Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

09 மார்ச் 2012

வழக்கறிஞர்கள் சமுதாயக் கடமைகளை மறக்கக் கூடாது(Advocates for Hindhuthva )-ஆர்.எஸ்.எஸ்.தலைவர்


சமுதாயக் கடமைகளை நினைவில் கொள்ளுங்கள்- மோகன் பாகவத் 
RSS சர்சங்க சாலக் ஸ்ரீ மோகன் பாகவத் ஜீ
கர்நாடக மாநிலம் தாவனகரேயில் மார்ச் 4 அன்று நடைபெற்ற வழக்கறிஞர்கள் மாநாட்டினைத் ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் துவக்கி வைத்தார். அவர் தனது துவக்க உரையில் “வழக்கறிஞர்கள் தங்களது தொழில் தர்மத்தையும், சமுதாயக் கடமைகளையும் மறந்திடக் கூடாது” என்று வலியுறுத்தினார்.  “Advocates for Hindhuthva” என்கிற தலைப்பில் நடைபெற்ற ஒரு நாள் மாநாட்டில் கர்நாடக மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் 1,400 ௦௦ வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். அம்மாநிலத்தில் ஹிந்துக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கி வருகின்ற “ஹிந்து ஐக்கிய வேதிக” அமைப்பு துவங்கப்பட்டு 25 ஆண்டுகள் (வெள்ளி விழா) ஆவதையொட்டி இந்நிகழ்ச்சியினை அந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
துவக்க விழாவில்  ஹரிஹராவைச் சார்ந்த ஸ்ரீ சித்தலிங்க சுவாமிஜி, ஜம்மு காஷ்மீர் மற்றும் ஆஸாம் மாநிலங்களில் தலைமை நீதிபதியாக பதவி வகித்து பணி நிறைவு பெற்றுள்ள  நீதிபதி எம். ராமகிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.
துவக்க விழாவிற்குப் பிறகு நடைபெற்ற முதல் அமர்வில் “ராஜேந்திரா சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கைகளினால் தேசிய ஒருமைப்பாட்டிற்கு  ஏற்பட்டுள்ள அபாயங்கள்” பற்றி
இந்திரேஷ் குமார்
ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ.இந்திரேஷ் குமார் அவர்கள் பேசினார். இந்த அமர்விற்கு லெப்டினென்ட் ஜெனரல் (ஓய்வு) வி.எம்.பாட்டில் அவர்கள் தலைமை வகித்தார்.
நீதிபதி பர்வத ராவ்
மதிய உணவுவிற்குப் பிறகு நடைபெற்ற அமர்வு “கர்நாடகாவில் நிலவி வருகிற  சமுதாய சவால்கள்”  என்கிற தலைப்பில் நடைபெற்றது. மைசூரைச் சார்ந்த மூத்த வழக்கறிஞர் சி.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சிறப்புரை உரையாற்றினார். வழக்கறிஞர் அசோக் சாஹு தலைமை வகித்தார். அகில பாரத அதிவக்த பரிஷத்தின் தேசியத் தலைவர் நீதிபதி (ஓய்வு) பர்வத ராவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
நீதிபதி ராமா ஜோய்ஸ்
மாலையில் நடைபெற்ற இறுதி அமர்வில் நீதிபதி (ஓய்வு) நீதிபதி ராமா ஜோய்ஸ், எல்லைப் பாதுகாப்பு படை (Ex. BSF Director) தலைமை இயக்குனர் (ஓய்வு) பி.சி.டோக்ரா  மற்றும் ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்ரமணியசுவாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினர்.
நீதித்துறையின் நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக நின்று வாதாடி நீதியை பெற்றுத் தருவதற்காக  வழக்கில் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாதிட்டு நீதியை பெற்றுத் தருவது என்பது வழக்கறிஞர்களின் கடமையாகும். உலகில் நிலவி வருகின்ற அனைத்து வித அநீதிகளையும் அகற்றி நீதியை வழங்கிட வேண்டும் என்பதே “ஹிந்துத்வா”வின் ஒரே நோக்கமாகும். “ஹிந்துத்வா” பற்றி சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியது தற்போதைய காலத்தின் கட்டாயமாகும். அதற்காகவே இந்த மாநாட்டின் தலைப்பே “ஹிந்துத்வா” பெயரில் அமைந்துள்ளது என்று மோகன் பாகவத் தனது துவக்க உரையில் குறிப்பிட்டார்.
