Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

12 ஏப்ரல் 2011

(வந்தே மாதரம்) திமுகவுக்கு பிடிக்காத வார்த்தை..



tkadaiவா கஜா, என்ன லேட்டு?
ஒரே பேஜார் சார். வழில ஒரு ஆளுகூட அர்சியல் பேசி அது வலிச்சிகினே பூட்ச்சி. அத்தான் சார் லேட்டு.
நீ மேடையில பேசினா எதாவது பிரயோசனம் இருக்கும், ஏன் வெட்டியா வெளியாள் கூட பேசுற?
சார், பேசுறதப் பத்திதான் பேச்சு வலிச்சிகினுபூட்சி. ஒரு காங்கிரஸ் ஆளூ ஓட்டு கேட்டு பேசிகினாரு. முழ்ஷா பேத்தல் சார். ஆனா இன்னா ஒன்னு, கட்சீல ஜெய் ஹிந்த் அப்டீன்னு முட்சிகினார். நம்ம கூட ஒரு திமுகா தோஸ்த் இர்ந்துகிணு ஜோரா விசில் உட்டார். நான், ‘இன்னாத்துக்கு இப்பொ விசிலு வுட்ற, சுத்த பேத்தலுக்கா’ ன்னு கேட்டென். ‘நம்ம கூட்டணி ஆளு, அதுக்கோசரம்’னார். ’இல்ல, கட்சீல ஜெய்ஹிந்த் சொன்னாரே அதுக்கா’ன்னு ஒரு வலி வலிச்சேன். ஒடனே மொறச்சிகினார் சார்.
கொழுப்புதான் கஜா ஒனக்கு. திமுக ஆளுகிட்ட ஜெய்ஹிந்த் பத்தி பேசலாமா?
அக்காங் சார். ‘இன்னா மொறைக்கிற, நான் இன்னா தப்பா கேட்டுகினேன், ஜெய் ஹிந்த் கெட்ட வார்த்தையா’ன்னு மறுடியுங் கேட்டன் சார். அவுரு சமாளிச்சிகினு சூதானமா ‘காங்கிரஸ்காரங்க அப்டித்தான் சொல்லுவாங்க’ன்னாரு. ‘ஏன், நீங்க சொல்ல மாட்டிங்களா, தீட்டா’ன்னேன். கம்முன்னு இர்ந்தார் சார்.
அதோட வரவேண்டிய்துதான் கஜா.
அப்பால நான் ‘அதிமுகவுக்கு ஜெய் ஹிந்த் தீட்டு இல்லியே, தேமுதிகாவுக்கு தீட்டு இல்லியே, பாஜாகாவுக்கு தீட்டு இல்லியே, கம்முனிஸ்டுக்கு கூட தீட்டு இல்லியே, உங்களுக்கு மட்டும் இன்னா தீட்டு ஒட்டிகிது’ன்னு கேட்டன் சார்.
அப்பவும் கம்முன்னு இர்ந்தார் சார்.
நல்லா கேள்வி கேட்ட, அப்பறம் வரவேண்டியதுதானே?
சார் அப்பால எனக்கு கொஞ்சம் ஏறிகிச்சு. ’நா வேணா ஜெய் ஹிந்த் சொல்றன், நீ விசில் உட்றியா’ன்னு கேட்டன் சார். அதுக்கு சூப்பரா மொர்ச்சி பாத்தாரா, ’இல்ல வந்தே மாதரம் சொல்லவா அதுக்கு விசில் உட்றியா’ன்னு சொன்னப்ப அந்தாளுக்கு கொவம் பொத்துகினு வந்திடுச்சி சார். அப்பாலதான் சார் இந்தியாவுல அல்லாரும் பெருமையா சொல்றத சொல்றதுக்கு கூசுற நீங்க எப்டி இந்தியால ஓட்டு மட்டும் கேக்குறிங்க’ன்னு சொல்ல சொல்ல வேகமா கெளம்பிகினார் சார்.
கஜா திமுகாவுக்குதான் ஜெய் ஹிந்த் அலர்ஜின்னு தெரியுமில்லியா!
சார், அப்பால கிளம்புன ஆளப் புட்சி ‘சரி சரி கோவிச்சிக்காம எனக்காக நீ ஒரே ஒரு தபா ஜெய்ஹிந்த் சொல்லு, நான் விசில் அடிக்கிறேன்’னு சொன்னா அதுக்கும் கம்னுகிறார் சார்.
ஒன்ன மாதிரி நாலு பேர் நல்லா கேக்கணும் கஜா, அப்பதான் ஜனங்க சிந்திப்பாங்க.
அட போங்க சார். முன்னாடி திமுகாகாரங்க வந்தே மாதரத்த எப்டி சொன்னாங்க தெரியுமா சார்?
சொல்லு கஜா?
வந்து எமாத்றோம் வந்து ஏமாத்றோம்னு சொல்லுவாங்க சார். யார்னா பெர்சுங்கள கேட்டுப்பார் சார். ஜனங்க அதெல்லாத்தையும் மறந்துட்டாங்க சார்.
சரி இப்பொ மாறியிருக்கலாமில்லியா?
இல்ல சார். அவுங்க மாறல மக்கள்தான் மறப்போம் மன்னிப்போம்னு அவுங்களுக்கே ஓட்டு போடுறாங்க.
எப்டி அவங்க மாறலன்னு சொல்ற?
சார், ஆ. ராசாவுக்கு பேரு ஒரு மேனனோ ஒரு சிங்கோ ஒரு ராவோ இருந்துதின்னா இப்டி ஆவுமான்னு கேக்குறாங்க சார்.
அப்படியா?
ஆமா சார்.
சரி வா, நம்ம வேலையப் பாப்போம்.
கட்சியா ஒன்னு சொல்லிகிறேன் சார். வந்தே மாதரத்தை வந்து ஏமாத்றோம்னு சொன்ன ஆளுங்களுக்கும் கட்சிக்கும் ஓட்டு போடலாமான்னு மக்கள் யோசிக்கனும் சார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக