Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

22 செப்டம்பர் 2012

அதிவீரராமபட்டினத்தில் சிறப்பு மிக்க 23-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி தேசிய திருவிழா ஹிந்து எழுச்சி ஊர்வலம்..


ஐய்யப்பன்.க

அதிவீரராமபட்டினம்: தமிழகத்தில் திண்டுக்கள், கோவை, முத்துப்பேட்டை ஆகிய சிறப்பு வாய்ந்த ஊர்களின் பட்டியலில் இவ்வாண்டு அதிவீரராமபட்டினம் முதலாவதாக இடம்பெற காரணமாக அமைந்தது 23-வது ஆண்டாக நடத்தப்பட்ட விஸ்வரூப விநாயகர் ஊர்வலம். அது யாதெனில்.... ஒவ்வொரு ஆண்டும் ஹிந்து முன்னணியினரால் மாநிலம் முழுவதிலும் வெகு விமரிசையாக நடத்தப்படும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் மேற்கண்ட இடங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். இவ்வாண்டு இந்த பட்டியளில் நமதூர் அதிவீரராமபட்டினம் முதலிடத்தை பெற்றுள்ளது. காரணம் ஒன்றுபட்ட ஹிந்து சக்தியின் வெளிப்பாடாக இவ்வாண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் 3500க்கும் அதிகமான ஹிந்து இளைஞர்கள் பங்கேற்று சிறப்பித்ததேயாகும். 

அதிவீரராமபட்டினம் ஹிந்து முன்னணி  நடத்திய 23-ம் ஆண்டு விஸ்வரூப விநாயகர் ஊர்வலம் ஸ்ரீ நந்தன ஆண்டு புரட்டாசி திங்கள் 06-ம் நாள் (22/09/2012) சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இதற்க்காக விநாயகர் 9-அடி,8-அடி,5-அடி உயரங்களில் ஐந்து விநாயகர் சிலைகள் திருச்சி ஹிந்து முன்னணி காரியாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்டு 18/09/2012 அன்று காலை 6.15 மணியளவில் அருள்மிகு ஸ்ரீ துர்க்கா செல்லியம்மன் ஆலையத்தில்  கணபதி ஹோமம் முடிந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

அங்கிருந்து சேதுரோடு, கரையூர்தெரு(மாரியம்மன் கோயில்), பிள்ளைமார்தெரு, வெக்காளியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளுக்கு நான்கு சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நான்கு சிலைகளும் அப்பகுதி ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து சமய மக்களால் ஐந்து நாட்கள் வழிபாடுகள் செய்யப்பட்டது.


செல்லியம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விஷ்வரூப விநாயகர்

சேதுரோட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விஷ்வரூப விநாயகர் 

வெக்காளியம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விஷ்வரூப விநாயகர்

பிள்ளைமார்தெருவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விஷ்வரூப விநாயகர்

கரையூர்தெருவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விஷ்வரூப விநாயகர்

 பின்னர் 22/09/2012 அன்று மாலை 03:00 மணியளவில்  சேதுரோடு, கரையூர்தெரு(மாரியம்மன் கோயில்), பிள்ளைமார்தெரு, வெக்காளியம்மன் கோவில் தெரு  ஆகிய இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த நான்கு விஸ்வரூப விநாயகரும் அருள்மிகு ஸ்ரீ துர்க்கா செல்லியம்மன் ஆலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கிருந்து ஐந்து விஸ்வரூப விநாயகர் சிலைகளும் மாலை 04:00 மணிக்கெல்லாம் வண்டிப்பேட்டைக்கு கொண்டுசெல்லப்பட்டது. 












இவற்றுடன் பட்டுக்கோட்டை ஒன்றிய நகர ஹிந்து முன்னணியினரால் வைக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட விஸ்வரூப விநாயகர் சிலைகளும் வண்டிப்பேட்டைக்கு வந்தன. 


அங்கு நகர இந்து முன்னணி செயலாளர் V.பிரபாகரன்ஜீ வரவேற்புரையாற்றினார்,   இந்து முன்னணி நகர தலைவர் P.விஜயகுமார்ஜீ,இந்து முன்னணி நகர துணை தலைவர் V.ரமேஷ்ஜீ ஆகியோர் தலைமையில்,மாநில இந்துமுன்னணி இணைஅமைப்பாளர்  KK.பொன்னையன் ஜீ அவர்கள் சிறப்புரையற்றினார், பா.ஜ.க மாநில செயளாலர் ஸ்ரீ. கருப்பு (எ) முருகானந்தம் அவர்கள் ஹிந்து எழுச்சியுறையாற்றி ஊர்வலத்தை துவக்கிவைத்தார்.    

பின்னர் விஸ்வரூப விநாயகருக்கு கரையூர்தெரு, காந்திநகர், ஆறுமுககிட்டங்கிதெரு கிராம தலைவர் மற்றும் பஞ்சாயத்தார்களால் பட்டு சார்த்தப்பட்டு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது

அங்கிருந்து விஸ்வரூப விநாயகர் அதிவீரராமபட்டினத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஏரிப்புறக்கரை கிராமத்தை நோக்கி சென்றார்.









அங்கு  ஏரிப்புறக்கரை கிராம நிற்வாகிகள் மற்றும் இளைஞர்களால் சிலம்பாட்டத்துடன் கூடிய சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டு விஸ்வரூப விநாயகர் கங்கா சாகர் கடலிலே சங்கமமானார்


நிறைவாக  இந்து முன்னணி மாவட்ட செயளாலர் RVS.ராஜானந்தம் ஜீ நன்றியுரையாற்றினார்.       



 இந்த ஊர்வலத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக இந்து முன்னணி மாவட்ட தலைவர் A.K.பழனிவேல் ஜீ,இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் ஸ்ரீ தமிழ்மோகன் ஜீ, நகர இந்து முன்னணி சட்ட ஆலோசகர் சோலை S.பாலகிருஷ்ணன், இந்து முன்னணி ஒன்றிய பொருப்பாளர் புலவஞ்சி.C.P.போஸ் ஜீ, பா.ஜ.க மாவட்ட தலைவர் ஸ்ரீ முரளிகணெஷ் ஜீ, பா.ஜ.க மாவட்ட செயலாளர் பன்னவயல் R.இளங்கோ ஜீஇந்து முன்னணி கிளை நிர்வாகிகள். நமசு.ராஜா ஜீ, சூரை.சண்முகம் ஜீ, பார்த்திபன் ஜீ,சூரை.பாலா, செல்வா மற்றும் நகர, ஒன்றிய, கிராம, கிளை பொருப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.    

                                                                                                                            
 இந்த விழாவில் அதிவீரராமபட்டினம் ஹிந்து முன்னணியை சேர்ந்த இளைஞர்களோடு, பட்டுக்கோட்டை, பள்ளிகொண்டான்,சேண்டாக்கோட்டை, மாலியக்காடு, புதுக்கோட்டை உள்ளூர், நடுவிக்காடு, மிலாரிக்காடு, மதுக்கூர்,துவரங்குறிச்சி, மழவேனிற்காடு, பழஞ்சூர், புதுப்பட்டினம், வெலிவயல், ராஜாமடம், முத்துப்பேட்டை, தம்பிக்கோட்டை, கரிசக்காடு,மஞ்சவயள்,  கருங்குளம், வள்ளிக்கொள்ளைக்காடு, ஆகிய சுற்றுவட்ட பகுதிகளை சேர்ந்த 3500-க்கும் மேற்பட்ட ஹிந்து இளைஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.    

    காவல்துறையின் கணிவான ஒத்துலைப்பு விழா சிறக்க உதவியாக இருந்தது.   

18 செப்டம்பர் 2012

ராணுவ ரகசியங்களுடன் திருச்சியில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த ஐஎஸ்ஐ உளவாளி கைது

திருச்சி : விசாகப்பட்டின கடற்படைத் தளம், ஊட்டி ராணுவ முகாம் உள்ளிட்ட பல்வேறு இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்து வந்த ஐஎஸ்ஐ உளவாளியான அதிராம்பட்டினம் இளைஞரை க்யூ பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். அதிராம்பட்டினம் ஆசாத் நகரைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி (35). சில வருடங்களாக இலங்கைக்கு காய்கறிகளை அனுப்பி வைக்கும் தொழில் செய்து வந்தார். இதற்காக தமீம் அன்சாரி வாரத்திற்கு ஒரு முறை திருச்சி விமான நிலையம் வழியாக கொழும்பு சென்று வந்தார். காய்கறி வாங்குவதாக கூறி விசாகப்பட்டினம் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களுக்கு அவர் அடிக்கடி சென்று வந்தார்.

 சமீப காலமாக அன்சாரியிடம் அதிக அளவில் பணப் புழக்கம் ஏற்பட்டது. இது தொடர்பாக நண்பர்கள் கேட்டதற்கு காய்கறி ஏற்றுமதி தொழிலில் அதிக அளவு லாபம் கிடைப்பதாக அவர் பதிலளித்தார். இருந்தபோதிலும் அவரது நடவடிக்கை அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர்கள் க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசியமாக தகவல் தெரிவித்தனர். 

இந்த தகவலின் அடிப்படையில் கடந்த ஒரு மாத காலமாக க்யூ பிரிவு டிஎஸ்பி ராஜேந்திரன் மற்றும் போலீசார் அன்சாரியை கண்காணித்து வந்தனர். காய்கறி வாங்குவதாக கூறி அன்சாரி விசாகப்பட்டினம் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களுக்கு சென்று வந்ததும், அங்கு சில இளைஞர்களை அவர் சந்தித்தது பேசுவதும் தெரியவந்தது. 
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அதிராம்பட்டினத்தில் இருந்து ஊட்டிக்கு காரில் கிளம்பிய அன்சாரியை வழிமறித்து க்யூ பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அவரிடம் இருந்து ஏராளமான சிடிக்கள் கைப்பற்றப்பட்டன. 

அவற்றை சோதனை செய்து பார்த்த போது, அதில் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கடற்படைத் தளம் மற்றும் அமைப்பு, அங்கு நிறுத்தப்பட்டுள்ள போர் கப்பல்கள் பற்றிய விவரம், ஊட்டியில் உள்ள ராணுவ முகாமின் அமைப்பு மற்றும் அவற்றில் நடைபெறும் பணிகள் பற்றிய விவரங்கள் இருந்தன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த க்யூ பிரிவு போலீசார் அன்சாரியை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடந்த சில வருடங்களாக இலங்கையில் உள்ள ஐஎஸ்ஐ அதிகாரி ஒருவருடன் தமீம் அன்சாரி நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஐஎஸ்ஐ அதிகாரியின் உளவாளியாக அன்சாரி செயல்பட்டு வந்துள்ளார். இங்கிருந்து இந்திய ராணுவ ரகசியங்களை ஐஎஸ்ஐ அதிகாரிகளுக்கு கொடுத்து வந்துள்ளார். இதற்காக அவர் லட்சகணக்கில் பணம் பெற்று வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அன்சாரியை கைது செய்த க்யூ பிரிவு போலீசார், நேற்று மாலை திருச்சி ஜேஎம்,2 கோர்ட் மாஜிஸ்திரேட் ராஜேந்திரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஐஎஸ்ஐ உளவாளியாக கைது செய்யப்பட்டுள்ளது இதுவே முதன் முறை என போலீசார் கூறினர். கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக தமீம் அன்சாரி ஐஎஸ்ஐ உளவாளியாக செயல்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது.

திருச்சி இலக்கா?

ராணுவ தளவாட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் கண்டோன்மெண்ட் பகுதியில் ராணுவ முகாம் ஆகியவை திருச்சியில் உள்ளன. தமீம் அன்சாரியிடம் தென்னிந்தியாவின் ராணுவ ரகசியங்களை சேகரித்து கொடுக்குமாறு ஐஎஸ்ஐ  உத்தரவிட்டிருந்த நிலையில் திருச்சியைப் பற்றிய ரகசியங்களையும் தமீம் அன்சாரி சேகரித்து கொடுத்தாரா? என்பது குறித்த விசாரணையில் உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை என க்யூ பிரிவு போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

செல்போன் கண்காணிப்பு

கடந்த சில வாரங்களாக தமீம் அன்சாரியின் செல்போன் எண்ணை க்யூ பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர். அப்போதுதான் இலங்கையில் இருக்கும் ஐஎஸ்ஐ அதிகாரியுடன் அவர் அடிக்கடி பேசி வந்ததும், அவர் கேட்ட விவரங்களை சேகரித்து சிடியாக தயாரித்ததும் தெரியவந்தது. இந்த வகையில் சுமார் 13 சிடிக்களையும் க்யூ பிரிவு போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

பென்டிரைவில் ரகசியம்

கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் மாதம் ஒரு முறை தமீம் அன்சாரி இலங்கை தலைநகர் கொழும்பு சென்று வந்துள்ளார். காய்கறி வியாபாரம் என்ற போர்வையில் சென்றபோதெல்லாம் பென் டிரைவ்களாகவும், சிடிக்களாகவும் இந்தியா பற்றிய ரகசியங்களை அவர் கொழும்பு சென்று கொடுத்த திடுக்கிடும் தகவலும் க்யூ பிரிவு போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.   நன்றி: தினகரன்.

04 செப்டம்பர் 2012

சரஸ்வதி நதி நாகரீகம்


ஆங்கிலத்தில்: ராஜேஷ் சிங்
தமிழாக்கம்: லா.ரோஹிணி

சிந்து சமவெளி நாகரீகம் என்று அழைக்கப்படும் நாகரீகத்தை பேணிக்காத்ததில் “சரஸ்வதி நதி” பெரும் பங்கு ஆற்றியுள்ளது. சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று சமீபத்தில் மேற்கொண்ட “புதிய ஆய்வில்”  இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
“ஹரப்பா நாகரீகத்தின் நீர்வழி கட்டமைப்பு”, என்னும் புதிய ஆய்வு சமீபத்தில் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. சிந்து சமவெளி நாகரீகத்தை ஆறுகள்தான் காப்பாற்றி வந்தன. அந்த ஆறுகளை வளப்படுத்தி வந்த “பருவ மழைகள் “கிழக்குத் திசை” நோக்கி இடம் பெயர்ந்ததால் சிந்து சமவெளி நாகரீகம் அழிந்துவிட்டது. இதைத்தான் அந்த ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தி உள்ளன. ஆறுகள் வற்றிப்போனதால் 4000 வருடங்களுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரீகம் அழிந்து போனது. 2003 மற்றும் 2008 ஆண்டுகளுக்கு இடையே அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ருமானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். சிந்து சமவெளி நாகரீகம் அழிந்ததற்கு “விதிவசத்தால் நேர்ந்த கொடுமையான “அயல் நாட்டுப் படையெடுப்புதான்” காரணம் என்று இது வரை பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது. அதை இந்த ஆராய்ச்சி முடிவுகள் பொய் என நிரூபிக்கின்றன. ஆறுகள் தங்கள் போக்கை மாற்றிக் கொண்டதால்தான் சிந்து சமவெளி நாகரீகம் அழிந்தது என்னும் வாதத்தையும்  இந்த கண்டுபிடிப்பு பொய் ஆக்குகிறது. இப்போது சிந்து சமவெளி நாகரீகம் என்று நாம் அழைக்கும் நாகரீகம் சரஸ்வதி நதியின் கரையில் அமைந்து இருந்தது என்னும் கருத்துக்கு இந்த ஆய்வு வலு சேர்க்கிறது.
சரஸ்வதி நதி புராணத்திலும், வேதத்திலும் குறிப்பிடப்படுகிறது. சிந்து சமவெளி நாகரீகத்தின் அடையாளங்களாக இதுவரை பல தொல்பொருள் விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 70 சதவீதத்திற்கும் மேலானவை இந்த சரஸ்வதி நதிக்கரையில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்போது இந்த சரஸ்வதி நதி வறண்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 3000 அகழ்வாராய்ச்சி படிமங்களில் 2000 கும் மேற்பட்டவை சிந்துவெளி எல்லைக்கு அப்பால் இருந்துதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவைகளில் இருந்துதான் சிந்து வெளி நாகரீகம் என்ற பெயரே வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
வேறு வார்தைகளில் சொல்வது என்றால் சிந்துவெளி நாகரீகம் என்று அழைக்கப்படுவது உண்மையில் பெரும்பகுதியில் சரஸ்வதிநதி நாகரீகம்தான். இருந்தும் நமக்கு சொல்லப்பட்டது போல், இந்த நாகரீகத்தை சிந்து சமவெளி நாகரீகத்துடன் மட்டுமே சம்பந்தப்படுத்தி நாம் பேசுகிறோம். அப்படித்தானே பள்ளிக் கூடங்களிலும் சொல்லிக் கொடுக்கிறோம்? பல வருடங்களாக இடதுசாரிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ள நமது அரசாங்கம், சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே சரஸ்வதி நதி என்று ஒன்று இருந்ததைக் கூட ஒப்புக் கொள்ளவில்லை. அப்படி இருக்கும்போது உலகின் மிகப்பண்டைய நாகரீகத்தை சரஸ்வதி நதிக்கரை உருவாக்கியது என்னும் உண்மையை அவர்கள் எப்படி ஒப்புக் கொள்வார்கள்? மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் எச்சூரி சமீப வருடங்களில் இந்தியாவின் தொல்பொருள் ஆராய்ச்சித் துறை “தொலைந்து போன சரஸ்வதி நதியை” ஆராய்வதில் நேரத்தையும், பணத்தையும் வீணடித்து வருவதாக குற்றம் சாட்டி வருகின்றார்.  2006 ஆம் ஆண்டில் சீதாராம் எச்சூரி போக்குவரத்து, சுற்றுலா, கலாச்சார பாராளுமன்ற நிலைக்குழு தலைவராக இருந்தார். அப்போது அவர் பின்வருமாறு கூறி உள்ளார்.
“இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை தனக்கு இடப்பட்ட பணியில் இருந்து மாறிப்போகிறது. தொல்பொருள் விஷயமாக ‘விஞ்ஞான  பூர்வ ஆராய்சிகளை மேலேடுத்து செல்வதில் அது தவறி விட்டது. விஞ்ஞான பூர்வ இலாகாவான தொல்பொருள் ஆராய்ச்சி துறை இந்த விஷயத்தில் சரியாக செல்லவில்லை”.
இப்படி திரிக்கப்பட்டாலும் கூட, விஞ்ஞான பூர்வ ஆராய்சிகள் “சரஸ்வதி” ஒரு மாபெரும் நதியாக இருந்ததை சந்தர்பங்கள் நிரூபித்துள்ளன. நிலத்துக்கு அடியில் ஓடிக்கொண்டு இருந்த நீர்வழிகளைக் குறித்து “பல வரைபடங்கள்” இன்றும் காணக் கிடைக்கின்றன. அவைகளை எல்லாம் நன்கு ஆராய்ந்துள்ள நிபுணர்கள் சரஸ்வதி நதி 1500 கிலோமீட்டர் நீளமும், 3 இல் இருந்து 15 கிலோமீட்டர் வரை அகலமும் கொண்டு இருந்தது என்று கண்டு பிடித்துள்ளனர்.
நேஷனல் அகடமி ஆப் சயின்ஸ் நிகழ்வுகள் என்பதில் சரஸ்வதி நதி குறித்த மிக சமீபத்திய கண்டு பிடிப்புகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. சரஸ்வதி நதி இருந்தது, இந்த பண்டைய நாகரீகம் செழிக்க சரஸ்வதி நதி காரணமாக இருந்தது என்பது அந்த கண்டு பிடிப்புகளில் விளக்கப்பட்டுள்ளது. சரஸ்வதி நதி இமயமலையில் இருந்து பருவமழை காரணமாக எப்போதும் பெருக்கடுத்து வரும் தண்ணீரை சார்ந்து இருக்கவில்லை என்று அந்த கண்டுபிடுப்புப் பிரசுரம் கூறுகிறது. சரஸ்வதி நதி உள்பட அந்த நாகரீகப் பிரதேசத்தில் இருந்த நதிகள் அனைத்தும் மிகப் பெரியதாக, மிகவும் ஜீவ நதிகளாகவும்  இருந்தன என்றும் அந்த ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
இந்த புது கண்டு பிடிப்பால் அரசாங்கத்திற்கு “புதிய சிந்தனை உருவாகுமா”? சிந்து சமவெளி நாகரீகம் என்று இப்போது அழைக்கப்படும் நாகரீகத்தை சரஸ்வதி – சிந்து – நாகரீகம் என்று அதிகாரபூர்வமாக “புதுப் பெயரிட்டு அழைக்கும் வேளை வந்து விட்டதை அரசு ஒப்புக் கொள்ளுமா? ஆனால் இடதுசாரிகள் காலம் காலமாக இதை மறுத்து வந்துள்ளது போல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் இந்த உண்மையை பல வருடங்களாக எற்றுக் கொள்ளமல்தான் இருந்து வருகிறது.  அப்போது மத்திய அமைச்சரவையில் கலாச்சார துறை மந்திரியாக் இருந்த ஜெயபால் ரெட்டி, “இதுவரை தோண்டி எடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், மண்மூடிப்போன எந்த நதி பற்றியும் கண்டு பிடிக்கவில்லை என்று பாராளுமன்றத்தில் சொன்னார். அவருக்கும், அவரது அரசுக்கும், சரஸ்வதி நதி என்பது கற்பனை மனங்களில் உருவானது; அந்த நதி பற்றி புராணங்கள்தான் இன்னும் அதிக கற்பனையோடு பேசுகின்றன என்ற எண்ணம் உள்ளதை ஜெயபால் ரெட்டியின் பேச்சு எடுத்துக் காட்டுகிறது. சரஸ்வதி நதி பாரம்பரிய திட்டம் என்னும் திட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உருவாக்கி இருந்தது. அதை ஐக்கிய முற்போக்குக்  கூட்டணி அரசு கலைத்துவிட்டது. செப்டம்பர் 2003 இல் இந்த திட்டத்திற்கு 32 கோடிகள் செலவாகும் என்று தோரயமாக கணக்கிடப்பட்டு இருந்தது. அதை காங்கிரஸ் கூட்டணி அரசு எவ்வித இரக்கமும் காட்டாமல் கைவிட்டது. இன்று 5 கோடிகளாக குறைத்து. அதாவது சரஸ்வதி நதி பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு தொடரவிடாமல் காங்கிரஸ் கூட்டணி அரசு செய்து அந்த திட்டத்தையே குழி தோண்டிப் விட்டது புதைத்து.
சரஸ்வதி நதி என்பதே இல்லை என்று கூறிட காங்கிரஸ் கூட்டணி அரசு முழு முயற்சி செய்தாலும், உண்மைகள் அவ்வப்போது வெளிவந்துகொண்டுதான் உள்ளன. சரஸ்வதி நதி இருந்தது என்பதற்கும்,  சிந்து சமவெளி நாகரீகம் என்று அழைக்கப்படும் நாகரீகம் தழைக்க சரஸ்வதி நதி ஆற்றிய இன்றியமையாத பங்கையும் காங்கிரஸ் கூட்டணி அரசால் ஒதுக்கித்தள்ள இயலாத வகையில் இப்போது உண்மைகள் வெளி வந்துள்ளன. இப்போது கண்ணுக்கு தெரியாமல் உள்ள சரஸ்வதி நதி இருந்ததற்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை என்ற தன்னுடைய முந்தைய நிலையை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை இப்போது காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசு பதவி ஏற்ற பின்பு முதல் ஐந்து வருடங்களின் மத்தியில், “விஞ்ஞானிகள்  நீர் வழி பாதைகளை கண்டறிந்துள்ளனர். அவை “சந்தேகத்திற்கு இடமின்றி” (இந்த பதம் ஆராய்ந்த விஞ்ஞானிகளால் பயன்படுத்தப்பட்டது). “வேத கால சரஸ்வதி நதி இருந்ததை நிரூபிக்கின்றது” என்று காங்கிரஸ் கூட்டணி அரசு ஒப்புக் கொண்டுள்ளது. ராஜ்யசபாவில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. “சரஸ்வதி நதி பூமிக்கு கீழே ஓடுவதை” சாடிலைட் புகைப்படங்கள் நிரூபித்து உள்ளனவா”? அப்படி இருந்தால் அந்த மிகவும் இன்றியமையாத நீர் வழிப் பாதைகளை நம் நாட்டு தேவைக்காக ஏன் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது” என்பதுதான் ராஜ்ய சபாவில் கேட்கப்பட்ட கேள்வியாகும். காங்கிரஸ் கூட்டணி அரசு சரஸ்வதி நதி இருந்ததை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர் என்னும் உண்மையை அந்த கேள்விக்கு பதில் அளித்து ஒப்புக் கொண்டுள்ளது.
ஜோத்பூரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் உள்ளது. ராஜஸ்தான் அரசு நிலத்தடி நீர் துறையும், இந்த விண்வெளி ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து ஆய்வுகளை நடத்தின.அதன் முடிவுகள் “நுண்ணறிவுக்கான இந்திய சமூகத்தின் இதழில்” வெளியிடப்பட்டுள்ளது. அந்த முடிவுகளை மத்திய நீர் வழி அமைச்சரகம் இப்போது “எழுத்து பூர்வமாக” வெளியிட்டுள்ளது. பிற விஷயங்களைத் தவிர பின் வருவனவற்றையும் அந்த ஆராய்சிகளை செய்தவர்கள் கூறியுள்ளனர்.
“ஹரப்பா நாகரீகத்திற்கு முந்தைய, ஹரப்பா நாகரீகத்தை – ஹரப்பா நாகரீகத்திற்குப் பிறகு, என பிரித்து விண்வெளி புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த புகைப்படங்கள் மூலம், இந்த நாகரீகத்தின் வடகிழக்குப் பகுதியில், வேதசரஸ்வதி நதியின் வலிமையான, தொடர்ச்சியான, கழிவு நீர்த் திட்டம் இருந்துள்ளது தெரிகிறது. அகழ்வாரய்சிகளும் இதை உறுதிப் படுத்துகின்றன. இதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை… வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ள சரஸ்வதி நதி பற்றிய வர்ணனைகளுடன் இந்த ஆராய்ச்சி முடிவுகளும், விண்வெளி புகைப் படங்களும் மிகச் சரியாக ஒத்துப் போகின்றன.
இதில் விசேஷம் என்னவென்றால், இந்த விஷயம் குறித்து இந்திய அகழ்வாராய்ச்சி துறையின் தேசிய பொருட்காட்சி வெளிப்படையாக அறிவித்துள்ளது. தேசிய பொருட்காட்சி அலுவலகத்தில் “ஹரப்பா நாகரீகம்” என்று ஒரு அரங்கு உள்ளது. அதில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நிதானமாக, அடுத்தடுத்து இந்த மக்கள் ஒரு நாகரீகத்தை உருவாக்கினர். இந்த நாகரீகம், ஹரப்பா நாகரீகம், சிந்து சமவெளி நாகரீகம், சிந்து – சரஸ்வதி நாகரீகம் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இவ்வாறு சொல்லிவிட்டு சரஸ்வதி நதியின் முக்கியத்துவம் குறித்து அந்த அறிவிப்பு இவ்வாறு மேலும் குறிப்பிடுகிறது. “இப்போது ஒரு விஷயம் மிகவும் தெளிவாகி விட்டது. ஹரப்பா நாகரீகம் என்பது இரண்டு நதிகளின் நன்கொடை ஆகும். சிந்து, சரஸ்வதி என்னும் இரு நதிகளின் நன்கொடைதான் ஹரப்பா நாகரீகம் ஆகும். இது வரை நம்பப்பட்டது போல், ஹரப்பா நாகரீகம் சிந்து நதியின் நன்கொடை மட்டுமே அல்ல “.
சர்வதேச விஞ்ஞானிகள் மேற்கொண்ட இந்த புது ஆராய்ச்சிக்கு மற்றொரு பரிமாணமும் உள்ளது. அந்த விரும்பத்தகுந்த விஷயத்தையும் இங்கு குறிப்பிடுவது அவசியம். இந்த பண்டைய ஹரப்பா நாகரீகம் அழிந்து போக அந்நிய ஆக்ரமிப்புகள், படையெடுப்புகள் காரணமாக இருந்தன என்னும் வாதத்தை  இந்த புதிய கண்டுபிடிப்புகள் முற்றிலும் நிராகரிக்கின்றன. ஆனால் இந்த அறிக்கை வெளியிடப்படுவதற்கு பல காலம் முன்பாகவே நவரத்னா ராஜாராம் “சரஸ்வதி நதியும், வேத நாகரீகமும்” என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். அதில் சரஸ்வதி நதி இருந்தது என்ற கண்டுபிடிப்பால், ஆர்யர்கள் இந்தியாவை ஆக்ராமித்தனர் என்ற ஆரிய திராவிட இனவாதம் முற்றிலும் பொய் என்று நிருபிக்கப்பட்டுள்ளது, என
நவரத்னா ராஜாராம் குறிப்பிட்டுள்ளார். சரஸ்வதி நதி இருந்தது என்ற கண்டு பிடிப்பு இந்த பொய்க்கு மரண அடி கொடுத்துவிட்டது என்று அவர் சரியாக குறிப்பிட்டுள்ளார்.
ஆரிய திராவிட இனவாதம் கூறுவது என்ன? ஆரியர்கள் இந்தியாவை ஆக்ரமித்தபோது அங்கு ஹரப்பா நாகரீகம் இருந்தது. அந்த ஹரப்பா நாகரீகம் வேத சம்பந்தம் கொண்டது அல்ல. அந்த நாகரீகத்தை ஆரியர்கள் அழித்துவிட்டு, வேத நாகரீகத்தை ஸ்தாபித்தனர் என்பதுதான்.
ஆனால் சரஸ்வதி நதி குறித்த பல விவரங்கள் வேதத்தில் உள்ளது. வேத காலத்தில் சரஸ்வதி நதி ஓடியுள்ளது. எனவே வேத காலமும், ஹரப்பா நாகரீக காலமும் இணைந்தே இருந்திருக்க வேண்டும், எனவேதான் ராஜாராம் தனது புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் சரியாக.
“ஹரப்பா நாகரீகம் என்பது ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சரஸ்வதி நாகரீகம்தான்” , அப்படி என்றால் பொருள் என்ன? ஹரப்பா நாகரீக மக்கள் வேத நாகரீகத்தை பின்பற்றியவர்கள்.
எனவே ஆரிய திராவிட இனவாதம் எவ்வளவு பெரிய ஹிமாலயப் பொய், பித்தலாட்டம் என்பது இதில் இருந்து தெளிவாகிறது. நிபுணர்கள் ஹரப்பா நாகரீகம் ஆக்ரமிப்பால் அழிந்தது என்பதற்கு ஆதாரம் இல்லை, அது ஆரியர்களால் அழிக்கப்பட்டது என்பதற்கு சுத்தமாக எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிடுவது மிகச் சரியாகும். ஆரியர்கள் வெளி நாடுகளில் இருந்து இங்கு வந்தனர் என்பதற்கும் ஆதாரம் எதுவும் இல்லை. ஹரப்பா நாகரீகம் சிந்து மற்றும் சரஸ்வதி நதிக் கரைகளில் செழித்த நாகரீகம். அது வேத சம்பந்தம் கொண்டது. அந்த நாகரீகம் அழிந்ததற்கு “சரஸ்வதி நதி” வற்றிப்போனதே முக்கிய “காரணமே தவிர எந்த ஒரு அன்னியப் படையெடுப்பும் அல்ல. இதை ராஜாராமும் மற்ற பலரும் தெளிவாக்கி உள்ளனர்.
சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட இந்த ஆராய்ச்சியில் சரஸ்வதி நதியின் உற்பத்தி ஸ்தானம் எது என்பது மட்டும் இன்னும் கேள்விக் குறியாக உள்ளது. சரஸ்வதி நதி ஹிமாலய நதி அல்ல என்று அந்த ஆராய்ச்சி கூறுகிறது. ஆனால் பல நிபுணர்கள் சரஸ்வதி நதி கார்வால் (ஹிமாலயாவில் உள்ளது) பகுதியில் உள்ள “ஹர – கி – துன்” வீழ்ச்சியில் இருந்து உற்பத்தி ஆகிப் பெருகி வந்தது என்று குறிப்பிடுகின்றனர். இது விஷயமாக இறுதி வார்த்தை என்ன என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
மேற்கண்ட கட்டுரையின் ஆங்கில வடிவத்தைப் படிக்க விரும்பு பவர்களுக்குhttp://www.dailypioneer.com/columnists/item/51748-the-saraswati-civilisation.html
நன்றி: ஹிந்து சங்க செய்தி

03 செப்டம்பர் 2012

இறை நம்பிக்கையின் மையமாக இருந்து வரும் அமர்நாத் யாத்திரை



 இறை நம்பிக்கையின் மையமாக இருந்து வரும் அமர்நாத் யாத்திரை பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு புண்ணிய ஸ்தலங் களுக்கும் சமீபத்தில் சென்றுவிட்டு வந்தேன். என்னுடைய புனித யாத்திரையில் நான் ஒரு விஷயத்தை நன்கு கவனித்தேன். யுகயுகமாக தொடர்ந்து வரும் சாஸ்வதமான சமய நம்பிக்கை அற்புதமாக இப்போதும் வெளிப்பட்டது என்பதுதான் நான்
கவனித்த அந்த விஷயம். வயோதிகர்களோ அல்லது வாலிபர்களோ, ஆண்களோ, பெண்களோ, சிறுவர்களோ, குழந்தைகளோ, ஏழைகளோ, பணக்காரர்களோ அனைவரிடமும் இந்த முழு சமய நம்பிக்கை ஆலமரம் போன்று ஆழமாக வேருன்றி உள்ளது. இந்த முழு நம்பிக்கைதான் எல்லோரையும் ஆட்டிப்படைத்தது. எலும்பை நடுங்க வைக்கும் குளிரை வெற்றி கொள்ள ஹிமாலயத்தின் மிகக் கடினமான பகுதிகளைக் கடக்க இந்த யுக யுகாந்திர நிபந்தனையற்ற சமய நம்பிக்கையே சக்தி கொடுத்தது.

விஷயம் அப்படித்தான் இருக்கவும் வேண்டும். நான் மேலே குறிப்பிட்ட யாத்திரையோ அல்லதுவைஷ்ணவி தேவி, அமர்நாத், அயோத்யாவில் உள்ள ஸ்ரீராமர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், மதுரா கிருஷ்ணர் கோயில் என எங்கெல்லாம் ஹிந்துக்கள் புனித யாத்திரை மேற் கொள்கின்றார்களோ அந்த எல்லா இடங்களிலும் "நம்பிக்கைதான் உச்ச பட்சமாக" உள்ளது. நம்பிக்கை அற்றவர்களோ அல்லது அரசாங்கமோ நம்பிக்கை உள்ள ஹிந்துக்கள் எப்போது புனித யாத்திரையை மேற்கொள்ளலாம், எவ்வளவு காலத்திற்கு மேற்கொள்ளலாம் என்பதை தீர்மானிக்க முடியாது. அவ்வாறு தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு கிடையாது.

 அமர்நாத் கோயில்
அமர்நாத் யாத்திரை என்பது அத்தகைய இறை நம்பிக்கையின் மையமாக காலம் காலமாக இருந்து வருகிறது.1400 வருடங்களுக்கு முன்பு "பச்சை பையன்" பிறப்பதற்கு முன்பாகவே யாரோ ஒரு ஆட்டுக்கார இடையன்தான் அமர்நாத குகையை கண்டு பிடித்தான் என்னும் கதை தோன்றுவதற்கு முன்பிருந்தே இந்த உறுதியான நம்பிக்கை இருந்து வருகிறது. பண்டைய ஹர முகுத் (சிவனின் மணிமுடி) ஹிமாலய மலைத் தொடர்ச்சியில், பைரவநாத் பள்ளத்தாக்கில் அமர்நாத் குகை அமைந்துள்ளது.17000 அடி உயரத்தில் இந்த அமர்நாத் குகை அமைந்துள்ளது. பண்டைக் காலம் தொட்டே சிவனை வழிபடும் இடமாக அமர்நாத் இருந்து வருகிறது. "அமர்நாத் யாத்திரை" இரண்டு மாதங்கள் நடந்து வந்தது. இப்போது காஷ்மீர் ஆளுனரின், காஷ்மீர் பிரிவினைவாதிகளின் தயவில் நடக்கும் யாத்திரையாக ஆகிவிட்டது. ஒருமாதம்தான் அமர்நாத் யாத்திரை நடக்க வேண்டும் என்று இவர்கள் சொல்கின்றனர். ஆனால் இவ்வாறு யாத்திரையை சுருக்கி கொள்வது எனபது எப்போதுமே வழக்கத்தில் இருந்தது இல்லை. ஹிந்து தர்ம வழக்கப்படி 365 நாளும் 24 மணி நேரமும் யாத்திரையை மேற்கொள்ளலாம். அமர்நாத் யாத்திரையின் முக்கியத்துவம் அன்றும் இன்றும் "கைலாஷ் யாத்திரை" மாதிரி உள்ளது. உள்ளூரில் இந்த யாத்திரையை "அம்புர்நாத்" என்று அழைக்கின்றனர். கல்ஹனர் எழுதிய "ராஜ தரங்கணியில்" இந்த யாத்திரை "அமரேஷ்வர் யாத்திரை " என்று வர்ணிக்கப்படுகிறது. (ராஜ் தரங்கனி 7 -183).

பகவான் சிவன் தேவர்களை என்றும் வாழ்பவர்களாக ஆக்கும் பொருட்டு அவர்களுக்கு "அமிர்தம்" கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு எல்லா தேவர்களும் கேட்டுக் கொண்டதால் சிவன் இங்கேயே தங்க ஆரம்பித்து விட்டார். அதனால்தான் இந்த இடம் "அமர்நாத்" (என்றும் உள்ளது) என்றும் அமரேஷ்வர் என்றும் அழைக்கப்படுகிறது. ஜேஷ்ட ,ஆஷாட, ஷ்ரவண மாதங்கள் சிவனை தரிசனம் செய்திட யாத்திரைக்கு உகந்த மாதங்கள். எல்லா சிவ ஸ்தலங்களிலும் இருப்பதுபோல்தான் அமர்நாத் யாத்திரைக்கும் இந்த மாதங்கள்தான் உகந்தவை. இந்த மாதங்களில் அங்கு சிவன் "பனி லிங்க வடிவில்" காட்சி தருகிறார். மற்ற மாதங்களில் அமர்நாத்தில் "ஸ்தான் பூஜா" (அதாவது இருக்கும் இடத்தை பூஜை செய்வது) நடக்கிறது.

 அமர்நாத் யாத்திரை அமர்நாத்துக்கு போகும் வழியில் ஒரு பெரிய ஏரி இருந்தது. பார்க்கடல் போன்று வெண்மை என்ற பொருளில் அந்த ஏரி "டுக்தாப்தி தவல்" என்று அழைக்கப்பட்டது. சுஷ்ராவஸ் என்னும் நாகர் இந்த ஏரியை உருவாக்கினாராம். இன்று இந்த ஏரியை "சேஷ்நாக் ஏரி" என்று அழைக்கின்றனர் (ராஜ் தரங்கனி 1267). நீல்மத் புராணம் பிரதிபதா (ஹிந்து மாதத்தின் முதல் தேதி) தொடங்கி சிவலிங்கம் ஒரு சிறிய பனித்துளி போல் காட்சி அளிக்கிறது என்று கூறுகிறது (நீல்மத் 1535). பௌர்ணமி வரும்போது இதே சிவலிங்கம் 6 அடி முதல் 16 அடி வரை உயரமாக வளர்கிறது. அதன் பிறகு இந்த பனிலிங்கம் சிறியதாக மாறத் தொடங்குகிறது. அமாவாசை அன்று சிவலிங்கம் மிகவும் சிறியதாக ஆகி விடுகிறது. பண்டைய இதிகாசங்களில் அமர்நாத் பற்றி பல வர்ணனைகள் காணப்படுகின்றன. அமர்நாத் போகும் வழியில் உள்ள பல இடங்களையும் அந்த இதிகாசங்கள் குறிப்பிடுகின்றன. இதில் அதிசயம் என்ன தெரியுமா? குகைக்கு வெளியே இருக்கும் பனி மிகவும் மென்மையாக உருகிவிடும் நிலையில் உள்ளது. ஆனால் குகைக்கு உள்ளே இருக்கும் சிவலிங்கம் "கல்லைப் போன்று" அவ்வளவு கெட்டியாக, உறுதியாக உள்ளது.

இந்த சிவலிங்கத்திற்கு வலதுபுறத்தில் பார்வதி மற்றும் பைரவருக்கான இடங்கள் உள்ளன. இங்கு பார்வதி இருக்கும் இடம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். சதியின் கழுத்து இங்கே விழுந்தது. இந்த குகைக்கு மேற்கே அமர் கங்கா என்னும் ஒரு சிறிய ஆறு ஓடுகின்றது. அதில் உள்ள மணல் சிவனின் பஸ்மம் (விபூதி) என்று பக்தர்களால் பூசிக்கொள்ளப்படுகிறது. அந்த மணல் பஸ்மம் பக்தர்களை குளிரில் இருந்து காப்பாற்றுகிறது. ஷ்ரவண பூர்ணிமாவில் இருந்துதான் இந்த பனிலிங்கம் காட்சி அளிக்கத் தொடங்குகிறது. எனவே ஜேஷ்ட மாதத்தில் இருந்து ஷ்ரவண மாதம் வரை அமர்நாத் யாத்திரை நீடிக்கிறது. பக்தர்கள் நடந்து ஸ்ரீநகர், அவந்திபூர், ப்ரிஜ் விஹார், அனந்த்நாக்,மார்த்தான்ட் (இங்கு ஒரு பக்கம் பெரும் சிவன்கோயில் உள்ளது) பஹல்காம், சந்தன்வாடி, வாவ்ஜன், பஞ்ச்தரணி இன்னும் பல இடங்களை கடந்து செல்கின்றனர்.

அமர்நாத்  பனிலிங்கம்காஷ்மீரை "ஆனந்த்" என்ற அரசர் ஆண்டார். அவருடைய மனைவி "சூர்யமதி" என்பவர் அமர்நாத் தேவஸ்தானத்திற்கு ஏராளமான கிராமங்களையும், நிலங்களையும் கொடுத்தார். (ராஜ் தரங்கிணி 7.185). நம்முடைய பண்டைய, இடைக்கால அரசர்கள் வடக்கில் இருந்து தெற்கு, கிழக்கில் இருந்து மேற்கு என எல்லா சாம்ராஜ்ய அரசர்களும் ஹிந்து தர்ம நம்பிக்கைகளை, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தனர். பகவானை, அவரின் இருப்பிடங்களை அவர்கள் மதித்தனர். எனவே அவர்கள் யாத்ரிகர்களுக்கு, யாத்திரைக்கு பல உதவிகளைச் செய்தனர்.

இன்று பல கோவில்களில் அறக்கட்டளைகள் உள்ளன.12 ஜ்யோதிர் லிங்கங்கள், 51 சக்தி பீடங்கள், நவக்ரஹ ஸ்தலங்கள் ஆகிய இடங்களில் உள்ள அறக்கட்டளைகள், பக்தர்கள் திருப்தியாக தரிசனம் செய்ய, வழிபாடு நடத்த, பல வசதிகளை செய்து கொடுத்துள்ளன. சாலைவசதி, தர்மசாலா, தங்குமிடம், உணவுவசதி என பல வசதிகள் இதில் அடங்கும். ஆனால் அமர்நாத்தில் வாக்கு வங்கிகளுக்காக, அரசாங்கங்கள் காஷ்மீர் பிரிவினைவாதிகள் முன்பு மண்டி போடுகின்றன. ஹிந்து பக்தர்கள் அமர்நாத் யாத்திரையை மேற்கொள்வதை காஷ்மீர் பிரிவினைவாதிகள் விரும்புவது இல்லை. அங்கு ஹிந்து பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வதை, அந்த பிரிவினைவாதிகள் வெறுக்கின்றனர். ஆனால் உண்மையில் ஹிந்துக்களுக்கு மட்டுமே அமர்நாத்துக்கு வர உரிமை உள்ளது. காஷ்மீர் பிரிவினை வாதிகளுக்கோ, காஷ்மீர் அரசுக்கோ, அமர்நாத்தில் எந்த உரிமையும் கிடையாது.

ஒவ்வொரு முறையும் அமர்நாத் யாத்திரை தொடங்கும் போது அரசாங்கம் ஏதோ ஒரு சாக்குபோக்கு சொல்லி பக்தர்கள் அங்கு வராமல் தடுக்க முயல்கிறது. யாத்திரை காலத்தைக் குறைக்க முற்படுகிறது. 2008 இல் காஷ்மீர் பிரிவினைவாதிகள் அமர்நாத் நிலத்தை கைப்பற்றிக் கொள்ள மாபெரும் சூழ்சியில் இறங்கினர். ஆனால் ஜம்மு காஷ்மீரில் உள்ள விழிப்புள்ள ஹிந்துக்கள், பக்தர்கள் மற்றும் ஒட்டு மொத்த பாரதமும் 60 நாட்கள் தொடர்ந்து போராடி இந்த முயற்சியை முறியடித்தனர். இந்த தர்ம யுத்தத்தில் பல ஹிந்துக்கள் தங்கள் உயிரை பலிதானம் செய்தனர். இந்த முறை அமர்நாத் யாத்திரைக்கான காலஅளவை அரசாங்கம் குறைத்து ஹிந்துக்கள் அமர்நாத்துக்கு யாத்திரை செல்லாமல் இருக்க முயன்று வருகிறது. இதற்காக சமூகத் தலைவர்கள் என்று அழைக்கப்படும் சில கைக்கூலிகளை வைத்துக் கொண்டு தவறான, பொய்யான, காரணங்களை, வாதங்களை அரசாங்கம் சொல்லி வருகிறது.

ஆனால் ஹிந்துக்கள் முழுமுதற் கடவுளை முற்றிலுமாக நம்புகின்றனர். பகவான் சிவா, பார்வதி தாயார், பைரவர், கணேஷர், சேஷநாக், மார்த்தாண்டு, சூர்யன் ஆகியோரின் பக்தர்கள் அமர்நாத் யாத்திரைக்கு வரக்கூடாது என்று தடுப்பவர்கள் எவராயினும் அவர்கள் சிவனின் ருத்ர தாண்டவத்தின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். காஷ்மீர் பிரிவினைவாதிகளை தாஜா செய்ய தங்கள் நம்பிக்கையை அடக்கி வைப்பதை ஹிந்துக்கள் ஒரு போதும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள், சகித்துக் கொள்ளமாட்டார்கள். அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இதுவரை நூற்றுக்கணக்கில் ஹிந்துக்களை ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் சிறைப்படுத்தி அவர்களை கொடூரமாக அடித்துள்ளது. ஆனால் ஹிந்துக்கள் பகவான் அமர்நாத் சிவனை வழிபட அமர்நாத்துக்கு சென்றே தீருவார்கள். முழுமுதல் நம்பிக்கை சாஸ்வதமானது. அரசாங்கமோ, காஷ்மீர் பிரிவினைவாதிகளோ, ஆளுனரோ யாராயினும் சாஸ்வதமானவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் தற்காலிகமனவர்கள் மட்டுமே,

அமர்நாத் பனிலிங்கம், அமர்நாத் யாத்திரை, கோயில்,  அம்ரிஸ்தர்

ஆங்கிலத்தில்: டாக்டர் பிரவீன் பாய் தொகாடியா தமிழாக்கம்: லா.ரோஹிணி