Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

18 ஜூன் 2014

விதைக்கப்பட்ட சகோதரருக்கு வீர வணக்கம்

தமிழ்ஹிந்து இணையதளம்

இந்து முன்னணி பொறுப்பாளர் திரு. சுரேஷ் இன்று (18.06.2014) இரவு சுமார் 10 மணியளவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொடூரமாக அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் வெட்டி கொலைச் செய்யப்பட்டார்.
இந்த படுகொலையை கண்டித்து இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி ஐயா இராமகோபாலன் அவர்கள் விடுத்த அறிக்கை:
anjali
இன்று (18.6.2014) இரவு சுமார் 9.30 மணி அளவில் அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையம் அருகில் வைத்து இந்து முன்னணியின் திருவள்ளுவர் மாவட்டத் தலைவர் திரு. கே.பி.எஸ். சுரேஷ் எனும் பாடி சுரேஷ் சமூக விரோத கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வேலூர் வெள்ளையப்பன் படுகொலை நடந்து ஒரு வருடம் இன்னமும் முடியவில்லை. கொலையாளிகள் கைது செய்யப்பட்டாலும், கொலைக்கு உடந்தையானவர்கள், கொலையாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பவர்கள் எல்லாம் வெளியில் தான் இருக்கிறார்கள் என்பதை இந்தக் கொலையின் மூலம் தமிழக அரசுக்கு பகிரங்கப்படுத்தியிருக்கிறார்கள்.
தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது, பயங்கரவாதிகளுக்கு. 21 ஆண்டுகளாகத் தேடப்பட்ட குற்றவாளியை பிடித்த உடன் ஜாமீன் கிடைக்கும் அளவில் தமிழகத்தின் காவல்துறை செயல்பாடு இருப்பதை கண்டு தமிழக மக்கள் அஞ்சுகிறார்கள். தமிழக முதல்வர் அவர்கள் இக்கொலை வழக்கை நேரிடையான கவனத்தில் கொண்டு குற்றவாளிகளையும், அவர்களுக்கு உடந்தையானவர்களையும் உடனடியாக கைது செய்து தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
பாடி சுரேஷ் நல்ல மனிதர், எல்லோருக்கும் உதவும் பண்பாளர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சமுதாயப்பணியில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு பெரும்பங்காற்றியவர். அவரது இழப்பு சமுதாயத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார், உற்றார் உறவினர்களுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அன்னாரது ஆன்மா நற்கதி அடைய எல்லா ஊர்களிலும் திருக்கோயில் கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்ய இந்து முன்னணி பொறுப்பாளர்களையும், பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறோம். 

12 ஜூன் 2014

அதிவீரராமபட்டினம் ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஆலய வைகாசி விசாக பெருந்திருவிழா- வெளியூர் காவடி

அதிவீரராமபட்டினம் கரையூர்தெரு ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஆலய வைகாசி விசாக பெருந்திருவிழாவின் இரண்டாவது நாளான இன்று வெளியூர் பால்காவடி மற்றும் சிலாகைக்காவடியை முன்னிட்டு பக்தர்கள் பால்காவடி மற்றும் சிலாகைக்காவடி எடுத்து அம்பாளுக்கு தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர்.



 சிலாகைக்காவடி எடுத்து ஆடிவரும் பக்தர்கள்



அலகு குத்தி வேண்டுதலை நிறைவேற்றும் பக்தர்



11 ஜூன் 2014

அதிவீரராமபட்டினம் ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஆலய வைகாசி விசாக பெருந்திருவிழா- உள்ளூர் காவடி

அதிவீரராமபட்டினம் கரையூர்தெரு ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஆலய வைகாசி விசாக பெருந்திருவிழா (28.05.2014) காலை 10 மணியளவில் வேத மந்திரங்கள் முலங்க காப்பு கட்டப்பட்டு வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.


திருவிழாவின் முதல் நாளான இன்று உள்ளூர் பால்காவடியை முன்னிட்டு பக்தர்கள் பால்காவடி எடுத்து அம்பாளுக்கு தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர்.









இரவு ஏழு மணியளவில் எலக்டிரிக் காவடி எனும் வண்ண மின்விளக்குகளால் அளங்கரிக்கப்பட்ட காவடிகள் மேலதாளங்கள் முலங்க பக்தர்கள் எடுத்துவந்தனர்.