Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

04 டிசம்பர் 2011

அதிவீரராமபட்டினத்தில் ஆலய தூய்மை பணிகளில் ஐய்யப்ப பக்தர்கள் ஆர்வம்!

M.செல்வா(திருவாதிரையான்)                                                                                                                                                   December 4, 2011

அதிவீரராமபட்டினம்: நமதூரில் கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம் தூய்மையில் சரியான பராமரிப்பின்றி கேட்பாறற்று கிடந்தது. இதனை சில ஐய்யப்ப பக்த்தர்களை கொண்ட குழு ஒன்று தூய்மை செய்ய முடிவெடுத்து செவ்வனே செய்து முடித்து பொதுமக்களுக்கு ஆலய தூய்மைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன

                                                                                                                              அதிவீரராமபட்டினம் பெருமாள் கோவில் தெருவில் உள்ளது அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம். இந்த ஆலையம் கடந்த சில ஆண்டுகளாக சரியான பராமரிப்பின்றி சுற்றுப்புறம் முழுவதும் புல் புதர்கள் மண்டியபடி காட்சியலித்தது.

  இந்த நிலையில் கார்த்திகை மாதம் வந்தது.ஐயப்ப பக்தர்கள் சிலர் ஒவ்வொரு ஆண்டும் இவ்வாலையத்தில் மாலையணிந்து இங்கு தங்கள் வலிபாடுகளை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.  இவ்வாண்டும் அதேபோல் தங்கள் வழிபாட்டை துவங்கிய அவர்கள் ஆலயத்தின் இந்த நிலை கண்டு தங்களுக்குள் ஒரு குழு அமைத்து ஆலயத்தை தூய்மை செய்ய முடிவெடுத்தனர்.
                                                 
  ஆவ்வாரு எடுத்த முடிவின்படி இன்று (04/12/2011-ஞாயிற்றுகிழமை) காலை முதல் தூய்மை பணியை தொடங்கி ஆலயத்தில் படர்ந்து கிடந்த செடிகொடிகளை அகற்றி, புல் மேடுகளை கலைந்து, கோபுரத்திற்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை வெட்டி அலயத்தை புதுப்பொழிவடைய செய்தனர்.





  அந்த பக்தர்களின் இந்த சேவையை பற்றி தகவல் அறிந்த இந்து முன்னணி நகர தலைவர் ப.விஜயகுமார், துணை தலைவர் வி.ரமேஷ், செயளாலர் வே.பிரபாகரன் ஆகியோர் உறுப்பினர்களுடன் சென்று பாராட்டு தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற தூய்மைப்பணிகளை செய்ய ஹிந்து மக்கள் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.                                                                      

அந்த ஐய்யப்ப பக்தர்களின் இந்த செயல் மற்ற பொதுமக்களுக்கு ஒரு முன்னுதாரனமாக அமைந்தது.அந்த நல்ல உள்ளம் படைத்த பக்தர்களுக்கு ஏழுமலையானும், ஹரிஹரசுதன் ஐய்யப்பனும் சகல சௌபாக்யங்களையும் அருள பிரார்த்திக்கும்                                                                                    - அதிவீரராமபட்டினம் இந்துக்கள் இணையம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக