Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

04 செப்டம்பர் 2014

பிஜேபியின் மாநில பொறுப்பாளர் கார் மற்றும் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சி


பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் பாரதிய ஜனதா நிர்வாகி வீட்டில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை ரோட்டில் உள்ள காலனியில் வசிப்பவர் வக்கீல் முரளி கணேஷ் (42). பாரதிய ஜனதா மாநில வக்கீல் அணி துணைத் தலைவர். இவரது வீடு முதல் தளத்தில் உள்ளது. தரைத் தளத்தில் உள்ள போர்டிகோவில் இவரது கார் நிறுத்தப்பட்டிருந்தது. இன்று அதிகாலை 2.50 மணிக்கு கார் மீது சரமாரியாக கல் வீசப்பட்டது. இதில் காரின் கண்ணாடி உடைந்து சிதறியது. இதை தொடர்ந்து கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 2 பாட்டில்கள் உடைந்து தீப்பற்றியது. 3வது பாட்டில் உடையாமல் கார் மீது கிடந்தது. பாட்டில் உடைந்து எரியத் தொடங்கியதும், காலனியில் உள்ள மக்கள் விழித்து கூச்சல் போட்டனர். அப்போது சில மர்ம ஆசாமிகள் அங்கிருந்து பைக்கில் தப்பி உள்ளனர்.


சம்பவம் தொடர்பாக முரளி கணேஷ் அளித்த புகாரின் பேரில், பட்டுக்கோட்டை டிஎஸ்.பி செல்லபாண்டியன், இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அங்கு கிடந்த பெட்ரோல் குண்டு உள்ளிட்ட தடயங்ளை சேகரித்தனர். முரளி கணேஷ் கூறுகையில், ‘என்னை குறிவைத்து தான் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். அக்கம் பக்கத்தினர் விழித்து கொண்டு சத்தம் போட்டதால், மர்ம ஆசாமிகள் தப்பி உள்ளனர். தமிழகத்தில் பா.ஜ பிரமுகர்களை குறித்து வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. அவர்கள் யார் என்பதை அரசு கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பா.ஜ. நிர்வாகிகளுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்றார்.

31 ஆகஸ்ட் 2014

அதிவீரராமபட்டினத்தில் வெள்ளிவிழா (25-ஆம் ஆண்டு) விநாயகர் சதுர்த்தி தேசிய திருவிழா ஹிந்து எழுச்சி ஊர்வலம்..

அதிவீரராமபட்டினம்: வெள்ளிவிழா (25-வது) ஆண்டாக நடத்தப்பட்ட விஸ்வரூப விநாயகர் ஊர்வலம்.  ஒவ்வொரு ஆண்டும் ஹிந்து முன்னணியினரால் மாநிலம் முழுவதிலும் வெகு விமரிசையாக நடத்தப்படும் விநாயகர் சதுர்த்தி இவ்வாண்டு அதிவீரராமபட்டினம் ஹிந்து முன்னணியின் 25-வது ஆண்டாக ஒன்றுபட்ட ஹிந்து சக்தியின் வெளிப்பாடாக  விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் 4000க்கும் அதிகமான ஹிந்து இளைஞர்கள் பங்கேற்று சிறப்பித்தநர். 
---------------------------------------------------------------------------------------------------------
அதிவீரராமபட்டினம் ஹிந்து முன்னணி நடத்திய வெள்ளிவிழா (25-வது)  ஆண்டு விஸ்வரூப விநாயகர் ஊர்வலம் ஸ்ரீ ஜய ஆண்டு ஆவணி திங்கள் 17-ம் நாள் (31/08/2014) ஞாயிறு அன்று நடைபெற்றது. இதற்க்காக விநாயகர் 14-அடி,10-அடி,8-அடி உயரங்களில் 8 விநாயகர் சிலைகள் திருச்சி ஹிந்து முன்னணி காரியாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்டு 27/08/2014 அன்று காலை 5.45 மணியளவில் அருள்மிகு ஸ்ரீ துர்க்கா செல்லியம்மன் ஆலையத்தில் கணபதி ஹோமம் முடிந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. 


அங்கிருந்து 27/08/2014 அன்று, சேதுரோடு, கரையூர்தெரு(மாரியம்மன் கோயில்), பிள்ளைமார்தெரு, வெக்காளியம்மன் கோவில் தெரு, சால்ட்லைன், சங்கத்துக்கொள்ளை, வாழக்கொள்ளை ஆகிய பகுதிகளுக்கு 5 விநாயகர் பிரதிஷ்டை செய்ய அனுப்பி வைக்கப்பட்டார். இந்த 5 விநாயகரும் அப்பகுதி ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து சமய மக்களால் 7 நாட்கள் வழிபாடுகள் செய்யப்பட்டது.







பின்னர் 31/08/2014 அன்று மாலை 03:00 மணியளவில் சேதுரோடு, கரையூர்தெரு(மாரியம்மன் கோயில்), பிள்ளைமார்தெரு, வெக்காளியம்மன் கோவில் தெரு, சால்ட்லைன்,சங்கத்துக்கொள்ளை, வாழக்கொள்ளை ஆகிய இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 7 விஸ்வரூப விநாயகரும் அருள்மிகு ஸ்ரீ துர்க்கா செல்லியம்மன் ஆலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கிருந்து 8 விஸ்வரூப விநாயகரும் மாலை 04:00 மணிக்கெல்லாம் வண்டிப்பேட்டைக்கு கொண்டுசெல்லப்பட்டார். 
இவற்றுடன் பட்டுக்கோட்டை ஒன்றிய நகர ஹிந்து முன்னணியினரால் வைக்கப்பட்ட 60-க்கும் மேற்பட்ட விஸ்வரூப விநாயகர் சிலைகளும் வண்டிப்பேட்டைக்கு வந்தன. 


அங்கு நகர இந்து முன்னணி செயலாளர் S.V.சிவாஜீ வரவேற்புரையாற்றினார், இந்து முன்னணி நகர தலைவர் P.விஜயகுமார்ஜீ தலைமையிலும், இந்து முன்னணி நகர துணை தலைவர் R.ராஜேந்திரன்ஜீ,  நகர பொதுச்செயளாலர் N.கோபாலகிருஷ்ணன் ஜீ ஆகியோர் முன்னிலையிலும்

இந்து முன்னணி மாநில அமைப்பாளர் N.முருகானந்தம் ஜீ அவர்கள் சிறப்புரையற்றினார். 



                                     
பின்னர்இந்து முன்னணி மாநில அமைப்பாளர் N.முருகானந்தம் ஜீ அவர்கள் எழுச்சியுறையாற்றி ஊர்வலத்தை துவக்கிவைத்தார். 


பின்னர் விஸ்வரூப விநாயகருக்கு கரையூர்தெரு, காந்திநகர், ஆறுமுககிட்டங்கிதெரு கிராம தலைவர் மற்றும் பஞ்சாயத்தார்களால் பட்டு சார்த்தப்பட்டு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. 

அங்கிருந்து விஸ்வரூப விநாயகர் அதிவீரராமபட்டினத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஏரிப்புறக்கரை கிராமத்தை நோக்கி சென்றார்.









































                                               






அங்கு ஏரிப்புறக்கரை கிராம நிற்வாகிகள் மற்றும் இளைஞர்களால் சிலம்பாட்டத்துடன் கூடிய சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டு விஸ்வரூப விநாயகர் கங்கா சாகர் கடலிலே சங்கமமானார். 
நிறைவாக இந்து முன்னணி நகர துணைச்செயலாளர் T.சுரேஷ் ஜீ நன்றியுரையாற்றினார்.

இந்து முன்னணி மாவட்ட செயலாளர் P.விஜயகுமார் ஜீ இந்து முன்னணி மாவட்ட செயலாளர் RVS.ராஜானந்தம் ஜீ, இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் G.பன்னீர்செல்வம் ஜீஇந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் ஸ்ரீ தமிழ்மோகன் ஜீஇந்து முன்னணி பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் S.V.பிரபாகரன் ஜீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்த ஊர்வலத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக நகர இந்து முன்னணி சட்ட ஆலோசகர்சோலை S.பாலகிருஷ்ணன், ,  பா.ஜ.க மாவட்ட செயலாளர் பன்னவயல் R.இளங்கோ ஜீ, இந்து முன்னணி கிளை நிர்வாகிகள். நமசு.ராஜா ஜீ, , சூரை.சண்முகம் ஜீ, பார்த்திபன் ஜீ,சூரை.பாலா, செல்வா மற்றும் நகர, ஒன்றிய, கிராம, கிளை பொருப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 



இந்த விழாவில் அதிவீரராமபட்டினம் ஹிந்து முன்னணியை சேர்ந்த இளைஞர்களோடு, பட்டுக்கோட்டை, பள்ளிகொண்டான்,சேண்டாக்கோட்டை, மாலியக்காடு, புதுக்கோட்டை உள்ளூர், நடுவிக்காடு, மிலாரிக்காடு, மதுக்கூர்,துவரங்குறிச்சி, மழவேனிற்காடு, பழஞ்சூர், புதுப்பட்டினம், வெலிவயல், ராஜாமடம், முத்துப்பேட்டை, தம்பிக்கோட்டை, கரிசக்காடு,மஞ்சவயள், கருங்குளம், வள்ளிக்கொள்ளைக்காடு, ஆகிய சுற்றுவட்ட பகுதிகளை சேர்ந்த 4000-க்கும் மேற்பட்ட ஹிந்து இளைஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


காவல்துறையின் கணிவான ஒத்துலைப்பு விழா சிறக்க உதவியாக இருந்தது.

13 ஆகஸ்ட் 2014

அதிவீரராமபட்டினம் இந்துக்களால் நடத்தப்பட்ட ஆடி முளைப்பாரி திருவிழா காணொளி மற்றும் புகைப்படங்கள்

அதிவீரராமபட்டினம் கரையூர்தெரு மற்றும் காந்திநகர் கிராம இந்துக்களால் நடத்தப்பட்ட ஆடி முளைப்பாரி திருவிழா காணொளி மற்றும் புகைப்படங்கள்



கரையூர்தெரு













காந்திநகர்