நாடு முழுவதும் 1000 வெடிகுண்டு லாரிகள் ஊடுறுவல்-தீவிரவாதிகள் சதி
சென்னை: நாடு முழுவதும் பெரும் நாச வேலைகளை நிகழ்த்தி வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட 1000 லாரிகள் ஊடுறுவியுள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் முழு உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தாவூத் இப்ராகிமின் இந்தத் திட்டத்தை அவனது கூட்டாளியான சோட்டா ஷகீல் நிறைவேற்ற திட்டமிட்டு வருவதாகவும் அந்தத் தகவல் தெரிவிக்கிறது.
சமீபத்தில் 2 லாரி டிரைவர்கள் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கினர். அவர்கள்தான் இத்தகவலைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் லஷ்கர் இ தொய்பாவிடம் பயிற்சி பெற்றவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
தங்களது சதித் திட்டத்திற்காக பல லாரி டிரைவர்களை தீவிரவாதிகள் பிடித்திருப்பதாகவும், இந்த லாரிகள் ஆங்காங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
புத்தாண்டையொட்டி தீவிரவாத தாக்குதல் நடைபெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட அனைத்து பெருநகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்ப்பட்டுள்ளது.
ஏற்கனவே லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் மும்பையில் ஊடுறுவியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இதுவரை பிடிபடவில்லை. அதேபோல பெங்களூரிலும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
தற்போது லாரிகள் மூலம் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதைத் தொடர்ந்து நாடு முழுவதும் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிபி லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் லாரிகள் போக்குவரத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார். அனைத்து சாலைகளிலும் லாரிகளை தீவிரமாக போலீஸார் சோதனையிடுகின்றனர்.
தாவூத் இப்ராகிமின் இந்தத் திட்டத்தை அவனது கூட்டாளியான சோட்டா ஷகீல் நிறைவேற்ற திட்டமிட்டு வருவதாகவும் அந்தத் தகவல் தெரிவிக்கிறது.
சமீபத்தில் 2 லாரி டிரைவர்கள் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கினர். அவர்கள்தான் இத்தகவலைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் லஷ்கர் இ தொய்பாவிடம் பயிற்சி பெற்றவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
தங்களது சதித் திட்டத்திற்காக பல லாரி டிரைவர்களை தீவிரவாதிகள் பிடித்திருப்பதாகவும், இந்த லாரிகள் ஆங்காங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
புத்தாண்டையொட்டி தீவிரவாத தாக்குதல் நடைபெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட அனைத்து பெருநகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்ப்பட்டுள்ளது.
ஏற்கனவே லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் மும்பையில் ஊடுறுவியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இதுவரை பிடிபடவில்லை. அதேபோல பெங்களூரிலும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
தற்போது லாரிகள் மூலம் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதைத் தொடர்ந்து நாடு முழுவதும் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிபி லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் லாரிகள் போக்குவரத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார். அனைத்து சாலைகளிலும் லாரிகளை தீவிரமாக போலீஸார் சோதனையிடுகின்றனர்.
சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தொடர்பு உள்ளதாக அறிவித்துள்ள மத்திய அரசு, அவற்றில் தொடர்புடைய 10 பேர்களின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட்டு உள்ளது.
பதிலளிநீக்கு“தீவிரவாதம் தொடர்பாக குற்றங்களில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தொடர்புகள் உள்ளன” என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, கூறியிருந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஷிண்டே கூறியது சரியானதே. தீவிரவாதத்தில் ஆர்.எஸ்.எஸ்.க்கு தொடர்பு உள்ளது நிஜம்தான் என மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் இது குறித்து கூறுகையில், “தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா ஷரீப்பில் நடந்த தீவிரவாத குண்டு வெடிப்பு தாக்குதல்களில், குறைந்தபட்சம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 10 பேர் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன’’ என்று தெரிவித்தார்.
அந்த 10 பேருடைய பெயர், விவரங்களையும் ஆர்.கே.சிங் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்:
மறைந்த சுனில் ஜோஷி, ஆர்.எஸ்.எஸ்ஸின் தேவாஸ் மற்றும் முவா இயக்கத்தில் 1990 முதல் 2003 வரை இருந்தவர். இவர் சம்ஜாவ்தா மற்றும் அஜ்மீர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்.
தலைமறைவாக உள்ள சந்தீப் டாங்கே, ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் இயக்கத்தில் 1990 முதல் 2006 வரை இருந்தவர். இவர் இன்டோரை சேர்ந்தவர். சம்ஜாவ்தா, மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் லோகேஷ் சர்மா, ஆர்.எஸ்.எஸ்ஸின் கர்யவஹாக் அமைப்பையும், சுவாமி அசேமானந்த் ஆர்.எஸ்.எஸ் வனவாசி கல்யான் இயக்கத்தையும், ராஜேந்தர் என்கிற சமுந்தர் ஆர்.எஸ்.எஸ்ஸின் வர்க் விசாரக் அமைப்பையும் சேர்ந்தவர்கள்.
மேலும் குஜராத்தை சேர்ந்த முகேஷ் வசானி கோத்ரா ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும், தேவேந்தர் குப்தா ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரக் அமைப்பையும், சந்திரசேகர் லெவே ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரக் 2007 இயக்கத்தையும், கமல் சௌகான் பிரச்சாரக்கின் கிளை இயக்கத்தையும், தலைமறைவாக உள்ள ராம்ஜி கல்சங்ரா ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த 10 பேரும் சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ்.இயக்க மற்றும் கிளை உறுப்பினர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.