பதவி ஆசை பிடித்த காங்கிரஸ்காரர்கள் போட்டிபோட்டுக்கொண்டு சாலாம் அடித்து முடிசூடா பாரத ராணிக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள்.
sonia-gandhi1
எதற்காக காங்கிரஸ்காரர்கள் வெளிநாட்டிலிருந்து ஒரு பெண்ணை இங்கு இறக்குமதி செய்யவேண்டும்?  இங்கே படித்த, தேசப்பற்று உள்ள தலைவர்கள் ஒருவர்கூட இல்லையா?  ஒரு லண்டன் பாரில் எடுபிடியாக பணிசெய்து கொண்டிருந்த ஒரு பெண் இன்று முக்கியமான உலகத் தலைவர்களுள் ஒருவராகிவிட்டார் என்று 2004 லண்டனின் கார்டியன் பத்திரிகை தலைப்புச் செய்தி வெளியிடுகிறது. அவர் பள்ளிப்படிப்பைகூட முடிக்கவில்லை சேர்ந்தார்போல் சுயமாக சில வரிகள்கூட பேசத்தெரியாது. இருந்தும் மீடியாக்களின் பரபரப்பினால் திறைமைசாலி போல அரசியல் மேடைகளில் வலம் வருகிறார். பழைய லோக் சபா சபாநாயகர் பி.எ.சங்மா காங்கிரஸ் காரியக்கமிட்டிக் கூட்டத்தில் வெளிப்படையாகவே, “உங்களைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது,” என்றார். இவரும் சரத்பாவாரும் சோனியாவின் வருகை பிடிக்காததால் காங்கிரஸிலிருந்து வெளிவந்து என்.சி.பி. என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்கள். பின்பு பதவிமோகத்தால் தன்மானம் இழந்து அவர்களுடன் கூட்டுவைத்துள்ளார்கள். இவர் ராஜீவை மணந்தபின்பும் 18 வருடங்களுக்கும் மேலாக இந்திய பிரஜா உரிமையைப் பெறவில்லை ஆனாலும் சட்டத்தை மீறி டெல்லி ஓட்டுப் பட்டியலில் இடம்பெற்றார்.
sonia-gandhi2
இவர் தேசப்பற்று இல்லாதவர்; ‘வந்தே மாதரம்’ நூறாவது ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வெளிப்படையாவே மறுத்தார். இது ஒரு காங்கிரஸ்காரனுக்கு அவமானமாகத் தெரியவில்லை. ஆனால் போப் ஜான்பால் மரணத்திற்கு இங்கு விடுமுறை அறிவிக்கிறார். காசு கொடுத்து, கட்டாய மதமாற்றம் செய்த கிரஹாம் ஸ்டேன் அவர்களது மனைவி கிலாடி ஸ்டேனுக்கு ‘பத்மஸ்ரீ’ பட்டம் கொடுக்கிறார். எதற்கு? அப்பாவி மக்களைத் தூண்டி காசு கொடுத்து மதமாற்றம் செய்து மத நல்லிணக்கத்தைக் கெடுத்ததற்கு!!! ‘பென்னி இன்’ என்றொரு மதபோதகர். அவர்மேல் வெளிநாட்டில் எண்ணற்ற குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளது. அவருக்கு பெங்களுரில் ராணுவ விமானத்தள மைதானத்தில் மோசடி மதப்பிரசாரம் செய்ய சோனியாவின் வற்புறுத்தலால் அனுமதி கொடுத்தார்கள்.
சோனியாவைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் கிருஸ்துவர்களும் நாட்டுப்பற்று இல்லாத சில இஸ்லாமியர்களும்தான். அம்பிகா சோனி, ஆஸ்கர் பெர்நான்டஸ், அந்தோனி, மார்கெரிட் ஆல்வா என்று ஒரு பெரும் தலையாட்டிக் கூட்டத்தையே ஏற்படுத்தியுள்ளார். ‘வால்சன் தம்பு’ என்ற இந்து வெறுப்பாளி (NCERTs) தலைவர் ஜான் தயாள் (National Integration committee) கன்சன் எலியா என்ற இந்து வெறுப்பாளர் (UN & US) காங்கிரஸில் (looking into the matters related to cast discrimination in India) வேண்டும் என்றே திட்டம் தீட்டி இந்து மடாதிபதிகள் மேலும் இந்துக் கோயில்கள் மேலும் களங்கம் விளைவித்து வருகிறார்கள். சாமி ராம் தேவ், காஞ்சி சங்கராசாரியார், சத்திய சாயிபாபா ஆஸ்ரம், பாபு சாமி லஷ்மணாநந்தா, சாமி நித்யானந்தா, ரவிசங்கர், மருவத்தூர் அடிகளார் மேலும் சபரிமலை, திருப்பதி, ஸ்ரீரங்கம், அமர்நாத் போன்ற கோயில்களிலும் சர்ச்சயைக் கிளப்புகிறார்கள்.
200 ஆண்டுகள் போராடி வெள்ளையர்களை வெளியேற்றிவிட்டு, அல்பத்தனமாக ஒரு வெள்ளைக்காரியின் காலடியில் நாட்டைக் கொடுத்திருப்பது கூனிக் குருகி அவமானப்படவேண்டிய செயலே ஆகும். மகாத்மா காந்தி, ‘ராம ராஜ்ஜியத்தை’உருவாக்கவேண்டும் என்றார். ஆனால் அந்த இராமாயணத்துக் கூனி போல் பாரதத்தில் நுழைந்த பூதகி போல் மெய்னோ, ‘ரோம் ராஜ்ஜியத்தை’ இங்கு நிறுவ சதிவேலை செய்துகொண்டிருக்கிறார். அவரையும் அவரது வாரிசுகளையும் நாடு கடத்தினால்தான் நாடு உய்யும்...
நன்றி : தமிழ் ஹிந்து

தேசிய உணர்வை அவமதிக்கும் பிரதமர்!


பாரத சமுதாயம் என்ன பாபம் செய்ததோ, அதனை வழி நடத்திச் செல்லும் பொறுப்பு மன் மோகன் சிங் என்னும் அந்நியரின் கைப்பாவையிடம் சிக்கிக் கொண்டுள்ளது.
இந்த அந்நியருக்கு பாரதத்தின் நலன் மீது ஆத்மார்த்தமாக எவ்வித ஈடுபாடும் இருப்பது சாத்தியமில்லை. பாரதத்தின் நிலப்பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டாலும், கை மாறிப் போனாலும், பாரதத்தின் மீது பகைமை பாராட்டும் நாடுகள் பல மாறு வேடங்களில் உள்ளே புகுந்து பொருளாதாரச் சீர்குலைவையும், உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் விளைவிக்கும் நாச வேலைகளையும் செய்தாலும் அதுபற்றிச் சிறிதளவும் கவலைப்படாமல் அகப்பட்டவரை சுருட்டுவதிலேயே குறியாக இருக்கும் அந்நிய சக்திக்குத் துணை போகிறோமே என்கிற உறுத்தல்கூட இல்லாமல் காலந் தள்ளிக்கொண்டிருக்கும் ஒருவரின் கையில் இன்று நாட்டின் நிர்வாகம் மாட்டிக்கொண்டுள்ளது.
மிகச் சிறந்த பொருளாதார நிபுணர் என்று அறியப்பட்ட மன்மோகன் சிங்கின் நிர்வாகத்தில்தான் என்றுமே காணாத வகையில் இன்று மிகப் பெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு பாரதம் ஆளாகியிருக்கிறது. நேர்மையான வழியில் பொருளீட்டும் எவராலும், அவர்களின் வருமானம் பல்லாயிரங்களாகவே இருந்தாலுங் கூட விலைவாசிக்கு ஈடு கொடுக்க இயலவில்லை. இந்நிலையில் சாமானிய மக்களின் நிலைமை எம்மாத்திரம்? தெருவில் இறங்கிப் பிச்சை எடுக்கத் தொடங்காத குறைதான்!
ஊழல் செய்து லஞ்சம் வாங்கிப் பழகியவர்களைத் தவிர வேறு எவராலும் இன்று நிம்மதியாக வாழ முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.
நிர்வாகத் திறனோ, அமைச்சரவை சகாக்கள் மீதான ஆளுமையோ, சுய மரியாதையோ, நாட்டு நடப்பு பற்றிய கவலையோ சிறிதும் இல்லாத, மிகவும் நம்பகமான பினாமியாகத் தனக்கு ஒருவர் வேண்டும் என்று சோனியா காந்தி தேடியதில் அகப்பட்டவர்தான் மன்மோகன் சிங் என்பது இப்போது புரிகிறது. இதன் விளைவாக நாடு அனுபவிக்கப் போகும் பேராபத்தை நினைத்தால்தான் அச்சமாக இருக்கிறது.
மன்மோகன் சிங் எது குறித்தும் கவலைப்படாமல் பினாமிப் பிரதமராக இருப்பதிலேயே சுகம் கண்டு வருகிறார் என்று மட்டுமே எண்ணிக்கொண்டிருந்த நமக்கு அது போதாது என்று மிகப் பெரிய அதிர்ச்சியையும் கொடுத்துவிட்டார், மன்மோகன் சிங். முன்பின் யோசியாமல், என்ன பேசுகிறோம் என்கிற பிரக்ஞையுமின்றி தேசிய உணர்வையே அவமதிக்கத் தொடங்கியிருக்கிறார், அவர்.
bjp-ekta-yatra-posterகஷ்யப முனிவர் பெயரால் அமைந்த காஷ்மீர பூமி ஹிந்துஸ்தானத்தின் பிரிக்க முடியாததோர் அங்கம் என்பதை நினைவூட்டி, தேசிய உணர்வை நாடெங்கிலும் புதிய எழுச்சியுடன் தோற்றுவிக்க வேண்டியே பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி கிழக்கே சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த மேற்கு வங்கத்திலிருந்து புறப்பட்டு தேசத்தின் குறுக்காக எட்டு மாநிலங்களைக் கடந்து குடியரசு தினத்தன்று மேற்கே காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரில் நமது மூவண்ண தேசியக் கொடியை ஏற்றிவைக்கும் செயல் திட்டத்தை மேற்கொள்ள நேர்ந்தது.
காஷ்மீரம் ஹிந்துஸ்தானத்தின் அங்கம்; அதனுள் பிரவேசிப்பது ஒவ்வொரு ஹிந்துஸ்தானப் பிரஜையின் உரிமை என்பதை நிலைநாட்டுவதற்கென்றே புறப்பட்டுச் சென்று, தடையை மீறிச் சிறையில் அடைபட்டு, ஷேக் அப்துல்லாவின் வஞ்சகச் சதியால் சிறையிலேயே உயிரிழந்த தியாக சீலர் சியாமா பிரசாத்தின் மகத்தான தேசப் பற்றுக்கு அஞ்சலி செலுத்துவது போலவும் மேற்கொள்ளப்பட்ட பாரதிய ஜனதா இளைஞர் அணியின் திட்டத்தை அரசியல் காரணங்களுக்கான நடவடிக்கை என்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் என்றும் கொச்சைப் படுத்தியிருக்கிறார், மன்மோகன்.
bjp-anurag_thakur_shahnawaz_hussainகுடியரசு தினத்தனறு பாரத தேசத்தின் ஒரு பகுதியில் தேசியக் கொடியை ஏற்றுவது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல் என்று நாட்டின் பிரதமரே விமர்சிப்பாரேயானால் அது பிரிவினைச் சக்திகளுக்குக் கொண்டாட்டமாகி விடாதா? சிறு குழந்தைக்குக்கூட எளிதில் புரியக் கூடிய இந்த உண்மை மன்மோகனுக்குத் தெரியாமலா போகும்? தெரிந்தே அவர் செய்த இந்த விமர்சனம் தேசிய உணர்வையே அவமதிக்கும் செயல் அல்லவா? அதிலும் குடியரசு தின சந்தர்ப்பத்தில் தேசிய உணர்வை ஊட்ட வேண்டிய பிரதமர் பதவியில் இருக்கும் நபர் இப்படிப் பேசலாமா? இந்த அவலத்தை எங்கே சொல்லி ஆற்றிக்கொள்வது?
குடியரசு தினத்தன்று பிரிவினைச் சக்திகளின் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தேசியக் கொடியேற்றி தேசிய உணர்வைத் தூண்டும் பாரதிய ஜனதா இளைஞர்களின் கடமையுணர்வைப் பாராட்ட மனமில்லாவிடினும் அதற்கு அரசியல் நோக்கமா கற்பிப்பது? உமக்குத்தான் அதற்குத் துணிவு இல்லை, கொடியேற்றத் தடை விதிக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசை கண்டிக்கவும் திராணியில்லை, தடையை மீறி தேசியக் கொடியேற்றச் செல்லும் தேச பக்தர்களை அவமதிக்காமலாவது இருக்க வேண்டாமா நாட்டின் பிரதமர்? இதிலுமா அரசியல் பண்ணுவது?
இன்று மன்மோகன் பொறுப்பில், சோனியா காங்கிரஸ் தலைமையில் குப்பை கொட்டும் கூட்டணி ஆட்சியில் நடைபெறும் அலங்கோலங்கள் ஆயிரமாயிரம் இருக்க, அரசியல் பண்ணுவதற்கு பா.ஜ.க.வுக்கு விஷயத்துக்கா பஞ்சம்? போயும் போயும் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியேற்றும் தேசியக் கடமையை வைத்தா அது அரசியல் பண்ணும்?
ஒரு தேசியத் திருநாளன்று தேசியக் கொடியை தேசத்தின் ஒரு பகுதியில் ஏற்றுவது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல் என்றும் பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு பேசுவது வெட்கங்கெட்ட பேச்சு என்பது மட்டுமல்ல, தேசிய உணர்வுக்கே அவம்ரியாதை என்கிற பிரக்ஞை கூட இல்லாத ஒருவரை இன்னும் எத்தனை காலத்திற்கு பிரதம மந்திரியாக இந்த நாடு சகித்துக்கொண்டிருக்கப் போகிறது?
தேசப் பற்றும் பொறுப்புணர்வும் மிக்க மக்கள்தான் இதற்கு விடை கூற வேண்டும்.
நன்றி:தமிழ் ஹிந்து

19 ஜனவரி 2011

லஷ்கர்-ஏ-தொய்பாவும் காங்கிரசின் குள்ளநரித்தனமும்

சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரும், அடுத்த பிரதமர் பதவிக்கு போட்டியிடுபவரக கருதப்படும் திருவாளர் ராகுல் காந்தி போபாலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தடை செய்யப்பட்ட அமைப்பான சிமியும் ஒன்று என திருவாய் மலர்ந்தார். அதே போல் 2009ம் ஆண்டு ஜீலை மாதம் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோத்தி ரோமருக்கு பிரதமர் மன்மோகன் சிங் அளித்த விருந்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி லஷ்கர்-இ-தொய்பாவினால் இந்தியாவிற்கு ஏற்படக்கூடிய ஆபத்தை விட ஹிந்துத்துவாவை வலியுறுத்தும் மதவாத சங்கப்பரிவார அமைப்புகளாலதான் மிகப் பெரிய ஆபத்து என அவரிடம் கூறியதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தகவலை வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி தனது முதல் எதிரியாக கருதுவது ஆர்.எஸ்எஸ். அமைப்பை என்பது வெட்ட வெளிச்சமாகும். திருவாளர் ராகுல் காந்திக்கு இந்த நாட்டின் வரலாறும் தெரியவில்லை, ஹிந்துத்வா என்றால் என்ன என்பதும் தெரியவில்லை. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் பூர்வீகம் என்ன என்பது முழுவதும் தெரிந்தால் ராகுல் காந்தியின் சின்னப் பிள்ளைத்தனமும், காங்கிரஸ் கட்சியின் குள்ளநரித் தனமும் தெளிவாக தெரியும். ஆகவே லஷ்கர்-இ-தொய்பாவின் உண்மை நிலையை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
20081128 INDIA Lashkarஇன்று நாடு முழுவதும் நடக்கும் தீவிரவாத தாக்குதலுக்கு காரணகர்த்தாவாக குற்றம் சுமத்தப்படும் மிக முக்கியமான தீவிரவாத இயக்கம் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யால் உருவாக்கப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா. இந்த புதிய அமைப்பு 2000க்கு பின் தான் வெளி உலகிற்கு தெரிய வந்தது. 20.3.2000ல் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இந்தியாவிற்கு வருகை தந்த போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள சிட்டிசிங்புரா எனும் பகுதியில் விடியற் காலை பொழுதில் இந்திய ராணுவ உடையனிந்த பலர் கையில் துப்பாகியுடன் 15நிமிட இடைவெளியில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டார்கள். நடந்த இந்த சம்பவத்திற்கு பல்வேறு இயக்கங்களை சம்பந்தப்படுத்தி பொய்யான செய்திகளை பரப்பினார்கள். இந்தியாவிற்கு வருகை புரிந்த அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இந்த படுகொலைக்குக் காரணம் இந்து மத வெறியர்கள், இதில் எனக்கு எவ்வித சந்தேகமேயில்லை என அறிவித்தார். மனித உரிமை காவலர்களாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளுபவர்கள் கூட காவல் துறைக்கு எதிராக ஆர்பாட்டங்கள் ஊர்வலங்களை நடத்தி சீக்கியர்களை சீவித்தள்ளும் இந்து வெறியர்கள் ஒழிக என கோஷமிட்டார்கள்.
2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் சுகைல் மல்லிக் என்பவனை கைது செய்யும் வரை இந்து மத வெறியர்கள் தான் இந்த கொலையை செய்தார்கள் என திட்டமிட்ட ரீதியில் காங்கிரஸ் கட்சியும், இந்து விரோதிகளும் முழு பிரச்சாரம் மற்றும் ஆர்பாட்டங்களை நடத்தினார்கள். ஆகவே லஷ்கர்-இ-தொய்பாவின் அறிமுகமே பல சிறார்களை கொன்று குவித்த பின்தான் வெளி உலகிற்கு தெரியவந்தது. இம்மாதிரியான கொலை வெறி தாக்குதல்களை இந்து அமைப்புகள் எப்போதாவது செய்திருப்பார்களா என்பதை திருவாளர் ராகுல் காந்தி நினைத்துப் பார்க்க வேண்டும்.கைது செய்யப்பட்ட சுகைல் மாலிக்கை, நியூ யார்கள் டைம்ஸ் நிருபர் ஒருவர் அவனை சிறையில் சந்தித்து, சிட்டிசிங்புரா சம்பவத்திற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என கேட்டதற்கு சிட்டிசிங்புரா சம்பவத்தை நடத்தியது லஷ்கர்-இ-தொய்பா என பெருமிதத்துடன் கூறினான். பாகிஸ்தான் பகுதியில் பயிற்சி பெற்று 200 டாலர் நோட்டுகளைத் திணித்து போய்வா என என்னை அனுப்பிய அமைப்பும் லஷ்கர்-இ-தொய்பா என்றான். அங்கே அவனுக்கு போதித்த பாடம் “இந்தியா நம்முடைய எதிரி நாடு. இந்தியர்கள் நம் எதிரிகள். ஆகவே அவர்களை அழித்துக் கொண்டிருக்கிறோம். இந்தியர்களை கொல்லாவிட்டால் அவர்கள் நமது முஸ்லீம் இனத்தையே வேரோடு அழித்துவிடுவார்கள்”
இத்தகைய போதனை ஏற்றி பயங்கரவாத காரியங்களை செய்ய அனுப்பிய இயக்கம் லஷ்கர்-இ-தொய்பா என்பதை தெரிவித்த பின்தான் பாரத தேசத்தில் நாசகார செயல்கள் நடத்துவதற்கு பாகிஸ்தானால் உருவாக்கப்பட்ட இயக்கம் லஷ்கர் இ தொய்பா என்பது வெளி உலகிற்கு தெரிய வந்தது.
பாகிஸ்தானில் உள்ள பல்வேறு மத அடிப்படைவாத அமைப்புகளுள் ஒன்று மர்கஸ் உத்தாவா வால் இர்ஷாத் (Markaz-ud-Dawa-wal-Irshad) எனும் அமைப்பு. இந்த அமைப்பு பாகிஸ்தானில் மதப்பள்ளிக்கூடங்கள் நடத்துவது, மறைவாகத் தீவிரவாதத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பது, போராட்ட ஆர்வமுள்ள இளைஞர்களைத் திரட்டி அவர்களுக்கு ஆப்கானிஸ்தானில் பயிற்சி அளிப்பது போன்ற காரியங்களை மட்டுமே செய்து கொண்டிருந்ததது. இந்த அமைப்பின் தலைவர் அபீப் முகம்மது சயீத் எனும் பேராசிரியர் இந்த அமைப்பிலிருந்து ஒரு ராணுவப் பிரிவை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டார். இதற்காக சிலருக்கு பஷ்டுனிஸ்தான் என்கிற குனார் எனும் பிராந்தியத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டது ஆப்கான்- சோவியத் யுத்த காலத்திலும், அமெரிக்க- ஆப்கன் யுத்த காலத்திலும் ஆப்கானின் போராளிகளின் விலாசம் பஷ்டுனிஸ்தானாக தான் இருக்கும்.
lashkar-e-taiba-photo-bbc-newsமார்கஸ் உத் தாவா வால் இர்ஷத் என்கிற அமைப்பு தங்களுக்கென்று ஒரு ராணுவ பிரிவை ஏற்படுத்திக் கொள்ள அதிகம் ஆர்வம் கொண்டிருந்தது. இதற்காக அபீப் முகம்மது சயீது என்பவர் பல தடைவ ஆப்கானிஸ்தானுக்கு சென்று வந்தார் என்பது மட்டுமில்லாமல், அங்குள்ள போராளி இயக்கங்களின் தலைவர்களை சந்தித்து தனது திட்டங்களைப் பற்றி விரிவாக விவாதித்தார். இதன் காரணமாக பாகிஸ்தானிலிருந்து பன்னிரண்டு இளைஞர்கள் பயிற்சிக்காக ஆப்கானுக்கு அனுப்பி வைக்கப்ட்டார்கள். ஆப்கானில் அல்காயிதாவும் மற்றும் ஆப்கன் முஜாகிதீன்களும் அவர்களுக்கு பயங்கரவாத தாக்குதல் பயிற்சி அளித்தார்கள். அப்படி பயிற்சி பெற்றவர்கள்தான் 1993ம் ஆண்டு முதன் முதலில் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய 12 பேர்கள் தங்களை லஷ்கர்-இ-தொய்பா என்கிற அமைப்பைச் சார்ந்தவர்கள் என அறிவித்துக் கொண்டார்கள். இந்திய சுதந்திரம் அடைந்து பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்ட போது பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்த காஷ்மீர் குடும்பத்தை சார்ந்த மௌலானா அப்துல் வாகித் என்ற காஷ்மீரிடம் லஷ்கர்-இ-தொய்பாவை தாரை வார்த்து கொடுத்தார் மார்க்ஸ் உத் தாவா வால் இர்ஷாத் அமைப்பின் தலைவர் .
1947லிருந்து இன்று வரை பாகிஸ்தானிலிருந்து பாரத தேசத்தில் தீவிரவாதம் வளர்க்க விரும்பும் அனைத்து பயங்கரவாத இயக்கங்களுக்கும் அடைக்கலம் கொடுப்பது மட்டுமில்லாமல், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் பகுதியாக பாகிஸ்தான் வசம் இருக்கும் காஷ்மீரில் உள்ள சில பகுதிகள்.; 1948ல் நடந்த யுத்தத்தில் காஷ்மீரின் வட மேற்குப் பகுதிகளாக இருந்த கொட்லி எனும் பகுதி சுபைதா எனும் மற்றொரு பகுதி , டர்க்குடி முஸப்பராபாத், கில்கிட் எனும் பகுதிகளும் பாகிஸ்தான் வசம் சென்று இன்று பாரத தேசத்தின் தீவிரவாத பயிற்சி கேந்திரங்களாக மாறியுள்ளன. லஷ்கர்-இ-தொய்பாவின் முதன்மையான நோக்கம் இந்தியாவின் பிடியிலிருந்து காஷ்மீரை மீட்க வேண்டும் , பிறகு அதை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் எனும் கொள்கையை அடிப்படையாக கொண்டு துவக்கப்பட்டது. இஸ்லாத்தின் செல்வாக்கை அதிகப்படுத்த ரஷ்யா சீனா உட்பட சில கம்யூனிச நாடுகளையும் இணைக்க வேண்டும் என்பதும் இவர்களின் மற்ற குறிக்கோள். உலகை ஆளும் தகுதி இஸ்லாத்திற்கு மட்டுமே உள்ளது, இஸ்லாத்திற்கும் முஸ்லீம்களுக்கும் எதிரான அடக்குமுறை எங்கெல்லாம் தலையெடுக்கிறதோ அங்கெல்லாம் லஷ்கர் இயக்கம் ஆயுதத்துடன் பயங்கரவாத தாக்குதல்களை தொடுக்கும் என கூறுகின்றனர்.
Lashkar Poster Against India
Lashkar Poster Against India
2002ம் ஆண்டு மத்தியில் லஷ்கர்-இ-தொய்பாவைசை சேர்ந்த பெரும்பாலான தீவிரவாதிகள் ஆப்கனிஸ்தானுக்கு பயிற்சிக்காக அனுப்பட்டார்கள். அவர்களில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து தோராபோரா மலைப்பகுதியில் வசித்து வந்த ஒசாமா பின்லேடனுடன் தொடர்பு ஏற்படுத்தி அவர் மூலமாக பயிற்சி பெற்று திரும்பியவர்கள். எந்த ஒரு தீவிரவாத அமைப்பிற்கும் ஆப்கனிஸ்தானின் தொடர்பில்லாமல் செயல்பட முடியாது என்பது உலகறிந்த உண்மையாகும். லஷ்கர்-இ-தொய்பாவின் தொடக்க கால உறுப்பினரும் லஷ்கரின் கமாண்டர் இன் சீப்பான ஜகி உல் ரகுமானிடம் லஷ்கரின் உறுப்பினர்களை தீவிர போராளிகளாக உருவாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. காஷ்மீரின் எல்லையில் வைத்தே அவர்களுக்கு தினசரி பயிற்சி கொடுக்கப்பட்டது. ஜகியை தவிர இஸ்லாமாபாத்தைச் சோந்த அப்துல்லா , பூஞ்ச் பகுதியைச் சேர்ந்த காஜி முகம்மது அசம், தோடா பகுதியைச் சார்ந்த முஸம்மில் பட், பாரமுல்லாவைச் சேர்ந்த முகம்மது உமர், பாக்கிஸ்தான் பகுதியிலிருந்து சவுத்திரி அப்துல்லா, காலீத், இவர்களைப் போல் இன்னும் பலரும் லஷ்கர் போராளிகளுக்கு போர்பயிற்சி அளித்தவர்கள்.
ஒரு மாநில அரசு தனது மாவட்டங்களில் அரசின் திட்டங்களை சரியாக நடைபெற மாவட்ட ஆட்சியாளர்களை நியமிப்பதும் , அவர்களின் கீழ் பல அதிகாரிகளை அமர்த்துவதும் எப்படியோ, அதே போல் லஷ்கர்-இ-தொய்பாவும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும், ஒவ்வொரு பிரதிநிதியை நியமித்து, அவர்கள் மூலமாக அந்த மாவட்டத்தில் நடக்கும் நடப்புகளை, தினசரி மேலிடத்துக் தெரிவிக்க வேண்டும் என பணித்தார்கள். இந்த காரியங்களை செய்வதற்கு இரண்டு தரப்பினர் லஷ்கர் அமைப்பிற்கு உதவி செய்தார்கள். ஒன்று காஷ்மீரத்து முஸ்லீம்கள் இரண்டாவது லஷ்கர் ஆதரவாளர்கள் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் இவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.யின் காஷ்மீர் பிரிவு அதிகாரிகள் உறுதுணையாக இருந்தார்கள்.. இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் காஷ்மீர் அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்கம் என்ன செய்கிறது என்பதில் தொடங்கி ஏனைய காஷ்மீர் தீவிரவாத இயக்கங்களின் செயல்பாடுகள் வரை தங்களுக்கு கிடைக்கின்ற தகவல்களை சேகரித்து அவைகளை லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகத்திற்கு அனுப்பி வைப்பது முக்கிய பணியாகும்.
ஆகவே இந்த பணிகளை செய்யும் லஷ்கர் அனுதாபிகளிடம் லஷ்கர் இ தொய்பாவினர் மிகத் தொளிவாக அறிவித்தார்கள் அதாவது இந்துக்களும் யூதர்களும் இஸ்லாத்தின் எதிரிகள் இந்தியாவும் இஸ்ரேலும் பாகிஸ்தானின் எதிரிகள் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அடிக்கடி அவர்களுக்கு நினைவுபடுத்தினார்கள். லஷ்கர் அமைபில் உள்ளவர்களின் குடும்பத்திற்கு பணம் அனுப்பும் பணியையும் இந்த அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டது. ஆகவே அமைப்பிற்கு பணம் பெறுவதற்கும் இவர்களுக்கு பாகிஸ்தான் மட்டுமே துவக்க காலத்தில் எல்லா வழிகளிலும் உதவினார்கள். பின்னால் லஷ்கர் அமைப்பினரால் பாகிஸ்தானில் உள்ள அனைத்து மசூதிகளிலும் பூட்டு போட்ட சிறிய, பெரிய பெட்டிகள் வாசலில் வைக்கப்பட்டன. தொழுகை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது வெளியில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பணத்தை போடுவார்கள். எதற்காக இந்த பெட்டி வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரியாதவர்களுக்கு லஷ்கர் ஆட்கள் ரகசியமாக அவர்களுக்கு தெரியப்படுத்தி அடுத்த முறை மசூதிக்கு வரும் போது தங்களது கடமையை செய்யும்படி நினைவுப்படுத்துவர்கள்.  தங்களது பயங்கரவாத பணிகளுக்கு பணம் திரட்டும் வழி முறைகளில் இதுவும் ஒன்றாகும்.
lashkar_terroristsஅடுத்தது எல்லாவிதமான பொருள்கள் விற்கும் அங்காடியில் இதே போல் பெட்டி வைத்திருப்பார்கள் , அந்த அங்காடியின் அளவு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி அல்லது மிகச் சிறிய அளவு அங்காடியாக இருந்தாலும் அந்த அங்காடியின் முன் பெட்டி வைத்திருப்பார்கள். வுhரத்திற்கு ஒரு நாள் அல்லது வாரத்திற்கு மூன்று நாள் தொடர்ந்து அந்த பெட்டியில் உள்ள பணத்தை எடுத்து செல்வார்கள். இம்மாதிரியான செயல்பாடுகள் பாகிஸ்தானில் வெளிப்படையாக நடக்கும். ஆனால் காஷ்மீர் போன்ற பகுதிகளில் மறைமுகமாக இந்த செயல்கள் நடைபெறும். இதுபோன்ற வழிகளில் லஷ்கர் பயங்கரவாதிகளுக்கு பணம் கிடைக்கிறது.  பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் உள்ள இஸ்லாமியத் தொழில் அதிபர்களிடமும் துபாய் சவுதி அரோபிய மற்றும் அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் மத்திய கிழக்கு தேசங்களிலும் உள்ள இஸ்லாமிய பெரும் பணக்காரர்களிடம் பெரும் தொகை பெற்று வந்தார்கள். பெரும் நன்கொடை பெறுவதற்காக பாரத தேசத்தில் நடந்த வகுப்பு கலவர சம்பவங்களை வீடியோவாக எடுத்து அதன் மூலமும் நிதி வசூலித்தார்கள்.
Delhi Bomb Blast, Sep 2008
Delhi Bomb Blast, Sep 2008
லஷ்கர்-இ-தொய்பா தனது முதல் பயங்கரவாத செயல்களை செய்ய தேர்ந்தெடுத்த பகுதியில் மட்டுமே தாக்குதல் நடத்த திட்டமிட்டார்கள்.; 1996ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ந் தேதி காஷ்மீர் மாநிலத்தில் உள்ள தோடா மாவட்டத்தில் பர்ஷல்லா என்கிற கிராமத்தில் பதினாறு இந்துக்களை கொன்று தங்களது முதல் தாக்குதல்களை துவக்கினார்கள். 1999ம் ஆண்டு நடந்த கார்கில் யுத்தம் நடக்கும் சமயம் மே மாதம் 18ந் தேதி லஷ்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிரடி படைப் பிரிவை சார்ந்த பலர் இந்திய எல்லைக்குள் ஊடுருவினார்கள். இவ்வாறு ஊடுருவியவர்கள் தோடா மாவட்டத்தி;ல் உள்ள லயாட்டாவுக்குள் விடியற் காலைப் பொழுதில் இருபது நிமிடங்களில் தங்களது பயங்கரவாத செயல்களால் பதினைந்து பேர்களை சுட்டுத் தள்ளினார்கள். இந்த சம்பவத்திற்கு பிறகு பதாமிபாக என்கிற இடத்தில் அமைந்த இராணுவத் தலைமையகத்தை தாக்கியது. 22.12.2000ந் தேதி டெல்லி செங்கோட்டையில் உள்ளே பணிபுரிகின்ற இராணுவ பயிற்சி முகாமை இரவில் தாக்கியது. இது போல் பல சம்பவங்களை நடத்திக் காட்டியது லஷ்கர் அமைப்பாகும். 19.11.2000ந் தேதி பாராமுல்லாவில் மூன்று தீவிரவாதிகளை கைது செய்த போது அவர்களின் வாக்குமூலத்தின் படி லஷ்கர்-இ-தொய்பா தனது பெயரை ஜமாத் உத் தாவா என பெயர் மாற்றம் செய்தது தெரிந்தது. தொடாந்து வாரம் இரண்டு முறையாவது காஷ்மீரின் எல்லைப் பகுதியில் லஷ்கர் பயங்கரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் துப்பாகி சண்டை நடைபெறும்.
லஷ்கர்-இ-தொய்பாவினர் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு அனைத்துவிதமான உதவிகளை செய்தவர்கள் சிமி இயக்கத்தினர். பயங்கரவாத இயக்கமான சிமியும், லஷ்கர்-இ-தொய்பாவும் இணைந்து பாரத திரு நாட்டில் நடத்திய கொடூரமான தாக்குதல் சம்பவங்கள் ஏராளம்.
  • 1996ம் ஆண்டிலிருந்தே லஷ்கர்-இ-தொய்பாவினர் காஷ்மீர் மாநிலத்தில் தங்களது தாக்குதல்களை தொடந்திருந்தார்கள்.
  • 22.12.2000 டெல்லி செங்கோட்டையில் நடத்திய தாக்குதலில் 10க்கு மேற்பட்டவர்கள் பலியானார்கள் இந்த தாக்குதல் சம்பவத்தின் மூலம் லஷ்கர்-இ-தொய்பாவின் முதன் முதலில் காஷ்மீர் மாநிலத்திற்கு வெளியே தங்களது தாக்குதல் சம்பவத்தை நடத்தினார்கள்.
  • இந்த சம்பவத்தை தொடர்ந்து 13.12.2001ந் தேதி பாராளுமன்ற கட்டிடத்தை தாக்குதல் நடத்தி பாதுகாப்பு படையினர் 13 பேர்கள் கொல்;லப்பட்டார்கள்.
  • 28.12.2005ந் தேதி பெங்களுரில் உள்ள இந்திய விஞ்ஞான பயிற்சி மையத்தில் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டார்கள்.
  • 29.10.2005ந் தேதி புது டெல்லியில் தொடர் குண்டு வெடிப்பில் 62 பேர்கள் கொல்லப்பட்ட சம்பவம்
  • 7.3.2006ந் தேதி வாரணாசியில் நடந்த குண்டு வெடிப்பில் 21 பேர்கள் கொல்லப்பட்டது, 60க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த சம்பவம்
  • தொடாந்து 11.7.2006ந் தேதி மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 200க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் ஏராளமானோர் படு காயமடைந்தார்கள்.
  • 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ந் தேதி அதே மும்பையில் பல இடங்களில நடத்திய தாக்குதல்களில் 175க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தார்கள்.
இப்படிப் பட்ட இயக்கங்களை  ஆர்.எஸ்.எஸ்.  போன்ற  தன்னார்வ, சேவை அமைப்புடன் ஒப்பிடுவது என்பதே  நினைத்துப் பார்க்க முடியாது. அப்படியிருக்கும்போது ஆர்.எஸ்.எஸ். இவற்றைவிட  ஆபத்தானது என கூறுவது காங்கிரஸ் கட்சியின் குள்ளநரித் தனம் என்பதை விட வேறு வார்த்தைகள் கிடையாது.