நமது நாட்டின் தேசிய அடையாளம் ”ஹிந்துத்வா”. ஹிந்துத்வா நமது நாட்டின் தேசியம். “ஹிந்து ராஷ்ட்ரம்” இது என்பதை நாம் நன்கு அறிவோம். ஹிந்துத்வா என்பது நமது நாட்டின் வாழ்க்கைமுறை என்று உச்ச நீதி மன்றமே தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது, என்று அவர் பேசினார். வன்முறையும் அநீதியும் நிறைந்து காணப்படுகிற இவ்வுலகில் அமைதியையும், ஒற்றுமை உணர்வையும் ஏற்படுத்திட ஹிந்துத்வா மிகத் தேவையானது என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் துவக்கவுரையில் குறிப்பிட்டார். பாரதத்தின் நிலையான உயர்ந்த பண்பாட்டு விழுமியங்கள் உலகிற்கு என்று தேவைப் படுகிறது. நமது வாழ்க்கை முறையுடன் ஒன்றிணைந்துள்ள உயர்ந்த பண்பாடுகளே ஹிந்துத்வா என்று அழைக்கப்படுகிறது என்றார்.
மாநாட்டில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள்
“எல்லோரும் இன்புற்றிருப்பதுவே யன்றி வேரொன்றறியேன் பராபரமே” என்கிற உயர்ந்த சிந்தனை உலகில் வேறு எங்கும் காண முடியாதது. நீதியை நிலை நாட்டுவது,  தவறுகளைக் கண்டிப்பது உண்மைக்குக் குரல் கொடுப்பது என்பது ஹிந்துத்துவமாகும். தர்மத்தின் படி வாழ்க்கை நடத்துவது, பொருள் ஈட்டுவதையும் இன்பம் சுவைப்பதையும் ஒரு கட்டுப் பாட்டிற்குள் வைத்துக் கொள்வது, ஆன்ம விடுதலையை வேண்டுவது என்பது ஹிந்து வாழ்க்கை முறையாகும்.
ஹிந்துத்துவா நமது நாட்டின் அடையாளம். ஹிந்துத்துவா என்பது நமது தேசியமாகும். ஹிந்துத்துவா என்பது நமது நாட்டின் வாழ்க்கை முறைக்குப் பெயராகும் என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது. இதன்படி நமது நாட்டில் இருக்கின்ற அனைவரும் ஹிந்துக்கள்தான். நமது நாட்டில் இருக்கின்ற முஸ்லிம்களின் முன்னோர்கள் அனைவரும் ஹிந்துக்கள்தான்.
கலாசார அடிப்படையில் இந்நாட்டில் இருக்கின்ற அனைத்து முஸ்லிம்களும் ஹிந்துக்களே ஆவர். துரதிர்ஷ்டவசமாக வாக்கு வங்கி அரசியல் காரணமாக அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு சிறுபான்மையினர் என்று அழைக்கப்படுகின்றனர். சில அடிப்படை வாதிகள் சச்சார் கமிட்டி அறிக்கையினை அமுல் படுத்திட வேண்டும் என்று கோருகின்றனர். அது தேசிய ஒருமைப்பாடிற்கு கேடு விளைத்திடும் என்று  கருதுவதால் நாம் அதை எதிர்க்கின்றோம் என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் அப்போது குறிப்பிட்டார்.எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்பதுவே வழக்கறிஞர்களின் கடமையாகும். ஹிந்து வாழ்க்கை முறையை குலைத்திட நடைபெற்று வருகின்ற பல கலாசாரத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தி ஹிந்து வாழ்க்கை முறையினைக் காக்க வேண்டிய இக்கால கட்டத்தில் வழக்கறிஞர்களின் பங்கு மிக அத்தியாவசியமானதாகும். (உதாரணதிற்கு ஓரினச் சேர்க்கை பற்றி நாட்டில் நடைபெற்று வருகின்ற சட்ட விவாதங்கள்).
எனவே நீதிக்காக வழக்கறிஞர்கள் என்று கூறுவதை ஹிந்துத்வாவிற்காக வழக்கறிஞர்கள் என்று இம்மாநாட்டினை அழைக்கலாம் என்று அவர் தனது துவக்க உரையின் நிறைவில் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக