Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

19 பிப்ரவரி 2011

புதுப்பட்டினம் மதக்கலவரம் முழு விபரம்



நமது நிருபர்

தஞ்சை மாவட்டம்  பட்டுக்கோட்டை அருகில்  உள்ள புதுப்பட்டினம் கிராமத்தில் பல காலமாக  இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாகவும், நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வந்தனர்.
சமீப காலமாக முஸ்லிம்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது.  கூடவே தவ்ஹீத் ஜமாத், மனித நீதிப் பாசறை ஆகிய  இஸ்லாமிய மதவெறி இயக்கங்களின் தாக்கம் ஊர்  இளைஞர்களிடையே அதிகரித்தது.  இதன் விளைவாக  ஊர் சிவன் கோயில் குளத்தை ஆக்கிரமித்து,  இந்துக்களின் எதிர்ப்பையும் மீறி மசூதி விரிவாக்கப் பட்டுள்ளது.
ஊர்  காவல்துறை  அங்குள்ள ஏழை இந்துக்களின் புகார்களை வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் விட்டு,  முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புக்கு துணை போய் வருகின்றனர்.   இந்நிலையில்   பிப்ரவரி-8 அன்று  முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த விஷமிகள் இந்து முன்னணிக் கொடிக் கம்பத்தை வெட்டினர்.  கலவரம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து  பிப்ரவரி-13 அன்று  காவல் துறையால்  சமரச பேச்சுவார்த்தைக்கு  அழைப்பு விடுக்கப் பட்டது.  பேச்சு வார்த்தையிலும்  காவல் துறையினர் அப்பட்டமாக முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக பாரபட்சமாக நடந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த  இந்து இயக்கத் தலைவர்கள் மீது  மசூதி வாசலில் அதிரடி தாக்குதல் நிகழ்ந்தது.   சிறிது நேரம் கழித்து இது இருதரப்பு மோதலாக வலுத்து,  இருதரப்பிலும்  மக்கள் காயமுற்றனர்.    மோதலில் அடிபட்ட வயதான் மூதாட்டி மருத்துவமனையில் உள்ளார்.   பாதிக்கப் பட்ட அவர் மீதும், இந்து இயக்கத்தினர் மீதும், அபாண்டமாக  காவல் துறையினர் பொய் வழக்குப் போட்டுள்ளனர்.
அரசு  இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு  பாரபட்சமில்லாமல் விசாரணை செய்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே  புதுப்பட்டினம் கிராம இந்து மக்களின் கோரிக்கை.
விரிவான செய்தி கீழே.
படங்களின் மீது க்ளிக் செய்தால் பெரிய அளவில் தெரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக