Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

30 மார்ச் 2011

தி.மு.க., விரோதி; அ.தி.மு.க., துரோகி:திருப்பூரில் ராமகோபாலன் பேச்சு

election 2011 தி.மு.க., விரோதி; அ.தி.மு.க., துரோகி:திருப்பூரில் ராமகோபாலன் பேச்சு திருப்பூர்:""தி.மு.க., விரோதி; அ.தி.மு.க., துரோகி; நமது ஓட்டு பா.ஜ.,வுக்கே,'' என, இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் பேசினார்.சாய ஆலைகளின் கழிவுநீர் சுத்தகரிப்பு செய்யும் பணியை, அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில், தேர்தல் விளக்க பொதுக்கூட்டம், திருப்பூர் அரிசிக்கடை வீதியில் நடந்தது.நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் பேசியதாவது: பின்னாலாடை தொழில் வளர்ச்சியால் திருப்பூரை உலகமே திரும்பி பார்க்கிறது. ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி வெளிநாட்டு உற்பத்தி, 5,000 கோடி ரூபாய்க்கு உள்நாட்டு உற்பத்தி நடக்கிறது. பல லட்சம் தொழிலாளர்களை வாழ வைத்த, இத்தொழிலை காப்பாற்ற அரசியல் கட்சிகள் தவறிவிட்டன. 
வரும் தேர்தலில் அனைவரும் பா.ஜ.,வுக்கு ஒட்டு போட வேண்டுமென வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய வேண்டியது இந்து முன்னணியின் கடமை . தமிழகத்தில் ஆறு லட்சம் கோவில்கள் உள்ளன. கோவில் பூசாரிகளுக்கு சைக்கிள் வழங்குகிறார்களே; எங்கிருந்து எடுக்கப்படுகிறது நிதி; கோவில் பணத்தில் இருந்து தான் என்பதை புரிந்து கொண்டு வாக்களியுங்கள். மத மாற்றத் தடை சட்டம் பேசியவர்கள் எல்லாம், இன்று இலவசத்துக்கு மாறிவிட்டனர்.நம் வெற்றியை பதிவு செய்ய வலுவாக, இந்து ஓட்டு வங்கியை உருவாக்க வேண்டும். தி.மு.க., விரோதி; அ.தி.மு.க., துரோகி; நமது ஓட்டு பா.ஜ.,வுக்கே. நமக்கு சம நீதி, சம உரிமை, சம வாய்ப்பு வழங்குபவர்கள் பா.ஜ.,வினர் தான். எனவே, பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டு போடுங்க, என்றார்.

29 மார்ச் 2011

பா.ஜ.க. வேட்பாளருக்கு வாக்கு கேட்டு மாநில செயலாளர் அதிரையில் உரை:

நடைபெரவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. நமது பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் பா.ஜா.க சார்பாக வழக்கரிஞர் V.முரளிகணேஷ் BA.BL அவர்கள் போட்டியிடுகிறார்கள்.
  இவருக்கு வெற்றியின் சின்னமாம் "தாமரை" சின்னத்தில் வாக்களியுங்கள் எனக்கேட்டு பா.ஜ.க மாநில செயலர் H.ராஜா அவர்கள் வாக்கு சேகரித்தார். அவர் தனது உரையில் "குஜராத் மாநிலத்தில் முதல்வர் நரேந்திர மோடி" அவர்களின் பொற்கால ஆட்சி பற்றி எடுத்துறைத்தார். பின் தமிழக அரசின் 1,76,400 கோடி ஊலல், காமன்வெல்த், ஆதர்ஸ் ஊலல் ஆகியவற்றை பற்றி சொற்பொழிவாற்றினார்.      மத்திய, மாநில அரசுகள் ஊழல் மிக்கதாக உள்ளது. 44 ஆண்டு அ.தி.மு.க.,- தி.மு.க., என தேர்ந்தெடுத்து இந்நாட்டில் என்ன வளர்ச்சியை கண்டீர்கள். விலைவாசி உயர்வு, ஊழலைத்தான் கண்டுள்ளோம். காமன்வெல்த் போட்டியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. ஸ்பெக்ட்ரத்தால் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. டில்லியில் டி.எம்.கே., என்றால், "டில்லி மணி ஃபார் கருணாநிதி' என்கின்றனர்.

கடந்த 1967ல் ஒன்றில் இருந்து ஐந்து வயது வரை பள்ளியில் கட்டாயம் தமிழ் பாடமாக இருந்தது. இன்று தமிழின காவலர்களாக கூறிக் கொள்ளளும் இவர்கள் ஆட்சியில் அ, ஆ தெரியாத எத்தனை ஆயிரம் டாக்டர்கள், இன்ஜினியர்கள், நீதிபதிகளை உருவாக்கி தமிழே தெரியாத ஒரு தலைமுறை தமிழினத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள். ஒரு லட்சம் தமிழர்கள் கொலை செய்யப்பட, 3 லட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட, 85 ஆயிரம் தமிழ் பெண்கள் விதவைகளாக இருக்க சோனியா தான் காரணம். அதை மானமுள்ள தமிழர்கள் மறக்கக்கூடாது.

"சுனாமி' வந்தபோது இவர்கள் எல்லாம் எங்கே போனார்கள். புரட்சி வசனம் பேசிய கருப்பு எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் தன் படைகளை கொண்டு உதவி செய்யவில்லை. வீணாய் போன வீரமணி எங்கே போனார்? என, சிந்தித்து பாரதிய ஜனதா வேட்பாளர் முரளிக்கு ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

26 மார்ச் 2011

தமிழக பா.ஜ.க. தேர்தல் அறிக்கை 2011


தமிழக பா.ஜ.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. பா.ஜ.க. முன்னாள் அகில இந்திய தலைவர் பங்காரு லட்சுமணன் இந்த அறிக்கையை வெளியிட்டார். அதை விவசாயி, மீனவர், தாழ்த்தப்பட்டோர் ஆகிய 3 பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர். மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பற்றி கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 44 ஆண்டுகளாக நடந்து வரும் இருண்ட ஆட்சியை
அகற்றி விட்டு, உன்னதமான ஆட்சியைத் தர முடியும் என்ற நம்பிக்கை பா.ஜ.க.வுக்கு உள்ளது. அதன்படி இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

* தமிழர்களின் உண்மையான புத்தாண்டான சித்திரை 1ந்தேதி தமிழ் புத்தாண்டாக அறிவிப்போம்.

* சிறுபான்மை மாணவி களுக்கு வழங்குவது போல இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

* அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப்பாடம் ஆக்கப்படும்.

* மாணவர்களுக்கு வருட தொடக்கத்திலும், தேர்வு நேரத்திலும் பேனா, பென்சில் இலவசமாக கொடுக்கப்படும்.

* அரசு பள்ளிகளில் மேல்நிலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கொடுக்கப்படும்.

* 6-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு யோகா, தியானம் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படும்.

* வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும், தாய்க்கும் ஓராண்டு இலவச பால் கொடுக்கப்படும்.

* பெண் குழந்தை பிறந்தால் அந்த குழந்தை பெயரில் வங்கியில் ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும்.

* ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை இலவசமாக நடத்தப்படும்

* சுய உதவிக்குழுக்கள் மூலம் "நாப்கின்"கள் தயா ரித்து ஏழைப் பெண்களுக்கு ரேசன் கடைகள் மூலம் இலவசமாக கொடுக்கப்படும்.

* பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டம் இயற்றப்படும்.

* இரட்டை தம்ளர் முறை ஒழிக்கப்படும்.

* நதிநீர் இணைப்பு கொள்கைப்படி தமிழக நதிகள் இணைக்கப்படும். முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* விவசாயத்துக்காக தனி பட்ஜெட் போடப்படும்.

* மலிவு விலையில் விவசாயிகளுக்கு விதைகள் கொடுக்கப்படும். மரபு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் விற்பது தடை செய்யப்படும்.

* ஏழைக் குடும்பங்களுக்கு வீட்டுக்கு ஒரு கறவை பசுமாடு குறைந்த விலையில் கொடுக்கப்படும்.

* கச்சத்தீவை திரும்ப பெற்று தமிழர்களின் மீன்பிடி உரிமை நிலைநாட்டப்படும்.

* அரசே சூப்பர் மார்க்கெட் நடத்தும்.

* மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.

* பூரண மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும். அதுவரை விவசாயிகள் நலன்கருதிகள் இறக்க அனுமதிக்கப்படும்.

* இந்து கோவில்கள் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.

* அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர்களாக பணியாற்ற ஏற்பாடு செய்யப்படும்.

* வழிபாட்டு உரிமை என்பது கட்டாயமாக மதம் மாற்றும் உரிமை ஆகாது. எனவே அச்சுறுத்தி ஆசைகாட்டி மதம் மாற்றுவது கிரிமினல் குற்றமாகும். எனவே கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும்.

இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில் பா.ஜ.க. சார்பில் 194 பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். எங்கள் வேட்பாளர்களின் நேர்மை, தூய்மை, உழைப்பை மக்களுக்கு இலவசமாக வழங்குகிறோம். யார் வெற்றி பெற வேண்டும், யாரால் தூய்மையான ஆட்சியை தரமுடியும் என்பதை முடிவு செய்து வாக்களியுங்கள் என்றார். அகில இந்திய செயலாளர் முரளிதரராவ் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு தலைவர் எத்திராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

25 மார்ச் 2011

நரேந்திர மோடி ஒரு மிக சிறந்த நிர்வாகி; விக்கிலீக்ஸ் இணையதளம்


தேசிய அரசியலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கவனம் செலுத்துவது தொடர்பாக அமெரிக்கா கவலைப்படுவதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், "நரேந்திர மோடி ஒரு மிக சிறந்த நிர்வாகி" என 2006ஆம் ஆண்டு அப்போதைய இந்தியாவுக்கான அமெரிக்கத்தூதரக அதிகாரி மைக்கேல் எஸ். ஓவன், தமது-நாட்டுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார் .
இந்த நிலையில், காந்தி நகரில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்த நரேந்திர மோடி; இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டை தடுக்க-வேண்டும் என கூறினார் .
விக்கிலீக்ஸ் இணையதள தகவல் குறித்து கேட்டபோது, மும்பையில் அமெரிக்க-தூதர் ஓவனை சந்தித்தேன்.அப்போது குஜராத் மாநிலத்தை பற்றி இருவரும் விவாதித்தோம் .
அப்போது-அவரிடம் "எங்களுக்கு யோசனை சொல்லாதிர்கள் . நீங்கள் எப்படிப்பட்ட மனித உரிமை மீறல்களை-செய்கிறீர்கள் என்பது தெரியும்" மனித உரிமை குறித்து அமெரிக்கா இந்தியாவுக்கு உபதேசம் செய்ய கூடாது என தெரிவித்தேன் . அந்த பேச்சு விவரம் மாற்றம் செய்யபடாமல் அப்படியே அனுப்பப்பட்டுள்ளது.
நான் ஊழல்-செய்யாதவன் என்பது இப்போதும் அமெரிக்காவுக்கு தெரியும் .விக்கிலீக்ஸ் இணைய தகவல்கள் இந்திய அரசு மற்றும் குஜராத் மாநில வளர்ச்சி ஆகிய இரண்டு முகங்களை காண்பிப்பதாக அமைந்துள்ளது" என மோடி மேலும் தெரிவித்தார்.
adirai hindus talk; நரேந்திர மோடி போன்ற மிகசிறந்த ஒரு நிர்வாகி இந்தியாவை ஆழ்வதற்கு அமெரிக்கா என்றும் விரும்பியது இல்லை , அமெரிக்காவின் இந்த விருப்பத்தை காங்கிரஸ் காலம் காலமாக நிறைவேற்றி வருகிறது, எனவே தான் காரணமே இல்லாமல் நம்ம நாட்டு பிரதமருக்கு நல்ல நிர்வாகி விருது , நல்ல பிரதமர் விருது என விருதுகளை வாரி வழங்கி வருகின்றனர், நரேந்திர மோடியை இந்திய பிரதமராக ஆக்குவதில் அனைவரும் ஒன்றுபட வேண்டும்....

இலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம்


இலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம்

ந்துமதம் மிகப்பழைய காலத்திலேயே இந்தியா,இலங்கை உள்ளிட்ட பரதகண்டப்பகுதி முழுவதிலும் அதற்கப்பால் தென்கிழக்காசியப் பகுதிகளிலும் மேலும் உலகமெங்கிலும் பரவி விரவியிருந்தது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன என்பது ஆய்வாளர்களின் கருத்து. இந்த வகையில் இலங்கையில் பண்டைக்காலம் தொட்டு எவ்வாறெல்லாம் இந்துமதம் சிறப்புற்றிருந்தது என்று சுருக்கமாக ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இலங்கை வரலாறு பற்றிப் பேசும் நூல்களில் மகாவம்சம் என்ற பாளி மொழியிலமைந்த நூல் முதன்மையானது. இது பௌத்தத் துறவிகளால் எழுதப்பெற்றது.இந்நூல் மூலமாக இலங்கையில் மிகப்பழைய காலத்திலேயே இந்து மதம்- முக்கியமாக சைவசமயம் இருந்திருப்பதாக அறியக் கூடியதாக உள்ளது.
இலங்கையில் பொ.மு 3ம் நூற்றாண்டில் அசோகப்பேரரசன் காலத்தில் பௌத்தம் பரப்பப்படுவதற்கு முன்னரே இந்த மதம் சிறப்பான நிலை பெற்று விளங்கியிருக்கிறது. இலங்கையில் பௌத்தம் வந்த போது ஆட்சி செய்தவன் தேவநம்பியதீசன். அவனது தந்தையின் பெயர் முடசிவ என்பது. அவனது முன்னோர்களில் பலருக்கும் கிரிகந்தசிவ, மஹாசிவ, போன்ற பெயர்களே அதிகளவில் வழங்கியிருக்கின்றன. இது அவர்களது சைவப்பற்றையும் சிவநெறி வாழ்வையும் உறுதி செய்கிறது.
[பொ.மு - பொதுயுகத்துக்கு முன், BCE.  பொ.பி - பொதுயுகத்திற்குப் பின்,  CE (Circa)]
jaffna_old_coinபழங்கால நாணயங்கள் காட்டும் இந்துமதத்தொன்மை
இலங்கையில் கிடைத்த பொ.மு 3ம், 2ம் நூற்றாண்டுகளுக்குரிய நாணயங்கள் பலவற்றில் இடபஇலட்சிணைகள் இருப்பதாக வரலாற்றறிஞர்கள் காட்டுவர். இது குறித்து பேராசிரியர்.ப.புஷ்பரட்ணம் அவர்கள் இவை தமிழகத்து இடப நாணயங்களைக் காட்டிலும் வேறுபாடாக இருப்பதால் அவை இலங்கைக்கே உரியன எனக் கருதுவதாகக் குறிப்பிடுவார்.
வேறு நாணயங்கள் சிலவற்றில் மகாலஷ்மி, சிவலிங்கம், சுவஸ்திகம், பூரணகும்பம், வேல், மயில், சேவல் போன்ற உருவங்கள் செதுக்கப் பட்டிருப்பதாகவும் வரலாற்றாய்வாளர்கள் காட்டுகின்றனர். இவ்வாறான நாணயங்கள் இலங்கையின் கந்தரோடை, மாதோட்டம், நல்லூர், வல்லிபுரம்,அநுராதபுரம், புத்தளம், திசமகராம போன்ற இடங்களில் கிடைத்தன என்பர்.
இலங்கையில் பௌத்த சாசனங்கள் பலவற்றில் குமார, விசாக, மகாசேன போன்ற பெயர்கள் உள்ளன. இவையும் முருகவழிபாட்டின் அடையாளங்களை உணர்த்துவதாகவும் சில அறிஞர்கள் கருதுவர். இவ்வாறாக இலங்கையின் பல பாகங்களிலும் கிடைத்த பழங்கால நாணயங்களினூடாக இந்து மதம் பழைய காலத்திலேயே இங்கு நிலவியிருக்கிறது என அறியலாம்.
அரசரும் சமூகமும்
மகாவம்சத்தில் விஜயனது புரோஹிதனாக உபதிஸ்ஸ என்னும் பிராம்மண மரபினன் விளங்கினான் என்று கூறுகிறது. அது போல பண்டுகாபயன் என்ற இலங்கை வரலாற்றில் பிரபலமான அரசன் பண்டுல என்ற பிராம்மணனிடம் வில் வித்தை கற்றான். பண்டுலவின் மகனான சந்திரன் என்பான் பிற்காலத்தில் அவனது ராஜகுருவானான். சுமார் 22 மிகப்பழைய கால ஈழத்துப் பிராமிச் சாசனங்களில் பிராமணர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதை பேராசிரியர் சி.பத்மநாதன் எடுத்துக் காட்டுவார். இச்சாசனங்கள் யாவுமே பௌத்தசமயச் சார்பானது.இவ்வாறு பிராமணர்கள் சிறப்புற்றிருந்தமையானது இலங்கையில் இந்துசமயத்தின் செல்வாக்கைக் காட்டுவதாகக் குறிப்பிடுவர். இங்கே பிராமணர் என்று சாசனங்களால் குறிப்பிடப்படுபவர்கள் வேதம் கற்ற ஒழுக்க சீலர்களாகவே கருத முடியும் (அக்காலத்திலே பிராமணர்கள் ஜாதி மரபில் தான் உருவானார்கள் என்று கருத ஆதாரங்கள் இல்லை).
வாட்டிகதிஸ்ஸ என்ற பௌத்தஅரசன் காலத்தில் மஹாவிகாரை என்ற பௌத்த முக்கிய விகாரையினருக்கும் அபயகிரி விகாரையினருக்கும் ஏற்பட்ட தகராறை நீக்கவும்,அதை விசாரித்து தீர்க்கவும் மன்னனால் திக காரயண என்ற பிராமணன் அரசனால் நியமிக்கப்பெற்றான் என்று குறிப்பிடப்படுவது இக்கருத்திற்கு வலுவூட்டுகிறது.
isurumuniya_siva-parvathiபல்லவரும் சோழரும் இலங்கையும்
மாமல்லன் என்ற பல்லவப் பேரரசனின் சேனைகளின் துணையுடன் மானவர்மன் என்பான் இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது. இக்காலத்திலேயே தொண்டை மண்டலத்தில் சமஸ்கிருதத்தை எழுதுவதற்காக கிரந்தலிபி உருவாக்கம் பெற்றது என்பர். இந்தக் கிரந்த லிபி இன்று வரை இலங்கையில் தாராளமான புழக்கத்தில் இருக்கிறது. பல்லவக் காலத்தில் வரையப்பெற்ற சாசனங்கள் பலவற்றில் கூட இந்த லிபி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் சிகிரியா போன்ற இடங்களில் கிரந்த லிபியில் அமைந்த சாசனங்களைக் காணலாம்.இக்காலத்தைய பௌத்த ஆலயங்களான நாலந்தா கெடிகே மற்றும் தேனுவரைக்கோயில் போன்றன பல்லவ காலத்தில் எழுந்த காஞ்சி கைலாசநாதர் கோயில் போன்ற அமைப்பில் உள்ளது. இசுறுமுனிய என்ற இடத்தில் பிரபலமான இரு காதலர்களின் சிலை உள்ளது. இதை சில ஆய்வாளர்கள் உமாமஹேஸ்வரர் என்று கூறுகின்றனர். இவை ஏழாம் எட்டாம் நூற்றாண்டிற்குரியது.
இசுறுமுனியவில் குதிரைத் தலையின் அருகிலிருக்கும் வீரன் ஒருவனின் சிற்பம் ஒன்றும் இருக்கிறது. இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள கலாயோகி டாக்டர் ஆனந்த குமாரசுவாமி ‘இராமாயணத்தில் பாலகாண்டத்தில் வர்ணிக்கப்பெறும் கபில முனிவரின் வடிவமாக இதுவுள்ளது’ என்கிறார்.ஆம்ஸ்ரர்டாம் பல்கலைக்கழகப் பேராசிரியரான லொனாஹஸன் டீ லியூ என்ற உலகப்புகழ் ஆய்வாளர் இச்சிற்பத்தை ‘ஐயனார்’ என்று குறிப்பிடுவார். இதற்கு ஆதாரமாக அவர் தமிழகத்திலும் கர்நாடகத்திலுமுள்ள புராதன ஐயனார் சிலைகளுடன் இசுறுமுனிய சிற்பத்தை ஒப்பு நோக்கி ஒரு ஆழமான ஆய்வுக் கட்டுரை எழுதியிருக்கிறார்.
isurumuniya_iyanar
இராஜராஜனுக்குப் பின் பொ.பி 1016ல் பட்டம் ஏறியவன் இராஜேந்திர சோழன். அவன் கங்கையும் கடாரமும் தன் கையகப்படுத்தியவன். இவன் இலங்கையையும் தன் ஆட்சிக்குள் உட்படுத்திக் கொண்டு பேரரசனாகத் திகழ்ந்தான். இக்காலத்தில் இலங்கை ‘மும்முடிச் சோழமண்டலம்’ என்று அழைக்கப்பெற்றிருக்கிறது.இக்காலத்தில் மாதோட்டத்தில் சோழர்களால் திருவிராமேஸ்வரம், இராஜராஜேஸ்வரம் என்ற இரு சிவாலயங்கள் அமைக்கப்பெற்றிருக்கின்றன. இதைவிட உத்தமசோழீச்சரம்,பண்டித சோழீச்சரம் என்ற கோயில்களும் அமைக்கப்பட்டன.அது வரை காலமும் தலைநகராக விளங்கிய அநுராதபுரத்தை இவர்கள் பொலநறுவைக்கு மாற்றினர். புலத்திநகரே பொலநறுவையாயிற்று. இதற்கு சோழர்கள் வைத்த பெயர் ஜனநாதமங்கலம். இங்கும் பல சிவாலயங்கள் எழும்பின. இவற்றில் வானவன் மாதேவி ஈஸ்வரம் என்கிற கோயில் இன்று வரை சிறப்பாக உள்ளது. இக்காலத்தில் சதுர்வேதிமங்கலங்கள் என்ற குடியிருப்புக்களும் அமைக்கப்பெற்றிருக்கின்றன.
ஞானசம்பந்தரும் சுந்தரர் பெருமானும் பாடிய பெருமை
வாயுபுராணத்தில் கோகர்ண என்கிற சிவாலயமஹத் (பெரிய சிவாலயம்) பற்றி பேசப்படுகிறது. இது இலங்கையிலுள்ள திருக்கோணேஸ்வரத்தைக் கருதும் என்பது சிலரது அபிப்ராயம். இது பற்றி தெளிவாகக் குறிப்பிட முடியாவிடிலும் இத்திருத்தலம் ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தப் பெருமானால் ஒரு பதிகம் பாடிப் போற்றப்பெறுவது தெளிவாகக் கிடைக்கிறது. கிழக்கிலங்கையில் கடலோரம் காணப்படுகிறது இக்கோயில்.
தாயினும் நல்ல தலைவர் என்றடியார் தம்மடி போற்றிசைப்பார்கள்
வாயினும் மனத்தும் மருவி நின்றகலார் மாண்பினர் காண்பல வேடர்
நோயினும் பிணியும் தொழிலர்பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே
இப்படியாக இந்தப் பதிகம் திருக்கோணேஸ்வரத்திற்காக அமைந்துள்ளது.
koneswaram temple
இத்தலத்தில் மாதுமையம்பாள் உடனாக கோணநாதர் விளங்குகிறார். கோயில் தீர்த்தம் பாவநாசம். சிறிய அழகிய மலை மீது இக்கோயில் இருக்கிறது. தட்சண கைலாசபுராணம், கோணேசர் கல்வெட்டு, திரிகோணாசலபுராணம், திருகோணமலை அந்தாதி என்ற பல்வேறு பழந்தமிழ் இலக்கியங்கள் இத்தலம் குறித்து எழுந்துள்ளன. கோகர்ணேஸ்வரம் என்றும் கூறப்பெறும் இக்கோயிலை நேபாளத்தில் உள்ள கோகர்ண, மற்றும் கலிங்கதேசத்தில் இருந்த கோகர்ண, மேலும் மேற்கிந்தியாவில் கர்நாடகாவில் உள்ள கோகர்ண என்கிற சிவாலயங்களுடன் ஒப்பிடுவர்.
ஆக, ஜம்பூத்துவீபத்தின் நாற்றிசையிலும் கோகர்ண என்கிற சிவாலயங்கள் சிறப்புற்றிருந்துள்ளன. அவற்றில் தென்திசையில் இருப்பதே திருகோணமலையாகும். இக்கோயிலில் பல்வேறு புராதன கல்வெட்டுகள்-சிற்பங்களும் கிடைத்துள்ளன.
திருகோணமலையிலுள்ள சிவாலயம் இராவணேஸ்வரனால் வழிபடப்பெற்றதாகவும், அங்குள்ள கன்யா வெந்நீரூற்று அவன் தன் பிதிர்களுக்கு கடனாற்ற உருவாக்கியது என்றும் கூறுவர். திருகோணமலையில் மலையில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு இருக்கிறது. இதை ‘இராவணன் வெட்டு’ என்கின்றனர்.
ravanan_vettu
இவற்றை விளக்குவதாக புதிதாக- கோயில் முன்றலில் இராவணன் சிவபூஜை செய்கிற பெரிய சிற்பம் ஒன்றும் இம்மாதம் உருவாக்கப்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இக்கோயிலைப் போல இலங்கையின் வடமேற்கில் மாதோட்டத்தில் திருக்கேதீஸ்வரம் அமைந்திருக்கிறது. இத்தலம் பேரில் திருஞானசம்பந்தரும் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் ஒவ்வொரு தனிப் பதிகங்களால் போற்றிப் பாடியிருக்கிறார்கள்.
நத்தார் படைஞானன் பசு வேறுந்தனைக் கவிழ்வாய்
மத்தம் மதயானையுரி போர்த்த மணவாளன்
பத்தாகிய தொண்டர் தொழும் பாலாவியின் கரைமேல்
செத்தார் எலும்பணிவான் திருக்கேதீச்சரத்தானே
என்று பலவாறாக இத்தலத்தைப் போற்றும் தேவாரப்பாசுரங்களைக் காண்கிறோம்.மாதுவட்டா என்கிற அசுரச்சிற்பி வழிபட்ட இடம் ஆதலில் இவ்விடம் மாதோட்டம் எனப்படுகிறது என்பதும் கேது பூஜித்த தலமாதலில் கேதீஸ்வரம் எனப்படுகிறது என்பதும் புராணச்செய்திகள்.
இத்தலத்து இறைவனை இராவணனும் மண்டோதிரியும் மட்டுமல்லாது பிரம்மஹத்தி தீருவதற்காக ஸ்ரீ ராமரும் பூஜை செய்ததாகச் சொல்லப்படுகிறது.
Munneswaram
Munneswaram
பாவம் வினையறுப்பார் பயில் பாலாவியின் கரை மேல்
தேவன் எனையாள்வான் திருக்கேதீச்சரத்தானே
என்பது சுந்தரர் வாக்கு. இவற்றால் இத்தலத்தீர்த்தமான பாலாவி ஆறு சிறப்புற்றிருக்கிறது.
இக்கோயிலில் கௌரியம்பாள் உடனாக கேதிஸ்வரநாதர் விளங்குகிறார். பௌத்த சாசனங்கள் சிலவற்றிலும் கேதீஸ்வரம் பற்றிய குறிப்புகள் உள்ளன.சுந்தரரும் ஞானசம்பந்தருமே இத்தலத்தைப் பாடியதாகச் சொல்லப்படுமிடத்தும் திருநாவுக்கரசர் தேவாரம் ஒன்றிலும் (திருவீழிமிழலைப் பதிகம்) இத்தலம் கூறப்படுவது கண்டின்புறத் தக்கது.இதனோடு இலங்கையில் பழம்பெருமை வாய்ந்ததும் இராமாயண காலத்திற்கு முற்பட்டதுமாக பஞ்சஈச்சரங்கள் என்று ஐந்து சிவாலயங்களை அடையாளப்படுத்துவர்.
இவற்றில் திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் (இத்தலம் பற்றி “ போரின் பிடியிலிருந்து மீளப்புதுப்பிக்கப்பெறும் வட இலங்கையின் இருபெரும் ஆலயங்கள்” என்ற தமிழ்ஹிந்து கட்டுரையில் குறிப்புகள் உள்ளன), முன்னேஸ்வரம், திருத்தம்பலேஸ்வரம் ஆகியவற்றைக் குறிப்பிடுவர்.
திருத்தம்பலேஸ்வரம் இன்று இல்லை. முன்னேஸ்வரம் இன்றும் உள்ள அற்புத தலம்.இங்கு வடிவாம்பிகை உடனாக முன்னைநாதர் விளங்குகிறார். இங்கு வருடாந்தம் ஆவணிமாதத்தில் 25 நாட்கள் மஹோற்சவம் நடைபெறுகிறது. இதனை விட பல்வேறு சிவாலயங்கள் இலங்கை எங்கணும் விரவிப் பரந்திருக்கின்றன. புதிதாகவும் பல ஆலயங்கள் தோன்றியுள்ளன.
kathirkamamஸ்காந்தம் முதலிய புராணங்களில் ஏமகூடம் என்று போற்றப்பெறுவதான கதிர்காமம் தென்னிலங்கையிலேயே உள்ளது.சூரசம்ஹாரத்திற்காக முருகன் சூரனுடைய இருப்பிடமான மஹேந்திரபுரிக்கு படையெடுத்துச் சென்றபோது ஹேமகூடம் என்கிற பாசறையில் வீற்றிருந்தார். கதிர்காமத்தில் தேவதச்சனைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட இப்பாசறையில் நடந்த சம்பவங்களைப் பற்றி தமிழில் எழுந்த கந்தபுராணத்தின் ‘ஏமகூடப்படல’மும் பேசுகிறது. முருகப்பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் செய்த இடமாகவும் இதனைச் சிலர் கருதுவர். அது போலவெ ஸ்கந்தாவதாரம் பூர்த்தியான இடம் இதுவே என்பதும் சில ஞானிகளின் கருத்து. அதாவது அந்த அவதாரத்தை நிறைவு செய்த இடமும் கதிர்காமமே. இலங்கையில் உள்ள கதிர்காம தலத்தை முப்பதிற்கும் மேற்பட்ட திருப்புகழ்களால் அருணகிரிநாதர் போற்றியிருக்கிறார். மிகவும் புனிதமான இத்தலம் உள்ள கிராமமே புனிதநகராக இலங்கையரசால் பிரகடனம் செய்யப்பெற்றுள்ளது. இன்று இக்கோயிலில் சிங்கள மொழி பேசும் கப்புறாளைமார் என்போரே வெண்துணியால் வாய்கட்டிப் பூசிக்கிறார்கள் எனினும், பழைய காலத்தில் சிவாகம முறையிலான வழிபாடு நடந்தமைக்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன.
வட இலங்கையில் அறுபத்து நான்கு சக்தி பீடங்களுள் ஒன்றான புகழ்மிக்க நயினை நாகபூஷணி அம்பாள் ஆலயம் உள்ளது. இக்கோயிலில் உள்ள மூலாலய அம்பாளின் திருவடிவம் பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கிற அன்னை நாகபூஷணியாள் பேரிலும் பல்வேறு இலக்கியங்கள் மலர்ந்துள்ளன.
அம்பிகைக்கே உரிய பழைமையான ஆலயங்கள் பலவும் இலங்கை முழுவதும் நிறைந்திருக்கின்றன. இதிலும் யாழ்ப்பாணத்தில் அம்பிகை வணக்கம் மிகச்சிறப்பாகப் பரவியிருக்கிறது. இவ்வகையிலேயே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அம்பிகை அடியவரான அன்பர் ஒருவரே மகாகவி பாரதிக்கு ஆன்மீக வழிகாட்டியாகவும் வாய்த்திருக்கிறார். இதை பாரதியே கூறுவான் -
‘கோவிந்தசாமி புகழ் சிறிது சொன்னேன்
குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பாணத்தான்
தேவி பதம் மறவாத தீர ஞானி
சிதம்பரத்து நடராஜ மூர்த்தியாவான்
பாவியரைக் கரையேற்றும ;ஞானத்தோணி,
பரமபதவாயிலெனும் பார்வையாளன்
காவிவளர் தடங்களிலே மீன்கள்பாயும்
கழனிகள் சூழ்புதுவையிலே அவனைக் கண்டேன்’
இது போலவே வேறு இடங்களிலும் ‘யாழ்ப்பாணத்தையன்” என்றும் ‘ஜகத்திலொரு உவமையிலா யாழ்ப்பாணத்தான்’ என்றும் பாரதி கூறுவான். இவை மூலம், பாரதி காலத்தில் அம்பிகை மேல் மாறாப் பக்தி கொண்ட யாழ்ப்பாணத்து சைவசமயிகள் புதுச்சேரி போன்ற இடங்களில் பரவியிருந்தமையையே காட்டுவதாகவும் கொள்ளலாம்.
பிற்பட்ட காலத்தில்..
பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னரே சிங்களம் என்கிற மொழி பெருவளர்ச்சியுற்றிருக்கிறது. இம்மொழி சமஸ்கிருதம், தமிழ், பாளி ஆகிய மொழிகளின் கலப்பில் உருவானதாகும்.இக்காலத்தையவனான குளக்கோட்டன் என்கிற அரசன் திருக்கோணமலையில் உள்ள சிவாலயத்திற்குப் பெருந்திருப்பணிகள் செய்திருக்கிறான்.குளக்கோட்ட அரசன் காலத்தில் ஒரு ஜோதிடரின் எதிர்காலக் கணிப்பின் படி ஒரு வெண்பா எழுதி கோயிலுள்ள கோட்டைச் சுவரில் பொறிக்கப்பட்டது. அது இன்றும் இருக்கிறது.
முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை
பின்னே பறங்கி பிரிக்கவே –மன்னா கேள்
பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணன் போன பின்
மானே வடுகாய் விடும்
இச்சாசனம் 16ம் நூற்றாண்டிற்குரியது என்று தமிழகச் சாசனவியலாளரான கிருஷ்ணசாஸ்திரிகள் குறிப்பிட்டிருக்கிறார். எனினும் இதன் காலம் இன்று வரை சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.இதே போல கஜபாகு என்கிற சிங்கள மன்னனும் சைவசமயியாகவே வாழ்ந்ததாக மகாவம்சம் கூறும். அவன் பங்குனி உத்தரத்தன்று பெரியளவில் உற்சவங்கள் செய்ததாக குறிப்புகள் உள்ளன.
nallur_skandan_ther
நல்லூர் கந்தசுவாமி கோவில் தேரோட்டம்
திருகோணமலையில் பல கிரந்த லிபியில் எழுதப்பெற்ற சாசனங்கள் கிடைத்ததாகக் கூறுகின்றனர். பேராசிரியர் சேனரத் பரணவிதான அவர்களால் ஆராயப்பெற்ற ஒரு சாசனம் இப்படிக் கூறும்.
ஸ்வஸ்தி ஸ்ரீ தேவ ஸ்ரீ சோடகங்க, ஷதிதல தில, காம்ப்ராய்ய லங்காம் அஜ,
ய்யாம் சாகேப்(த) (ச)ம்பு புஷ்பே க்ரிய பவ(ன) ரவெள ஹஸ்தவேமே, ஷ லக்நே
கோகர்ணே..
இதன் பொருளாக அவர் மொழிபெயர்த்தது-
மங்கலம் பொலிக! சுகாப்தம் சம்புபுஷ்ப வருஷத்திலே இரவி மேடத்தில் நிற்க,அத்த நட்சத்திரம் (சந்திரனோடு) மேட இலக்கினத்திற் கூடிய வேளையில் மேன்மை பொருந்திய சோடங்க (தேவ(ன்) பூலோகத் திலகமானதும் வெல்லுவதற்கு அரியதுமான இலங்கையில் வந்து கோகர்ணத்திலே..’
இது சுட்டும் காலம் கி.பி 1223 சித்திரை 14ம் திகதி காலை என்பது அவரது கருத்து.
இது போல இந்துசமயச் சார்பான பல சிலாசனங்கள் கிடைக்கப் பெற்றதாக வரலாற்றாய்வாளர் பேராசிரியர் சி.பத்மநாதன் குறிப்பிடுகிறார்.
இதே போல பல்வேறு புராதன கால சிற்பங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் உமாமஹேஸ்வரர், சந்திரசேகரர், நடராஜர், வீரபத்திரர், நாகராஜர், அம்பாள்,மஹாவிஷ்ணு, விநாயகர், நந்தி, சப்தமாதர், சிவலிங்கம், சோமாஸ்கந்தர்,ரிஷபவாஹனர், சூரியன், சைவநாற்குரவர் (நாயன்மார்கள்), சண்டிகேஸ்வரர், மஹாலஷ்மி, நர்த்தனகிருஷ்ணர், முருகன் போன்ற பலவும் அடங்கும்.
Jaffna Kingdom Emblem
Jaffna Kingdom Emblem
இலங்கையின் வடபால் இரு பெரும் விஷ்ணுவாலயங்கள் உள்ளன. அவையும் மிகப்பழைய காலம் தொட்டு உள்ளவை. பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோயில், வல்லிபுரம் பெருமாள் கோயில் என்கிற அவை இரண்டும் நிச்சயமாக 10ம் நூற்றாண்டுக்கு முந்தைய புராதனமானவை.
இவற்றில் பொன்னாலைக் கோயில் போர்த்துக்கேயரின் வருகைக்கு முன் ஸ்ரீரங்கம் போல ஏழு திருவீதிகளுடன் காணப்பட்டது என்பதற்கு அங்கே கோயில் சூழமையில் உள்ள சில சிதைவுகள் சான்றாகின்றன. இதே போல அநுராதபுரம் தென்னிலங்கையில் தேவேந்திரமுனை மற்றும் கிழக்கிலங்கையிலும் பழைமையான விஷ்ணுவாலயங்கள் இருந்துள்ளன. ஆனால் வைஷ்ணவர்கள் இருந்துள்ளனரா என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. சைவ ஆகம அர்ச்சகர்களே இக்கோயில்களும் பூசை செய்திருந்திருக்கக் கூடும்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோயில், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோயில், மாமாங்கம் சிவன் கோயில், திருத்தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரர் கோயில், நீர்வேலி அரசகேசரிப்பெருங்கோயில், போன்ற இன்னும் பிற பல ஏராளமான சோழர்கால, நாயக்கர் கால வரலாறு கோண்ட கோயில்களையும் இன்றும் இலங்கையில் அவதானிக்கலாம்.
Maviddapuram Kandaswamy temple
Maviddapuram Kandaswamy temple
16ம் நூற்றாண்டில் போர்த்துக்கெயர் இலங்கைக்கு வந்து இந்துக் கோயில்கள் பலவற்றையும் தரைமட்டமாக்கி அதிபாதகம் செய்ததால் இன்றைக்கு புராதன கோயில்களை புராதன அமைப்புடன் காண இயலவில்லை. இவர்களும் இவர்களுக்கு அடுத்து வந்த ஒல்லாந்தர்களும் மிகவும் மதக்காழ்ப்புணர்வுடன் செயற்பட்டமை வரலாற்றில் பதிவாகிறது.
இவர்களின் குறிப்புகளில் தாம் இந்துசமயிகளுக்குச் செய்த துன்பங்களை எல்லாம் பெருமை பொங்க எழுதி வைத்திருப்பதாகவும் அறியமுடிகிறது. இவற்றில் உள்ளபடி, நல்லூரியில் பல வீதிகளுடன் விளங்கிய நல்லைக் கந்தன் பேராலயத்தை தாம் துடைத்தழித்தமை பற்றி பெருமையாகக் கூறியிருக்கிறார்கள்.
திருகோணமாமலையில் ஆயிரங்கால் மண்டபம் பொன்றவற்றுடன் அமைந்திருந்த மாபெருங்கோயிலையும் திருக்கேதீஸ்வரத்திலிருந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பெரிய கோயில்களினையும் நொருக்கியிருக்கிறார்கள் இவர்கள். மிகவும் நெருக்கி மக்களை கிறிஸ்தவத்திற்கு (கத்தோலிக்கம், புரொட்டஸ்தாந்தியம் இரண்டு பிரிவுகளும்) வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்திருக்கிறார்கள்.
இவர்களின் மதமாற்ற அட்டூழியங்கள் குறித்து பல்வேறு சான்றுகள் கிடைக்கின்றன. இது குறித்து முனைவர். கோ.ந.முத்துக்குமாரசாமி அவர்களின் ’ஈழத்துச் சிதம்பரம்’ கட்டுரையிலும் சிறிது விடயங்களைக் காணலாம்.
போர்த்துக்கேயரின் ஆதிக்கத்தில் நாளொன்றுக்கு ஒரு வீட்டார் போர்த்துக்கேயரின் உணவுக்காக பசு ஒன்றைக் கொடுக்க வேண்டும் என்று ஒரு சட்டம் இருந்ததாம். இந்நிலையில் யாழ்ப்பாணத்திலுள்ள திருநெல்வேலி (யாழ்ப்பாணத்திலும் திருநெல்வேலி என்று ஒரு ஊர் இருக்கிறது) என்ற ஊரிலிருந்த ஞானப்பிரகாசர் என்பவரது முறை நாள் வந்ததாம். அவர் அதற்கு உடன்படமுடியாமல், அதே வேளை ஆட்சியாளர்களுடன் பகைக்க இயலாமல், முதல் நாள் இரவோடு இரவாக ஊரை விட்டு களவாக ஒரு படகில் ஏறி வேதாரண்யம் வந்து துறவு பூண்டார். ஞானப்பிரகாச முனிவர் பின்னர் சிதம்பரத்திற்குச் சென்றுதங்கியிருந்து பல பணிகள் செய்தார். சைவசித்தாந்த நூல்களுக்கு விளக்கவுரை எழுதினார். கோயிலிற்கு அருகில் மாலைகட்டித் தெரு என்று சொல்லப்பெறும் இடத்தில் இன்றைக்கு உள்ள சேக்கிழார் கோயிலுக்கு முன் குளம் ஒன்று அமைத்தார். அது ஞானப்பிரகாசர் குளம் என்றழைக்கப்பெற்று சில காலத்திற்கு முன் வரை நடராஜரின் தெப்போத்ஸவம் நடைபெற்று வந்ததாம்.
இவை எல்லாம் போர்த்துக்கேய- ஒல்லாந்த மத வெறியர்களின் செயற்பாடுகளுக்கு ஆதாரங்களாக இருக்கின்றன. இத்தகு சிக்கல்களுக்கு அப்பால் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் போன்ற பெரியவர்களின் பணிகளால் மீளவும் இந்து எழுச்சி ஏற்பட்டிருக்கிறது.
ஆக, இக்கட்டுரை இலங்கையில் எக்காலம் தொட்டு இந்துக்கள் இருந்தார்கள்? என்று கேட்பவர்களுக்கான ஒரு சுருக்க விளக்கக் கட்டுரையேயாகும். இது தொடர்பான விரிவான ஆய்வுகள் பல்வேறு அறிஞர்களால் மேற்கொள்ளப்பெற்று வருகின்றன. இன்னும் இன்னும் அது விரிவு பெற வேண்டும். இலங்கையில் இந்து மதம் வந்த காலம் என்ன? என்று கேட்கப்படுமாகில் இதுவே இலங்கையின் ஆதிசமயம் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. வரலாற்றால் நிர்ணயிக்கமுடியாத காலத்திலிருந்தே இலங்கையில் இந்து தர்மம் செழிப்புற்றுத் திகழ்ந்திருக்கிறது.
நன்றி : தமிழ் ஹிந்து

22 மார்ச் 2011

தேர்தல் புறக்கணிப்பை மறுபரிசீலனை செய்யவைகோவுக்கு பா.ஜ., வேண்டுகோள்


நாகர்கோவில்:தேர்தல் புறக்கணிப்பை மறுபரிசீலனை செய்யும்படி, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவுக்கு தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நிருபர்களிடம் அவர் கூறியதாவது:ம.தி.மு.க., இந்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளது, துரதிருஷ்டவசமானது. கூட்டணி கட்சி வேட்பாளர்களை தன் வேட்பாளர்கள் போல் கருதி பிரசாரம் செய்யும் மனநிலை கொண்டவர், வைகோ. அவர் தேர்தல் புறக்கணிப்பு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பா.ஜ.,வுடன் கூட்டு வைக்க விரும்பினால், அவரை வரவேற்க தயார்.பா.ஜ., தேர்தல் அறிக்கை, வரும் 25ம் தேதி சென்னையில் வெளியிடப்படும். தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை இலவசங்கள், மக்கள் எப்போதும் கை ஏந்தி நிற்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

இந்து ஓட்டுகள் புறக்கணிப்பு?


தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்காக வழக்கம் போல், அரசியலில் இரண்டு பிரதான அணிகள் உருவாகியுள்ளன. இரு அணியிலும் இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழகத்தில் இந்து அமைப்புகளின் மீது அரசியல் தீண்டாமை நிலவுகிறது.இந்து அமைப்புகள், கூட்டணியில் இடம்பெற்றாலே, இஸ்லாமிய, கிறிஸ்தவ, கம்யூனிஸ்ட் அமைப்புகள் தங்களது கூட்டணியிலிருந்து வெளியேறிவிடுவர் என்ற எண்ணமும், இந்து அமைப்புகளை அங்கீகரித்தாலே சிறுபான்மையினர் ஓட்டு அளிக்க மாட்டார்கள் என்ற அச்சமும் தான் இதற்கான முக்கிய காரணங்கள்.இதனால், இந்துக்களின் நியாயமான கோரிக்கைகள் கூட புறக்கணிக்கப்படுகின்றன. 
இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை, இந்து யாத்திரீகர்களுக்கும் வசதிகள் மற்றும் நிதியுதவி, கோவில்களை நிர்வகிக்க அரசியல் மற்றும் அரசு கலப்படமில்லாத சுயேச்சை வாரியம் அமைத்தல் உள்ளிட்டவற்றில் இந்துக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.அதேபோல, இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள், தாழ்த்தப்பட்டோருக்கென தனி தொகுதிகளை உருவாக்கி, அதில் இந்து தாழ்த்தப்பட்டோர் மட்டுமே போட்டியிட முடியும் என சட்டம் செய்துள்ளனர்.குறிப்பாக அம்பேத்கர், தனித் தொகுதிகளை உருவாக்கும்போது, அதில் இந்து அல்லாதவர்கள் போட்டியிடுவது சட்டப்படி மோசடி என்றும், சட்டம் செய்து, அதற்கான தண்டனைகளையும் உறுதி செய்துள்ளார்.
ஆனால், கடந்த காலங்களில் இந்து அல்லாத பலர், தாங்கள் இந்து தாழ்த்தப்பட்டோர் என போலி சான்றிழ்களைக் கொடுத்து, தனித் தொகுதிகளில் போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ளனர். அதன் பிறகு வழக்குகள் நடந்து, அவர்களின் வெற்றி செல்லாது என தீர்ப்பு வருவதற்குள், பதவிக்காலமே முடிந்துவிடுகிறது. இது, இந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்யப்படும் அநீதி.எனவே, இந்தத் தேர்தலில் தனி தொகுதிகளில் மனு தாக்கல் செய்பவர்கள், இந்து தாழ்த்தப்பட்டோர் தானா என கண்காணிக்க சிறப்பு தேர்தல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.(கட்டுரையாளர்: இந்து மக்கள் கட்சி நிறுவனர்): அர்ஜுன் சம்பத் 

13 மார்ச் 2011

இந்து மததில் மட்டுமா ஜாதிகள் உண்டு?


இன்றைய நிலையில் இந்துக்கள் ஜாதியினால் பிரிவுபட்டிருக்கிறார்கள்.தங்களுக்கு என ஒரு சங்கம் ஆரம்பித்து அதற்க்கு ஒரு தலைவரையும் நியமித்து அவர்கள் சொல்லும் குறுகிய வட்டத்திற்க்குள்ளேயே செயல்படுகின்றனர்.புனித நூலான “ பகவத்கீதையில் ” பகவான் கிருஷ்ணர் சொல்கின்றார்.

“ ஜாதி என்பது பிறப்பினால் வருவது இல்லை மாறாக – அது
குணத்தினால் வருவது “ என்று.

மேலும் நான் போரிட்டால் என் ஜாதி அழிந்துவிடும் என அஞ்சும் அர்ஜூனனிடம்,கண்ணண் போரிட தூண்டுகிறான். கண்ணண் ஜாதியை ஆதரிப்பவனாக இருந்தால் போரிட தூண்டியிருக்கமாட்டான் மாறாக அவன் ஜாதியை ஓழிப்பவனாக இருக்கிறான்.ஆங்கிலேயர்கள் ஆகட்டும்,இன்றைய ஆட்சியாளர்களாகட்டும் தங்கள் பதவி சுகத்தை காப்பாற்ற நம்மை பிரித்துவைத்து வழி நடத்துகின்றனர்.இருந்தாலும் கூட நாம் கண்ணனையும், சிவனையும், இசக்கியம்மனையும், சுடலையும், வணங்குவதோடு சைவம்,வைணவம் பிரிவு பாராட்டாமல் சமம்மாகவே பாவித்து வணங்கிவருகிறோம்.

இந்து மததில் மட்டுமே ஜாதிகள் உண்டு என்று சொல்லி இந்துக்களை முஸ்லீம்களும்,கிறிஸ்தவர்களும் இந்துக்களை மதம் மாற்றி வருகின்றனர்.

கிறிஸ்தவ பிரிவினைகள் 

எங்களிடம் ஜாதி இல்லை என் கூறும் கிறிஸ்தவர்களில் கேரளாவில் மட்டும் 146பிரிவுகள் உள்ளன.பாதிரிகள் கூட தங்களுக்குள் ஜாதி வேற்றுமை பார்ப்பதாக பல செய்திகள் வெளி வருகின்றன.தங்களுக்குள் தலைவரை தேர்ந்தெடுக்கும்போது கூட தலித் கிறிஸ்தவர்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது. எறையூரில் வன்னிய கிறிஸ்தவர்களும்,ஆதி திராவிட கிறிஸ்தவர்களும் மாறி,மாறி தங்களது வீடுகளை தாக்கிக்கொண்டனர்.இதில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி ஒருவர் பலியானார்.செஞ்சி தாலுகாவில் பாதிரியை சர்சை பூட்டி திருப்பி உள்ளனர்.விழுப்புரம் தாலுகாவில் கடலூர்,பண்ருட்டி போன்ற பல இடங்களிலும் தங்கள் ஜாதியில் உள்ளவர்தான் பாதிரியாக வரவேண்டும் எனக்கூறி வந்தவர் விரட்டியடிக்கப்பட்டார்.ஆனால் கிறிஸ்தவ மிஷினரிகள் கிறிஸ்தவத்தில் ஜாதிகள் இல்லை என்கிறார்கள்.

கிறிஸ்தவத்தில் உள்ள சில பிரிவுகள்...........

லத்தீன் கத்தோலிக்க சர்ச்,
பிரெஞ்ச கத்தோலிக்க சர்ச்,
மார்தோமா சர்ச்,
சால்வேசன் ஆப் ஆர்மி சர்ச்,
ஜெகோவா பைட்,
பெந்தகோஸ்,
இது போன்ற பிரிவுகள் 146 கேரளாவில் மட்டும் உள்ளன.

லத்தீன் கத்தோலிக்க சர்ச்சில் உள்ளவர்கள் பிரெஞ்ச கத்தோலிக்க சர்ச்க்கு சென்று ஜெபிக்கமாட்டார்கள். பிரெஞ்ச கத்தோலிக்க சர்ச்சில் உள்ளவர்கள் லத்தீன் கத்தோலிக்க சர்ச்க்கு சென்று ஜெபிக்கமாட்டார்கள்.இவர்கள் இரண்டு பேரும் மார்தோமா சர்ச்க்கு சென்று ஜெபிக்கமாட்டார்கள். இவர்கள் மூன்று பேரும் பெந்தகோஸ் சர்ச் சென்று ஜெபிக்கமாட்டார்கள். இவர்கள் நான்கு பேரும் சால்வேசன் ஆப் ஆர்மி சர்ச் சென்று ஜெபிக்கமாட்டார்கள். இவர்கள் 5 பேரும் மார்த்தோமா சர்ச்க்கு சென்று ஜெபிக்க மாட்டார்கள்.இப்படியாக ஒரே மதம்,ஒரே பைபிள், ஒரே இயேசு, என்று கற்ப்பிக்கப்பட்ட கிறிஸ்தவ மதத்தில் பல்வேறு தரப்பட்ட பிரிவினைகள்.ஒரு சர்சை சார்ந்தவர்கள்,மற்ற சர்சை சார்ந்தவர்களுடன் பிராத்தனை செய்வது கிடையாது என்பது மட்டும் அல்லாமல் ஒருவரை ஒருவர் இழித்து,பழித்து பேசுவதும் தொடர்கிறது.

இஸ்லாம் பிரிவினைகள்

ஷியா,
சன்னி,
முஜாகிதீன்,
சூபி,


என 37 பிரிவுகள்.இவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொலை செய்வத் என்பது காலம் காலம்மாக தொடர்ந்து வருகின்றது.எதிர்தரப்பு முஸ்லீம்களை கொல்ல அவர்களை வெட்டி கை வலிக்கிறது என்பதற்க்காக ஒரு அறை ஒன்றை தயார் செய்து அதில் எதிர்தரப்பு முஸ்லீம்களை அடைத்து வைத்து விஷவாயுவை செலுத்தி கொல்கின்றனர்.இந்த குற்றத்துக்காகத்தான் சதாம்ஹூசைன் தூக்கிலிடப்பட்டார்.இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து மற்றொரு தரப்பு அந்த அறையிலே சதாம்ஹூசைன் பிணத்தை சுற்றி கொண்டாடியது தொலைகாட்சிகளில் வெளியானது.ஈரானில் நிலவிய ஷியா,சன்னி பிரிவு மோதலை பயன்படுத்தியே ஈரானை அழித்தது அமெரிக்கா.இது மட்டும் அல்லாது தங்களுக்குள் எதிர்தரப்பு மசூதியை குண்டு வைத்து தகர்கின்றனர். குவைத்தை அமெரிக்கா ஆக்ரமித்தபோது குவைத்தில் உள்ள ஒரு பிரிவினரின் மசூதியை தாக்கி அழிக்கவேண்டும் என சுற்றியிருந்த இஸ்லாமிய நாடுகள் வேண்டுகோள் வைத்து தங்கள் நாட்டில் அமெரிக்க ராணுவபடைகளை நிறுத்த அனுமதித்தன.இதன் பயனாக குவைத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அமெரிக்கா பிரதிபலனாக குவைத்தில் உள்ள ஒரு பிரிவினரின் மசூதியை தாக்கி அழித்து தனது நன்றி சுற்றியுள்ள இஸ்லாமிய நாட்டிற்க்கு அர்ப்பணித்தது. ஒரே இறைவன்,ஒரே மறை,ஒரே மதம் என வடிவமைக்கப்பட்ட இஸ்லாம் மதம் இன்று தங்கள் சகோதரர்களை விஷவாயு செலுத்தியும்,ம்சூதியில் குண்டுகளை வைத்தும் கொன்று இஸ்லாத்தை வேடிக்கையான ஒரு பொருளாக மாற்றிவிட்டனர்.

இந்து ஒற்றுமைகள் 

ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட நாயன்மார்கள்,பத்தாயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட உபநிஷங்கள்,ஒரு லட்சத்துக்கும் மேற்ப்பட்ட விரிவுரைகள்,நாற்பதாயிரத்துக்கும் மேற்ப்பட்ட பிரிவுகள்,பல தரப்பட்ட மொழிகள்,பல தரப்பட்ட கலாச்சாரம் என பல்வேறாக பிரிந்திருந்தாலும் எந்த ஒரு இந்துவும் எந்த ஒரு இந்து கோவிலுக்கும் சென்று இறைவனை தரிசிக்கலாம் அதற்க்கு தடையே கிடையாது.இதுதான் ஒற்றுமை. இந்து மதத்தில் ஏனைய பிரிவுகள் இருக்கின்றன.மிகப்பெரிய பாவச்செயல் என்று வர்ணிக்கப்படும் தீண்டாமை முன்பு போல் இப்போது இந்து மதத்தில் இல்லை. ஒரு தாழ்தப்பட்டவன் கூட ஆகம விதிகளையும்,சாஸ்திரங்களையும் கற்றால் அவன் கோவில் குருக்கள் ஆகலாம் என்பது இந்துவத்தில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்.உதாரணம்மாக கோழிக்கோடு அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த இந்து சகோதரர்களுக்கு வேத உபநிதம் பிரமாணர்களால் கற்பிக்கப்பட்டு அவர்கள் பிராமாணர்களாக ஏற்க்கப்பட்டிருக்கின்றனர். இந்துக்கள் தங்களது தெருக்களில் நடமாடக்கூடாது என்றவுடன் இந்துக்கள் எழுச்சி அடைந்தனர்.ஆனால் இந்துக்களின் எழுச்சியை அடக்க இப்பொழுது நாமெல்லாம் நாடரல்லவா? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இந்து சகோதரர்களே கீதையை படியுங்கள்,அதனை பின்பற்றுங்கள்..நமக்குள் ஜாதிகள் வேண்டாம்.இந்து என்கிற உணர்வே போதும்.நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள்.

பாரத நாடு பழம்பெரும் நாடு, நாமதன் புதல்வர் இந்நினைவகற்றோமே.......

12 மார்ச் 2011

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் பாரதிய ஜனதா வேட்பாளர் பட்டியல் விபரம்



Sl.
Constituency No. & Name
Name of the Candidates
1.
4
Thiruvallur
Shri R.M.R. Janakiraman
2.
6
Avadi
Shri J. Loganathan
3.
9
Madavaram
Shri Chennai Siva
4.
10
Tiruvottiyur
Shri V. Venkatakrishnan
5.
12
Perambur
Shri Raveendra Kumar
6.
17
Royapuram
Shri T. Chander @ Chandru
7.
18
Harbour
Shri M. Jaishankar
8.
31
Tambaram
Shri Veda Subramanian
9.
32
Chengalpattu
Shri K.T. Raghvan
10.
33
Thiruporur
Shri N. Gopalakrishnan
11.
36
Uthiramerur
Shri K. Gurumurthy
12.
37
Kancheepuram
Shri M. Perumal
13.
42
Arcot
Shri G. Thanikachalam
14.
43
Vellore
Dr. V. Aravinth Reddy
15.
48
Ambur
Shri G. Venkatesan
16.
50
Tiruppattur
Shri M. Selvakumar
17.
51
Uthangarai (SC)
Shri C.K. Shankar
18.
52
Bargur
Shri K. Asokan
19.
53
Krishnagiri
Shri Koteeswaran
20.
54
Veppanahalli
Shri V.S. Premanathan
21.
58
Pennagaram
Shri K.P. Kandasamy
22.
59
Dharmapuri
Shri K. Prabhakaran
23.
60
Pappireddippatti
Shri S. Jayakumar
24.
61
Harur (SC)
Shri Samikannu
25.
62
Chengam (SC)
Shri A. Jayaraman
26.
63
Tiruvannamalai
Shri A. Arjunan
27.
65
Kalasapakkam
Shri K. Ramesh
28.
68
Cheyyar
Shri D. Tamizharasi
29.
73
Vanur (SC)
Shri Durai Vetrivendan
30.
77
Ulundurpettai
Shri V. Arul
31.
78
Rishivandiyam
Shri B. Rajasundaram
32.
79
Sankarapuram
Shri K. Jeyaverma
33.
81
Gangavalli (SC)
Shri Madhialagan
34.
82
Attur (SC)
Shri K. Annadurai
35.
83
Yercaud (ST)
Pon Raja @ Rajaselvam
36.
84
Omalur
Shri B. Sivaraman
37.
85
Mettur
Shri P. Balasubramanian
38.
86
Edappadi
Shri B. Thangaraju
39.
87
Sankari
Shri P. Natarajan
40.
88
Salem (west)
Shri K.K. Elumalai
41.
89
Salem (north)
Shri D. Mohan
42.
90
Salem (south)
Shri N. Anna Durai
43.
91
Veerapandi
Shri K.S. Venkadachalam
44.
93
Senthamangalam (ST)
Shri C. Ramesh
45.
94
Namakkal
Shri L. Murugan
46.
95
Paramathi-velur
Shri K. Manoharan
47.
97
Kumarapalayam
Shri Balamurugan
48.
98
Erode (east)
Pon. Rajesh Kumar
49.
99
Erode (west)
Shri N.P. Palanisamy
50.
100
Modakurichi
Shri T. Kathirvel
51.
101
Dharapuram (SC)
Shri P. Karunakaran
52.
105
Anthiyur
Shri A.P.S. Bargunan
53.
106
Gobichettipalayam
Shri N. Chennaiyan
54.
107
Bhavanisagar (SC)
Shri N.R. Palanisamy
55.
108
Udhagamandalam
Shri B. Kumaran
56.
109
Gudalur (SC)
Shri Anbu @ Anbarasan
57.
113
Tiruppur (north)
Shri A. Partiban
58.
114
Tiruppur (south)
Shri N. Point Mani
59.
115
Palladam
Shri M. Shanmuga Sundaram
60.
117
Kavundampalayam
Shri R. Nandhakumar
61.
119
Thondamuthur
Shri A. Sridharmurthy
62.
120
Coimbatore (south)
Shri C.R. Nandakumar
63.
121
Singanallur
Shri Rajendran
64.
123
Pollachi
Shri V.K. Raghunathan
65.
125
Udumalaipettai
Shri Vishvanathan
66.
126
Madathukulam
Shri R. Vijayaraghavan
67.
127
Palani
Shri K. Deenadayalan
68.
128
Oddanchatram
Shri S.K. Palanichamy
69.
130
Nilakkottai (SC)
Shri Rajendran
70.
131
Natham
Shri C. Kuttiyan
71.
134
Aravakurichi
Shri V.S. Chennayappan
72.
135
Karur
Shri S. Sivamani
73.
137
Kulithalai
Shri A. Dhanasekaran
74.
141
Tiruchirappalli (East)
Shri P. Parthiban
75.
143
Lalgudi
Shri M.S. Lohidasan
76.
144
Manachanallur
Shri M. Subramanian
77.
145
Musiri
Shri S.P. Rajendran
78.
148
Kunnam
Shri T. Baskaran
79.
149
Ariyalur
Shri P. Abhirami
80.
150
Jayankondam
Shri S. Krishnamurthy
81.
152
Vriddhachalam
Shri M. Velmurugan
82.
153
Neyveli
Shri Karpagam Mohan
83.
154
Panruti
Shri R.M. Selvakumar
84.
155
Cuddalore
Shri R. Guna @ Gunasekar
85.
156
Kurinjipadi
Shri A.S. Vairakannu
86.
161
Mayiladuthurai
Shri K.V. Sethuraman
87.
162
Poompuhar
Shri Nanjil Balu
88.
165
Vedaranyam
Shri S. Karthikeyan
89.
166
Thiruthuraipoondi (SC)
Shri P. Sivashanmugam
90.
168
Thiruvarur
Shri D.R. Pingalan
91.
171
Kumbakonam
Shri P.L. Annamalai
92.
172
Papanasam
Shri T. Mahendran
93.
173
Thiruvaiyaru
Shri J. Sivakumar
94.
174
Thanjavur
Shri M.S. Ramalingam
95.
175
Orattanadu
Shri A. Karnan
96.
177
Peravurani
Shri R. Elangovan
97.
180
Pudukkottai
Shri Pala Selvam
98.
181
Thirumayam
Shri P. Vadamalai
99.
182
Alangudi
Shri Jagannathan
100.
183
Aranthangi
Shri Sabapathy
101.
184
Karaikudi
Shri V. Chidambaram
102.
185
Tiruppattur
Shri Sheikh Dawood
103.
186
Sivaganga
Shri P.M. Rajendran
104.
187
Manamadurai (SC)
Shri V. Vishwanatha Gopal
105.
189
Madurai East
Shri K. Seenivasan
106.
190
Sholavandan (SC)
Shri S. Palanivelsamy
107.
191
Madurai North
Shri M. Kumaralingam
108.
195
Thiruparankundram
Shri R. Kandan
109.
198
Andipatti
Shri R. Kumar
110.
199
Periyakulam (SC)
Shri M. Ganapathy
111.
200
Bodinayackanur
Shri S.N. Veerachamy
112.
201
Cumbum
Shri P. Logandorai
113.
202
Rajapalayam
Shri N.S. Ramakrishnan
114.
207
Aruppukkottai
Shri S.R. Vetrivel
115.
208
Tiruchuli
Shri P. Vijaya Raghunathan
116.
209
Paramakudi (SC)
Suba. Nagarajan
117.
210
Tiruvadanai
Siva Mahalingam
118.
212
Mudhukulathur
Shri K. Shanmugaraj
119.
215
Tiruchendur
Shri Rajagopal
120.
216
Srivaikuntam
Shri S. Selvaraj
121.
218
Kovilpatti
Shri V. Rangarajan
122.
220
Vasudevanallur (SC)
Shri N. Rajakumar
123.
221
Kadayanallur
Shri Pandithurai R.
124.
222
Tenkasi
Shri S.V. Anburaj
125.
223
Alangulam
Shri Sudalaiyandi S.
126.
224
Tirunelveli
Shri G. Murugadas
127.
226
Palayamkottai
Shri S. Karthik Narayanan
128.
227
Nanguneri
Shri M. Mahakannan
129.
230
Nagercoil
Pon Radhakrishnan
130.
232
Padmanabhapuram
Shri Sujith
131.
233
Vilavancode
Shri R. Jayaseelan