Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

30 ஜூன் 2011

திருக்கோவில் அன்னதானத் திட்டம்-மேசை, நாற்காலி போட்டு தரமான உணவைப் பரிமாற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்ட திருக்கோவில் அன்னதானத் திட்டத்தை மேம்படுத்தி செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சாப்பாடு பரிமாறும்போது மேசை, நாற்காலி போட்டு தரமான உணவைப் பரிமாற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2002ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது இந்தத் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதலில் 63 கோவில்களில் தொடங்கப்பட்ட இத்திட்டம் தற்போது 361 கோவில்களில் நடந்து வருகிறது.

சமீபத்தில் இந்தத் திட்டத்தை ஜெயலலிதா ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு குறைபாடுகள் குறித்து முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து சில உத்தரவுகளை அவர் பிறப்பித்துள்ளார்.

- அன்னதான திட்டத்துக்கு நல்லதரமான அரிசி மற்றும் மளிகைப்பொருட்கள், காய்கறிகள் பயன்படுத்தவேண்டும்.

- திருக்கோவில் அன்னதானத்தில் சாதம், பொரியல், கூட்டு, சாம்பார், ரசம், மோர் மற்றும் ஊறுகாய் போன்ற வகைகள் அவசியம் வழங்கப்படுதல் வேண்டும்.

- அன்னதான திட்டத்தில் வழங்கப்படும் உணவு வகைகள் தரமானதாகவும், சுத்தமானதாகவும் இருத்தல் வேண்டும்.

- நிதி வசதி மிகுந்த கோவில்களில், வெள்ளிக்கிழமை மற்றும் விழா நாட்களில் வடை, பாயசம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

- உணவு அருந்தும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படவேண்டும்.

- பக்தர்கள் வசதியாக அமர்ந்து உணவருந்த வசதி இருப்பின் டேபிள், சேர் போன்றவை பயன்படுத்தப்படவேண்டும்.

- இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், ஒவ்வொரு இணை ஆணையர் மண்டலத்திலும், பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் போதிய வருவாய் உள்ள கோவில்களில் அன்னதான திட்டம் புதிதாக செயல்படுத்தப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தமிழக முதல்வர் அவர்களுக்கு

20 ஜூன் 2011

கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-04


ராஜசங்கர்

ஜோகேந்திரநாத் மண்டலின் ராஜினாமாக் கடிதத்தின் நான்காம் பாகம்.

பாகம் 1ல்: ஜோகேந்திரநாத் மண்டல் என்ற தலித் தலைவர் பற்றிய அறிமுகம். அவர் சிறுபான்மையினரும் தலித்துகளும் ஒன்றிணைந்து முன்னேற முடியும் என்று நம்பியது. மக்கள் ஆதரவு இல்லாத முஸ்லீம் லீக் அரசைப் பலமுறைகள் காப்பாற்றியது. டாக்கா கலவரத்தின் பின்னணி மற்றும் அந்தக் கலவரத்தின் கொடூரங்கள். கலவரத்தில் தலித்துகளான நாம்தாரிகளை முஸ்லீம்கள் அழித்தது. இருப்பினும், நாமதாரிகளை மத நல்லிணக்கத்தோடு இருக்க ஜோகேந்திரநாத் மண்டல் உழைத்தது போன்ற தகவல்கள் உள்ளன.
பாகம் 2ல்: முஸ்லீம்களால் அழிக்கப்பட்டாலும், பட்டியல் வகுப்பினர், முஸ்லீம் லீக்கிற்கு விசுவாசமான ஜோகேந்திரநாத் மண்டலை ஆதரித்தது. பாகிஸ்தானின் முதல் அமைச்சரவையில் பாகிஸ்தானின் முதல் சட்ட அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டது. அவரைத் தவிர வேறு பட்டியல் வகுப்பினரையும் அமைச்சராக்க பாகிஸ்தான் மறுத்தது. நாமசூத்திரர்கள் என்ற தலித் பிரிவினரின் மேல் பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறி, அவர்களைக் குவியல் குவியலாக முஸ்லீம்கள் கொன்றழித்தது. கலவரத்தின்போது, இந்துப் பெண்களைப் போரில் கைப்பற்றப்பட்ட அடிமைப் பெண்களாகக் கருதி முஸ்லீம் தலைவர்கள் கூட்டம் கூட்டமாகக் கற்பழித்தது. இந்தக் கலவரத்தில் அரசே ஈடுபட்டது. இந்தக் கலவரங்கள் பற்றி அமைச்சரவையில் பேச சட்ட அமைச்சரான ஜோகேந்திரநாத் மண்டலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது போன்ற தகவல்கள் உள்ளன.
பாகம் 3ல்: இந்த பாகத்தில் டாக்கா கலவரத்தின் முக்கிய காரணங்கள்; பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப் பட்டது; இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருக்கும் சிறுபான்மையினரை காக்க வழிவகை செய்ய லியாகத் அலிகானுக்கும் நேருவுக்கும் இடையில் நடந்த டெல்லி ஒப்பந்தம்; அது செயல் படாமல் போன ஏமாற்றம்; மவுலானா அக்ரம் கானின் வெறுப்பு பரப்புரை; கிழக்கு வங்காள அரசு அந்த மாநிலத்தில் இருக்கும் இந்துக்களை கசக்கி பிழியும் திட்டத்தை நன்கு திட்டமிட்டு நடைமுறை படுத்தி வருவது; இணை ஓட்டுமுறையை தவிர்க்கும் செயல்கள் போன்ற தகவல்கள் உள்ளன.
முந்தைய பாகங்கள்: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3
நான்காம் பாகத்தைப் படியுங்கள்…..
மூலம்: ஜோகேந்திர நாத் மண்டல்
தமிழில்: ராஜசங்கர்
இந்துக்களின் மோசமான எதிர்காலம்.
29. டெல்லி ஒப்பந்தத்தின் விளைவாக கிழக்கு வங்காளத்தில் இந்துக்களின் தற்போதைய மற்றும் எதிர்காலம் பற்றி பேசும் போது தற்போதைய நிலவரம் ஆனது எந்த வித திருப்தியும் அளிக்காததோடு நிச்சியமற்றதாக இருக்கிறது, எதிர்காலமோ இருண்டும் பயமளிப்பதாகவும் இருக்கிறது. கிழக்கு வங்காள இந்துக்களின் நம்பிக்கை எந்த வித்திலும் கூட்டப்படவில்லை. கிழக்கு வங்காள அரசாலும் முஸ்ஸீம் லீக் தலைவர்களாலும் டெல்லி ஒப்பந்தம் ஆனது ஒரு காகிதக்கழிவு போலவே நினைக்கப்பட்டது. கிழக்கு வங்காளத்தில் இருந்து பெரும் எண்ணிக்கையில் குறிப்பாக பட்டியல் வகுப்பினர் கிழக்கு வங்காளத்திற்கு வருவது அங்கு இந்துக்கள் இழந்த நம்பிக்கை திரும்பி விட்டதற்கான அறிகுறி இல்லை. அது மேற்கு வங்காளத்திலும் இந்தியாவின் மற்ற பகுதிகளும் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கவில்லை என்பதை காட்டுகிறது. கூடவே அகதிகள் முகாமில் இருக்கும் வாழ்க்கை ஆனது அவர்களை அவர்களின் வீட்டிற்கு திரும்ப செல்ல வலியுறுத்துகிறது. மேலும் அவர்கள் தங்களுடைய வீட்டில் இருந்து விலையுர்ந்த பொருட்களை திரும்ப எடுத்து போகவும் தங்களுடைய சொத்தை விற்றுவிட்டு போகவும் தான் வருகிறார்கள். சமீப காலமாக கிழக்கு வங்காளத்தில் எந்த வித மதக்கலவரம் நடைபெறாமல் இருப்பதற்கு டெல்லி ஒப்பந்தம் காரணம் இல்லை. இது எந்த வித ஒப்பந்தம் இல்லாமல் இருந்திருந்தால் கூடவே இது போலவே இருந்திருக்கும்.
30. டெல்லி ஒப்பந்தம் ஆனது ஒரு முடிவானது அல்ல என்பது இங்கு ஒத்துக்கொள்ளப்படவேண்டும். அது இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு இடையில் இருக்கும் பல பிரச்சினைகளையும் சிக்கல்களையும் தீர்ப்பதற்கு ஏதுவான காரணிகளை உருவாக்கும் எண்ணத்துடன் எழுதப்பட்டது. ஆனால் இந்த ஆறு மாத காலத்தில் எந்த விதமான சிக்கலோ அல்லது பிரச்சினையோ தீர்க்கப்படவில்லை. ஆனால் அதற்கு மாறாக மதவெறுப்பு பரப்புரையும் இந்தியாவிற்கு எதிரான பரப்புரையும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மூழுமூச்சில் பாகிஸ்தானால் செய்யப்பட்டது. மூஸ்ஸீம் லீக்கால் பாகிஸ்தான் முழுவதும் கொண்டாடப்பட்ட காஷ்மீர் நாள் கொண்டாட்டங்கள், இந்தியாவுக்கு எதிரான மத வெறுப்பு பரப்புரைக்கு நல்ல உதாரணம் ஆகும். பாகிஸ்தான் பஞ்சாப் இன் ஆளுநரால் பேசியது பொழுது இந்திய முஸ்ஸீம்களின் பாதுகாப்பிற்கு பாகிஸ்தானுக்கு ஒரு உறுதியான ராணுவம் தேவைப்படும் என்று சொன்னது இந்தியா பற்றி பாகிஸ்தானின் அணுகுமுறையை எடுத்துக்காட்டுகிறது. இது இரண்டு நாடுகளுக்கு இடையே மேலும் பிரச்சினைகளை அதிகரிக்கவே செய்யும்.
கிழக்கு வங்காளத்தில் இன்று என்ன நடக்கிறது
31. இன்று கிழக்கு வங்காளத்தின் நிலை என்ன? ஐம்பது லட்சம் இந்துக்கள் இந்திய பிரிவினையின் பின் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்கள். இப்படி இந்துக்கள் வெளியேறிவதற்கு பலகாரணங்கள் இருக்கின்றன, அதில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கலவரமும் ஒன்று. இந்து வழக்குரைநர்களை, மருத்துவர்களை, கடைகாரர்களை, வியாபாரிகளை, புறக்கணித்த முஸ்ஸீம்களின் செயலால் இந்துக்கள் மேற்கு வங்காளத்திற்கு அவர்களின் வாழ்வாதாரத்தை தேடி வெளியேறினார்கள். இந்து வீடுகளில் வாடகை இல்லாமல் குடியிருப்பது, சட்டரீதியான நடைமுறை ஏதும் இல்லாமல் வீடுகளை ஆக்கிரமித்து கொள்வது போன்ற செயல்கள் இந்துக்களை இந்தியாவிற்கு போக வைத்தது. இந்து வீடு உரிமையாளர்களுக்கு வாடகை தரும் பழக்கம் வெகு நாட்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டது. கூடவே அன்சார்கள் (உள்நாட்டு பாதுகாவலர்கள்) இந்துக்களின் உடமைகளுக்கும் உயிருக்கும் பெரும் கேடாக இருக்கிறார்கள் என எனக்கு பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. கல்வித்துறையால் இஸ்ஸாமிய மதமாக்கப்படும் கல்வி முறையால் மேல் நிலை பள்ளி மற்று கல்லூரிகளின் ஆசிரியர்கள் அவர்களின் பழைய சொந்த முறைகளை விட்டுவிட்டு இந்தியாவுக்கு தப்பி ஓடினார்கள். இதன் விளைவாக பல கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. கொஞ்ச காலம் முன்பு எனக்கு கிடைத்த தகவலின் படி கல்வித்துறை மேல்நிலை பள்ளிகளுக்கு, எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் எல்லா ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளி துவங்கும் முன் குரான் சொல்வதில் கண்டிப்பாக கலந்து கொள்ளவேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
வங்க வன்முறைகள் இன்னொரு அறிக்கையோ பள்ளிகளில் உள்ள கட்டிடங்களை இந்த ஜின்னா, இக்பால், லியாகத் அலி, நஜிமுதீன் போன்ற பன்னிரண்டு சிறந்த முஸ்ஸீம்களின் பெயரில் இருக்கவேண்டும் என சொல்லியிருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற கல்வியாளர்கள் மாநாட்டில் பேசிய அதிபர், கிழக்கு வங்காளத்தில் இருக்கும் 1500  ஆங்கில மேல்நிலை பள்ளிகளில் 500 மட்டுமே இயங்குவதாக சொல்லியிருக்கிறார். மருத்துவர்கள் வெளியேறியதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க எந்த விதமான வழிமுறைகளும் இல்லை. இந்து கடவுள்களுக்கு வழிபாடு செய்துகொண்டிருந்த அனைத்து பூஜாரிகளும் வெளியேறிவிட்டனர். முக்கியமான வழிபாட்டு தலங்கள் கைவிடப்பட்டுள்ளன. இதன் விளைவாக இந்துக்கள் அவர்களின் மதத்தை பின்பற்றும் வழி இல்லாமல் இருப்பதோடு மட்டுமல்லாது அவர்களின் சமூக பழக்கவழக்கங்களான திருமணம் போன்றவற்றை செய்யக்கூட வழி இல்லாமல் இருக்கிறார்கள். கடவுள்களின் திருவுருவச்சிலைகள் செய்துகொண்டிருந்த தச்சர்கள், ஓவியர்கள் முதலானோரும் வெளியேறி விட்டார்கள். பஞ்சாயத்து யூனியன்களில் இந்து தலைவர்கள் காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகளின் துணையுடன் துரத்தியடிக்கப்பட்டு அந்த இடங்களுக்கு முஸ்ஸீம்கள் வந்தார்கள். மிச்சமிருந்த ஒரு சில இந்து அரசு அதிகாரிகளின் வாழ்க்கையானது, அவர்களை விட அனுபவம் குறைவான முஸ்ஸீம்களுக்கு பதவி உயர்வு தருவதாலும் எந்த வித காரணம் இல்லாமல் வேலையில் இருந்து நீக்கப்படுவதாலும், மோசமாக இருக்கிறது. சமீபத்தில் சிட்டகாங்கில் அரசு பொது வழக்குரைநர் பதவியில் இருந்த ஒரு இந்துவை பதவியில் இருந்து  நீக்கப்பட்டார். ஸ்ரீஜகுடா நெல்லி சென்குப்தா (Srijukta Nellie Sengupta) எனப்படும் அவர் மேல் எந்த விதமான முஸ்ஸிம்களுக்கு எதிராக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டோ வைக்கப்படவில்லை.
இந்துக்கள் முற்றிலுமாக விலக்கப்பட்டனர்.
32. திருட்டுகளும் கொள்ளைகளும் மேலும் கொலைகளும் முன்போலவே நன்றாக நட்ந்து கொண்டு உள்ளன. காவல் துறை அதிகாரிகள் இந்துக்களால் செய்யப்படும் பாதிக்கும் மேற்பட்ட புகார்களை பதிவே செய்வதில்லை. இந்து பெண்களை கடத்துவதும் கற்பழிப்பு செய்வதும் ஓரளவுக்கு குறைந்துவிட்டது என்பது சரியே. ஆனால் உண்மை என்வென்றால் 12 இல் 30 வயதுக்குட்பட்ட இந்து பெண்கள் இப்போது கிழக்கு வங்காளத்தில் இல்லாமல் போனது தான்.
கிராமங்களின் வசிக்கும் ஒரு சில பட்டியல் வகுப்பு இந்து பெண்களும் கூட இந்த முஸ்ஸீம் குண்டர்களால் கற்பழிக்கப்பட்டனர். என்னிடம் வந்த புகார்களை வைத்து பார்த்தால் முஸ்ஸீம் குண்டர்கள் பெரும் அளவில் இந்து பட்டியல் வகுப்பு பெண்களை கற்பழித்து உள்ளனர். சந்தைகளில் இந்துக்களால் விற்கப்படும் சணல் மற்றும் மற்றைய விவசாய பொருட்களுக்கு முஸ்ஸீம் வியாபாரிகள் ஒரு பொழுதும் முழு விலை தருவதில்லை. இந்துக்களை பொறுத்தவைரை சமநீதி, சட்டம், ஒழுங்கு என்பவை பாகிஸ்தானில் இல்லாமல் போய்விட்டன.
மேற்கு பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம்
33. கிழக்கு பாகிஸ்தானின் கேள்வியை தற்போதைக்கு விட்டுவிட்டு இப்போது மேற்கு பாகிஸ்தானுக்கு வருவோம், குறிப்பாக சிந்துவிற்கு. மேற்கு பஞ்சாப் பிரிவினைக்கு பிறகு ஒரு லட்சம் பட்டியல் வகுப்பினரை கொண்டிருந்தது. அதில் பெரும்பாலானோர் இப்போது முஸ்ஸீமாக மதம் மாற்றப்பட்டுள்ளர். முஸ்ஸீம்களால் கடத்தப்பட்ட பல டஜன் பட்டியல் வகுப்பு சிறுமிகளில் அதிகாரிகளிடம் திரும்ப திரும்ப வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு பின்பு நான்கே நான்கு பேர் மட்டும்தான் மீட்கப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட சிறுமிகளின் பெயரும் அவர்களை கடத்தியவர்களின் பெயரும் அதிகாரிகளுக்கு தரப்படிருந்தது. கடத்தப்பட்ட பெண்களை மீட்க நியமிக்கப்பட்டிருந்த அதிகாரி கடைசியில் பின்வருமாறு கூறினார், “அவருடைய பணி இந்து சிறுமியரை மீட்பது தான் அவருடைய வேலை எனவும் அச்சூட்ஸ்(பட்டியல் வகுப்பினர்) இந்துக்கள் அல்ல”. சிந்துவிலும் கராச்சியிலும் வாழும் குறைந்த எண்ணிக்கையிலான இந்துக்களின் நிலை மிக மோசமாக இருக்கிறது. கராச்சியிலும் சிந்துவிலும் முஸ்ஸீம்களால் கைப்பற்றப்பட்ட 363 கோயில்கள் மற்றும் குருத்வாராக்களின் பட்டியல் என்னிடம் இருக்கிறது, அந்த பட்டியலில் இன்னமும் சேர்க்கப்படவேண்டிய கோயில்களும் உள்ளன.
woman-harassedஅதில் சில கோயில்கள், தோல் தைக்கும் இடமாகவும், சில இறைச்சிக்கூடங்களாகவும், சில உணவகங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. இதில் எதையும் இந்துக்கள் திரும்ப பெறவில்லை. எந்த வித முன்னறிப்பு இல்லாமல் இந்துக்களின் நிலங்கள் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டு பாகிஸ்தானுக்கு வந்த முஸ்ஸீம்களுக்கும் உள்ளூர் முஸ்ஸீம்களுக்கும் தரப்பட்டன. எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவரையில் 200 இல் இருந்து 300 இந்துக்கள் வெளியேற்றக்கூடாதவர்களாக பாதுகாப்பாளரால் நெடுநாள் முன்னரே அறிவிக்கப்பட்டனர். ஆனால் இதுவரையில் அவர்களின் சொத்து ஒருவருக்கு கூட திருப்பி தரப்படவில்லை. கராச்சி பின்சிரபோல் (Pinjirapole, பசு பாதுகாப்பு இடம்) கூட அதன் உரிமையாளர்களுக்கு திருப்பி தரப்படவில்லை, அந்த இடம் எப்போதே ஆக்கிரமிக்கப்படக்கூடாத இடமாக அறிவிகப்பட்டுள்ளது. கராச்சியில் இருக்கும் பட்டியல் வகுப்பு தந்தைகளிடம் இருந்தும் கணவன்மாரிடம் இருந்தும் அவர்களின் உறவு சிறுமியரை மீட்டு தர சொல்லி எனக்கு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இரண்டாவது தற்காலிக அரசிடம் இந்த புகார்களை எடுத்து சென்றேன். ஆனால் எந்த விளைவும் இல்லை. என்னை மிகவும் வருத்ததிற்கு ஆளாக்கிய செய்தி என்னவென்றால் சிந்துவில் இதுகாரும் இருந்த பட்டியல் வகுப்பினர் இஸ்ஸாமியர்களாக கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர் என்பதாகும்.
இந்துக்களுக்கு பாகிஸ்தான் ஒரு சாபம்
34. மேல்கண்டவை தான் இந்துக்களைப்பொறுத்தவரை பாகிஸ்தானில் அவர்களின் நிலை என்பதாக இருக்கும் பட்சத்தில், பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்கள் அவர்களில் நாட்டிலேயே எல்லா காரணிகள், செயல்களின் படி நாட்டற்றவர்களாக அவர்களின் வீட்டில் இருக்கிறார்கள் என்று நான் சொன்னால் அது மிகையாகாது. இந்து மதத்தை கடைபிடிப்பதை தவிர அவர்கள் செய்த குற்றம் வேறொன்றும் இல்லை. முஸ்ஸீம் தலைவர்களால் பாகிஸ்தான் ஒரு இஸ்ஸாமிய நாடாக ஆகவேண்டும், ஆகும் என்று திரும்ப திரும்ப சூளுரைக்கப்படுகிறது. எல்லாவிதமான உலக சிக்கல்களுக்கும் இஸ்ஸாமே தீர்வு எனும் பரப்புரை செய்யப்படுகிறது. எவ்வாறு முதலாளித்துவமும் சோசிலிசமும் பேசப்படுகிறது அந்த வார்த்தைகளில் நீங்கள் இஸ்ஸாத்தின் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் பற்றி சர்க்கரை தடவிய வார்த்தைகளில் பேசுகிறீர்கள். ஷரியாவின் படி நடக்கும் முஸ்ஸீம்கள் மட்டுமே ஆளுவோராக இருக்கும் அமைப்பில் இந்துக்களும் மற்ற சிறுபான்மையினரும் விலை கொடுத்து தங்கள் பாதுகாப்பபை வாங்கும் திம்மிக்களாக இருக்கவே முடியும். பிரதமர் அவர்களே மற்ற எல்லாரையும் விட அந்த விலை என்ன என்று உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும். நிச்சயமற்ற வெகுகாலமான போராட்டத்திற்கு பிறகு பாகிஸ்தானில் இந்துக்களுக்கு அவர்கள் வாழ்வதற்கோ எதிர்காலத்திற்கோ எந்த விதமான இடமும் இல்லை என்ற முடிவுக்கு வந்தேன்.
அவர்களின் எதிர்காலம் மதம் மாற்றப்படுவதிலோ அல்லது அழித்தொழிக்கப்படுவதிலோதான் இருக்கிறது. பெரும்பாலான மேல் வர்க்க இந்துக்களும் அரசியல் நிலை அறிந்த பட்டியல் வகுப்பினரும் கிழக்கு வங்காளத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். பாகிஸ்தானிலேயே தங்கும் சாபத்தை பெற்ற இந்துக்கள், என்னுடைய பயத்தின் படி, கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்ட படி இஸ்ஸாத்திற்கு கட்டாய மதம் மாற்றப்படுவார்கள் அல்லது முழுமையாக அழிக்கப்படுவார்கள். நன்கு படித்த, அனுபவமும் பண்பாடும் உள்ள உங்களைப்போன்ற ஒருவர், மனித சமுதாயத்திற்கே பெரும் தீங்கு விளைவிக்க கூடிய, சமத்துவத்தின் எல்லா விதமான விதகளையும் மீறிய ஒரு கொள்கையை எப்படி முன்னெடுக்கிறீர்கள் என்பது வியப்பை அளிக்கிறது. உங்களுக்கு உங்களின் தொண்டர்களுக்கும் இந்துக்கள் அவர்களின் பிறந்த இடத்திலேயே திம்மிக்களாக நடத்த பயத்தாலோ அல்லது விரும்பியோ அனுமதி தருவார்கள் என நான் சொல்லலாம். இன்று அவர்கள் அப்படி இருக்கலாம், ஏன் அவர்கள் இன்னேரம் சொத்துக்களை பயத்தில் வருத்தத்துடன் விட்டு விட்டார்கள். நாளை அவர்கள், அவர்களின் பிறப்பு உரிமையை கோரலாம். ஆனால் எதிர்காலம் எதை கொண்டுவரும் என யாருக்கு தெரியும்? எப்போது நான் பாகிஸ்தானின் மத்திய அமைச்சரவையில் தொடர்ந்து இருப்பது இந்துக்களுக்கு எந்த வித உதவியையும் கொண்டு வராது என நம்பினேனோ, அப்போது என்னுடைய நல்ல சிந்தனையுடன், பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்களின் மனதிலும் வெளிநாடு வாழ் மக்களின் மனதிலும் பாகிஸ்தானில் இந்துக்கள் வாழ்க்கை, சொத்து, மத உரிமை முதலியவற்றில் கவுரவத்துடனும் பாதுக்காப்புடனும் வாழ முடியும் என்ற போலி நம்பிக்கையை உண்டாக்க விரும்பவில்லை. இது இந்துக்களை பற்றியது.
அரசியல் உரிமைகள் முஸ்ஸீம்களுக்கு கூட இல்லை.
35. முஸ்ஸீம் லீக் ஆள்பவர்களின் சுற்றத்தாரை தவிரவும், வேலைசெய்யாத அதிகாரிகளின் சுற்றாத்தாராகவும் இல்லாத முஸ்ஸீம்களின் நிலை என்ன? அரசியல் உரிமை என்பதே பாகிஸ்தானில் இல்லாமல் போய்விட்டது. இதற்கு ஆதாரமாக, இவரைவிட சிறந்த முஸ்ஸீம் இந்த உலகத்தில் பல வருடங்களுக்கு இருந்ததில்லை என்று சொல்லப்படும் கான் அப்துல் காபர் கான் இன்  தற்போதைய நிலையும் அவரின் சகோதரரும்வீர தேசப்பற்றாளர் ஆன டாக்டர் கான் சாகிப் அவர்களின் தற்போதைய நிலை என்ன? வடமேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தானின் முன்னாளைய முஸ்ஸீம் லீக் தலைவர்கள் இப்போது எந்த வித விசாரணையும் இல்லாமல் சிறையில் இருக்கிறார்கள். வங்காளத்தில் முஸ்ஸீம் லிக்குக்கு பெரும் வெற்றிகளை தந்த ஸஹ்ரவர்தி இப்போது பேசுவதற்கும் வெளியே செல்வதற்கும் மேலிடத்தில் உத்தரவு வாங்கும் நிலையில் இருக்கும் சிறைக்கைதி. வங்காளத்தின் பாசத்திற்குரிய தொண்டு கிழவர் என்று சொல்லப்படுவரும் (பாகிஸ்தான் உருவாவதற்கு காரணமாக இருந்த) லாகூர் தீர்மானத்தை கொண்டு வந்தரும் ஆன பைசல் ஹக் இப்போது டாக்கா உயர் நீதிமன்றத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் தனியாளாக காலத்தை தள்ளிக்கொண்டிருக்கிறார், இவைகள் மூலமாக இஸ்ஸாமிய திட்டங்கள் கொடூரமாகவும் இறுதியையும் நோக்கி போயின. கிழக்கு வங்காள முஸ்ஸீம்களை பற்றி குறைவாக சொல்வதே போதுமானது ஆகும். அவர்களுக்கு சுய ஆட்சியும் தனி அதிகாரமும் தருவாத வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் கிடைத்தது என்ன? ஒட்டு மொத்த பாகிஸ்தானைவிட அதிக மக்கள் தொகை கொண்டிருந்தும் கிழக்கு வங்காளம் மேற்கு பாகிஸ்தானின் அடிமைநாடாக ஆக்கப்பட்டது. கராச்சியில் இருந்து அனுப்பட்ட ஒரு துணை ஆள், அங்கிருந்து கொண்டு உத்தரவுகளை செயல்படுத்திக்கொண்டிருக்கிறார். கிழக்கு வங்காள முஸ்ஸீம்கள் உணர்ச்சிப்பெருக்குடன் இஸ்ஸாமிய நாட்டின் புரிந்துகொள்ள முடியாத செயல்பாடுகளின் படியும் ஷரியத்தின் படியும் அப்பம் கிடைக்கும் என்று வந்தார்கள், ஆனால் அவர்களுக்கு கல் தான் கிடைத்தது. சிந்துவிலும் பஞ்சாப்பிலும் இருக்கும் முஸ்ஸீம்களுக்கோ இனிப்புகள் கிடைத்தன.
pakistan-condemn-bd-genocide
என்னுடைய வருத்தமான கசப்பான அனுபங்கள்.
36 பாகிஸ்தானின் முழுவிவரங்களையும் அது மற்றவர்களுக்கு செய்த கொடும் அநீதிகளையும் விலக்கி பார்க்கையில் என்னுடைய வருத்தமான கசப்பான் அனுபவங்களும் அதை விட குறைவானது இல்லை. உங்களுடைய பிரதமர் பதவியையும் பாராளுமன்ற கட்சி தலைவர் என்ற பதவியையும் கொண்டு என்னிடம் ஒரு அறிக்கை விடும் படி கேட்டீர்கள், அதை நான் கடந்த செப்டமர் 8 ஆம் தேதி வெளியிட்டேன். அந்த அறிக்கை முழுப்பொய்களையும் அதைவிட மோசமான பாதிப்பொய்களையும் கொண்டிருப்பதால் அதை வெளியிட விரும்பவில்லை என உங்களுக்கு தெரியும். உங்கள் அமைச்சரவையில் அமைச்சராக உங்களுக்கு கீழ் பணிபுரியும் வரை உங்களின் வேண்டுகோள்களை மறுப்பது எனக்கு சாத்தியம் இல்லை. ஆனால் என்னால் இனிமேலும் போலியான நம்பிக்கைகளையும் பொய்களையும் கொண்டிருக்க என்னுடைய மனச்சாட்டி மறுப்பதால் என்னுடைய அமைச்சர் பதவியை விட்டு விலகும் கடிதத்தை இப்போது உங்கள் கரங்களில் அளிக்கிறேன், அதை காலதாமமின்றி ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன். உங்களுடைய இஸ்ஸாமிய அரசின் படி நான் வகித்த அமைச்சகத்தை உங்கள் விருப்பப்படி எப்படி தோன்றுகிறதோ அப்படி செய்து கொள்ளலாம்.
உங்கள் நம்பிக்கைக்குரிய
ஜெ. என். மண்டல்
8 அக்டோபர் 1950
முற்றும்.

11 ஜூன் 2011

கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-03


ராஜசங்கர்

ஜோகேந்திரநாத் மண்டலின் ராஜினாமாக் கடிதத்தின் மூன்றாம் பாகம்.

பாகம் 1ல்: ஜோகேந்திரநாத் மண்டல் என்ற தலித் தலைவர் பற்றிய அறிமுகம். அவர் சிறுபான்மையினரும் தலித்துகளும் ஒன்றிணைந்து முன்னேற முடியும் என்று நம்பியது. மக்கள் ஆதரவு இல்லாத முஸ்லீம் லீக் அரசைப் பலமுறைகள் காப்பாற்றியது. டாக்கா கலவரத்தின் பின்னணி மற்றும் அந்தக் கலவரத்தின் கொடூரங்கள். கலவரத்தில் தலித்துகளான நாம்தாரிகளை முஸ்லீம்கள் அழித்தது. இருப்பினும், நாமதாரிகளை மத நல்லிணக்கத்தோடு இருக்க ஜோகேந்திரநாத் மண்டல் உழைத்தது போன்ற தகவல்கள் உள்ளன.
பாகம் 2ல்: முஸ்லீம்களால் அழிக்கப்பட்டாலும், பட்டியல் வகுப்பினர்,  முஸ்லீம் லீக்கிற்கு விசுவாசமான ஜோகேந்திரநாத் மண்டலை ஆதரித்தது. பாகிஸ்தானின் முதல் அமைச்சரவையில் பாகிஸ்தானின் முதல் சட்ட அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டது. அவரைத் தவிர வேறு பட்டியல் வகுப்பினரையும் அமைச்சராக்க பாகிஸ்தான் மறுத்தது. நாமசூத்திரர்கள் என்ற தலித் பிரிவினரின் மேல் பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறி, அவர்களைக் குவியல் குவியலாக முஸ்லீம்கள் கொன்றழித்தது. கலவரத்தின்போது, இந்துப் பெண்களைப் போரில் கைப்பற்றப்பட்ட அடிமைப் பெண்களாகக் கருதி முஸ்லீம் தலைவர்கள் கூட்டம் கூட்டமாகக் கற்பழித்தது. இந்தக் கலவரத்தில் அரசே ஈடுபட்டது. இந்தக் கலவரங்கள் பற்றி அமைச்சரவையில் பேச சட்ட அமைச்சரான ஜோகேந்திரநாத் மண்டலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது போன்ற தகவல்கள் உள்ளன.
முந்தைய பாகங்கள்:
 பாகம் 1 || பாகம் 2
மூன்றாம் பாகத்தைப் படியுங்கள்…..
மூலம்: ஜோகேந்திர நாத் மண்டல்
தமிழில்: ராஜசங்கர்
டாக்கா கலவரத்தின் பின்னணி
21. டாக்கா கலவரத்தின் முக்கிய காரணங்கள் ஐந்து:
bangladesh-islamic-terrorism-jihad-300x203அ. கால்ஷீரா மற்றும் நாச்சோல் பற்றிய ஒத்திவைப்பு தீர்மானங்கள் சட்டபேரவையில் கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்டது. அதை எதிர்த்து இந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து தங்களின் எதிர்ப்பை காட்டிய தைரியத்திற்கு தண்டனை தருவது.
ஆ. ஸூரஹர்தி குழுவுக்கும் நஜிமுதீன் குழுவுக்கும் இருந்த கருத்து வேறுபாடு மற்றும் குழு மோதல் பாராளுமன்ற கட்சியில் பிளவு ஏற்படும் அளவுக்கு போனது.
இ. கிழக்கு மற்றும் மேற்கு வங்காளத்தை இணைக்கும் முயற்சியை சில இந்து மற்றும் முஸ்லீம் தலைவர்கள் மேற்கொண்டது  கிழக்கு வங்காள அரசுக்கும் முஸ்ஸிம் லீக் தலைவர்களுக்கும் கவலை அளித்தது. அவர்கள் அதைத் தவிர்க்க எண்ணினர்.
அவர்களின் சிந்தனைப்படி கிழக்கு வங்காளத்தில் ஒரு பெரிய மதக்கலவரம்  நடந்தால் அது கண்டிப்பாக மேற்கு வங்காளத்திலும் பரவும். அங்கு முஸ்லீம்கள் கொல்லப்படலாம். கிழக்கு மற்றும் மேற்கு வங்காளங்களில் நடக்கும். 
மதக்கலவரங்களின் விளைவுகள் இந்த ஒற்றுமை முயற்சியை முளையிலேயே கிள்ளி எறியும்.
ஈ. வங்காளி முஸ்லீம்களுக்கும் வங்காளி  அல்லாத முஸ்லீம்களுக்கும் இடையே இருந்த நம்பிக்கையின்மை பெரிதாக வளர ஆரம்பித்தது. இதை இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே வெறுப்பை உருவாகுவதன் மூலமே ஒழிக்க முடியும். இவர்கள் பேசும் மொழியும் சிக்கலுக்கு ஒரு காரணம்.
உ. பணமதிப்பை குறைக்காததன் விளைவு மற்றும் இந்திய-பாகிஸ்தான் வணிகத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டையின் விளைவுகள் கிழக்கு வங்காளப் பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தின. இந்த பாதிப்பு முதலில் நகரப் பகுதிகளிலும் பின்பு கிராமப் பகுதிகளிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தின. வரும் பொருளாதார பஞ்சத்தில் இருந்து முஸ்லீம்களின் கவனத்தை இந்துக்களுக்கும் எதிரான ஜிகாத் மூலம் விலக்க முடியும் என முஸ்லீம் லீக் தலைவர்களும் அரசு அதிகாரிகளும் நினைத்தனர்.
மலைக்கவைக்கும் தகவல்கள் - பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டனர்
bangladesh-hindus-genocide-jihad-islam-muslim22. நான் ஒன்பது நாள் டாக்காவில் தங்கியிருந்த போது கலவரம் நடந்த நகரப்  பகுதிகளையும் புறநகர் பகுதிகளையும் பார்வையிட்டேன். பி.ஸ். தேஜ்கானில் இருக்கும் மிர்பூருக்கும் சென்றேன். டாக்கா - நாராயண்கஞ் மற்றும் டாக்கா–சிட்டகாங் வழி இருப்பு பாதைகளிலும் ரயில் பெட்டிகளிலும் நூற்றுக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டது எனக்கு அதிர்ச்சியளித்தது.
டாக்கா கலவரத்தின் இரண்டாவது நாள், நான் கிழக்கு வங்காள முதலமைச்சரைச் சந்தித்து அவர் மாவட்ட நகரங்களிலும் கிராமங்களிலும் கலவரம் நடக்காமல் இருக்க எல்லாவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த வேண்டும் என மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட கேட்டுக்கொண்டேன்.
1950 பிப்ரவரி 20 ஆம் தேதி நான் பாரிசால் நகரத்திற்கு போனேன். அங்கு நடந்தவைகளைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தேன். இந்த மாவட்ட நகரத்தில் பெரும்பாலான இந்து வீடுகள் எரிக்கப்பட்டன.  பெரும் எண்ணிக்கையிலான இந்துக்கள் கொல்லப்பட்டனர். நான் அந்த மாவட்டத்தில் கலவரம் நடந்த அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டேன். அங்கு முஸ்லீம் கலவரக்காரர்கள் செய்த கொடுமைகள் இதுவரை நான் அறியாதவையாக இருந்தன.
அருகில் இருக்கும் காஷிபூர், மாதப்ஷா (Madhabpasha ) மற்றும் லகுட்யா எனும் பகுதிகள் நகரத்தில் இருந்து ஆறு மைல் தொலைவில் இருந்தும் வானங்கள் செல்லக்கூடிய சாலைகளால் இணைக்கப்பட்டிருந்தும் கலவரக்காரர்களின் பிடியில் இருந்து தப்பவில்லை.
மாதப்ஷா (Madhabpasha ) ஜமின்தார் வீட்டில் 200 பேர் கொல்லப்பட்டனர். மற்றும் 40 பேர் காயமடைந்தனர். மைவ்லாடி (Muladi) எனும் இடம் நரக வேதனையை அனுபவித்தது.
மைவ்லாடி பந்தர் எனும் இடத்தில் மட்டும் 300 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். அந்த கலவரக்காரர்களில் முஸ்லீம்களும் அரசு அதிகாரிகளும் இருந்தனர்.
bangladesh-jihad-islam-murdered-hindusபக்கத்தில் இருந்த கிராமத்திற்குச் சென்றபோது இறந்தவர்களின் எலும்புக்கூடுகளைப் பல இடங்களில் பார்த்தேன். ஆற்றோரங்களில் நாய்களும் கழுகுகளும் பிணங்களைத் தின்பதை பார்த்தேன். எனக்கு வந்த தகவல்படி அங்கு ஆண்களை ஒட்டு மொத்தமாக கொன்று விட்டு அங்கு இருந்த பெண்களை முஸ்லீம் தலைவர்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர்.
பிஸ். ராஜ்புர் இல் இருக்கும் கைபார்ட்டகளி (Kaibartakhali ) எனும் இடத்தில் 63 பேர் கொல்லப்பட்டனர். காவல் துறை அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் இந்து வீடுகளும் கொள்ளையடிக்கப்பட்டன. உள்ளே இருந்த இந்துக்கள் கொல்லப்பட்டு வீடுகள் எரிக்கப்பட்டன.
பாபுகன்ஞ் கடைவீதியில் இருந்த எல்லா இந்து கடைகளும் கொள்ளையடிக்கப்பட்டு அவர்கள் எரிக்கப்பட்டனர்.  நிறைய இந்துக்கள் கொலை செய்யப்பட்டனர்.
பெறப்பட்ட தகவல்களில் அடிப்படையில் குறைந்த பட்சம் 2,500 பேர் பாரிசால் மாவட்டத்தில் மட்டும் கொல்லப்பட்டனர்.
டாக்காவிலும் கிழக்குவங்காளத்திலும் கொல்லப்பட்ட இந்துக்களின் எண்ணிக்கை பத்தாயிரம் ஆகும்.
உற்றார் உறவினரை இழந்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் அவலக்குரல் என்னுடைய இதயத்தை உருக்கியது. “இஸ்ஸாத்தின் பெயரால் பாகிஸ்தானை பீடித்துவிட்டது எது?” என நான் என்னையே கேட்டுக்கொண்டேன்.
டெல்லி ஒப்பந்தத்தைச் செயல்படுத்த எந்த ஆர்வமும் இல்லை
(இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருக்கும் சிறுபான்மையினரை காக்க வழிவகை செய்ய லியாகத் அலிகானுக்கும் நேருவுக்கும் இடையில் நடந்த ஒப்பந்தம் டெல்லி ஒப்பந்தம் என அழைக்கப்படுகிறது.)
23. மார்ச்சின் பிற்பகுதில் கிழக்கு வங்காளத்தில் இருந்து இந்துக்கள் அகதிகளாக வெளியேறுவது ஆரம்பித்தது. குறைந்த கால அளவில் எல்லா இந்துக்களும் வங்காளத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள் எனத்  தோன்றியது.
இதற்கு எதிராக போர்க்குரல் இந்தியாவில் எழுந்தது. ஒரு தேசியப் பேரழிவு நிகழ்வதை தடுக்க முடியாது போல் தோன்றியது. இப்படி வந்திருக்கக்கூடிய அவலம் ஆனது ஏப்ரல் 8 ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட டெல்லி ஒப்பந்தத்தால் தவிர்க்கப்பட்டது.
பயத்தில் இருந்த பங்களாதேசத்து  இந்துக்களின் தைரியம் குறைந்தது. அவர்களது பயத்தைத் தவிர்க்க நான் கிழக்கு வங்காளத்தில் பெரும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். டாக்கா, பாரிசால், பரிதாபூர், குலானா ஜெஸ்ஸூர் மாவட்டங்களில் பல இடங்களுக்குச்  சென்றேன். அங்கு பல டஜன் கூட்டங்களில் பேசினேன். அதில் இந்துக்களைத் துணிவுடன் இருக்கும் படியும் அவர்களின் குடும்ப வீடுகளையும் சொத்தையும் விட்டு விட்டுப்  போக வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டேன்.
கிழக்கு வங்காள அரசும் முஸ்லீம் லீக் தலைவர்களும் டெல்லி ஒப்பந்ததின் விதிகளை புழங்குவார்கள் என நம்பியே இதைச் சொன்னேன். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல கிழக்கு வங்காள அரசோ முஸ்லீம் லீக் தலைவர்களோ இந்த ஒப்பந்தத்தைப்  புழக்கத்திற்கு கொண்டுவருவதில் எந்த முயற்சியும் எடுக்க மாட்டார்கள் என எனக்குப் புரிந்தது.
கிழக்கு வங்காள அரசு  டெல்லி ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட அரசு இயந்திரங்களை அமைப்பதிலோ அல்லது வேறு எந்த விதமான நடவடிக்கைகளையோ  எடுக்க வில்லை. டெல்லி ஒப்பந்தத்திற்குப் பிறகு உடனடியாக தங்கள் சொந்த ஊருக்குக் கிளம்பிய இந்துக்கள் அவர்களின் வீடுகளும் நிலங்களும் முஸ்லீம்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததை கண்டார்கள். அவைகள் அவர்களுக்குத் திருப்பி தரப்படவில்லை.
மவுலானா அக்ரம் கானின் வெறுப்பு பரப்புரை
24. முஸ்லீம் லீக் தலைவர்களின் மீதான என்னுடைய சந்தேகம் உறுதிப்பட்டது எப்போது எனில் நான் முஸ்லீம் லீக் மாகாண தலைவர் ஆன மவுலானா அக்ரம் கான் மாத பத்திரிக்கையான “முகம்மதி” யின் “பைசக்” மாத வெளியீட்டில் எழுதியதைப் படித்த போது தான்.
இதற்கு முன்னர், பாகிஸ்தானின் சிறுபான்மையினர் துறை அமைச்சர் ஆன முனைவர் ஏ. எம். மாலிக் டாக்கா ரேடியோ நிலையம் அதனுடைய முதல் ரேடியோ ஒலிபரப்பை செய்த போது பேசினார். அப்போது முகம்மது நபி கூட அரேபியாவில் இருந்த யூதர்களுக்கு அவர்களுடைய சமய உரிமையை அளித்தார் எனக் கூறினார். இதற்குப் பதில் அளித்த மவுலானா அக்ரம் கான் அந்தப் பத்திரிக்கையில் கீழ்க்கண்டவாறு எழுதினார்:
bangladesh-muslims-kill-hindu-friday-prayer“முனைவர் மாலிக்கினுடைய பேச்சு அரேபியாவின் யூதர்களைக் குறிப்பிடாமல் இருந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். முகம்மது நபியால் அரேபியாவின் யூதர்களுக்கு அவர்களுடைய உரிமைகள் தரப்பட்டது உண்மை தான். ஆனால், அது வரலாற்றில் முதல் பகுதி மட்டுமே. ஆனால்,வரலாற்றின் கடைசிப்பகுதி தூதர் முகம்மது “எல்லா யூதர்களையும் அரேபியாவை விட்டு துரத்துங்கள்” என்று உத்தரவிட்டதைக் கொண்டுள்ளது.”
முஸ்லீம்களிடையே அரசியல், சமூக, மத வாழ்க்கையில் உயர்ந்த இடத்தைக்  கொண்டிருக்கும் மவுலானா கானின் எழுத்திற்குப் பிறகும் நான் நூருல் அமின் அமைச்சரவை நம்பிக்கை குறைவாக நடந்து கொள்ளாது என சிறிய எதிர்ப்பார்ப்பு வைத்திருந்தேன். ஆனால், டி.என் பராரி யை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக டெல்லி ஒப்பந்தத்தின் படி  நூருல் அமின் நியமித்த போது அந்த எதிர்ப்பார்ப்பு சுக்கு நூறானது. டெல்லி ஒப்பந்தத்தின்படி சிறுபான்மையினரில் இருந்து ஒருவரைத்தான், சிறுபான்மையினருக்கு நம்பிக்கை வரும்படி சிறுபான்மை நலத்துறை அமைச்சராக நியமிக்கபடவேண்டும்; அவர் தான் கிழக்கு மற்றும் மேற்கு வங்காள அரசுகளுக்கு தொடர்பாளராக இருப்பார்.
நூருல் அமின் அரசின் அக்கறையின்மை
25. என்னுடைய ஒரு பொது அறிக்கையில், டி.என் பாராரியை சிறுபான்மையினரின் சார்பான அமைச்சராக நியமித்தது எந்த நம்பிக்கையையும் கொண்டுவரவில்லை என்பதைக் கூறினேன். மாறாக அது சிறுபான்மையினரின் மனதில் நூருல் அமின் அரசின் மேல் மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச எதிர்ப்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் உடைத்தது என்பதைச் சொல்லி இருந்தேன். நூருல் அமினின் அரசு டெல்லி ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் விருப்பம் இல்லாது இருப்பதோடு மட்டுமல்லாமல் டெல்லி ஒப்பந்தத்தின் முதன்மை விதிகளை தோற்கடிக்க விரும்பியது என்றும் எனது அறிக்கையின் மூலம் நான் கூறினேன்.
bangladesh-jihad-islam_dead-hindusநான் திரும்பவும் சொல்கிறேன். டி.என் பாராரி அவரை மட்டும் தான் முன்னிறுத்துகிறார், வேறு யாரையும் அல்ல. அவர் வங்காள சட்டசபைக்கு காங்கிரஸ்ஸின் சீட்டிலும் அதன் பணம் மற்றும் அமைப்பு பலத்திலும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பட்டியல் வகுப்பு குழு வேட்பாளர்களை எதிர்த்தவர். அவருடைய தேர்தலுக்கு சில நாட்களுக்குப் பிறகு காங்கிரஸுக்குத் துரோகம் செய்து விட்டுப் பட்டியல் வகுப்பு குழுவில் சேர்ந்துகொண்டார். அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டவுடன் குழுவில் இருக்கும் தகுதியையும் இழந்துவிட்டார். பராரியின் முந்தைய செயல்கள், தகுதிகள், நடத்தைகள் ஆகியவை டெல்லி ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட ஒரு அமைச்சர் பதவிக்கு அவர் தகுதியானவர் அல்ல என்று சொல்லும் என் அறிக்கையை எனக்குத் தெரிந்தவரையில் கிழக்கு வங்காள இந்துக்கள் ஒப்புக்கொள்வார்கள்.
26. அந்த பதவிக்கு நான் நூருல் அமீனிடம் மூன்று பெயர்களை பரிந்துரைத்திருந்தேன். நான் பரிந்துரைத்ததில் ஒருவர், எம்.ஏ, எல்எல்.பி. முடித்து டாக்கா உயர் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் ஆக பணிபுரிபவர். அவ்ர் பஷல் ஹக் அமைச்சவரையில் முதல் நான்கு வருடம் பணிபுரிந்தவர், ஆறு வருடம் தலைவராக கல்கத்தா நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றியவர், மேலும் ஆறு வருடம் மூத்த துணைத்தலைவராக பட்டியல் வகுப்பு குழுவிற்கு பணியாற்றியவர். நான் பரிந்துரைத்ததில் இரண்டாவது நபர், எம்.ஏ, எல்எல்.பி. அவர் ஏழு வருடம் சட்ட மேலவையில் உறுப்பினராக பணியாற்றியவர்.
எனக்கு தெரியவேண்டிய விஷயம் என்னவென்றால் என்ன காரணங்களுக்காக நூருல் அமின்  இந்த இரண்டு நபர்களில் ஒருவரை அமைச்சராக நியமிப்பதை விட்டு விட்டு நான் சரியான காரணங்களை முன்வைத்து எதிர்க்கும் ஒரு நபரை அமைச்சராக நியமித்தார் என்பது தான்.
மாற்றிச்சொல்வது பற்றிய எந்த பயமும் இல்லாமல் இதைச் சொல்கிறேன், நூருல் அமீனின் பாராரியை அமைச்சராக நியமிக்கும் முடிவு டெல்லி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காததின் முடிவான நிருபணம் ஆகும். கிழக்கு வங்காளத்தில் இந்துக்கள் அவர்களின்  உயிர், சொத்து, உடைமைகள், கவுரவம், மதம் பற்றி எந்த பயமும் இல்லாமல் வாழ்வதுதான் அந்த டெல்லி ஒப்பந்தம் உருவாவதற்கான முதன்மை காரணம் ஆகும்.
இந்துக்களை கசக்கி பிழியும் அரசின் திட்டம்
27. இந்த இடத்தில் உங்களிடம் ஓரிரு முறைக்கு மேல் சொன்னதான, கிழக்கு வங்காள அரசு இன்னமும் அந்த மாநிலத்தில் இருக்கும் இந்துக்களை கசக்கி பிழியும் திட்டத்தை நன்கு திட்டமிட்டு நடைமுறை படுத்தி வருகிறது என்பதை திரும்பவும் சொல்ல விரும்புகிறேன். இந்துக்களைப் பாகிஸ்தானில் இருந்து விரட்டியடிக்கும் திட்டம், நன்றாக் திட்டமிட்டப்பட்டு நடைமுறைப்பட்டுத்தப்பட்ட திட்டம். வெற்றிகரமாக மேற்கு பாகிஸ்தானில் (இன்றைய பாகிஸ்தான்) செயல்படுத்தப்பட்டுவிட்டது. அதுவே இப்போது கிழக்கு பாகிஸ்தானிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
டி.என் பாராரி யை அமைச்சராக நியமித்ததும் அந்த விஷயத்தில் நான் செய்த பரிந்துரைகளுக்கு கிழக்கு வங்காள அரசு தந்த மோசமான விளக்கமும் இஸ்ஸாமிய அரசு என்று அவர்கள் அழைக்கும் அரசு எப்படி இருக்கும் என உறுதி செய்கிறது. இந்துக்களுக்கு பாகிஸ்தான் முழு திருப்தியையோ அல்லது முழு பாதுகாப்பையோ அளிக்கவில்லை. அவர்கள் இப்போது இந்து அறிவாளிகளை துரத்த முயற்சி செய்கிறார்கள். ஏனென்றால் அப்போது தான் பாகிஸ்தானின் சமூக,அரசியல், மற்றும் பொருளாதார வாழ்க்கை இந்து அறிவாளிகளால் மாற்றம் அடையாமல் இருக்கும்.
bangladesh-genocide-hindu-skullsஇணை ஓட்டுமுறையை தவிர்க்கும் செயல்கள்
28. எனக்குப் புரியாத விஷயம் என்னவென்றால் ஓட்டுமுறை பற்றிய கேள்வி இன்னமும் முடிவாகாமல் இருப்பது தான். சிறுபான்மை சப் கமிட்டி நிறுவப்பட்டு மூன்று வருடங்கள் ஆகின்றன. அது மூன்று முறை கூடி இருக்கிறது. இணை ஓட்டுப் பதிவா அல்லது பொது ஓட்டுப்  பதிவா எனும் விவாதம் கடந்த டிசம்பரில் கூடிய கமிட்டியின் விவாத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதில் எல்லா அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மையினரும் கலந்து கொண்டு அவர்களின் இணை ஓட்டு பதிவிற்கும், கூடவே பின் தங்கிய மைனாரிட்டிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படவேண்டும் என்பதற்கும் அவர்களின் ஆதரவைத் தெரிவித்தனர். கடந்த ஆகஸ்டில் நடந்த இந்த கமிட்டியின் மற்றொரு கூட்டத்திலும் இது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த விஷயம் பற்றிய எந்த விவாதமும் இல்லாமல் அந்த கூட்டம் காலவரையற்று ஒத்திவைக்கப்பட்டது. இந்த முக்கிய விஷயத்தில் பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் செய்யும் இந்த தவிர்க்கும் நடவடிக்கைகளின் பின் இருக்கும் காரணத்தை பற்றித் தெரிந்து கொள்ள எந்த சிரமமும் இருக்கவில்லை.
(முகம்மது நபிகளின் வழிகாட்டுதலில் பங்களாதேச இந்துக்களின் அப்போதைய ஒட்டுமொத்த நிலை என்ன? அடுத்த பாகத்தில் காண்போம்.)
தொடரும்….

10 ஜூன் 2011

ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு இருந்தால் தீட்டு பட்டுவிடுமா? (ஆர்.எஸ்.எஸ் தீண்டத்தகாத அமைப்பா?)


இருக்கிற மத்திய அமைச்சர்களில் மொழி ஆளுமை அதிகம் கொண்டவர், உள்துறை அமைச்சர் சிதம்பரம். அதுவும், தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழிகளிலும் வெளுத்துக் கட்டக் கூடியவர். தேர்ந்த வக்கீலான கபில் சிபலைப் போலவே, விஷய ஞானம் அதிகம் உள்ளவர் என்றும் சொல்லலாம். ஆனால், இவர்களின் ஞானமெல்லாம், குற்றம் செய்வதையே குல வழக்கமாகக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சிக்கு வக்காலத்து வாங்கவே பயன்படுவதால், அனைத்தும், விழலுக்கு இறைந்த நீராகிவிடுகின்றன.

அப்படி, சமீபத்திலும் கொஞ்சம் நீர் இறைத்திருக்கிறார் சிதம்பரம். "யோகா குரு பாபா ராம்தேவின், ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தூண்டுதல் உள்ளது' என முத்து உதிர்த்திருக்கிறார். எந்தச்சாமானியனும், "மன்மோகன் சிங்குக்கு அல்-கொய்தாவுடன் தொடர்பு இருக்கிறது' என்ற ரீதியில் தான் புரிந்துகொள்வான். அத்தனை அதிர்ச்சி தரத்தக்க வார்த்தைப்பிரயோகம். ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு, ஆர்.எஸ்.எஸ்.,சின் தூண்டுதல் இருந்தால் என்ன; ஆறுமுகச்சாமியின் தூண்டுதல் இருந்தால் என்ன? ஊழல் என்பது ஒழித்துக்கட்டப்பட வேண்டிய விஷயம் தானே! ஆர்.எஸ்.எஸ்.,சின் பின்னணி இருப்பதனாலேயே, அவர்களைப் புறந்தள்ளிவிட்டு, ஊழலைப் போற்றிப் பாட வேண்டுமா? அப்படி என்ன பயங்கரவாத செயலில் ஆர்.எஸ்.எஸ்., ஈடுபட்டுள்ளது? இந்தியாவில் இதுவரை நடந்த பயங்கரவாத சம்பவங்களுக்கும், ஆர்.எஸ்.எஸ்.,சுக்கும் நேரடித்தொடர்பை நிரூபிக்கும் எந்தவொரு ஆதாரமாவது உண்டா? மாலேகாவ்ன் குண்டுவெடிப்பிலும், அஜ்மீர் ஷெரீஃப் குண்டுவெடிப்பிலும் ஒரு சில ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களின் பெயர்கள் அடிபட்டன. இவர்களில், ஆர்.எஸ்.எஸ்., பிரசாரக் தேவேந்திர குப்தா கைது செய்யப்பட்டார். தகவல் அறிந்த உடனே, அவருடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்ட சங்கத்தின் மேலிடம், "போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயார்' என பகிரங்கமாக அறிவித்தது. இதே வழக்குகளில், ஆர்.எஸ்.எஸ்.,சின் மத்திய செயற்குழு உறுப்பினர் இந்த்ரேஷ் குமார் பெயர், மீடியாக்களில் பெரிய அளவில் அலசப்பட்டது. என்னவென்று? தேவேந்திர குப்தாவுக்கும், இந்த்ரேஷ் குமாருக்கும் தொடர்பு என்று. ஒரே அமைப்பில் இருக்கும் இருவர், தொடர்புகொள்ள மாட்டார்களா, என்ன? இருந்தாலும், "அப்படி யாரையும் நாங்கள் விசாரிக்கவில்லை' என சி.பி.ஐ., இயக்குனரே தெளிவுபடுத்தியிருக்கிறார்.

"ஆர்.எஸ்.எஸ்.,சில் இருக்கும் இருவர் மீது புகார் எழுந்ததே, ஆர்.எஸ்.எஸ்., மீது குற்றம் சாட்டுவதற்குப் போதுமானது' எனக் கொண்டால், காமன்வெல்த் ஊழலில் கைது செய்யப்பட வேண்டியவர் கல்மாடி அல்ல; அவரது கட்சித் தலைவர் சோனியா. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைது செய்யப்பட வேண்டியவர் ராஜா அல்ல; கருணாநிதி. இது ஒரு புறம் இருக்கட்டும். சிதம்பரம் சொன்னதைப் பின்தொடர்வோம்: கர்நாடகா மாநிலத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., உயர்மட்டக் குழுவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், "ஊழலுக்கு எதிராக எந்தத் தனி நபர்கள் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தினாலும், அதற்கு ஆதரவு தர வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வளவு அற்புதமான விஷயத்தை, எவ்வளவு பெரிய ஆபத்து போல சித்தரிக்கிறார், பாருங்கள். "ஊழலுக்கு எதிராக யார் போராடினாலும் ஆதரவு தரவேண்டும்' என்பதை, "தேசத்துக்கு எதிராக யார் போராடினாலும் ஆதரிக்க வேண்டும்' என்கிற தொணியில் திசை திருப்புகிறார். கர்நாடகா மாநிலம் புத்தூரில் நடந்த, அகில பாரதிய பிரதிநிதி சபாவின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன?

நாட்டில் தற்போது எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையில், ஊழலுக்கு எதிராகத் திரண்டுள்ள துணிச்சல் மிக்க தனி மனிதர்கள், நிறுவனங்கள், அரசியல் சாசன அமைப்புகள், விழிப்புணர்வு மிக்க ஊடகங்கள், கண்கொத்திப் பாம்பாகச் செயல்படும் நீதித்துறை ஆகியவற்றின் முயற்சிகளை, இந்தச் சபை பாராட்டுகிறது. மேலும், இதுபோன்ற புனிதப் பணிகளில், இந்தத் தேசத்தின் அனைத்து குடிமக்களும், ஆத்ம சுத்தியோடு, அர்ப்பணிப்பு உணர்வோடு, தங்களது ஆக்கப்பூர்வமான ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இப்படி முடிகிறது அந்தத் தீர்மானம். இதில் எந்த வரி தேச விரோதமாக இருக்கிறது? சிதம்பரம், மேலும் சொல்கிறார்: ஊழல் எதிர்ப்பு முன்னணி ஒன்றை ஆர்.எஸ்.எஸ்., அறிவித்துள்ளதாம். அதில் ஒரு புரவலராக பாபா ராம்தேவ் இருக்கிறாராம். "இதைவிட ஒரு தேச விரோத காரியத்தை, யாராவது செய்ய முடியுமா' என கேட்பார் போல. காங்கிரஸ் என்னும் கொள்ளைக் கூட்டத்தில் இவர்கள் முக்கிய பிரமுகர்களாக இருப்பார்களாம்; இவர்களை எதிர்க்கும் முயற்சியில் ஒருவரும் ஈடுபடக் கூடாதாம். என்ன நியாயம் இது? ஊழலுக்கு எதிராக யார் திரண்டாலும், காங்கிரசுக்கு எதிராகத் திரண்டதாக, இவர்களே அர்த்தம் பண்ணிக்கொள்கிறார்கள். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது. அதற்கு நாமென்ன செய்ய முடியும்? பி.கு.,: சீனப்போரின்போது சிறப்பாக செயல்பட்டதைக் கவுரவிக்கும் விதமாக, குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, அப்போதைய பிரதமர் நேருவால் அழைக்கப்பட்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.,

- ஆர்.ரங்கராஜ் பாண்டே - நன்றி : தினமலர் .....

04 ஜூன் 2011

கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-02


ராஜசங்கர்

ஜோகேந்திரநாத் மண்டலின் ராஜினாமாக் கடிதத்தின் மொழிபெயர்ப்பு தொடர்கிறது ….
முந்தைய பாகம்: பாகம் 1 
மூலம்: ஜோகேந்திர நாத் மண்டல்
தமிழில்: ராஜசங்கர்
வங்காளப் பிரிவினை
8. இந்த விஷயத்துடன் நான் வங்காளப் பிரிவினையை எதிர்த்தேன் என்பதும் இந்த இடத்தில் சொல்லப்படவேண்டும்.  இதன் தொடர்பாகப் பரப்புரையை தொடங்கிய போது எல்லா பக்கங்களில் இருந்தும் பெருவாரியான எதிர்ப்பை மட்டுமல்லாது சொல்லமுடியாத அவமானம், இழிசொற்களைச் சந்திக்கவேண்டியிருந்தது.
மிகுந்த வேதனையோடு இந்திய-பாகிஸ்தானிய துணைக்கண்டத்தில் இருந்த முப்பத்திரண்டு கோடி இந்துக்களும் என்னை புறக்கணித்து என்னை இந்துக்கள் மற்றும் இந்து மதத்தின் எதிரி என்று சொல்லிய நாட்களை நினைவுகூர்கிறேன். ஆனால் என்னுடைய பாகிஸ்தானிய விசுவாசம் இவற்றால் பாதிக்கப்படவோ அல்லது மாறவோ இல்லை. என்னுடைய அழைப்பை ஏற்று பதிலளித்த வங்காளத்தின் 70 லட்சம் பட்டியல் வகுப்பினருக்கு என்னுடைய நன்றிகள். அவர்கள் எனக்கு மாறாத ஆதரவும் ஊக்கமும் அளித்து வந்தார்கள்.
bangladesh-1971-hindu-circumcised
9. ஆகஸ்டு 14, 1947 இல் பாகிஸ்தானின் உருவாக்கத்திற்கு பின் நீங்கள் பாகிஸ்தானின் அமைச்சரவையை அமைத்தீர்கள். அதில் நான் ஓர் அமைச்சராக பதவியேற்றேன். அதே போல் காஜா நஜிமூதீன் மேற்கு வங்களாத்தில் தற்காலிக அமைச்சரவையை அமைத்தார். ஆகஸ்ட் 10 இல் நான், காஜா நஜிமூதீன் கராச்சியில் இருந்தபோது பேசி, அவருடைய அமைச்சரவையில் இரண்டு பட்டியல் வகுப்பினரை அமைச்சர்களாக சேர்க்கும்படி கோரிக்கை வைத்தேன். அவர் அதை இன்னும் சில காலங்களில் செய்து விடுவதாக உறுதியளித்தார். ஆனால், அதன்பின்பு நீங்கள், காஜா நஜிமூதீன், மற்றும் இப்போதைய முதல் அமைச்சர் நூருல் அமீன் ஆகியோருடன் இதன் தொடர்பாக நடந்த விரும்பத்தகாத மற்றும் ஏமாற்றமளிக்கும் பேச்சுவார்த்தை நடந்தது.
எப்போது எனக்கு காஜா நஜிமூதீன் எதாவது ஒரு [வலுவற்ற] காரணத்தைச் சொல்லி இந்த விஷயத்தை தவிர்க்கிறார் என்று புரிந்ததோ அப்போது நான் பொறுமையிழந்து எரிச்சலடைந்தேன். மேலும் பாகிஸ்தானின் முஸ்ஸீம் லீக் தலைவருடனும் மேற்கு வங்களா முஸ்ஸீம் லீக்கின் தலைவருடனும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசினேன். கடைசியாக இதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.
நீங்கள் இந்த விஷயத்தை காஜா நஜிமூதீனுடன் என் முன்னால் உங்களுடைய வீட்டில் பேசினீர்கள். காஜா நஜிமூதீன் ஒரு பட்டில் வகுப்பு உறுப்பினரை தனது அமைச்சரவையில், தான் டாக்கா திரும்பியவுடன் சேர்ப்பதாக ஒப்புக்கொண்டார். ஏற்கனவே இந்த விஷயத்தில் காஜா நஜிமுதீனின் உறுதிமொழி மீது எனக்கு சந்தேகம் இருந்ததால் ஒரு காலரீதியான வரையறை செய்யுமாறு கேட்டேன். ஒரு மாதத்திற்குள் காஜா நஜிமுதீன் இதில் செயல்படவேண்டும் என்றும் இல்லாவிட்டால் நான் பதவி விலகிவிடுவேன் என்று வலியுறுத்தினேன். நீங்கள் மற்றும் காஜா நஜிமுதீன் இருவரும் இதற்கு ஒப்புக்கொண்டீர்கள். ஆனால் கடவுளே, நீங்கள் உண்மையோடு அந்த வார்த்தைகளை சொல்லவில்லை.
காஜா நஜிமூதின் தன்னுடைய உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. நூருல் அமீன், கிழக்கு வங்காள முதலமைச்சர் ஆன பின்பு இன்னும் ஒரு முறை இந்த விஷயத்தை அவருடன் பேசினேன். அவரும் முன் போல் பழைய தவிர்க்கும் செயல்களையே செய்தார். அப்போது நான் மீண்டும் அந்த விஷயத்தை உங்களின் 1949 டாக்கா பயணத்திற்கு முன் உங்களிடம் கொண்டு வந்தேன். அதற்கு நீங்கள் கண்டிப்பாக சிறுபான்மையினர் அமைச்சர் ஒருவர் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என உறுதியளித்தீர்கள். கூடவே அந்தப் பதவிக்கு இரண்டு அல்லது மூன்று பெயர்களைக் கேட்டீர்கள்.
உங்களுடைய சொல்லிற்கு மதிப்பளித்து நான் கிழக்கு வங்காளத்தில் பெடரேஷன் குழுமத்தில் இருந்து மூன்று பெயர்களை உங்களுக்கு அனுப்பினேன். பின்பு அதைப்பற்றி நீங்கள் டாக்காவில் இருந்து திரும்பிய பின்பு விசாரித்தபோது, நீங்கள் வெறுமனே “நூருல் அமின் தில்லியில் இருந்து வரட்டும்” என பதிலளித்தீர்கள். சில நாட்களுக்குப் பின்பு கேட்ட போதும் நீங்கள் அந்த விஷயத்தை தவிர்த்தீர்கள். நான் இந்த விஷயத்தில் நீங்களோ அல்லது நூருல் அமீனோ ஒரு பட்டியல் வகுப்பினரை அமைச்சவரையில் கொண்டுவர விருப்பம் இல்லாமல் இருக்கிறீர்கள் என புரிந்து கொள்ள தள்ளப்பட்டேன்.
இது மட்டுமல்லாது நூருல் அமீன் மற்றும் பல கிழக்கு வங்காள லீக் தலைவர்கள் பட்டியல் வகுப்பு உறுப்பினர்களிடையே பிரிவினையை உண்டாக்க முயல்கிறார்கள் என்பதும் என் கவனத்திற்கு வந்தது. என்னுடைய தலைமையும் மிகப்பரவலான புகழும் தவறாக கருதப்படுகிறது என எனக்குத்  தோன்றியது. பயமின்றி பேசும் என்னுடைய திறன், கண்காணிப்பு, மற்றும் பொதுவாக பாகிஸ்தானின் சிறுபான்மையினரின் விருப்பங்களையும் பட்டியல் வகுப்பினருடைய விருப்பங்களையும் அதிக கவனத்துடன்  காப்பாற்றுவதில் காட்டும் நேர்மை சில மேற்கு வங்காள அரசுக்கும், லீக் தலைவர்களுக்கு கவலை அளித்தது. இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் பாகிஸ்தானின் சிறுபான்மையினரை காப்பாற்றுவதில் நான் உறுதி பூண்டேன்.
இந்துக்களுக்கு எதிரான கொள்கை
10. வங்காளப்பிரிவினை பற்றிய கேள்வி எழுந்தபோது, பட்டியல் வகுப்பு மக்கள் பிரிவினையின் விளைவுகளைப் பற்றி அச்சம் கொண்டனர். அவர்களின் சார்பாக அப்போதைய வங்காள அமைச்சர் ஸரஹ்ர்தியிடம் இந்த பிரச்சினை எடுத்துச்செல்லப்பட்டது. அதற்கு அவர் பட்டியல் வகுப்பினரின் எந்த உரிமைகளும் பிரிவினையினால் பாதிக்கப்படாது எனவும் அவர்கள் அந்த உரிமைகளை அனுபவிக்கவும் கூடவே சில உரிமைகளும் அவர்களுக்கு தரப்படும் என்ற அறிக்கையை பத்திரிக்கைகளுக்கு வெளியிட்டார்.
இந்த உறுதிமொழி, ஸூரஹர்தியின் தனிப்பட்ட தகுதியினாலும் வங்காளத்தின் லீக் அமைச்சரவையின் முதலமைச்சர் என்ற முறையிலும் தரப்பட்டது. ஆனால், கடும் வருத்ததுடன் சொல்லப்படவேண்டியது என்னவென்றால் பிரிவினைக்குப் பின் அதுவும் முகம்மது அலி ஜின்னாவின் மறைவிற்குப் பின்பு பட்டியல் வகுப்பினர் அவர்களுடைய உரிமைகளைப் பெறவில்லை.
bangladesh-muslims-kill-hindu-friday-prayer
உங்களுக்கு நினைவு இருக்கும் என நம்புகிறேன், பட்டியல் வகுப்பினரின் பிரச்சினைகளைப் பற்றி உங்களுடைய கவனத்திற்கு நான் அவ்வப்போது கொண்டு வந்தது. கிழக்கு வங்காள அரசின் திறமையற்ற நிர்வாகத் திறமைகளைப் பற்றி நான் உங்களுக்கு விளக்கியது நினைவு இருக்கும் என நம்புகிறேன். நான், காவல்துறைக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தேன்.
ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காவல் துறை எடுத்த கொடூர நடவடிக்கைகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தேன். கிழக்கு வங்காள அரசினால், குறிப்பாகக் காவல் துறையினாலும் முஸ்ஸீம் லீக் தலைவர்களினாலும் கடைப்பிடிக்கப்படும் இந்துக்களுக்கு எதிரான கொள்கை பற்றி உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது பற்றி எந்த தயக்கமும் நான் காட்டியதில்லை.
சில சம்பவங்கள்
11. என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய முதல் சம்பவம் கோபால்கஞ் அருகில் இருக்கும் டிக்காகுல் (Digharkul ) எனும் கிராமத்தில் நடைபெற்றது. அங்கு போலியான குற்றச்சாட்டின் பேரில் முஸ்ஸீம்களின் கொடுமைகள் உள்ளூர் நாமசூத்திரர்கள் மீது நடைபெற்றது.
நடந்தது என்னவென்றால் ஒரு முஸ்ஸீம் படகில் சென்று மீன் பிடிக்க வலை வீசியுள்ளார். அப்போது அங்கு வந்த நாமசூத்திரர் ஒருவரும் அதே இடத்தில் வலை வீசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக ஆகியுள்ளது. இதனால் கோபமடைந்த முஸ்ஸீம், அருகில் இருக்கும் முஸ்ஸீம் கிராமத்திற்கு சென்று அவரும் அவருடன் வந்த பெண் ஒருவரும் நாமசூத்திரர்களின் கும்பலால் தாக்கப்பட்டதாக பொய் குற்றச்சாட்டு ஒன்றை அளித்துள்ளார்.

hindu-women-raped-by-muslims-islam-jihad
சமீபத்தில் வன்புணரப்பட்ட பங்களாதேச இந்துப் பெண்

அப்போது கோபால்கஞ் கால்வாய் வழியாக வந்த கோபால்கஞ் சப் டிவினசல் ஆபீசர் எந்த விசாரணையும் செய்யாமல் அந்தக் குற்றச்சாட்டை உண்மை என ஒப்புக்கொண்டு ஆயுதம் தாங்கிய காவல்துறையினரை சம்பவ இடத்திற்கு அந்த நாம சூத்திரர்களை தண்டிப்பதற்காக அனுப்பினார். ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் வந்தபோது உள்ளூர் முஸ்ஸீம்களும் அவர்களுடன் இணைந்து கொண்டார்கள்.
முஸ்ஸீம்கள், நாம சூத்திரர்களின் வீடுகளை கொள்ளையிட்டது போதாமல் ஆண்களையும் பெண்களையும் கடுமையாக தாக்கி, வீடுகளை சேதப்படுத்தினார்கள். இவர்களின் ஈவு இரக்கமற்ற தாக்குதலால் ஒரு கர்ப்பிணி பெண் அந்த இடத்திலேயே கரு கலைந்தாள். உள்ளூர் அதிகாரிகளால் நடத்தப்பட்ட இந்த ஈவு இரக்கமற்ற தாக்குதல் அங்கு வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
12. இரண்டாவது சம்பவம், 1949 ஆம் ஆண்டின் முதல் பகுதியில், பாரிசால் மாவட்டத்தில் இருக்கும் பி எஸ் கோர்னாடி (P.S. Gournadi) எனும் இடத்தில் நடைபெற்றது. அங்கு யூனியன் போர்டில் (உள்ளூர் பஞ்சாயத்து போன்ற அமைப்பு) இருந்த இரண்டு குழுக்களுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லாமல் இருந்தது. இதிலே ஒரு குழு உள்ளூர் காவல் துறை அதிகாரிகளின் நல்லெண்ணத்தை பெற்று இருந்ததால் அவர்களின் எதிரிகளைக் கம்யூனிஸ்டுகள் என்று சொல்லி ஒழிக்க சதித்திட்டம் தீட்டினார்கள்.
இந்தக் குழு தந்த போலியான தகவலான, உள்ளூர் காவல் நிலையம் தாக்கப்படும் என்பதின் அடிப்படையில், கோர்னாடி காவல் தலைவர் ஆயுதம் தாங்கிய படையை அனுப்புமாறு தலமையகத்தை கேட்டுக்கொண்டார்.  காவலர்கள், ஆயுதம் தாங்கிய படையுடன் உதவியோடு நிறைய வீடுகளை சோதனையிட்டு விலையுர்ந்த பொருள்களை கொள்ளையிட்டனர், இந்த வீடுகளில் இருந்தவர்கள் அரசியலிலேயே ஈடுபட்டதில்லையாதலால் கம்யூனிஸ்டுகளாக இருக்கும் வாய்ப்பு இல்லவே இல்லை. பெருவாரியான மக்கள் கைது செய்யப்பட்டனர். ஆங்கில பள்ளிகளில் படித்த மாணவர்களும் வேலை செய்த ஆசிரியர்களும் அவர்கள் கம்யூனிஸ்டாக இருப்பார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் துன்புறுத்தப்பட்டனர். அந்த பகுதி என்னுடைய பூர்வீக கிராமத்திற்கு மிகவும் அருகில் இருப்பதால் எனக்கு இந்த சம்பவம் தகவல் சொல்லப்பட்டது. மாவட்ட நீதிபதிக்கும் காவல்துறை கண்கானிப்பாளருக்கும் இந்த நிகழ்வு பற்றி விசாரணை தேவை என கடிதம் எழுதினேன்.
அங்கிருக்கும் உள்ளூர் மக்களில் பலரும் சப் டிவிசனல் ஆபிசருக்கு விசாரணை வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. மாவட்ட தலமையகத்திற்கு என்னால் எழுதப்பட்ட கடிதங்களுக்கு கூட பதில் இல்லை. இந்த விஷயத்தை நீங்கள் உட்பட பாகிஸ்தானின் உயர்மட்ட தலைவர்களிடம் கொண்டு வந்தேன் ஆனால் எந்த பலனும் இல்லை.
இரவு முழுவதும் இழிவுக்குள்ளான இந்துப் பெண்கள்
13. ராணுவத்தினர் மற்றும் காவல் துறையினரால் அப்பாவி இந்துக்கள் அதிலும் குறிப்பாக பட்டியல் வகுப்பினர் மீது ஷில்ஹெட் மாவட்டத்தில் இருக்கும் ஹபிப்கார் எனும் ஊரில் நடத்தப்பெற்ற கொடூரங்களை பற்றி சொல்லியாகவேண்டும். அப்பாவி ஆண்களும் பெண்களும் கொடூரமாக தாக்கப்பட்டனர், பல பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், முஸ்ஸீம்களாலும் காவல் துறையினராலும் வீடுகள் தாக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. ராணுவத்தினர் உள்ளூர் மக்களை கொடுமை படுத்துதல், இந்துக்கள் வீடுகளில் இருந்து பொருட்களை எடுத்துச்செல்லும் போனற கொடூரங்களுடன் இந்துக்களை துன்புறுத்தி இந்து பெண்களை இரவு ராணுவ முகாமுக்கு வரவைத்து அவர்களின் ஆசையை தீர்த்துக்கொண்டார்கள். இந்த உண்மையும் கூட உங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. நீங்கள் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தீர்கள், ஆனால் எதுவும் செய்யப்படவில்லை.
14. அதன் பின்பு, ராஜ்சாஷி மாவட்டத்தில் இருக்கும் நாச்சோல் (Nachole) எனும் இடத்தில் கம்யூனிஸ்டுகளை ஒடுக்குகிறேன் என்ற பெயரில் காவல் துறையும் உள்ளூர் முஸ்ஸீம்களும் இணைந்து இந்துக்களை துன்புறுத்தி அவர்களின் உடமைகளை கொள்ளையடித்தார்கள். அந்த சந்தால்கள் எல்லையை தாண்டி மேற்கு வங்காளத்திற்கு வந்தார்கள். அவர்கள் முஸ்ஸீம்களும் காவல்துறையும் இணைந்து நடத்திய கொடுமைகளை விவரித்தார்கள்.
15. கொடும் கோரமான அடக்குமுறைகள் டிசம்பர் 20, 1949 இல் காகுலானா (Khulna) மாவட்டத்தில் பி.எஸ், மோல்ஹாரட் (P.S. Mollarhat ) கீழிருக்கும் கால்ஷிரா (Kalshira ) கிராமத்தில் நடந்தன. நடந்தது என்னவென்றால், ஜோய்தேவ் பிராஹ்மனா எனபவரின் வீட்டில் சில தேடப்படும் கம்யூனிச குற்றவாளிகள் இருக்கிறார்கள் என தேடுதல் வேட்டையில்  பின்னிரவு வேளையில் நான்கு காவலர்கள் ஈடுபட்டார்கள். காவலர்கள் வரும் அறிகுறியில் கம்யூனிஸ்டுகளாகச் சொல்லப்படும் சில இளைஞர்கள் அந்த வீட்டில் இருந்து தப்பித்தார்கள்.
ஒரு காவலர் ஜோய்தேவ் இன் வீட்டில் நுழைந்து அவருடைய மனைவியை தாக்கியுள்ளார், அவருடைய சத்தம் கேட்டு ஜோய்தேவும் அவருடன் தப்பித்த இளைஞர்களும் திரும்பி வந்தார்கள். அவர்கள் அவரசத்திலும் வேறு வழியில்லாததாலும் வீட்டினுள் நுழைந்த போது அங்கு துப்பாக்கியுடன் இருந்த நான்கு காவலர்களைக் கண்டார்கள். அந்தச் சூழ்நிலையில் உந்தப்பட்டவர்களாக அந்த காவலரை அடித்தார்கள். அந்த அடியில் அவர் அங்கேயே உயிரிழந்தார். இளைஞர்கள் அடுத்த காவலரை தாக்கும் போது மற்ற இருவரும் தப்பித்து ஓடி அருகில் இருக்கும் கிராமத்தினரை உதவிக்கு அழைத்து வந்தார்கள். இது சூரிய உதயத்திற்கு முன்பு நடந்ததால் இளைஞர்கள், இறந்தவரின் உடலோடு தப்பித்து விட்டார்கள்.
hindu-women-raped-by-muslims-bangladesh
காலானா வின் காவல்துறை கண்காணிப்பாளர், அன்று மதியம் அந்த இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினரோடு வந்தார். இடைப்பட்ட வேளையில் அந்த தாக்குதல் நடத்தியவர்களும் பக்கத்து வீட்டினரும் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். ஆனால் பெரும்பான்மையான கிராமத்தினர் நடந்த சம்பவத்தின் விளைவுகள் பற்றி அறியாமல் வீட்டிலே தங்கியிருந்தார்கள். தொடர்ந்து,  ராணுவம் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரின் கீழுள்ள காவல்துறையினர் இணைந்து அப்பாவி இந்து கிராம மக்களை அடித்துத் துன்புறுத்த தொடங்கினார்கள்.
கூடவே அருகில் இருக்கும் முஸ்ஸீம்களை அழைத்து இந்த வீடுகளை கொள்ளையடிக்க உதவினார்கள். பல பேர் இதில் கொல்லப்பட்டார்கள், ஆண்களும் பெண்களும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். வீடுகளில் இருந்த தெய்வ உருக்கள் உடைக்கப்பட்டு, வழிபாட்டு இடங்கள் சேதப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டன. பல பெண்கள், ராணுவத்தினராலும் காவல் துறையினராலும் உள்ளூர் முஸ்ஸீம்களாலும் கற்பழிக்கப்பட்டனர்.
இப்படி, நரகக் கொடூரங்கள், ஒன்றில் இருந்து ஒன்றரை மைல் நீளம் இருக்கும் பெருவாரியான மக்கள் தொகை கொண்ட கால்ஷீரா கிராமத்தில் மட்டுமல்லாது அருகில் இருக்கும் பல கிராமங்களிலும் கட்டவிழக்கப்பட்டது. இந்த கால்ஷிரா கிராமம் ஆனது ஒருபோதும் கம்யூனிஸ்டுகள் இருந்ததாக சந்தேகப்படாத கிராமம் ஆகும்.
இன்னோரு கிராமம் ஆன ஜலார்தண்கா (Jhalardanga). கால்ஷிரா கிராமத்தில் இருந்து மூன்று மைல் தூரத்தில் இருக்கிறது, அது கம்யூனிஸ்டு நடவடிக்கைகளுக்கு பெயர் போனது ஆகும். ஒரு தடவை காவல்துறையினரின் பெரும் படை கம்யூனிஸ்டுகளை தேடும் வேட்டையில் வந்தபோது ஜலார்தண்கா கிராம மக்கள் இந்த கால்ஷீரா கிராமத்தில் அடைக்கலம் புகுந்தார்கள், ஏனென்றால், இந்த கால்ஷீரா கிராமம் பாதுகாப்பான கிராமம் ஆகும்.
16. நான் அந்த கால்ஷிரா கிராமத்திற்கும் அருகில் இருக்கும் ஒரு சில கிராமங்களுக்கும் பிப்ரவரி 28, 1950 இல் சென்றேன். குலானாவின் காவல்துறை கண்காணிப்பாளரும் முஸ்ஸீம் லீக்கின் சில தலைவர்களும் என்னுடன் இருந்தனர். எப்போது அந்த கால்ஷீரா கிராமத்திற்கு போன போது அந்த கிராமம் உருக்குலைந்து இடிபாடுகளாக இருந்தது. காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் அந்த கிராமத்தில் 350 குடும்பங்கள் இருந்ததாகவும் ஆனால் இப்போது மூன்று வீடுகளைத் தவிர மற்றவை இடிக்கப்பட்டதாகவும் என்னிடம் சொல்லப்பட்டது. நாம சூத்திரர்களுக்கு சொந்தமான படகுகளும் கால்நடைகள் எல்லாமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. நான் இந்த உண்மைகளை முதலமைச்சர், முதன்மை செயலாளர், தலைமை காவல் ஆய்வாளர் மற்றும் உங்களுக்கும் எழுதினேன்.
17. இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்லப்படவேண்டும். இந்த சம்பவங்கள் மேற்கு வங்காள பத்திரிக்கைகளில் வெளிவந்து அங்கிருந்த இந்துக்களிடம் அமைதியின்மையை ஏற்படுத்தியது. கால்ஷீராவில் பாதிக்கப்பட்ட ஆண்களும் பெண்களும், வீடு இல்லாதவர்கள், ஆதரவற்றவர்கள் என அனைவரும் கல்கத்தாவுக்கு வந்து அவர்களின் கொடுமைகளைச் சொல்லினர். அதனால் ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் மேற்கு வங்காளத்தில் மதக்கலவரம் ஏற்பட்டது.
பிப்ரவரி தொந்தரவின் காரணங்கள்
 18. இந்த இடத்தில் குறிப்பிடவேண்டியது என்னவென்றால் மேற்கு வங்காளத்தில் கால்ஷீரா மற்றும் அதன் தொடர்புடைய சம்பவங்களுக்குப்  பதிலடியாக சில மதக்கலவரங்கள் நடந்த செய்திகள் கிழக்கு வங்காள பத்திரிக்கைகளில் உருப்பெருக்கி சொல்லப்பட்டன. 1950 பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் கிழக்கு வங்காள சட்டமன்றத்தின் நிதிநிலை கூடுகை ஆரம்பித்தபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள், கால்ஷீரா மற்றும் நச்சோலி பற்றி விவாதிக்க இரண்டு ஒத்திவைப்பு தீர்மானங்கள் கொண்டு வர அனுமதி கேட்டார்கள். ஆனால், அந்தத் தீர்மானங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

bangladeshgenocide-islam-jihad
அப்பாவி ரிக்‌ஷாக்காரர்களையும் அழித்த அமைதி மார்க்கம்

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தார்கள். இந்து உறுப்பினர்களின் இந்த நடவடிக்கை அங்கிருந்த அமைச்சர்களை மட்டுமல்லாது மாநிலத்தின் முஸ்ஸீம் தலைவர்களையும் அதிகாரிகளையும் எரிச்சலடையச் செய்தது. இதுதான் ஒருவேளை பிப்ரவரி 1950 இல் நடந்த டாக்கா மற்றும் கிழக்கு வங்காள கலவரங்களின் முதன்மை காரணமாக இருக்கலாம்.
19. பிப்ரவரி 10, 1950 ஆம் திகதி காலை பத்துமணிக்கு ஒரு பெண் அவளுடைய மார்பகங்கள் அறுக்கப்பட்டதாகக் காண்பிக்க சிகப்பு நிற மையால் வண்ணம் தீட்டப்பட்டு கிழக்கு வங்காள தலைமைச் செயலகம் முன்பு கொண்டு வரப்பட்டாள். உடனே செயலகத்தில் இருந்த அரசு அதிகாரிகள் வேலையை நிறுத்தி விட்டு வெளியேறி ஊர்வலமாக புறப்பட்டு இந்துக்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி பழிவாங்க கோரினார்கள். இந்த ஊர்வலம் ஒரு மைல் தூரம் போன போது கூட்டம் சேர ஆரம்பித்தது.
அது 12 மணிக்கு விக்டோரியா பூங்காவில் சேர்ந்தது, அங்கு இந்துக்களுக்கு எதிரான இன்னும் மோசமான பேச்சுக்கள் பல தலைவர்களாலும் அரசு அதிகாரிகளாலும் பேசப்பட்டன. இந்த இடத்தில் சிரிப்பான செயல் என்னவென்றால் இந்த முழு நாடகம் செயலகத்தின் ஊழியர்களால் நடத்தப்படும் போது கிழக்கு வங்காளத்தின் தலைமைச் செயலர், மேற்கு வங்காள தலைமைச் செயலருடன் எவ்வாறு இரண்டு வங்காளங்களிலும் மதக்கலவரங்களை ஒழிப்பது என்பது பற்றி பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்.
அரசு அதிகாரிகள் கொள்ளையர்களுக்கு உதவினர். 
20. கலவரம் மதியம் ஒரு மணிக்கு நகரத்தின் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் ஆரம்பித்தது. முழு மூச்சில் நகரத்தின் எல்லா இடங்களிலும் தீ வைத்தல், இந்து கடைகள், மற்றும் வீடுகளைக் கொள்ளையிடுதல், மற்றும் இந்துக்களைக் கொல்லுதல் என்பவை இந்துக்களைக் கண்ட இடத்திலே செய்யப்பட்டன. இந்தக் கொலை, கொள்ளை போன்றவை காவல்துறை உயரதிகாரிகள் முன்னிலையிலே நடைபெற்றதற்கான ஆதாரம் எனக்கு முஸ்ஸீம்களிடம் இருந்தும் கூட கிடைத்தன. 

எம்மதமும் சம்மதம் என்றோமே....

 இந்துக்களுக்குச் சொந்தமான நகைக்கடைகள் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலேயே கொள்ளையிடப்பட்டன. அந்தக் காவலர்கள், கொள்ளையை தடுக்கத் தவறியது மட்டுமல்லாது கொள்ளையடிப்பவர்களுக்கு அறிவுரை சொல்லி உதவினர். என்னுடைய துரதிர்ஷ்டவசமாக நான் அதே நாள் 5 மணிக்கு டாக்காவிற்கு சென்றேன். என்னுடைய கடும் வருத்ததிற்கு காரணமாக இந்த சம்பவங்களை அருகில் இருந்து பார்க்கும் துர்ப்பாக்கியத்தை பெற்றேன். நான் அங்கு பார்த்ததும் அருகில் இருந்தவர்களிடம் கேட்டதும் இதயத்தில் வலியை உண்டாக்குவதும் நம்பமுடியாததும் ஆகும்.
(தொடர்ச்சியாக நடக்கும் வரலாற்று உண்மைகள் தொடரும்…)